சாமுயேலின் பிறப்பு
எப்பிராயீம் மலைநாட்டிலுள்ள ராமதாயீமைச் சேர்ந்த சோப்பீம் ஊரிலே ஒரு மனிதனிருந்தான். அவனுடைய பெயர் எல்க்கானா. இவன் எரோகாமின் மகன். எரோகாம் எலிகூவின் மகன். எலிகூ தோகுவின் மகன். தோகு எப்பிராயீமியனான சூப்பின் மகன். 1 நாளாக 6:341 நாளாக 6:25-271 சாமு 1:19நியாயாதி 17:1ரூத் 1:21 சாமு 9:5நியாயாதி 19:11 சாமு 17:12 அவனுக்கு இரண்டு மனைவிகள் இருந்தார்கள். ஒருத்தியின் பெயர் அன்னாள்; மற்றவளின் பெயர் பெனின்னாள். பெனின்னாளுக்குப் பிள்ளைகள் இருந்தார்கள். அன்னாளுக்கோ பிள்ளைகள் ஒருவரும் இருக்கவில்லை. உபா 21:15-17ஆதி 16:1-2ஆதி 25:21ஆதி 29:23-29ஆதி 29:31ஆதி 4:23நியாயாதி 13:2நியாயாதி 8:30
எல்க்கானா ஒவ்வொரு வருடமும் சேனைகளின் யெகோவாவுக்குப் பலி செலுத்தவும், அவரை வழிபடவும் தன் ஊரிலிருந்து சீலோவுக்குப் போய்வருவான். அங்கே ஏலியின் இரண்டு மகன்களான ஒப்னியும், பினெகாசும் யெகோவாவின் ஆசாரியர்களாக இருந்தார்கள். லூக் 2:41உபா 12:5-7யோசு 18:1யாத் 23:14யாத் 34:231 சாமு 1:211 சாமு 1:9உபா 16:16 எல்க்கானா பலிசெலுத்தும் நாள் வரும்போதெல்லாம் இறைச்சியின் பங்குகளை மனைவி பெனின்னாளுக்கும் அவளுடைய எல்லா மகன்களுக்கும், மகள்களுக்கும் கொடுப்பான். உபா 12:17-18உபா 16:11உபா 12:5-7லேவி 3:4லேவி 7:15 ஆனால் எல்க்கானா அன்னாளின்மேல் அன்பு செலுத்தியபடியால் அவளுக்கு இரண்டு மடங்கு பங்கைக் கொடுத்தான் 1. யெகோவா அவளுக்குப் பிள்ளைப்பேற்றைக் கொடுத்திருக்கவில்லை. ஆதி 30:2ஆதி 29:30-31ஆதி 16:1ஆதி 20:18ஆதி 45:22ஆதி 43:34உபா 21:15 யெகோவா அவளுக்குப் பிள்ளைப்பேற்றைக் கொடுக்காதபடியால், பெனின்னாள் அவள் மனம் வருந்தும்படி அவளுக்குச் சினமூட்டிக் கொண்டிருந்தாள். யோபு 6:14யோபு 24:21லேவி 18:18 இவ்விதமாக ஒவ்வொரு வருடமும் நடந்தது. அன்னாள் யெகோவாவினுடைய ஆலயத்துக்குப் போகும்போதெல்லாம் பெனின்னாள் அவளுக்குச் சினமூட்டினாள். இதனால் அவள் சாப்பிடாமல் அழுதுகொண்டிருப்பாள். 1 சாமு 2:19 இதைக் கண்டவுடன் அவள் கணவன் எல்க்கானா அவளிடம், “அன்னாளே, ஏன் அழுகிறாய்? ஏன் சாப்பிடாமல் இருக்கிறாய்? ஏன் கவலைப்படுகிறாய்? பத்து மகன்களிலும் பார்க்க நான் உனக்கு மேலானவன் அல்லவா?” என்று கேட்பான். ரூத் 4:15ஏசா 54:6யோபு 6:141 தெச 5:14யோவா 20:13யோவா 20:15சங் 43:42இராஜா 8:12
