“நீங்கள் விசுவாசத்தைவிட்டு விலகிப் போகாதபடி இதை எல்லாம் நான் உங்களுக்குச் சொல்கிறேன். 1 பேது 2:8மத் 13:21மத் 26:31-33யோவா 15:18-27மத் 24:10யோவா 16:4ரோம 14:21மத் 11:6 சிலர் உங்களை ஜெப ஆலயங்களிலிருந்து வெளியே துரத்துவார்கள்; உண்மையாகவே ஒரு காலம் வருகிறது, உங்களைக் கொலைசெய்கிறவர்களுங்கூட தாங்கள் இறைவனுக்கு பணிசெய்வதாகவே எண்ணுவார்கள். யோவா 9:22அப் 26:9-11ரோம 10:2-3அப் 22:3-4மத் 10:28யோவா 12:42வெளி 6:9அப் 22:19-23 பிதாவையோ என்னையோ அவர்கள் அறியாததன் நிமித்தம் இப்படிப்பட்ட காரியங்களைச் செய்வார்கள். யோவா 15:21யோவா 17:252 தெச 1:82 தெச 2:10-12யோவா 8:19யோவா 8:551 யோவா 3:1யோவா 17:3 அந்தக் காலம் வருகிறபோது, நான் அதைக்குறித்து உங்களை எச்சரித்ததை நீங்கள் நினைவில் கொள்வதற்கே இதை நான் உங்களுக்கு முன்னதாகவே சொல்லியிருக்கிறேன். நான் உங்களுடனேகூட இருந்ததினாலே இதை உங்களுக்கு ஆரம்பத்திலேயே சொல்லவில்லை. யோவா 14:29மாற் 13:23யோவா 13:19யோவா 17:12-13மத் 9:15அப் 9:16மத் 24:252 பேது 1:14 இப்பொழுது நான் என்னை அனுப்பிய பிதாவினிடத்திற்குப் போகிறேன். ஆனால், ‘நீர் எங்கே போகிறீர்’ என்று உங்களில் ஒருவனும் என்னிடத்தில் கேட்கவில்லை. யோவா 13:36யோவா 7:33யோவா 16:28எபே 4:7-11எபி 1:3யோவா 14:4-6யோவா 16:10யோவா 17:4 நான் இவைகளைச் சொன்னதினாலே நீங்கள் துக்கம் நிறைந்தவர்களாய் இருக்கிறீர்கள். யோவா 16:20-22யோவா 20:11-15லூக் 22:45லூக் 24:17யோவா 14:1யோவா 14:27-28 ஆனால் நான் உங்களுக்கு உண்மையைச் சொல்கிறேன்: உங்கள் நன்மைக்காவே நான் உங்களைவிட்டுப் போகிறேன். ஏனெனில் நான் போனாலேயன்றி உதவியாளர் உங்களிடத்தில் வரமாட்டார்; நான் போனால் அவரை உங்களிடத்தில் அனுப்புவேன். யோவா 14:26யோவா 14:16-17யோவா 15:26அப் 2:33அப் 1:4-5யோவா 7:39லூக் 24:49ரோம 8:28 உதவியாளர் வரும்பொழுது, பாவம், நீதி, நியாயத்தீர்ப்பு ஆகியவற்றைக் குறித்து உலகத்தினரை கண்டித்து உணத்துவார்: யூதா 1:15அப் 2:37சகரி 12:10அப் 16:29-301 கொரி 14:24யோவா 8:9யோவா 8:46 அவர்கள் என்னில் விசுவாசம் வைக்காதிருப்பதினால் பாவத்தைக் குறித்தும், யோவா 15:22-25யோவா 12:47-48யோவா 8:23-24எபி 3:12மாற் 16:16அப் 2:22-38யோவா 8:42-47அப் 3:14-19 இனிமேல் நீங்கள் என்னைக் காணாதபடிக்கு பிதாவின் இடத்திற்கு