தீத்து

Titus · 3 அதிகாரங்கள்

அதிகாரங்கள் · Chapters

  1. 1
  2. 2
  3. 3

முன்னுரை

ஆசிரியர்

தீத்துவுக்கு எழுதப்பட்ட நிருபத்தின் ஆசிரியர் என பவுல் தன்னை அடையாளப்படுத்துகிறார், மேலும் அவர் தன்னை தேவனுக்கு ஒரு கட்டப்பட்ட அடிமை ஊழியனாகவும், இயேசு கிறிஸ்துவின் அப்போஸ்தலனாகவும் தன்னை அழைத்தார் (1: 1). தீத்துவுடனான பவுலின் உறவின் ஆரம்பம் இரகசியமாக மூடி மறைக்கப்பட்டிருக்கிறது, என்றாலும் பவுல் ஊழியத்தினால் அவர் மனமாற்றமடைந்திருக்கலாம் என்று கருதலாம், அவர் தீத்துவை ஒரு பொதுவான விசுவாசத்தில் என் உண்மையான மகன் என்று (1: 4) அழைத்தார். பவுல் தெளிவாக தீத்துவை ஒரு நண்பனாகவும் சுவிசேஷத்தில் சக ஊழியனாகவும் புகழ்பெற்றவராகவும், தீத்துவை அவனுடைய பாசத்திற்காகவும், ஆர்வத்துக்காகவும், மற்றவர்களிடம் ஆறுதல்படுத்துவதற்காகவும் பாராட்டினார்.

எழுதப்பட்ட காலம் மற்றும் இடம்

ஏறக்குறைய கிபி. 63-65 க்கு இடையில் எழுதப்பட்டது.

அப்போஸ்தலனுடைய முதல் ரோம சிறையில் இருந்து விடுவிக்கப்பட்ட பிறகு பவுல் தன்னுடைய கடிதத்தை தீத்துவிற்கு நிக்கோபொலிஸிலிருந்து எழுதினார். எபேசுவில் தீமோத்தேயுவை ஊழியம் செய்வதற்காக விட்டுவந்த பிறகு பவுல் தீத்துவுடன் சேர்ந்து கிரேத்தா தீவுக்குச் சென்றார்.

யாருக்காக எழுதப்பட்டது

கிரேத்தாவிலிருந்த விசுவாசத்தில் மகனும் இன்னொரு சக ஊழியக்காரனுமான, தீத்துவுக்கு எழுதப்பட்டது.

எழுதப்பட்ட நோக்கம்

கிரேத்தாவிலுள்ள இளம் சபைகளில் சில குறைபாடுகளை சரிசெய்ய தீத்துவை அறிவுறுத்துதல், ஒழுங்கமைத்தல் மற்றும் ஒழுங்கற்ற நடத்தையுடைய உறுப்பினர்கள் ஆகியோருக்கு உதவுவதற்காக, (1) புதிய மூப்பர்களை நியமித்தல், (2) கிரேத்தாவிலுள்ள அவிசுவாசிகளுக்கு முன்பாக விசுவாசத்தின் சிறந்த சாட்சிகளை கொடுப்பதற்கு அவர்களை தயார்படுத்துதல் (1: 5).

மையக் கருத்து

நடத்தைக்கான ஒரு கையேடு

பொருளடக்கம்

1. வாழ்த்துக்கள் — 1:1-4

2. மூப்பர்களின் நியமனம் — 1:5-16

3. பல்வேறு வயதினரைப் பற்றிய அறிவுரை — 2:1-3:11

4. முடிவுரை குறிப்புகள் — 3:12-15