சமாதானமும் நம்பிக்கையும்
ஆகவே, நாம் விசுவாசத்தினாலே நீதிமான்களாக்கப்பட்டிருக்கிறபடியால், நம்முடைய கர்த்தராகிய இயேசுகிறிஸ்துமூலமாய், இறைவனுடன் சமாதானமுள்ளவர்களாய் இருக்கிறோம். ஏசா 32:17யோவா 16:33ரோம 15:13அப் 13:38-39கொலோ 1:20ரோம 6:23யோவா 14:27எபே 2:14-17 இயேசுவினாலேயே நாம் இப்பொழுது இந்தக் கிருபைக்குள் விசுவாசத்தினால் சென்றிருக்கிறோம், அந்தக் கிருபையிலேயே இப்பொழுதும் நிலைநிற்கிறோம்; இதனால் இறைவனுடைய மகிமையில் பங்குகொள்வோம் என்ற எதிர்பார்ப்பில் மகிழ்ச்சியடைகிறோம். எபே 2:18எபே 3:12ரோம 12:121 கொரி 15:11 பேது 3:182 தெச 2:16எபி 3:62 கொரி 4:17 அதுமாத்திரமல்ல, நம்முடைய துன்பங்களிலேயும் நாம் மகிழ்ச்சியடைகிறோம். ஏனெனில் துன்பங்கள் பொறுமையையும், யாக் 1:2-3யாக் 1:121 பேது 3:142 கொரி 12:9-102 கொரி 4:17லூக் 6:22-23ரோம 8:35-37எபி 12:10-11 பொறுமை நற்பண்பையும், நற்பண்பு எதிர்பார்ப்பையும் உண்டாக்கும் என்று நாங்கள் அறிவோம். 1 பேது 5:10யாக் 1:122 கொரி 4:8-121 பேது 1:6-72 தீமோ 4:16-18சங் 71:18-24சங் 27:2-32 கொரி 1:4-6 இந்த எதிர்பார்ப்பு நமக்கு ஏமாற்றத்தைக் கொடுக்காது; ஏனெனில் இறைவன் நமக்குக் கொடுத்திருக்கிற பரிசுத்த ஆவியானவராலேயே தம்முடைய அன்பை நம்முடைய இருதயங்களில் ஊற்றியிருக்கிறார். கலா 4:6எபே 3:16-19பிலி 1:202 தீமோ 1:122 கொரி 1:22ஏசா 44:3-51 யோவா 4:19அப் 2:33
பாருங்கள், நாம் பெலனற்றவர்களாய் இருக்கையிலே, பாவிகளாகிய நமக்காக குறித்தவேளையில் கிறிஸ்து மரித்தார். எபே 2:1-5ரோம 5:8கொலோ 2:13தீத் 3:3-5ரோம 5:10ரோம 4:25தீத் 2:121 தெச 5:9 நீதிமானுக்காக ஒருவன் தனது உயிரைக் கொடுப்பது மிகவும் அரிது, ஆனால் ஒரு நல்ல மனிதனுக்காக யாராவது சிலவேளைகளில் சாகத் துணியலாம். யோவா 15:131 யோவா 3:16ரோம 16:4அப் 11:24சங் 112:52 சாமு 18:272 சாமு 23:14-172 சாமு 18:3 ஆனால் இறைவன் தமது அன்பை நம்மேல் வைத்து, நாம் இன்னும் பாவிகளாய் இருக்கையிலேயே, கிறிஸ்து நமக்காக மரித்ததினாலேயே காண்பிக்கிறார். யோவா 15:13யோவா 3:16ரோம 5:61 பேது 3:181 யோவா 3:161 யோவா 4:9-10ஏசா 53:6எபே 2:7
இப்பொழுதோ நாம் கிறிஸ்துவின் இரத்தத்தினால் நீதிமான்களாக்கப்பட்டிருக்கிறபடியால் அவராலே இறைவனுடைய கோபத்திலிருந்து நாம் இரட்சிக்கப்படுவது எவ்வளவு நிச்சயம்! 1 தெச 1:10ரோம 8:1எபே 2:13ரோம 3:24-26யோவா 5:24ரோம 1:18ரோம 5:1எபி 9:22 நாம் இறைவனுக்கு விரோதிகளாய் இருக்கும்போதே, அவருடைய மகனின் மரணத்தினாலே நாம் இறைவனோடு ஒப்புரவாக்கப்பட்டோமானால், இப்பொழுது இறைவனோடு நாம் ஒப்புரவாயிருக்கையில், கிறிஸ்துவின் ஜீவனினாலே நாம் இரட்சிக்கப்படுவது எவ்வளவு நிச்சயம்! 