யாத்திராகமம்

Exodus · 40 அதிகாரங்கள்

அதிகாரங்கள் · Chapters

  1. 1
  2. 2
  3. 3
  4. 4
  5. 5
  6. 6
  7. 7
  8. 8
  9. 9
  10. 10
  11. 11
  12. 12
  13. 13
  14. 14
  15. 15
  16. 16
  17. 17
  18. 18
  19. 19
  20. 20
  21. 21
  22. 22
  23. 23
  24. 24
  25. 25
  26. 26
  27. 27
  28. 28
  29. 29
  30. 30
  31. 31
  32. 32
  33. 33
  34. 34
  35. 35
  36. 36
  37. 37
  38. 38
  39. 39
  40. 40

முன்னுரை

ஆசிரியர்

இந்த புத்தகமும் இஸ்ரவேலின் தீர்க்கதரிசியான மோசேயினால் எழுதப்பட்டது என்று யூத பாரம்பரியம் சொல்லுகிறது. சந்தேகப்படாமல் மோசே தான் இதின் தெய்வீகமாக வழி நடத்தப்பட்ட ஆசிரியர் என்று இரண்டு காரியங்களால் ஏற்றுக்கொள்ளலாம். யாத்திராகமமே மோசே எழுதின காரியங்களை குறிப்பிடுகிறது. பின்னும் யெகோவா மோசேயை நோக்கி: இந்த வார்த்தைகளை நீ எழுது; என்று யாத் 34:27 ல் சொல்கிறது யாத். 24:4 ல் சொல்கிறது மோசே யெகோவாவுடைய வார்த்தைகளையெல்லாம் எழுதிவைத்து; ஆகையால் இந்த புத்தகத்தை மோசே தான் எழுதினார் என்பது நியாயமாக இருக்கிறது. இரண்டாவதாக, மோசே தாமே இந்த புத்தகத்தில் சொல்லப்பட்ட நிகழ்ச்சிகளில் பங்குப்பெற்றவன் பார்வோனுடைய குடும்பத்தில் வளர்க்கப்பட்டு கல்வி கற்றவன். ஆகையால் எழுதுவதிலும் ஞானம் பெற்றவனாய் இருந்தான்.

எழுதப்பட்ட காலம் மற்றும் இடம்

ஏறக்குறைய கி. மு. 1,446 க்கும் 1,405 க்கும். இடையில் எழுதப்பட்டது.

இஸ்ரவேல் ஜனங்கள் தங்களுடைய அவிசுவாசத்தினால் 40 வருடங்கள் வனாந்திரத்தில் வீணாக சுற்றி அலைக்கழிக்கப்பட்டார்கள். இந்த நாட்களில் தான் இந்த புத்தகம் அதிகமாக எழுதப்பட்டது.

யாருக்காக எழுதப்பட்டது

எகிப்திலிருந்து மீட்கப்பட்ட ஜனங்களுக்காகவே இது எழுதப்பட்டது. எகிப்திலிருந்து வெளியே வந்த சீனாய் ஜனங்களுக்காக மோசே எழிதினான். (யாத் 17:14; 24:4; 34:27-28).

எழுதப்பட்ட நோக்கம்

இஸ்ரவேலர்கள் எப்படி யெகோவாவின் ஜனங்களாக மாறினார்கள் என்பதையும். தேவனுடைய ஜனங்களாக உடன்படிக்கையின்படி எப்படி வாழவேண்டும் என்பதையும் விவரித்துக் காட்டுகிறது இஸ்ரவேல் ஜனங்களுடன் உடன்படிக்கை செய்த தேவன் உண்மையுள்ளவர், பரிசுத்தமானவர், சகல வல்லமையுள்ளவர். ஆபிரகாமுக்கு செய்யப்பட்ட வாக்குத்தத்ததை ஆபிரகாமின் சந்ததியாரை எகிப்தின் அடிமைத்தனத்திலிருந்து விடுதலை செய்தபோது தேவனின் குணங்களை தேவனின் பெயர் மூலமாகவும் அவருடைய வல்லமையான செயல்கள் மூலமாகவும் வெளிப்படுத்தபடுவதை காண்கிறோம். ஒரு தனிக் குடும்பம் தேவனால் தெரிந்துக்கொள்ளப்பட்டு, தேசமாக உருவாகுவதை இந்த புத்தகம் சொல்கிறது. யாத். 2:24; 6:5; 12:37.

மையக் கருத்து

விடுதலை

பொருளடக்கம்

1. முன்னுரை — 1:1-2:25

2. எகிப்தின் அடிமைதனத்திலிருந்து இஸ்ரவேலின் மீட்பு — 3:1-18:27

3. சீனாய் மலையில் கொடுக்கப்பட்ட உடன்படிக்கை — 19:1-24:18

4. தேவனுடைய இராஜரீக கூடாரம் — 25:1-31:18

5. கலகத்தினால் தேவனின் சமூகத்தை இழத்தல் — 32:1-34:35

6. தேவனுடைய இராஜரீக கூடாரம் ஸ்தாபிக்கப்பட்டது — 35:1-40:38