ஆதியாகமம் 27

Genesis 27

ஈசாக்கு முதிர்வயதானதால், அவனுடைய கண்பார்வை மங்கிப்போயிருந்தன. அவன் தன் மூத்த மகன் ஏசாவைக் கூப்பிட்டு, “என் மகனே” என்றான். 1 சாமு 3:2ஆதி 48:10ஆதி 25:23-25பிரச 12:3யோவா 9:3

அதற்கு அவன், “இதோ நான் இருக்கிறேன்” என்றான்.

ஈசாக்கு அவனிடம், “இப்பொழுது நான் கிழவனாகிவிட்டேன். எந்த நாளில் மரணம் வருமோ? எனக்குத் தெரியாது. யாக் 4:14பிரச 9:10மாற் 13:35நீதி 27:11 சாமு 20:3ஆதி 47:29ஆதி 48:21ஏசா 38:1 ஆகையால், நீ உன் ஆயுதங்களான வில்லையும், அம்புக் கூட்டையும் எடுத்துக்கொண்டு, உடனே காட்டு வெளிக்குப்போய் வேட்டையாடி, எனக்கு இறைச்சி கொண்டுவா. ஆதி 25:27-281 கொரி 6:12ஆதி 10:9 நான் விரும்பும் சுவையுள்ள உணவை நீ சமைத்து, நான் அதைச் சாப்பிடுவதற்கு என்னிடம் கொண்டுவா. நான் இறப்பதற்குமுன் என்னுடைய ஆசீர்வாதத்தை உனக்குக் கொடுப்பேன்” என்றான். எபி 11:20ஆதி 48:9ஆதி 27:25ஆதி 49:28லூக் 24:51ஆதி 27:7யோசு 14:13யோசு 22:6

ஈசாக்கு தன் மகன் ஏசாவுடன் பேசியதை, ரெபெக்காள் கேட்டுக்கொண்டிருந்தாள். ஏசா மிருகங்களை வேட்டையாடிக் கொண்டுவருவதற்காகக் காட்டு பகுதிக்குப் போனான். அப்பொழுது ரெபெக்காள் தன் மகன் யாக்கோபிடம், “பார், உன் தகப்பன் உன் சகோதரன் ஏசாவிடம் பேசுவதை நான் கேட்டேன். ஆதி 25:28 அவர், ‘நீ வேட்டையாடி, இறைச்சியைக் கொண்டுவந்து, நான் சாப்பிடுவதற்கு சுவையுள்ள உணவைத் தயாரித்து கொண்டுவா; நான் இறப்பதற்குமுன், யெகோவாவின் முன்னிலையில் என்னுடைய ஆசீர்வாதத்தை உனக்குக் கொடுக்கவேண்டும்’ என்றார், என்று சொன்னாள். யோசு 6:261 சாமு 24:19உபா 33:1 இப்பொழுதும் என் மகனே, நான் சொல்வதைக் கவனமாய்க் கேட்டு நான் உனக்குச் சொல்வதைச் செய்: எபே 6:1அப் 5:29ஆதி 27:13அப் 4:19ஆதி 25:23ஆதி 27:43 நீ உடனே ஆட்டு மந்தைக்குப் போய் நல்ல வெள்ளாட்டுக் குட்டிகள் இரண்டை என்னிடம் கொண்டுவா; உன் தகப்பன் விரும்புகிற விதமாகவே சுவையுள்ள உணவை நான் சமைத்துத் தருவேன். நியாயாதி 13:151 சாமு 16:20 அதைக் கொண்டுபோய் அவர் சாப்பிடுவதற்குக் கொடு. அவர் இறப்பதற்குமுன் தன் ஆசீர்வாதத்தை உனக்குத் தரட்டும்” என்றாள்.

