ஆதியாகமம் 22

Genesis 22

ஆபிரகாம் சோதிக்கப்படுதல்

சிறிது காலத்தின்பின் இறைவன், ஆபிரகாமைச் சோதித்தார். அவர், “ஆபிரகாமே!” என்று அவனைக் கூப்பிட்டார். எபி 11:17உபா 8:2யாக் 2:21யாக் 1:12-141 கொரி 10:131 பேது 1:7நீதி 17:3ஆதி 22:11

அதற்கு அவன், “இதோ இருக்கிறேன்” என்றான்.

இறைவன் அவனிடம், “உன் மகனை, நீ நேசிக்கும் உன் ஒரே மகன் ஈசாக்கை, மோரியா பிரதேசத்திற்குக் கூட்டிக்கொண்டுபோ. அங்கே நான் உனக்குச் சொல்லும் மலைகள் ஒன்றின்மேல் அவனைத் தகன காணிக்கையாகப் பலியிடு” என்றார். யோவா 3:16ரோம 8:32எபி 11:171 யோவா 4:9-10ஆதி 17:19ஆதி 22:12ஆதி 22:162இராஜா 3:27

ஆபிரகாம் அடுத்தநாள் அதிகாலையில் எழுந்து, தன் கழுதைக்குச் சேணம் கட்டினான். அவன் தன் வேலைக்காரரில் இருவரையும் தன் மகன் ஈசாக்கையும் கூட்டிக்கொண்டுபோக ஆயத்தமானான். அதன்பின் தகனபலிக்கு வேண்டிய விறகுகளை வெட்டி எடுத்துக்கொண்டு, இறைவன் தனக்குக் குறிப்பிட்டிருந்த இடத்திற்குப் புறப்பட்டான். சங் 119:60மத் 10:37லூக் 14:26பிரச 9:10கலா 1:16ஆதி 17:23ஆதி 21:14எபி 11:17-19 மூன்றாம் நாள் ஆபிரகாம் ஏறிட்டுப் பார்த்து, தூரத்தில் அந்த இடத்தைக் கண்டான். 1 கொரி 15:4ஓசி 6:2லூக் 13:32மத் 17:231 சாமு 26:132இராஜா 20:5எஸ்த 5:1யாத் 15:22 அப்பொழுது ஆபிரகாம் தன் வேலைக்காரரிடம், “நீங்கள் கழுதையுடன் இங்கே நில்லுங்கள்; நானும் என் மகனும் அவ்விடத்திற்குப் போய் வழிபாடு செய்துவிட்டு பின்பு, உங்களிடத்திற்குத் திரும்பிவருவோம்” என்றான். எபி 11:19எபி 12:1

ஆபிரகாம் தகனபலிக்குரிய விறகுகளைத் தன் மகன் ஈசாக்கின்மேல் வைத்து, நெருப்பையும் கத்தியையும் தானே கொண்டுபோனான். அவர்கள் இருவரும் போய்க்கொண்டிருக்கும்போது, யோவா 19:171 பேது 2:24ஏசா 53:6மத் 8:17லூக் 24:26-27 ஈசாக்கு தன் தகப்பனாகிய ஆபிரகாமிடம், “அப்பா?” என்றான். ரோம 8:15யாத் 12:3ஆதி 4:2-4ஆதி 8:20யோவா 18:11மத் 26:39மத் 26:42

ஆபிரகாம் அதற்குப் மறுமொழியாக, “என்ன மகனே?” என்றான்.

“விறகும் நெருப்பும் இருக்கின்றன, தகனபலிக்கான செம்மறியாட்டுக் குட்டி எங்கே?” என்று ஈசாக்கு கேட்டான்.

அதற்கு ஆபிரகாம், “என் மகனே, தகனபலிக்கான செம்மறியாட்டுக் குட்டியை இறைவனே நமக்குக் கொடுப்பார்” என்றான். அவர்கள் இருவரும் தொடர்ந்து சென்றார்கள். யோவா 1:36யோவா 1:29வெளி 5:12வெளி 13:8ஆதி 18:14மத் 19:26வெளி 7:141 பேது 1:19-20

அவர்கள் இறைவன் குறித்த இடத்திற்கு வந்தபொழுது, ஆபிரகாம் ஒரு பலிபீடத்தைக் கட்டி, அதன்மேல் விறகுகளை அடுக்கினான். அவன் தன் மகன் ஈசாக்கைக் கட்டி, அவனைப் பலிபீடத்தில் உள்ள விறகின்மேல் கிடத்தினான். யாக் 2:21எபி 11:17-19பிலி 2:7-81 பேது 2:24அப் 8:32எபே 5:2கலா 3:13ஆதி 12:7 பின்பு ஆபிரகாம் தன் கையை நீட்டி தன் மகனை வெட்டுவதற்குக் கத்தியை எடுத்தான். எபி 11:17-19யாக் 2:21-23ஏசா 53:6-12 அப்பொழுது யெகோவாவின் தூதனானவர் வானத்திலிருந்து, “ஆபிரகாம்! ஆபிரகாம்!” என்று அவனைக் கூப்பிட்டார். யாத் 3:4ஆதி 21:17ஆதி 16:9-10ஆதி 22:161 சாமு 3:10அப் 26:14அப் 9:4ஆதி 16:7

உடனே அவன், “இதோ இருக்கிறேன்” என்று பதிலளித்தான்.

