1 யோவான்

1 John · 5 அதிகாரங்கள்

அதிகாரங்கள் · Chapters

  1. 1
  2. 2
  3. 3
  4. 4
  5. 5

முன்னுரை

ஆசிரியர்

இந்த நிருபமானது ஆசிரியர் யார் என்பது குறிப்பிடப்படவில்லை. ஆனால் திருச்சபையின் வலுவான, சீரான மற்றும் ஆரம்பகால சான்று, சீஷனாகவும் அப்போஸ்தலனாகவும் இருந்த யோவானை குறிப்பிடுகிறது (லூக்கா 6:13, 14). இந்த கடிதங்களில் யோவானின் பெயரைக் குறிப்பிடாதபோதிலும், அவர் ஆசிரியர் என்று அவரைக் குறிக்கும் மூன்று நிரூபணமான குறிப்புகள் உள்ளன. முதலாவதாக, இரண்டாவது நூற்றாண்டு எழுத்தாளர்கள் அவரை ஆசிரியர் எனக் குறிப்பிட்டனர். இரண்டாவதாக, யோவான் நற்செய்திக்கு ஒத்த வார்த்தைகளின் பயன்பாடு மற்றும் எழுத்து நடை இந்த நிருபங்களில் உள்ளன. மூன்றாவதாக, இயேசுவின் சரீரத்தை அவர் கண்டறிந்து, தொட்டார் என்று ஆசிரியர் எழுதினார், இது அப்போஸ்தலன் என்பதற்கான உண்மையாகும் (1 யோவான் 1:1-4; 4:14).

எழுதப்பட்ட காலம் மற்றும் இடம்

ஏறக்குறைய கிபி 85-95 இடைப்பட்ட காலகட்டத்தில் எழுதப்பட்டது.

யோவான் தனது வயதான காலத்தில் பெரும்பாலான நேரத்தை செலவிட்ட எபேசுவில் அவருடைய வாழ்க்கையின் பிற்பகுதியில் யோவான் நிருபத்தை எழுதினார்.

யாருக்காக எழுதப்பட்டது

1 யோவானின் வாசகர்கள் யார் என்பது இந்தக் கடிதத்தில் வெளிப்படையாக குறிப்பிடப்படவில்லை. எனினும், விசுவாசிகளுக்கு யோவான் எழுதியதாக உள்ளடக்கங்கள் சுட்டிக்காட்டுகின்றன (1 யோவான் 1:3-4; 2:12-14). இது பல இடங்களில் இருக்கும் பரிசுத்தவான்களுக்கு எழுதினார் என்பது சாத்தியம். பொதுவாக எல்லா இடங்களிலும் உள்ள கிறிஸ்தவர்களுக்கு, 2:1, “என் சிறு பிள்ளைகள்.”

எழுதப்பட்ட நோக்கம்

நாம் சந்தோஷத்தால் நிறைந்து, பாவத்திலிருந்து விலகும்படி ஐக்கியத்தை கொண்டுவருவதற்காகவும், இரட்சிப்பின் நிச்சயத்தைக் கொடுப்பதற்காகவும், விசுவாசிக்கு முழுமையான இரட்சிப்பின் நிச்சயத்தைக் கொடுப்பதற்காகவும், கிறிஸ்துவுடனான தனிப்பட்ட உறவை விசுவாசிக்குக் கொண்டுவருவதற்காகவும் யோவான் இந்த நிருபத்தை எழுதினார். சபையிலிருந்து பிரிந்து சென்றவர்களும், சுவிசேஷத்தின் உண்மையிலிருந்து விலகும்படி மக்களை வழிநடத்த விரும்புகிறவர்களுமான கள்ளப் போதகர்களின் காரியத்தை யோவான் குறிப்பாக கூறுகிறார்.

மையக் கருத்து

தேவனுடனான ஐக்கியம்

பொருளடக்கம்

1. அவதாரம் என்பதின் உண்மைத்துவம் — 1:1-4

2. ஐக்கியம் — 1:5-2:17

3. வஞ்சகத்தை அங்கீகரிப்பது — 2:18-27

4. தற்காலத்தின் பரிசுத்த வாழ்வுக்கான தூண்டுதல் — 2:28-3:10

5. உத்தரவாதம் அடிப்படையிலான அன்பு — 3:11-24

6. தவறான ஆவிகளை பகுத்தறிதல் — 4:1-6

7. பரிசுத்தமாகுதலின் முக்கியம் — 4:7-5:21