அதற்கு யாக்கோபு, தன் தாய் ரெபெக்காளிடம், “என் சகோதரன் ஏசா உடலில் உரோமம் நிறைந்தவன்; என் உடலோ மிருதுவானது. ஆதி 25:25 என் தகப்பன் என்னைத் தொட்டால் என்ன செய்வது? அவரை ஏமாற்றுகிறவனாகக் காணப்பட்டு, ஆசீர்வதிப்பதற்குப் பதிலாக சாபத்தையே என்மேல் கொண்டுவருவேன்” என்றான். உபா 27:181 தெச 5:222 கொரி 6:8ஆதி 25:27ஆதி 27:36யோபு 12:16மல்கி 1:14ஆதி 27:21-22

அவன் தாய் அவனிடம், “என் மகனே, அந்தச் சாபம் என்மேல் வரட்டும்; நான் சொல்லுகிறபடி நீ போய், ஆட்டுக்குட்டிகளைக் கொண்டுவா” என்றாள். மத் 27:251 சாமு 25:242 சாமு 14:91 சாமு 14:24-281 சாமு 14:36-45ஆதி 25:23ஆதி 25:33ஆதி 27:8

அப்படியே யாக்கோபு போய் அவற்றைப் பிடித்துத் தன் தாயிடம் கொண்டுவந்தான். அவள் அவற்றை அவனுடைய தகப்பனுக்கு விருப்பமான சுவையுள்ள உணவாகச் சமைத்தாள். ஆதி 25:28ஆதி 27:17ஆதி 27:31ஆதி 27:4ஆதி 27:7ஆதி 27:9லூக் 21:34நீதி 23:2-3 பின்பு ரெபெக்காள், வீட்டிலிருந்த தன் மூத்த மகன் ஏசாவின் மிகச்சிறந்த உடைகளை எடுத்து, அவற்றைத் தன் இளையமகன் யாக்கோபுக்கு உடுத்தினாள். ஆதி 27:27லூக் 20:46லூக் 15:22 அவனுடைய கைகளையும், கழுத்தின் மிருதுவான பகுதியையும் வெள்ளாட்டுத் தோல்களினால் மறைத்தாள். பின்பு அவள் தயாரித்த சுவையுள்ள உணவையும் அப்பங்களையும் தன் மகன் யாக்கோபிடம் கொடுத்தாள்.

அவன் தன் தகப்பனிடம் போய், “அப்பா” என்று அழைத்தான்.

அதற்கு அவன், “என் மகனே, நீ யார்?” என்றான்.

அதற்கு யாக்கோபு தன் தகப்பனிடம், “நான் உங்கள் மூத்த மகன் ஏசா; நீங்கள் சொன்னபடியே நான் செய்திருக்கிறேன். எழுந்திருந்து நான் வேட்டையாடிக் கொண்டுவந்த இறைச்சியைச் சாப்பிட்டு, உங்கள் ஆசீர்வாதத்தை எனக்குத் தாருங்கள்” என்றான். ஏசா 28:15மத் 26:70-74சகரி 13:3-41 இராஜா 14:2ஆதி 25:25ஆதி 27:21ஆதி 27:24-25ஆதி 27:4

ஈசாக்கு தன் மகனிடம், “மகனே, இது உனக்கு இவ்வளவு சீக்கிரத்தில் எப்படிக் கிடைத்தது?” என்று கேட்டான். யாத் 20:7ஆதி 24:12யோபு 13:7

அதற்கு அவன், “உங்கள் இறைவனாகிய யெகோவாவே எனக்கு வெற்றியைத் தந்தார்” என்றான்.

