யாத்திராகமம் 7

Exodus 7

அப்பொழுது யெகோவா மோசேயிடம், “பார், நான் உன்னைப் பார்வோனுக்கு இறைவனைப்போல் ஆக்கியிருக்கிறேன், உன் சகோதரன் ஆரோன் உன் இறைவாக்கினனாக இருப்பான். யாத் 4:15-16சங் 82:6யோவா 10:35-36எரே 1:101 இராஜா 17:232இராஜா 6:32ஆதி 19:21பிரச 1:10 நான் உனக்குக் கட்டளையிடும் யாவற்றையும் நீ சொல்லவேண்டும், உன் சகோதரன் ஆரோன் பார்வோனிடம் இஸ்ரயேலரை அவனுடைய நாட்டிலிருந்து வெளியே போகவிடும்படிச் சொல்லவேண்டும். யாத் 4:151 இராஜா 22:14அப் 20:27உபா 4:2யாத் 6:29எசேக் 3:10எசேக் 3:17எரே 1:17 ஆனாலும் நான் பார்வோனின் இருதயத்தைக் கடினப்படுத்துவேன், எகிப்தில் என் அற்புத அடையாளங்களையும் அதிசயங்களையும் அதிகமாக்கினாலும், யாத் 4:21யாத் 11:9அப் 2:22அப் 7:36யோவா 4:48சங் 105:27-36சங் 135:9சங் 78:43-51 பார்வோன் உனக்குச் செவிகொடுக்கமாட்டான். அப்பொழுது நான் எகிப்தின்மேல் என் கரத்தை வைத்து, தண்டனைத் தீர்ப்பளிக்கும் வல்ல செயல்களால், என் மக்களாகிய இஸ்ரயேலரை வெளியே கொண்டுவருவேன்; அவர்களைக் கோத்திரப் பிரிவுகளாக கொண்டுவருவேன். யாத் 11:9யாத் 6:6யாத் 12:51யாத் 10:1யாத் 3:20யாத் 6:26யாத் 9:3எசேக் 14:21 நான் எகிப்தின்மேல் என் கையை நீட்டி இஸ்ரயேலரை எகிப்திலிருந்து வெளியே கொண்டுவரும்போது, நானே யெகோவா என்று எகிப்தியர் அறிந்துகொள்வார்கள்.” யாத் 14:18யாத் 7:17யாத் 8:22யாத் 14:4யாத் 3:20யாத் 8:10எசேக் 25:17எசேக் 28:22

மோசேயும் ஆரோனும் யெகோவா தமக்குக் கட்டளையிட்டதையே செய்தார்கள். யாத் 7:2யாத் 7:10ஆதி 6:22யாத் 12:28யாத் 39:43யாத் 40:16ஆதி 22:18யோவா 15:10 அவர்கள் பார்வோனிடம் பேசின நாட்களில், மோசே 80 வயதுடையவனாகவும், ஆரோன் 83 வயதுடையவனாகவும் இருந்தார்கள். உபா 34:7அப் 7:23அப் 7:30உபா 31:2உபா 29:5யாத் 2:23ஆதி 41:46சங் 90:10

ஆரோனின் கோல் பாம்பாக மாறுதல்

யெகோவா மோசேயிடமும் ஆரோனிடமும் கூறியதாவது, “பார்வோன் உங்களிடம் ஒரு அற்புதத்தைக் கேட்பான். அப்பொழுது நீ ஆரோனிடம், ‘உன் கோலை எடுத்து அதைப் பார்வோனுக்கு முன்பாகக் கீழே எறிந்துவிடு’ என்று சொல், அது பாம்பாக மாறும்” என்றார். யாத் 4:2ஏசா 7:11யோவா 2:18யாத் 4:17யோவா 6:30யாத் 10:13யாத் 4:20யாத் 7:10-12

அப்படியே மோசேயும் ஆரோனும் பார்வோனிடம் போய் யெகோவாவின் கட்டளைப்படி செய்தார்கள். பார்வோனுக்கும் அவன் அதிகாரிகளுக்கும் முன்பாக ஆரோன் தன் கோலைக் கீழே எறிந்தபோது, அது பாம்பாக மாறியது. யாத் 4:3ஆமோ 9:3லூக் 10:19மாற் 16:18 அப்பொழுது பார்வோன், ஞானிகளையும் சூனியக்காரரையும் அழைத்தான். எகிப்திய மந்திரவாதிகளாகிய அவர்களும் தங்கள் மாயவித்தைகளினால் அவ்வாறே செய்தார்கள்: யாத் 7:222 தீமோ 3:8யாத் 8:18யாத் 8:72 தெச 2:9தானி 2:2ஆதி 41:8தானி 5:7 அவர்கள் ஒவ்வொருவரும் தன்தன் கோலைக் கீழே போட்டபோது அவை பாம்பாக மாறின. ஆனால் ஆரோனின் கோலோ அவர்களுடைய கோல்களை விழுங்கிவிட்டது. 1 யோவா 4:4யாத் 8:18-19யாத் 9:11அப் 13:8-11அப் 19:19-20அப் 8:9-13 ஆனாலும், யெகோவா சொல்லியிருந்தபடியே, பார்வோனுடைய இருதயம் கடினமாகியது; அவன் அவர்களுக்குச் செவிகொடுக்கவில்லை. யாத் 4:21யாத் 8:15சகரி 7:11-12யாத் 10:1யாத் 10:20யாத் 10:27எபி 3:13எபி 3:7-8

