இஸ்ரயேலர் ரெகொபெயாமுக்கு எதிராகக் கலகம்
ரெகொபெயாம் சீகேமுக்குப் போனான், ஏனெனில் இஸ்ரயேலர் எல்லோரும் அவனை அரசனாக்குவதற்காக அங்கே போயிருந்தார்கள். 1 நாளாக 12:381 நாளாக 3:101 இராஜா 12:1-201 இராஜா 4:1ஆதி 12:6ஆதி 37:12-13நியாயாதி 9:1யோசு 20:7 அரசனாகிய சாலொமோனுக்குப் பயந்து எகிப்தில் அடைக்கலம் புகுந்த நேபாத்தின் மகன் யெரொபெயாம் இதைக் கேள்விப்பட்டான். அப்பொழுது அவன் எகிப்திலிருந்து திரும்பிவந்தான். 1 இராஜா 11:401 இராஜா 11:261 இராஜா 11:281 இராஜா 12:2 எனவே ஆள் அனுப்பி அவர்கள் யெரொபெயாமை வரவழைத்து, பின் அவனும் எல்லா இஸ்ரயேலரும் ரெகொபெயாமிடம் வந்து, 1 இராஜா 12:3 “உமது தகப்பன் எங்கள்மேல் பாரமான சுமையை வைத்தார், ஆனால் இப்பொழுது நீர் அவர் எங்கள்மேல் வைத்த கடினமான உழைப்பையும், பாரமான சுமையையும் இலகுவாக்கும். அப்பொழுது நாங்கள் உமக்குப் பணிந்திருப்போம்” என்றனர். 1 இராஜா 12:41 யோவா 5:31 இராஜா 4:201 இராஜா 4:251 இராஜா 5:151 இராஜா 9:221 சாமு 8:11-18யாத் 1:13-14
அதற்கு ரெகொபெயாம், “மூன்று நாட்களில் திரும்பவும் என்னிடம் வாருங்கள்” என்றான். எனவே மக்கள் போய்விட்டார்கள். 1 இராஜா 12:5நீதி 3:28
அதன்பின்பு, அரசன் ரெகொபெயாம் தன் தகப்பன் சாலொமோனின் காலத்தில் அவரிடம் பணிசெய்த முதியோருடன் கலந்து ஆலோசனை செய்தான். அவன் அவர்களிடம், “இந்த மக்களுக்கு நான் பதில்சொல்வதற்கு நீங்கள் என்ன ஆலோசனை சொல்கிறீர்கள்?” எனக் கேட்டான். யோபு 32:72 சாமு 16:202 சாமு 17:5-6எரே 42:2-5எரே 42:20யோபு 12:12-13யோபு 8:8-9நீதி 12:15
அதற்கு அவர்கள், “நீர் இந்த மக்களுக்குத் தயவுகாட்டி, அவர்களைப் பிரியப்படுத்தி, அவர்களுக்கு சாதகமான பதிலைக் கொடுப்பீரானால் அவர்கள் எப்பொழுதும் உமது பணியாட்களாயிருப்பார்கள்” என்றார்கள். நீதி 15:11 இராஜா 12:7ஆதி 49:212 சாமு 15:2-6
ஆனால் ரெகொபெயாம் முதியோர் தனக்குக் கூறிய புத்திமதியை உதாசீனம் செய்துவிட்டு, தன்னுடன் வளர்ந்து தனக்குப் பணிசெய்த வாலிபரிடம் ஆலோசனை கேட்டான். 2 சாமு 17:14நீதி 1:252 நாளாக 25:15-16பிரச 10:16பிரச 10:2-3ஏசா 30:1நீதி 13:20நீதி 19:20 அவன் அவர்களிடம், “ ‘உமது தகப்பன் எங்கள்மேல் வைத்த பாரத்தை எளிதாக்கும்’ என்று கேட்கிற இந்த மக்களுக்கு நான் பதில் கொடுப்பதற்கு நீங்கள் எனக்கு என்ன ஆலோசனை தருவீர்கள்?” என்று கேட்டான். 2 நாளாக 10:62 சாமு 17:5-61 இராஜா 22:6-8
அவனுடன் வளர்ந்த வாலிபர்கள், “உமது தகப்பன் எங்கள்மேல் பாரமான நுகத்தை வைத்தார், நீர் எங்கள் நுகத்தை இலகுவாக்கும் என உம்மிடம் சொல்கிற அந்த மக்களிடம், எனது சிறிய விரல் என் தகப்பனின் இடுப்பைவிடத் தடிமனானது என்று சொல்லும். 1 இராஜா 12:10-112 சாமு 17:7-13ஏசா 19:11-13நீதி 10:14நீதி 13:16நீதி 14:16நீதி 18:6-7நீதி 21:30 அத்துடன் என் தகப்பன் உங்கள்மேல் பாரமான சுமையைச் சுமத்தினார். நான் இதை இன்னும் பாரமாக்குவேன். என் தகப்பன் உங்களைச் சவுக்கினால் அடித்தார். நான் உங்களைத் தேள்களின் வேதனையைப்போன்ற சாட்டையினால் அடிப்பேன் என்று சொல்லும்” என்றார்கள். 1 சாமு 8:18யாத் 1:13-14யாத் 5:18யாத் 5:5-9ஏசா 47:6ஏசா 58:6எரே 28:13-14லூக் 10:19