ஒருமுறை சீலோவிலே அவர்கள் சாப்பிட்டுக் குடித்தபின், அன்னாள் எழுந்தாள். அந்நேரம் ஆசாரியன் ஏலி, யெகோவாவினுடைய ஆலயத்தின் கதவு நிலையருகிலிருந்த ஒரு நாற்காலியில் உட்கார்ந்திருந்தான். 1 சாமு 3:3சங் 27:4சங் 5:72 சாமு 7:21 சாமு 3:15சங் 29:9 அப்பொழுது அன்னாள் மனங்கசந்து மிகவும் அழுது, யெகோவாவிடம் மன்றாடினாள். யோபு 7:11யோபு 10:1லூக் 22:44சங் 91:15எபி 5:7ஏசா 54:6நியாயாதி 21:2ஏசா 38:15 அவள் யெகோவாவிடம், “சேனைகளின் யெகோவாவே, உம்முடைய அடியாளின் அவலத்தைப் பார்த்து என்னை நினைவுகூர்ந்து, உமது அடியாளை மறவாமல் எனக்கு ஒரு மகனைக் கொடுப்பீரானால், நான் அவன் வாழ்நாள் முழுவதும் அவனை யெகோவாவுக்கு ஒப்புக்கொடுப்பேன். சவரக்கத்தி ஒருபோதும் அவன் தலையில் படாது” என்று ஒரு நேர்த்திக்கடன் செய்தாள். நியாயாதி 13:5எண் 6:5ஆதி 29:32பிரச 5:41 சாமு 1:19ஆதி 28:20நியாயாதி 11:30சங் 25:18
அவள் அவ்வாறு யெகோவாவிடம் மன்றாடும்போது, ஏலி அவள் வாயைக் கவனித்தான். 1 தெச 5:17யாக் 5:16கொலோ 4:2எபே 6:18லூக் 11:8-10லூக் 18:1 அன்னாள் தன் உள்ளத்தில் மன்றாடிக்கொண்டிருந்தாள். அதனால் அவள் உதடுகள் அசைந்துகொண்டிருந்தன. ஆனால் அவளுடைய சத்தம் கேட்கவில்லை. அதனால் அவள் மதுபோதையில் இருக்கிறாள் என ஏலி நினைத்தான். ரோம 8:26அப் 2:13ஆதி 24:42-45சங் 25:1சகரி 9:151 கொரி 13:7நெகே 2:4 அப்பொழுது ஏலி அவளிடம், “நீ எவ்வளவு காலத்துக்கு மது குடிப்பதை விடாதிருப்பாய்? உன் குடிப்பழக்கத்தை விட்டுவிடு” என்றான். எபே 4:25எபே 4:31யோபு 11:14யோபு 22:23யோபு 8:2யோசு 22:12-20மத் 7:1-3நீதி 4:24
அதற்கு அன்னாள், “இல்லை ஐயா, நானோ கவலை நிறைந்த மனதையுடைய பெண். நான் திராட்சை இரசமோ, மதுவோ குடிக்கவில்லை. நான் யெகோவாவுக்குமுன் என் துயரத்தைச் சொல்லி அழுகிறேன். சங் 62:8புலம் 2:19சங் 42:4சங் 142:2-3சங் 143:6யோபு 30:16நீதி 15:1நீதி 25:15 உம்முடைய அடியாளை கெட்ட நடத்தையுள்ள பெண் 2 என எண்ணவேண்டாம். நான் மிகுந்த துயரத்தினாலும் கவலையினாலும் மன்றாடுகிறேன்” என்றாள். 1 சாமு 2:12யோபு 10:1-2யோபு 6:2-3மத் 12:34-351 சாமு 10:271 சாமு 25:25உபா 13:13
அப்பொழுது ஏலி அவளிடம், “நீ சமாதானத்தோடே போ. இஸ்ரயேலின் இறைவனிடம் நீ கேட்டுக்கொண்டதை அவர் உனக்குத் தருவாராக” என்றான். மாற் 5:34நியாயாதி 18:6சங் 20:3-51 சாமு 25:352இராஜா 5:19லூக் 7:501 நாளாக 4:10லூக் 8:48
அதற்கு அவள், “உமது அடியாளுக்கு உமது கண்களில் தயவு கிடைப்பதாக” என்றாள். அன்னாள் அவ்விடமிருந்து போய் சிறிது உணவு சாப்பிட்டாள். அதன்பின் அவள் முகம் துக்கமுகமாக இருக்கவில்லை. ரூத் 2:13ரோம 15:13பிரச 9:7ஆதி 33:15ஆதி 33:8யோவா 16:24பிலி 4:6-7ஆதி 32:5