அப்பொழுது ஈசாக்கு யாக்கோபிடம், “என் மகனே, உண்மையாகவே நீ என் மகன் ஏசாதானோ அல்லவோ என தொட்டுப் பார்க்கும்படி, என் அருகில் வா” என்றான். ஏசா 57:19யாக் 4:8ஆதி 27:12சங் 73:28

யாக்கோபு தன் தகப்பன் ஈசாக்கின் அருகில் வந்தபோது, ஈசாக்கு அவனைத் தடவிப்பார்த்து, “குரலோ யாக்கோபின் குரல்; கைகளோ ஏசாவின் கைகள்” என்றான். அவனுடைய கைகள் மூத்தவன் ஏசாவின் கைகளைப்போல் உரோமம் அடர்ந்ததாய் இருந்தபடியால், அவனுடைய தகப்பன் அவனை இன்னாரென்று அறியவில்லை; எனவே அவன் யாக்கோபை ஆசீர்வதித்தான். ஆதி 27:16எபி 11:20ரோம 9:11-12 ஈசாக்கு யாக்கோபிடம், “உண்மையாகவே நீ என் மகன் ஏசாதானா?” என்று கேட்டான். கொலோ 3:9எபே 4:25நீதி 12:221 சாமு 21:131 சாமு 21:21 சாமு 27:10யோபு 13:7-8யோபு 15:5

அவனும், “ஆம், நான்தான்” என்றான்.

அப்பொழுது ஈசாக்கு அவனிடம், “மகனே, நீ வேட்டையாடிக் கொண்டுவந்த இறைச்சியில் கொஞ்சத்தை நான் சாப்பிடும்படி என்னிடம் கொண்டுவா; நான் உன்னை ஆசீர்வதிப்பேன்” என்றான். ஆதி 27:4

யாக்கோபு அதைக் கொண்டுவந்தான். அவன் அதைச் சாப்பிட்டான்; அத்துடன் அவன் திராட்சை இரசத்தையும் கொண்டுவந்தான், ஈசாக்கு அதைக் குடித்தான். அதன்பின் அவன் தகப்பன் ஈசாக்கு அவனிடம், “மகனே, நீ எனக்கு அருகில் வந்து என்னை முத்தமிடு” என்றான்.

யாக்கோபு தன் தகப்பனருகில் போய் அவனை முத்தமிட்டான். ஈசாக்கு யாக்கோபினுடைய உடையின் மணத்தை முகர்ந்து பார்த்து, அவனை ஆசீர்வதித்து சொன்னது: எபி 6:7சங் 65:10ஆதி 26:12எபி 11:20ஓசி 14:6-7உன்னத 4:11-14உன்னத 7:12-13உன்னத 2:13

“ஆஹா, என் மகனின் மணம்

யெகோவா ஆசீர்வதித்த

வயலின் மணத்தைப்போல் இருக்கிறது.

இறைவன் உனக்கு வானத்தின் பனியையும், உபா 33:28உபா 33:13சங் 133:3ஓசி 14:5-72 சாமு 1:21உபா 7:13சங் 65:9-13சகரி 8:12

மண்ணின் வளத்தையும் கொடுப்பாராக.

தானியத்தையும், திராட்சை இரசத்தையும் நிறைவாய் தருவாராக.

நாடுகள் உனக்குப் பணி செய்வார்களாக. ஆதி 12:3எண் 24:9ஏசா 49:23ஆதி 9:25-26ரோம 9:121 இராஜா 22:47தானி 2:44-45ஆதி 22:17-18

மக்கள் கூட்டங்கள் உன்னைத் தலைதாழ்த்தி வணங்குவார்களாக.

உன் சகோதரரின்மேல் நீ முதன்மையானவனாய் இருப்பாய்,

உன் தாயின் மகன்கள் உன்னைத் தலைதாழ்த்தி வணங்குவார்கள்.

உன்னைச் சபிக்கிறவர்கள் சபிக்கப்படுவார்களாக.

உன்னை ஆசீர்வதிக்கிறவர்கள் ஆசீர்வதிக்கப்படுவார்களாக.”

