கடலில் இருந்து வெளியேறும் மிருகம்
அந்த இராட்சதப் பாம்பு கடற்கரையில் காத்து நின்றது. ஒரு மிருகம் கடலில் இருந்து வெளியேறுவதை நான் கண்டேன். அதற்குப் பத்துக் கொம்புகளும், ஏழு தலைகளும் இருந்தன. அதன் பத்துக் கொம்புகள் மேலும், பத்து கிரீடங்கள் இருந்தன. அதனுடைய ஒவ்வொரு தலையின்மேலும், இறைவனை அவமதிக்கும் ஒரு பெயர் எழுதப்பட்டிருந்தது. வெளி 12:3வெளி 17:3தானி 7:23-25வெளி 11:7தானி 7:2-3தானி 7:7-8தானி 11:36வெளி 17:16 நான் கண்ட அந்த மிருகம், ஒரு சிறுத்தையைப்போல் காணப்பட்டது. ஆனால் அதன் கால்களோ, கரடிகளின் கால்கள் போலவும், அதன் வாய், சிங்கத்தின் வாயைப் போலவும் காணப்பட்டது. அந்த இராட்சதப் பாம்பு தனது வல்லமையையும், தனது அரியணையையும், தனது பெரிதான அதிகாரத்தையும், அந்த மிருகத்திற்குக் கொடுத்தது. தானி 7:4-71 பேது 5:8வெளி 12:9வெளி 17:12வெளி 20:2வெளி 12:13வெளி 12:15வெளி 12:3-4 அந்த மிருகத்தினுடைய தலைகளில் ஒன்றில், மரணத்துக்குரிய ஒரு காயம் ஏற்பட்டிருந்ததுபோல் காணப்பட்டது. ஆனால், அந்தக் காயம் குணமடைந்திருந்தது. முழு உலகமும் வியப்படைந்து, அந்த மிருகத்தைப் பின்பற்றியது. வெளி 17:8வெளி 13:14வெளி 17:10வெளி 17:17அப் 8:13எசேக் 30:24வெளி 13:1-2வெளி 13:12 அந்த இராட்சதப் பாம்பு மிருகத்திற்கு அதிகாரத்தைக் கொடுத்திருந்ததால், மக்கள் அந்த இராட்சதப் பாம்பை வணங்கினார்கள். அவர்கள் அந்த மிருகத்தையும் வணங்கி, “இந்த மிருகத்திற்கு ஒப்பானவன் யார்? இந்த மிருகத்தை எதிர்த்து, யுத்தம் செய்ய யாரால் முடியும்?” என்று கேட்டார்கள். வெளி 13:2வெளி 18:18வெளி 12:3வெளி 13:12-13வெளி 13:152 கொரி 4:42 தெச 2:4தானி 11:36-37
அந்த மிருகத்திற்கு பெருமை பேச்சுகளையும், இறைவனை அவமதித்து பேசவும், ஒரு வாய் கொடுக்கப்பட்டது. நாற்பத்திரெண்டு மாதங்களுக்கு, எதையும் செய்வதற்கு அதற்கு அதிகாரம் கொடுக்கப்பட்டது. தானி 7:25தானி 7:8தானி 11:36வெளி 12:6தானி 7:112 தெச 2:4தானி 7:20வெளி 11:2-3 அது இறைவனை அவமதித்துப் பேசுவதற்காகவும், அவருடைய பெயரையும், அவருடைய வாசஸ்தலத்தையும், பரலோகத்தில் வாழ்கிறவர்களையும் தூசிப்பதற்காகவும் தன் வாயைத் திறந்தது. எபி 9:24மத் 12:34மத் 15:19வெளி 12:12எபி 12:22-23எபி 9:11-12வெளி 11:12வெளி 18:20 பரிசுத்தவான்களை எதிர்த்து யுத்தம்செய்து, அவர்களை வெற்றிகொள்வதற்கும், அதற்கு வல்லமை கொடுக்கப்பட்டது. ஒவ்வொரு கோத்திரத்தின்மேலும், மக்கள்மேலும், மொழியினர்மேலும், நாட்டினர்மேலும் அதற்கு அதிகாரம் கொடுக்கப்பட்டது. தானி 7:21வெளி 11:7தானி 7:25வெளி 12:17தானி 12:1தானி 8:24-25வெளி 17:15யோவா 19:11 உலகம் படைக்கப்பட்டதிலிருந்து, ஆட்டுக்குட்டியானவருக்குச் சொந்தமான ஜீவப் புத்தகத்தில், பெயர் எழுதப்படாமல் இருந்த எல்லோருமே, அந்த மிருகத்தை வணங்குவார்கள். 1 பேது 1:19-20எபே 1:4மத் 25:34வெளி 17:8வெளி 3:5தீத் 1:2யோவா 1:29வெளி 21:27
கேட்பதற்கு காதுள்ளவன் கேட்கட்டும். ஏனெனில், வெளி 2:7வெளி 2:17வெளி 2:11வெளி 2:29
“யாராவது சிறைப்பட்டுப்போக குறிக்கப்பட்டிருந்தால், எரே 15:2ஏசா 33:1வெளி 14:12வெளி 3:10லூக் 21:19எபி 6:12யாக் 5:7-8வெளி 2:2
அவர்கள் சிறைப்பட்டே போவார்கள்.