நான் போகிறபடியால் நீதியைக் குறித்தும், 2 கொரி 5:211 பேது 3:18ரோம 10:3-41 கொரி 1:301 தீமோ 3:16அப் 3:14எரே 23:5-6பிலி 3:7-9 இந்த உலகத்தின் அதிபதி இப்பொழுது நியாயத் தீர்ப்புக்குள்ளாகி இருப்பதனால், நியாயத்தீர்ப்பைக் குறித்தும் கண்டித்து உணர்த்துவார். யோவா 12:311 யோவா 3:8கொலோ 2:15எபி 2:142 கொரி 4:4யோவா 14:30ஏசா 49:24-26வெளி 12:7-10
“நான் உங்களுக்குச் சொல்வதற்கோ இன்னும் அதிகமாய் இருக்கிறது. இதை எல்லாம் இப்பொழுது உங்களால் தாங்கிக் கொள்ளமுடியாது. மாற் 4:33யோவா 15:151 கொரி 3:1-2அப் 1:3எபி 5:11-14யோவா 14:30 ஆனால் சத்திய ஆவியானவர் வரும்போது, அவர் உங்களை எல்லா சத்தியத்திற்குள்ளும் வழிநடத்துவார். அவர் தம்முடைய சுயவிருப்பத்தின்படி எதையும் பேசமாட்டார்; தாம் கேட்கிறதை மாத்திரமே அவர் பேசுவார். வரப்போகும் காரியங்களை அவர் உங்களுக்குச் சொல்லிக் கொடுப்பார். யோவா 14:261 கொரி 2:10-13யோவா 14:17யோவா 15:261 யோவா 2:271 யோவா 2:20அப் 2:17-18யோவா 12:49 அவர் எனக்குரியதிலிருந்து எடுத்து அதை உங்களுக்கு வெளிப்படுத்துவார். இதனால் அவர் எனக்கே மகிமையைக் கொண்டுவருவார். 1 யோவா 4:13-142 கொரி 3:14-18யோவா 15:26வெளி 19:101 கொரி 12:31 பேது 1:10-121 கொரி 2:8-101 யோவா 3:23 பிதாவுக்கு உரியவைகள் எல்லாம் என்னுடையவைகளாய் இருக்கின்றன. அதனாலேயே ஆவியானவர் எனக்குரியதிலிருந்து எடுத்து உங்களுக்கு அதை வெளிப்படுத்துவார் என்று சொன்னேன். யோவா 17:10மத் 11:27யோவா 3:35லூக் 10:22கொலோ 1:19மத் 28:18யோவா 10:29-30யோவா 13:3
சீடர்களுடைய துக்கம் மகிழ்ச்சியாக மாறுதல்
“இன்னும் கொஞ்சம் காலத்தில் நீங்கள் என்னைக் காணமாட்டீர்கள். மீண்டும் கொஞ்சக் காலத்திலே நீங்கள் என்னைக் காணுவீர்கள்.” யோவா 7:33அப் 1:3அப் 10:40-41யோவா 14:18-24யோவா 16:22யோவா 16:28எபி 12:2யோவா 13:3
அவர்களுடைய சீடர்களில் சிலர் ஒருவரையொருவர் பார்த்து, “ ‘இன்னும் கொஞ்சக்காலத்தில் நீங்கள் என்னைக் காணமாட்டீர்கள்’ என்றும், ‘மீண்டும் கொஞ்சக்காலத்திற்குப் பின் என்னைக் காண்பீர்கள்’ என்றும், ‘நான் என் பிதாவினிடத்திற்கு போகிறேன்’ என்றும் சொல்கிறாரே, அதன் அர்த்தம் என்ன?” என்று ஒருவரோடொருவர் பேசிக்கொண்டார்கள். யோவா 16:16யோவா 16:5மாற் 9:32யோவா 14:5யோவா 16:19யோவா 12:16லூக் 18:34மாற் 9:10 “இவர், ‘கொஞ்சக்காலம்’ என்று சொல்வதன் அர்த்தம் என்ன? இவர் சொல்வது நமக்கு விளங்கவில்லையே” என்றும் பேசிக்கொண்டார்கள். லூக் 24:25எபி 5:12மத் 16:9-11