“மூன்று நாட்களுக்குப்பின் என்னிடம் திரும்பிவாருங்கள்” என்று அரசன் கூறியபடியே நாட்களுக்குப்பின் யெரொபெயாமும் எல்லா மக்களும் ரெகொபெயாமிடம் திரும்பி வந்தார்கள். 1 இராஜா 12:12-152 நாளாக 10:5 அப்போது அரசன் ரெகொபெயாம் அவர்களுக்குக் கடுமையாகப் பதிலளித்தான். முதியோர் அவனுக்குக் கொடுத்த புத்திமதியைத் தள்ளிவிட்டு, 1 இராஜா 20:6-111 சாமு 25:10-112 நாளாக 10:8யாத் 10:28ஆதி 42:30ஆதி 42:7நீதி 15:1நீதி 19:27 வாலிபரின் ஆலோசனையைப் பின்பற்றி மக்களிடம், “என் தகப்பன் உங்கள்மேல் பாரமான சுமையைச் சுமத்தினார். நான் இதை இன்னும் பாரமாக்குவேன். என் தகப்பன் உங்களைச் சவுக்கினால் அடித்தார். நான் உங்களைத் தேள்களின் வேதனையைப்போன்ற சாட்டையினால் அடிப்பேன்” என்றான். 2 நாளாக 10:10-112 நாளாக 22:4-5தானி 6:7பிரச 10:16பிரச 2:19பிரச 7:8யாக் 3:14நீதி 12:5 இப்படியாக அரசன் மக்களின் வேண்டுகோளைக் கவனிக்கவில்லை. நேபாத்தின் மகனான யெரொபெயாமுக்கு சீலோவைச் சேர்ந்த அகியா என்ற இறைவாக்கினன் மூலம் கூறிய யெகோவாவின் வார்த்தையை நிறைவேற்றும்படி, இந்த மாறுதலான நிகழ்வுகள் இறைவனிடமிருந்தே வந்தன. 1 இராஜா 11:29-391 சாமு 2:252 நாளாக 25:16-20அப் 2:231 இராஜா 12:151 இராஜா 12:241 இராஜா 22:20ஏசா 19:14
அரசன் தங்களுக்கு செவிகொடுக்க மறுத்ததைக் கண்ட எல்லா இஸ்ரயேலரும் அரசனிடம் சொன்னதாவது: 2 நாளாக 10:192 சாமு 20:11 நாளாக 17:141 கொரி 15:251 இராஜா 11:131 இராஜா 11:34-391 இராஜா 12:16-171 சாமு 20:27
“தாவீதிடம் எங்களுக்கு என்ன பங்குண்டு?
ஈசாயின் மகனிடம் எங்களுக்கு என்ன பாகமுண்டு?
இஸ்ரயேலரே உங்கள் கூடாரங்களுக்குப் போங்கள்!
தாவீதே, உன் சொந்த வீட்டைக் கவனித்துக்கொள்!”
எனவே எல்லா இஸ்ரயேலரும் தங்கள் வீடுகளுக்குப் போய்விட்டார்கள். ஆனால் யூதாவில் பட்டணங்களில் குடியிருந்த இஸ்ரயேலரைப் பொறுத்தமட்டில் அவர்கள் எல்லோர்மேலும் இன்னும் ரெகொபெயாம் ஆட்சிசெய்தான். 1 இராஜா 11:361 இராஜா 12:172 நாளாக 11:1
அரசன் ரெகொபெயாம் கட்டாய வேலைக்குப் பொறுப்பாயிருந்த அதோராமை மக்களிடம் அனுப்பினான். ஆனால் இஸ்ரயேலர்கள் அவனைக் கல்லெறிந்து கொன்றுவிட்டார்கள். அரசன் ரெகொபெயாம் எப்படியோ ஒருவழியாகத் தனது தேரில் ஏறி எருசலேமுக்குத் தப்பி ஓடினான். 1 இராஜா 5:141 இராஜா 4:62 நாளாக 24:21அப் 7:57-58 இவ்வாறு இஸ்ரயேலர் தாவீதின் வீட்டாருக்கெதிராக இந்நாள்வரைக்கும் கலகம் செய்துகொண்டிருக்கிறார்கள். 1 இராஜா 12:19-202 நாளாக 10:162 நாளாக 13:5-72 நாளாக 5:92இராஜா 17:21-23எஸ்றா 9:7யோசு 4:9சங் 89:30