நெகேமியா

Nehemiah · 13 அதிகாரங்கள்

அதிகாரங்கள் · Chapters

  1. 1
  2. 2
  3. 3
  4. 4
  5. 5
  6. 6
  7. 7
  8. 8
  9. 9
  10. 10
  11. 11
  12. 12
  13. 13

முன்னுரை

ஆசிரியர்

நெகேமியா (யெகோவா ஆறுதளிக்கிறார்) இந்த புத்தகத்தின் முக்கிய ஆசிரியர் என்று யூத பாரம்பரியம் ஆணித்தரமாக சொல்கிறது. அதிகமான பகுதிகள் அவனாலே எழுதப்பட்டது. அவனுடைய வாலிப நாட்களைக் குறித்து ஒரு குறிப்பும் இல்லை. பெர்சியா சாம்ராஜ்ஜியத்தில் அர்தசஷ்டா இராஜாவின் பானபாத்திரக்காரனாக அறிமுகப்படுத்தப்படுகிறான். எஸ்றா புத்தகத்துக்கு அடுத்து நெகேமியா வரிசையில் வருகிறது. இவை இரண்டும் ஒரே புத்தகமாக இருந்தது என்று வேத வல்லுனர்கள் சொல்லுகிறார்கள்.

எழுதப்பட்ட காலம் மற்றும் இடம்

ஏறக்குறைய கிமு 457 க்கும் 400 கிமு. க்கும். இடையில் எழுதப்பட்டது.

இந்த புத்தகம், பாபிலோனியா தேசத்திலிருந்து திரும்பி வந்த பிறகு, யூத தேசத்தில் உள்ள எருசலேமில் பெர்சியர் காலத்தில் எழுதப்பட்டது.

யாருக்காக எழுதப்பட்டது

பாபிலோனிய சிறையிருப்பிலிருந்து திரும்பி வந்த இஸ்ரவேலர்களுக்கு எழுதப்பட்டது.

எழுதப்பட்ட நோக்கம்

தெரிந்துக் கொள்ளப்பட்ட இஸ்ரவேலர்கள் தங்கள் தேவனின் அன்பையும் வல்லமையும் அறிந்து அவருடைய உடன்படிக்கையைக்கு உண்மையைய் இருக்க அறிவுறுத்துகிறார். தேவன் ஜெபத்திற்கு பதில் அளிக்கிறார். அவருடைய கட்டளைக்களுக்கு கீழ்படிய வேண்டிய எல்லாக் காரியங்களையும் தேவன் தருகிறார். ஜனங்கள் தங்கள் செல்வங்களை பகிர்ந்து தேவனின் காரியங்களை சேர்ந்து செய்யவேண்டும். தேவனை பின்பற்றுகிறவர்கள் மத்தியில் சுயநலம் காணப்படக்கூடாது. பணக்காரர்கள் ஏழ்மையின் நிமித்தம் ஜனங்களை ஏமாற்றக்கூடாது.

தெரிந்துக் கொள்ளப்பட்ட இஸ்ரவேலர்கள் தங்கள் தேவனின் அன்பையும் வல்லமையும் அறிந்து அவருடைய உடன்படிக்கையைக்கு உண்மையைய் இருக்க அறிவுறுத்துகிறார். தேவன் ஜெபத்திற்கு பதில் அளிக்கிறார். அவருடைய கட்டளைக்களுக்கு கீழ்படிய வேண்டிய எல்லாக் காரியங்களையும் தேவன் தருகிறார். ஜனங்கள் தங்கள் செல்வங்களை பகிர்ந்து தேவனின் காரியங்களை சேர்ந்து செய்யவேண்டும். தேவனை பின்பற்றுகிறவர்கள் மத்தியில் சுயநலம் காணப்படக்கூடாது. பணக்காரர்கள் ஏழ்மையின் நிமித்தம் ஜனங்களை ஏமாற்றக்கூடாது.

மையக் கருத்து

மறுபடி கட்டுதல்

பொருளடக்கம்

1 நெகேமியாவின் முதல் அதிபதியின் காலம் — 1:1-12:47

2 நெகேமியாவின் இரண்டாம் அதிபதியின் காலம் — 13:1-31