இதைக்குறித்து சீடர்கள் தம்மிடம் கேட்க விரும்புகிறார்கள் என்று இயேசு அறிந்துகொண்டார். எனவே அவர் அவர்களிடம், “கொஞ்சக்காலத்தில் நீங்கள் என்னைக் காணமாட்டீர்கள். மீண்டும் கொஞ்சக்காலத்தில் என்னைக் காண்பீர்கள்” என்று நான் சொன்னேன். அதனுடைய அர்த்தம் என்னவென்றுதானே நீங்கள் ஒருவரோடொருவர் பேசிக்கொண்டு இருக்கிறீர்கள். யோவா 14:19யோவா 16:16யோவா 16:30எபி 4:13யோவா 13:33யோவா 2:24-25யோவா 7:33யோவா 21:17 மெய்யாகவே மெய்யாகவே நான் உங்களுக்குச் சொல்கிறேன், நீங்கள் அழுது புலம்புவீர்கள், ஆனால் உலகமோ மகிழ்ச்சி அடையும். நீங்கள் துக்கப்படுவீர்கள், ஆனால் உங்கள் துக்கமோ சந்தோஷமாக மாறும். யாக் 1:2மத் 5:4சங் 126:5-6வெளி 7:14-17மாற் 16:101 பேது 1:6-82 கொரி 6:10எரே 31:25 பிரசவிக்கின்ற ஒரு பெண் தன்னுடைய பிரசவவேளை வந்துவிட்டதால், வேதனையை அனுபவிக்கின்றாள்; ஆனால் குழந்தை பிறந்தவுடனேயோ, அவள் தன் வேதனையை மறந்து விடுகிறாள். ஏனெனில் ஒரு பிள்ளையை உலகத்திற்குக் கொண்டு வந்ததைக் குறித்து மகிழ்ச்சி அடைகிறாள். ஏசா 13:8சங் 113:91 தெச 5:3எரே 30:6-7ஓசி 13:13-14ஏசா 26:16-18மீகா 4:10வெளி 12:2-5 அவ்விதமாகவே நீங்களும் இப்பொழுது வேதனையை அனுபவிக்கிறீர்கள். ஆனால் நான் உங்களை மீண்டும் காண்பேன். அப்பொழுது நீங்கள் மகிழ்ச்சி அடைவீர்கள். யாரும் அந்தச் சந்தோஷத்தை உங்களிடமிருந்து பறித்துக்கொள்ள மாட்டார்கள். 1 பேது 1:8அப் 13:52யோவா 16:62 தெச 2:161 பேது 4:13-14அப் 16:25ஏசா 25:9சங் 146:2 அந்த நாளிலே நீங்கள் என்னிடத்திலே எதையுமே கேட்கவேண்டியதில்லை. மெய்யாகவே மெய்யாகவே நான் உங்களுக்குச் சொல்கிறேன், நீங்கள் என் பெயரிலே என் பிதாவினிடத்தில் எதைக் கேட்டாலும், அதை அவர் உங்களுக்குத் தருவார். யோவா 15:7யோவா 14:13-14மத் 21:221 யோவா 5:14-16ஏசா 65:24மத் 7:7யோவா 16:26யோவா 14:20 இதுவரை நீங்கள் என்னுடைய பெயரில் எதையுமே கேட்கவில்லை. கேளுங்கள், அப்பொழுது நீங்கள் பெற்றுக்கொள்வீர்கள். உங்கள் சந்தோஷமும் முழுநிறைவுபெறும். மத் 7:7-8யாக் 4:2-3யோவா 15:112 தெச 2:16-17யோவா 16:231 யோவா 1:3-42 யோவா 1:12எபே 1:16-17