யாராவது வாளினால் கொல்லப்பட 1 குறிக்கப்பட்டிருந்தால்,
அவர்கள் வாளினால் கொல்லப்படுவார்கள்.” 2
ஆகவே பரிசுத்தவான்களைப் பொறுத்தமட்டில், அவர்கள் மனந்தளராமல் இருக்கவேண்டும். அவர்கள் தங்கள் பொறுமையையும், விசுவாசத்தையும் அப்பொழுது காட்டவேண்டும்.
பூமியிலிருந்து வெளியேவரும் மிருகம்
பின்பு பூமியிலிருந்து, இரண்டாவது மிருகம் வெளியே வருவதை நான் கண்டேன். அதற்கு ஆட்டுக்குட்டியின் கொம்புகளைப்போல் இரண்டு கொம்புகள் இருந்தன. ஆனால் இது இராட்சதப் பாம்பைப்போலவே பேசியது. 2 கொரி 11:13-15தானி 7:8மத் 7:15வெளி 17:6தானி 7:24-25வெளி 11:7வெளி 12:3-4வெளி 13:17 அவ்வாறு இது அந்த முதலாவது மிருகத்தின் சார்பாக, அதனுடைய முழு அதிகாரத்தையுமே தான் பிரயோகித்தது. இது பூமியையும் அதில் குடியிருக்கிறவர்களையும் அந்த முதல் மிருகத்தை வணங்கும்படி செய்தது. அந்த முதலாவது மிருகமே, சாவை விளைவிக்கக்கூடிய காயமடைந்து, குணமடைந்திருந்த மிருகமாகும். வெளி 17:10-11வெளி 14:11வெளி 14:9வெளி 19:202 தெச 2:4வெளி 13:14-17வெளி 13:3-4 இந்த இரண்டாவது மிருகம், பெரிய அற்புத அடையாளங்களைச் செய்தது. எல்லா மனிதரும் காணும்படியாக, இது வானத்திலிருந்து பூமியின்மேல் நெருப்பு வரும்படியும் செய்தது. மத் 24:242 தெச 2:9-10வெளி 16:14வெளி 19:201 இராஜா 18:38உபா 13:1-3வெளி 20:9மாற் 13:22 முதலாவது மிருகத்தின் சார்பாக, அடையாளங்களைச் செய்துகாட்டும் வல்லமை இரண்டாவது மிருகத்திற்கு கொடுக்கப்பட்டதனால், அது பூமியின் மக்களை ஏமாற்றியது. வாளினால் காயமடைந்து, இன்னும் உயிருடன் இருக்கிற, அந்த முதல் மிருகத்தைக் கனம் பண்ணுவதற்காக, அதற்கு ஒரு உருவச்சிலையைச் செய்யும்படி, இரண்டாவது மிருகம் அவர்களுக்கு உத்தரவிட்டது. வெளி 12:9வெளி 19:20வெளி 13:82 தெச 2:42 தெச 2:9-12தானி 11:36வெளி 13:11-12வெளி 13:15 முதலாவது மிருகத்தினுடைய உருவச்சிலைக்கு உயிர்கொடுக்கும் வல்லமை இந்த மிருகத்திற்குக் கொடுக்கப்பட்டது. இதனால் அந்த உருவச்சிலை, பேசும் ஆற்றலுடையதாய் இருந்தது. அந்த உருவச்சிலையை வணங்க மறுத்த எல்லோரையும் அது கொலை செய்யும்படி அனுமதி வழங்கியது. தானி 3:3-6வெளி 16:2வெளி 19:20வெளி 20:4வெளி 17:6தானி 7:25வெளி 13:14வெளி 14:11 அத்துடன், இந்த இரண்டாவது மிருகம் சிறியவர், பெரியவர், செல்வந்தர், ஏழைகள், குடியுரிமை பெற்றோர், அடிமைகள் எல்லோரையுமே தங்களுடைய வலதுகையிலோ, அல்லது தங்களுடைய நெற்றியிலோ, ஒரு அடையாளத்தைப் பெற்றுக்கொள்ளும்படி வற்புறுத்தியது. வெளி 20:4வெளி 19:20எசேக் 9:4உபா 6:8வெளி 14:9-11வெளி 7:3வெளி 19:18உபா 11:18 இதனால், அந்த அடையாளத்தைப் பெறாமலிருந்த யாராலும் வாங்கவோ விற்கவோ முடியாதிருந்தது. அந்த மிருகத்தின் பெயர் அல்லது அதன் பெயருக்குரிய எண்தான் அந்த அடையாளம். வெளி 13:16வெளி 14:11வெளி 15:2வெளி 22:4வெளி 13:18வெளி 14:9வெளி 3:12வெளி 17:5
இதை விளங்கிக்கொள்ள ஞானம் தேவை. யாராவது அறிவு ஆற்றல் உடையவனாய் இருந்தால், அவன் அந்த மிருகத்தின் எண்ணைக் கணக்குப் பார்க்கட்டும். ஏனெனில், அது மனிதனுக்குரிய எண்தான்; அந்த எண் 666 ஆகும். வெளி 15:2வெளி 17:9வெளி 21:17தானி 12:10மாற் 13:14வெளி 1:3ஓசி 14:9சங் 107:43