முதலாம் வாதையாகிய இரத்தம்

அப்பொழுது யெகோவா மோசேயிடம், “பார்வோனின் இருதயம் கடினமாகிவிட்டது; அவன் இஸ்ரயேலரை போகவிட மறுக்கிறான். யாத் 10:1யாத் 10:20யாத் 10:27யாத் 8:15யாத் 10:4யாத் 4:23யாத் 8:2யாத் 9:2 காலையில் பார்வோன் ஆற்றுக்குப் போகும்போது நீ அவனிடம் போ. பாம்பாக மாறிய கோலை உன் கையில் எடுத்துக்கொண்டு நைல் நதிக்கரையிலே அவனைச் சந்திக்கக் காத்து நில். யாத் 8:20யாத் 2:5யாத் 7:10யாத் 4:2-4எசேக் 29:3 அவன் வந்ததும் நீ அவனிடம், ‘எபிரெயரின் இறைவனாகிய யெகோவா என்னை உன்னிடம் அனுப்பி, பாலைவனத்திலே என்னை வழிபடும்படி என்னுடைய மக்களைப் போகவிடு’ என்று சொல்லியிருந்தார். ஆனாலும் இதுவரை நீர் அதைக் கேட்கவில்லை. யாத் 3:18யாத் 9:1யாத் 9:13யாத் 3:12யாத் 5:1-31 சாமு 4:6-9அப் 4:21-23யாத் 10:3 அதனால் யெகோவா உனக்குச் சொல்வது இதுவே: ‘நானே யெகோவா என்பதை இதனால் நீ அறிந்துகொள்வாய்: என் கையிலுள்ள கோலினால் நைல் நதியின் தண்ணீரை அடிப்பேன், உடனே அது இரத்தமாக மாறும். யாத் 4:9யாத் 5:2யாத் 7:5எசேக் 38:23எசேக் 39:28சங் 9:161 இராஜா 20:281 சாமு 17:46-47 நைல் நதியிலுள்ள மீன்கள் செத்து, நதியோ நாற்றமெடுக்கும்; எகிப்தியரால் அதன் தண்ணீரைக் குடிக்கமுடியாமல் போகும்’ என்று சொல்” என்றார். யாத் 7:24யாத் 7:21எண் 11:20எண் 21:5

பின்னும் யெகோவா மோசேயிடம், “நீ ஆரோனிடம் சொல்லவேண்டியதாவது, ‘எகிப்திலே தண்ணீருள்ள இடங்களான ஆறுகள், அருவிகள், குளங்கள், நீர்த்தேக்கங்கள் உள்ள எல்லா இடங்களின் மேலும் உன் கோலை எடுத்து, உன் கையை நீட்டு’ என்று சொல். அவை இரத்தமாக மாறிவிடும். எகிப்து எங்கும் இரத்தம் இருக்கும், மரத்தினால் மற்றும் கல்லினாலான பாத்திரங்களிலும் உள்ள தண்ணீரும் இரத்தமாக மாறும்” என்றார். யாத் 14:21யாத் 10:12யாத் 10:21யாத் 14:26யாத் 8:16யாத் 8:5-6யாத் 9:22-23யாத் 9:33

மோசேயும் ஆரோனும் யெகோவா கட்டளையிட்டபடியே செய்தார்கள். ஆரோன் பார்வோனுக்கும் அவன் அதிகாரிகளுக்கும் முன்பாக தன் கோலை நீட்டி, நைல் நதியிலிருந்த தண்ணீரின்மேல் அடித்தான்; தண்ணீர் முழுவதும் இரத்தமாக மாறிற்று. சங் 105:29சங் 78:44யாத் 17:5-6யாத் 17:9-12யாத் 7:17-18யோவா 2:9-11எண் 20:8-12வெளி 8:8 நைல் நதியிலுள்ள மீன்களெல்லாம் செத்துப்போயின; எகிப்தியர் நைல் நதியின் தண்ணீரைக் குடிக்க முடியாதபடி நைல் நதி துர்நாற்றமெடுத்தது. எகிப்தில் எங்கும் இரத்தமாயிருந்தது. யாத் 7:18வெளி 8:9

எகிப்தின் மந்திரவாதிகளும் தங்கள் மாயவித்தைகளினால் அவ்வாறே செய்தார்கள், அதனால் பார்வோனுடைய இருதயம் கடினப்பட்டது. யெகோவா மோசேக்குச் சொல்லியிருந்தபடியே, அவன் மோசேக்கும் ஆரோனுக்கும் செவிகொடுக்கவில்லை. யாத் 7:112 தீமோ 3:8யாத் 8:7-8எரே 27:18 அதற்குப் பதிலாக பார்வோன் திரும்பி, தன் அரண்மனைக்குள் போய்விட்டான், அவன் யெகோவா செய்ததைக்கூட பொருட்படுத்தவில்லை. 1 சாமு 4:20ஆமோ 4:7-12உபா 32:46யாத் 9:21எசேக் 40:4ஆப 1:5ஏசா 26:11எரே 36:24 ஆற்றுத் தண்ணீரைக் குடிக்க முடியாதிருந்ததால், எகிப்தியர் குடிநீருக்காக நைல் நதியோரமெங்கும் தோண்டினார்கள்.

இரண்டாம் வாதையாகிய தவளைகள்

யெகோவா நைல் நதியை இரத்தமாக மாற்றி ஏழு நாட்கள் கடந்தன. 2 சாமு 24:13யாத் 10:23யாத் 8:9-10