மீகா

Micah · 7 அதிகாரங்கள்

அதிகாரங்கள் · Chapters

  1. 1
  2. 2
  3. 3
  4. 4
  5. 5
  6. 6
  7. 7

முன்னுரை

ஆசிரியர்

இந்த புத்தகத்தின் ஆசிரியர் தீர்க்கதரிசியான மீகா. (மீகா 1:1). மீகா ஒரு கிராமத்து தீர்க்கதரிசி, சமுதாயத்திலும் நடக்கும் விக்கிர ஆராதனைக்கும், அநியாயத்திற்கும், வரப்போகும் தேவனுடைய கோபாக்கினியை தெரியப்படுத்த, பட்டணத்திற்கு அனுப்பப்பட்டவன். மீகா விவசாயம் செய்யும் ஊர்களில் வசித்தவன், தேசத்தின் அரசாங்க அதிகாரத்துக்கு தூரமாயிருந்தான். தள்ளுண்டவர்கள்மீதும் அற்பமாய் எண்ணப்பட்டவர்கள் மீதும் கரிசனைக் கொண்டிருந்தான். (மீகா 4:6). இயேசுகிறிஸ்துவின் பிறப்பைக் குறித்தும் அவருடைய நித்திய குணங்களைக் குறித்தும், பிறக்கும் ஊரான பெத்லேகேமைக் குறித்தும் பழைய ஏற்பாட்டில் 700 வருடங்களுக்கு முன்பாக எழுதியிருக்கிறான்.

எழுதப்பட்ட காலம் மற்றும் இடம்

ஏறக்குறைய கிமு 730 க்கும் 650 கிமு. க்கும். இடையில் எழுதப்பட்டது. இஸ்ரவேலின் வட ராஜ்ஜியம் வீழ்ச்சியடைமுன் முதல் வார்த்தைகள் எழுதப்பட்டது. (1:2-7).

அடுத்த பகுதிகள் பாபிலோனின் சிறையிருப்பின் போதும், சில பகுதிகள் சிறையிருப்பிலிருந்து திரும்பி வந்த பிறகும் எழுதப்பட்டது.

யாருக்காக எழுதப்பட்டது

வட தேசமான இஸ்ரவேல் தேசத்திற்கும், தென்தேசமான யூதாவுக்கும் எழிதினான்.

எழுதப்பட்ட நோக்கம்

இஸ்ரவேல், யூதா தேசங்களின் மீதும் வரும் நியயத்தீர்ப்பையும், ஆயிரவருட அரசாட்சியில் தேவ ஜனங்கள் மறுபடியும் திரும்ப இஸ்ரவேல் தேசத்தில் நாட்டப்படுவார்கள் என்ற இரண்டு காரியத்தை அதிகமாக மீகா எழுதியிருக்கிறான். ஜனங்கள் சுயநலமாக வாழ்ந்தபோதும் அவர்களுக்காக தேவன் செய்த நன்மைகளை தேவன் ஞாபகப்படுத்தினார்.

மையக் கருத்து

தேவனின் நியாயத் தீர்ப்பு

பொருளடக்கம்

1. நியாயத்தீர்ப்பு செய்ய தேவன் வருகிறார் — 1:1-2:13

2. அழிவின் செய்திகள் — 3:1-5:15

3. கண்டனக் குரலின் செய்திகள் — 6:1-7:10

4. முடிவுரை — 7:11-20