அவர், “சிறுவன்மேல் கைவைக்காதே, அவனுக்கு ஒன்றும் செய்யாதே; நீ உன் மகனை, ஒரே மகன் என்றும் பாராமல், எனக்குப் பலியிட உடன்பட்டபடியால், நீ இறைவனுக்குப் பயந்து நடக்கிறவன் என்பதை நான் இப்போது அறிந்துகொண்டேன்” என்றார். யாக் 2:21-22யாக் 2:181 சாமு 15:22மத் 10:37-38ரோம 8:321 கொரி 10:13ஆதி 22:2மத் 19:29

ஆபிரகாம் நிமிர்ந்து பார்த்தபோது, முட்செடியில் கொம்புகள் சிக்குண்டிருந்த ஒரு செம்மறியாட்டுக் கடாவைக் கண்டான். அவன் அங்குபோய், அந்த செம்மறியாட்டுக் கடாவைப் பிடித்து தன் மகன் ஈசாக்கிற்குப் பதிலாக அதை இறைவனுக்குத் தகன காணிக்கையாகப் பலியிட்டான். 1 கொரி 10:132 கொரி 1:9-10சங் 40:6-81 கொரி 5:7-81 பேது 1:19-20ஆதி 22:8ஏசா 30:21சங் 89:19-20 ஆபிரகாம் அந்த இடத்திற்கு யெகோவாயீரே 1 எனப் பெயரிட்டான். அதனால், “யெகோவாவின் மலையில் கொடுக்கப்படும்” என இன்றுவரை சொல்லப்படுகிறது. ஆதி 22:13யாத் 17:15நியாயாதி 6:24ஆதி 22:8ஆதி 16:13-14சங் 22:4-51 சாமு 7:121 தீமோ 3:16

யெகோவாவின் தூதனானவர் இரண்டாம் முறையும் வானத்திலிருந்து ஆபிரகாமைக் கூப்பிட்டு, “நீ உன் மகனை, உன் ஒரே மகனைக் கொடுக்க மறுக்காமல் இதைச் செய்தபடியால், யெகோவா தம் பெயரில் ஆணையிட்டு அறிவிக்கிறதாவது: எபி 6:13-14லூக் 1:73சங் 105:9எரே 51:14எரே 49:13ரோம 4:13-14ஏசா 45:23ஆதி 12:2 நான் நிச்சயமாய் உன்னை ஆசீர்வதித்து, உன் சந்ததியை வானத்தின் எண்ணற்ற நட்சத்திரங்களைப்போலவும், கடற்கரை மணலைப்போலவும் பெருகப்பண்ணுவேன். உன் சந்ததியினரோ அவர்களுடைய பகைவரின் பட்டணங்களைக் கைப்பற்றுவார்கள். ஆதி 15:5ஆதி 24:60எரே 33:22ஆதி 26:4ஆதி 13:16எண் 24:17-19சங் 2:8-9சங் 72:8-9 நீ எனக்குக் கீழ்ப்படிந்தபடியால், உன் சந்ததிகள் மூலம் பூமியின் எல்லா நாடுகளும் ஆசீர்வதிக்கப்படும்” என்கிறார், என்று சொன்னார். அப் 3:25கலா 3:16ஆதி 12:3ஆதி 26:4-5கலா 3:8-9ஆதி 18:18எரே 7:23சங் 72:17

அதன்பின் ஆபிரகாம் தன் வேலைக்காரரிடம் திரும்பிச்சென்று, அவர்களுடன் பெயெர்செபாவுக்குப் போனான். ஆபிரகாம் பெயெர்செபாவிலே தங்கினான். ஆதி 21:31நியாயாதி 20:1யோசு 15:28

நாகோரின் மகன்கள்

சிறிது காலத்திற்கு பின்பு, “மில்க்காளும் தாயாகி இருக்கிறாள்; உன் சகோதரனாகிய நாகோருக்கு அவள் மகன்களைப் பெற்றிருக்கிறாள் என்று ஆபிரகாமுக்குச் சொல்லப்பட்டது; அவர்கள்: ஆதி 11:29ஆதி 24:24ஆதி 11:26ஆதி 24:10ஆதி 24:15ஆதி 31:53நீதி 25:25

அவள் தன் முதற்பேறான மகன் ஊஸ், அவன் சகோதரன் பூஸ், யோபு 1:1ஆதி 24:10யோபு 32:2எண் 23:7சங் 60:1-12

ஆராமின் தகப்பனான கேமுயேல்,

கேசேத், ஆசோ, பில்தாஸ், இத்லாப், பெத்துயேல்” என ஆபிரகாமுக்கு அறிவிக்கப்பட்டது.

பெத்துயேல் ரெபெக்காளுக்குத் தகப்பன் ஆனான். ஆதி 24:15ஆதி 24:24ஆதி 24:47ஆதி 24:51ஆதி 24:60ஆதி 24:67ஆதி 25:20ஆதி 28:2

மில்க்காள் இந்த எட்டு மகன்களையும் ஆபிரகாமின் சகோதரன் நாகோருக்குப் பெற்றாள்.

ரேயுமாள் என்னும் நாகோரின் வைப்பாட்டியும் ஆதி 16:3ஆதி 25:6நீதி 15:25

தேபா, காஹாம், தாகாஷ், மாகா என்னும் நான்கு மகன்களைப் பெற்றாள்.