ஈசாக்கு அவனை ஆசீர்வதித்து முடிந்தபோது, யாக்கோபு தன் தகப்பன் முன்னிருந்து போன மாத்திரத்தில், வேட்டையாடப் போன ஏசா திரும்பிவந்தான். அவனும் இறைச்சியைச் சுவையுள்ள உணவாகச் சமைத்து தன் தகப்பனிடம் கொண்டுவந்தான். அவன், “அப்பா எழுந்திருந்து நான் வேட்டையாடிக் கொண்டுவந்த உணவைச் சாப்பிட்டு, உங்கள் ஆசீர்வாதத்தை எனக்குக் கொடுங்கள்” என்றான். ஆதி 27:4

அப்பொழுது ஈசாக்கு, “நீ யார்?” என்று அவனிடம் கேட்டான். ஆதி 27:18

அதற்கு அவன், “நான் உம்முடைய மகன்; மூத்த மகனான ஏசா” என்றான்.

ஈசாக்கு வெகுவாய் நடுங்கி, “அப்படியானால் வேட்டையாடிச் சமைத்த உணவை என்னிடம் கொண்டுவந்தவன் யார்? நீ வருவதற்குச் சிறிது நேரத்திற்குமுன் நான் சாப்பிட்டு அவனை ஆசீர்வதித்தேனே! நிச்சயமாய் அவனே ஆசீர்வதிக்கப்பட்டவனாய் இருப்பான்” என்றான். ஆதி 28:3-4எபே 1:3யோபு 21:6ரோம 11:29யோவா 10:10யோவா 10:28-29யோபு 37:1சங் 55:5

தன் தகப்பனின் வார்த்தைகளைக் கேட்டவுடனே ஏசா மனங்கசந்து, சத்தமிட்டுக் கதறி அழுது தன் தகப்பனிடம், “அப்பா என்னையும் ஆசீர்வதியுங்கள்” என்றான். எபி 12:17நீதி 1:311 சாமு 30:4லூக் 13:24-28நீதி 1:24-28நீதி 19:3

அப்பொழுது ஈசாக்கு, “உன் சகோதரன் யாக்கோபு தந்திரமாய் வந்து, உன்னுடைய ஆசீர்வாதத்தைப் பெற்றுக்கொண்டான்” என்றான். 1 தெச 4:6யோபு 13:7மல்கி 2:102 கொரி 4:72இராஜா 10:19ஆதி 27:19-23ரோம 3:7-8

அதைக்கேட்ட ஏசா தகப்பனிடம், “அவன் யாக்கோபு 1 என சரியாகவல்லவோ பெயரிடப்பட்டிருக்கிறான்? அவன் என்னை இரண்டுமுறை ஏமாற்றிவிட்டான்: அன்று என் பிறப்புரிமையை எடுத்துக்கொண்டான், இன்று என் ஆசீர்வாதத்தையும் எடுத்துக்கொண்டான்!” என்றான். பின்பு அவன், “நீங்கள் எனக்காக எந்த ஆசீர்வாதத்தையும் ஒதுக்கி வைக்கவில்லையா?” என்று கேட்டான். ஆதி 25:26ஆதி 25:31-34ஆதி 32:28யோவா 1:47

அதற்கு ஈசாக்கு ஏசாவிடம், “நான் யாக்கோபை உனக்குத் தலைவனாகவும், அவனுடைய எல்லா உறவினரையும் அவனுக்கு வேலைக்காரராகவும் கொடுத்து, தானியத்தினாலும், புதிய திராட்சை இரசத்தினாலும் அவனை நிறைவாக்கியிருக்கிறேன். அவ்வாறிருக்க, என் மகனே, உனக்காக நான் என்ன செய்வேன்?” என்றான். 2 சாமு 8:14ஆதி 25:23ஆதி 27:28-29ரோம 9:10-12

அப்பொழுது ஏசா தகப்பனிடம், “அப்பா, ஒரேயொரு ஆசீர்வாதம் மட்டும்தானா உங்களிடம் உண்டு? என்னையும் ஆசீர்வதியுங்கள்!” என்று கூறி சத்தமிட்டு அழுதான். எபி 12:17ஆதி 27:34ஆதி 27:36ஆதி 49:28ஏசா 32:10-12ஏசா 65:14நீதி 1:24-26

அவனுடைய தகப்பனாகிய ஈசாக்கு அவனிடம் சொன்னது: ஆதி 27:28எபி 11:20ஆதி 36:6-8யோசு 24:4

“பூமியின் செழிப்புக்கும்

வானத்தின் பனிக்கும் தூரமாகவே

உன் குடியிருப்பு இருக்கும்.