அவர்கள் மறுநாள் அதிகாலையில் எழுந்து யெகோவாவுக்கு முன்பாக வழிபட்டபின், அவ்விடத்தைவிட்டு ராமாவிலுள்ள தங்கள் வீட்டுக்குப் போனார்கள். எல்க்கானா, தன் மனைவி அன்னாளை நேசித்து, அவளோடு இணைந்தான். ஆண்டவர் அன்னாளின் வேண்டுதலை நினைத்தார். ஆதி 21:11 சாமு 1:11ஆதி 30:22ஆதி 4:11 சாமு 9:26ஆதி 8:1லூக் 23:42மாற் 1:35 சிலநாட்கள் சென்றபின்பு அன்னாள் கர்ப்பவதியாகி ஒரு மகனைப் பெற்றாள். “யெகோவாவிடமிருந்து அவனைக் கேட்டுப் பெற்றேன்” என்று சொல்லி அவனுக்கு, சாமுயேல் என்று பெயரிட்டாள். ஆதி 41:51-52யாத் 2:10மத் 1:21யாத் 2:22ஆதி 16:11ஆதி 29:32-35ஆதி 30:6-21ஆதி 5:29
அன்னாள் சாமுயேலை அர்ப்பணித்தல்
எல்க்கானா யெகோவாவுக்கு வருடாந்த பலியைச் செலுத்தவும், நேர்த்திக்கடனைச் செலுத்தவும் போனான். 1 சாமு 1:3உபா 12:11யோசு 24:15ஆதி 18:19சங் 101:2 அப்பொழுது அன்னாள் அவர்களுடன் போகவில்லை. அவள் தன் கணவன் எல்க்கானாவிடம், “பிள்ளை பால்குடிப்பதை மறந்தபின் அவனைக் கொண்டுபோய் யெகோவாவுக்கு ஒப்புக்கொடுப்பேன். அவன் எப்பொழுதும் அங்கேயே இருப்பான்” என்றாள். 1 சாமு 1:111 சாமு 1:28லூக் 2:221 சாமு 2:111 சாமு 2:181 சாமு 3:1உபா 16:16லேவி 25:23
அதற்கு எல்க்கானா, “உன் விருப்பப்படியே உனக்கு எது சரியென்று தோன்றுகிறதோ அதன்படி செய், பிள்ளை பால்குடிப்பதை மறக்கும்வரை இங்கேயே இரு. யெகோவா தன் வார்த்தையை நிறைவேற்றுவாராக” என்றான். எனவே அவள் மகன் பால்குடிப்பதை மறக்குமட்டும் அந்தப் பெண் வீட்டிலேயே வைத்து, பாலூட்டினாள். 2 சாமு 7:251 சாமு 1:17ஆதி 21:7-8ஏசா 44:26லூக் 11:27மத் 24:19எண் 30:7-11சங் 22:9
அவன் பால்குடிப்பதை மறந்தபின் அவன், குழந்தையாய் இருந்தும் அவனைத் தன்னுடன் கூட்டிக்கொண்டு, சீலோவிலுள்ள யெகோவாவின் ஆலயத்துக்கு அன்னாள் போனாள். அவனுடன் மூன்று வயது காளையையும், ஒரு எப்பா அளவு மாவையும், ஒரு குடுவை திராட்சை இரசத்தையும் தன்னுடன் கொண்டுபோனாள். எண் 15:9-101 சாமு 4:3-4யோசு 18:1உபா 12:5-6உபா 12:11உபா 16:16 அங்கே அவர்கள் காளையைப் பலியிட்டபின், பிள்ளையை ஏலியிடம் கொண்டுபோனார்கள். லூக் 18:15-16லூக் 2:22 அப்பொழுது அன்னாள் ஏலியிடம், “ஐயா நீர் வாழ்வது நிச்சயம்போல், அன்றொருநாள் உமக்கு அருகே நின்று யெகோவாவிடம் வேண்டுதல் செய்த பெண் நான்தான் என்பதும் நிச்சயம். 2இராஜா 2:22இராஜா 2:42இராஜா 2:62இராஜா 4:301 சாமு 17:551 சாமு 20:32 சாமு 11:112 சாமு 14:19 இந்தப் பிள்ளைக்காகவே நான் மன்றாடினேன். யெகோவாவும் நான் அவரிடம் கேட்டதை எனக்குக் கொடுத்தார். 1 யோவா 5:15மத் 7:7சங் 118:5சங் 66:19-201 சாமு 1:11-13சங் 6:9சங் 116:1-5 ஆகவே அவனை இப்பொழுது யெகோவாவுக்கு ஒப்புக்கொடுக்கிறேன். அவன் வாழ்நாள் முழுவதும் யெகோவாவுக்கே ஒப்புக்கொடுக்கப்பட்டிருப்பான்” என்றாள். அவர்கள் அங்கே யெகோவாவை வழிபட்டார்கள். ஆதி 24:26ஆதி 24:521 சாமு 1:112 தீமோ 3:15ஆதி 24:481 சாமு 1:22