“இவைகளை எல்லாம் உவமைகள் மூலம் உங்களுடன் பேசினேன். ஆனால் காலம் வருகிறது. அப்பொழுது நான் இப்படியான உவமைகளைக் கொண்டு பேசமாட்டேன். பிதாவைக் குறித்து தெளிவாக உங்களோடு பேசுவேன். யோவா 16:12யோவா 10:6யோவா 16:28-29மத் 13:34-35மாற் 4:13மத் 13:10-11சங் 49:4சங் 78:2 அந்த நாளிலே நீங்களே என்னுடைய பெயரில் பிதாவினிடத்தில் கேட்பீர்கள். எனவே உங்களுக்காக நான் பிதாவினிடத்தில் கேட்கவேண்டியதில்லை. ரோம 8:34யோவா 17:19யோவா 17:24யோவா 17:9யோவா 14:16யோவா 16:23 நீங்கள் என்னில் அன்பாயிருந்ததினாலும், நான் இறைவனிடமிருந்து வந்தேன் என்று விசுவாசிப்பதினாலும், பிதாவே உங்களில் அன்பாயிருக்கிறார். யோவா 14:21யோவா 14:23யோவா 17:23யோவா 8:421 யோவா 4:191 கொரி 16:221 பேது 1:82 கொரி 5:14 நான் பிதாவினிடத்திலிருந்து புறப்பட்டு, இந்த உலகத்திற்கு வந்தேன்; இப்போது உலகத்தை விட்டு பிதாவினிடத்திற்கு திரும்பிப் போகிறேன்” என்றார். யோவா 13:1யோவா 13:3யோவா 8:14யோவா 14:28யோவா 16:5யோவா 17:5அப் 1:9-11யோவா 16:16
அப்பொழுது இயேசுவினுடைய சீடர்கள், “இப்பொழுது நீர் உவமையாகச் சொல்லாமல் தெளிவாய் பேசுகிறீர். யோவா 16:25 நீர் எல்லாவற்றையும் அறிந்திருக்கிறீர். அதனால் யாரும் உம்மிடத்தில் கேள்விகள் கேட்கவேண்டிய அவசியம் இல்லை என்பது எங்களுக்குத் தெரிகிறது. எனவே நீர் இறைவனிடமிருந்து வந்தீர் என்பதை நாங்கள் விசுவாசிக்கிறோம்” என்றார்கள். யோவா 21:17யோவா 17:8எபி 4:13யோவா 16:17யோவா 16:27-28யோவா 5:20
அதற்கு இயேசு, “இப்பொழுதாவது நீங்கள் விசுவாசிக்கிறீர்களே? லூக் 9:44-45யோவா 13:38 ஆனால் ஒரு காலம் வருகிறது, அது இப்போதே வந்துவிட்டது. அப்பொழுது நீங்கள் சிதறடிக்கப்படுவீர்கள். ஒவ்வொருவரும் அவரவர் வீட்டுக்கு ஓடிப்போவீர்கள். நீங்கள் என்னைத் தனியே விட்டுவிடுவீர்கள். ஆனால் நான் தனிமையாய் இல்லை; ஏனெனில் என் பிதா என்னுடனே இருக்கிறார். சகரி 13:7மத் 26:31யோவா 8:29மாற் 14:27யோவா 8:16மத் 26:56ஏசா 50:6-9மாற் 14:50
“நீங்கள் என்னில் சமாதானம் பெற்றவர்களாய் இருக்கும்படியே, இவைகளை நான் உங்களுக்குச் சொன்னேன். இந்த உலகத்திலே உங்களுக்கு துன்பங்கள் உண்டு. ஆனாலும் திடன்கொள்ளுங்கள், நான் உலகத்தின்மீது வெற்றி கொண்டுவிட்டேன்” என்றார். யோவா 14:271 யோவா 5:42 தெச 3:161 யோவா 4:4பிலி 4:7யோவா 14:11 பேது 5:92 தீமோ 3:12