நீ உன் வாளினால் வாழ்ந்து, 2இராஜா 8:20-22ஆதி 25:232 சாமு 8:142 நாளாக 21:102 நாளாக 21:82 நாளாக 25:11-122 நாளாக 28:17சங் 60:8

உன் சகோதரனுக்குப் பணிசெய்வாய்.

நீ கட்டுக்கடங்காது போகும்போது,

அவன் உன் கழுத்தின்மேல் வைத்த நுகத்தை

நீ எடுத்து எறிந்துபோடுவாய்.”

தன் தகப்பன், யாக்கோபுக்குக் கொடுத்த ஆசீர்வாதத்தின் நிமித்தம், ஏசா யாக்கோபின்மேல் வன்மம் கொண்டிருந்தான். “என் தகப்பனுக்காக துக்கங்கொண்டாடும் நாட்கள் சமீபமாய் இருக்கின்றன. அப்பொழுது நான் என் சகோதரன் யாக்கோபைக் கொன்றுவிடுவேன்” என்று அவன் தனக்குள் சொல்லிக்கொண்டான். 1 யோவா 3:12-15ஆதி 37:4ஆதி 50:3-4பிரச 7:9எபே 4:26-27எசேக் 25:12-15ஆதி 32:6ஆதி 37:8

மூத்த மகன் ஏசாவின் திட்டம் ரெபெக்காளுக்குச் சொல்லப்பட்டபோது, அவள் தன் இளையமகன் யாக்கோபைக் கூப்பிட்டு, அவனிடம், “உன் சகோதரன் ஏசா உன்னைக் கொல்லும் நினைப்பில் தன்னைத் தேற்றிக்கொண்டிருக்கிறான். 1 சாமு 30:5ஆதி 37:18-20ஆதி 42:21-22யோபு 20:12-14நீதி 2:14நீதி 4:16-17சங் 64:5 ஆகையால் மகனே, இப்பொழுது நான் சொல்வதுபோல் செய்: உடனடியாக ஆரானிலிருக்கும் என் சகோதரன் லாபானிடம் ஓடிப்போ. ஆதி 11:31ஆதி 27:8ஆதி 27:13அப் 5:29ஆதி 12:4-5ஆதி 24:29ஆதி 28:7எரே 35:14 உன் சகோதரனின் மூர்க்கம் தணியுமட்டும் நீ அங்கே தங்கியிரு. ஆதி 31:38ஆதி 31:41 உன் சகோதரன் கோபம் தணிந்து, நீ அவனுக்குச் செய்ததை மறக்கும்போது, நீ அங்கிருந்து திரும்பிவரும்படி நான் உனக்குச் சொல்லி அனுப்புவேன். ஒரே நாளில் உங்கள் இருவரையும் நான் ஏன் இழந்துபோக வேண்டும்?” என்றாள். 2 சாமு 14:6-7அப் 28:4ஆதி 27:35ஆதி 4:8-16ஆதி 9:5-6யாக் 4:13-15புலம் 3:37நீதி 19:21

பின்பு ரெபெக்காள் ஈசாக்கிடம் போய், “இந்த ஏத்தியப் பெண்களால் எனக்கு வாழ்க்கையே வெறுத்துவிட்டது. யாக்கோபும் இந்த நாட்டுப் பெண்களிலிருந்து ஒரு ஏத்தியப் பெண்ணை மனைவியாகக் கொண்டால், நான் உயிர்வாழ்ந்தும் பயனில்லை” என்றாள். ஆதி 24:3ஆதி 26:34-35ஆதி 28:8ஆதி 34:1-21 இராஜா 19:4யோபு 14:13யோபு 3:20-22யோபு 7:16