2 கொரி 5:18-192 கொரி 4:10-11ரோம 8:32கொலோ 1:20-21எபே 2:16எபி 7:25வெளி 1:18கொலோ 3:3-4 அதுமாத்திரமல்ல, இப்பொழுது இறைவனோடு நம்மை ஒப்புரவாக்கியுள்ள நமது கர்த்தராகிய இயேசுகிறிஸ்துமூலமாய், நாம் இறைவனில் பெருமகிழ்ச்சியடைகிறோம். 2 கொரி 5:18-19ரோம 5:10ஏசா 61:10ஆப 3:17-18பிலி 4:4கொலோ 2:6கலா 4:9சங் 149:2
ஆதாம் மூலம் மரணம் கிறிஸ்து மூலமாய் வாழ்வு
ஒரே மனிதனின் மூலமாகவே உலகத்திற்குள் பாவம் நுழைந்தது. பாவத்தின் வழியாக மரணம் வந்தது. எல்லா மனிதரும் பாவம் செய்ததால், இவ்விதமாய் எல்லா மனிதர்மேலும் மரணம் வந்தது. 1 கொரி 15:21-22ரோம 5:19ரோம 6:23ரோம 3:23யாக் 1:15ஆதி 2:17சங் 51:5ஆதி 3:19
மோசேயின் சட்டம் கொடுக்கப்படும் முன்னதாகவே, பாவம் உலகத்திலே இருந்தது. ஆனால் மோசேயின் சட்டம் இல்லாதிருந்தபோது, அது பாவமாகக் கருதப்படவில்லை. ரோம 4:151 கொரி 15:561 யோவா 3:4ஆதி 4:7-11ஆதி 38:10ஆதி 38:7ஆதி 13:13ஆதி 18:20 ஆனால், மரணம் ஆதாமின் காலந்தொடங்கி, மோசேயின் காலம்வரை வாழ்ந்தவர்களை ஆளுகை செய்தது. ஆதாமுக்குக் குறிப்பிட்ட கட்டளையை அவன் மீறியதுபோல் பாவம் செய்யாதவர்களையும் மரணம் ஆட்சிசெய்தது. ஆதாமோ வரவிருந்த ஒருவருக்கு மாதிரியானான். 1 கொரி 15:45எபி 9:27ரோம 5:17ஆதி 7:22ரோம 5:21ரோம 8:22ஆதி 19:25ஓசி 6:7
ஆனால் இறைவனின் கிருபைவரத்திற்கும் ஆதாமின் மீறுதலுக்கும் பெரிய வித்தியாசமுண்டு. எப்படியெனில் ஒரே மனிதனுடைய மீறுதலின் காரணமாக அநேகர் இறந்தார்கள். ஆனால் இறைவனுடைய மகா கிருபையும், இன்னொரு மனிதனாகிய இயேசுகிறிஸ்து என்ற ஒரே மனிதரின் கிருபையினால் நமக்குக் கிடைக்கும் வரமும், அநேகர்மேல் அதிகமாய் நிரம்பி வழிகிறது. எபே 2:8ரோம 5:12ரோம 6:231 யோவா 5:112 கொரி 9:15ஏசா 53:11ரோம 5:16-201 யோவா 2:2 மேலும் இறைவனுடைய நன்கொடையின் விளைவோ, ஒரு மனிதனுடைய பாவத்தின் விளைவைப் போன்றதல்ல: அந்த நியாயத்தீர்ப்பு ஒரே பாவத்தினிமித்தம் தண்டனையைக் கொண்டுவந்தது; ஆனால் அந்த நன்கொடையோ பல மீறுதல்களை நீக்கி, நீதிமான்கள் என்ற தீர்ப்பைக் கொண்டுவந்தது. அப் 13:38-39ஏசா 1:18ஏசா 44:22ஏசா 43:251 கொரி 11:321 கொரி 6:9-111 தீமோ 1:13-16கலா 3:10 ஒரே மனிதனின் மீறுதலினாலே, மரணம் ஆளுகை செய்தது. அப்படியானால் இறைவனுடைய கிருபையின் நிறைவைப் பெற்றவர்களும், கிருபைவரத்தின் நீதியைப் பெற்றவர்களும், இயேசுகிறிஸ்து என்னும் ஒரே மனிதனினாலே எவ்வளவாய் வெற்றியுள்ள வாழ்வை வாழ்வார்கள். 1 கொரி 15:21-221 கொரி 15:49ரோம 5:12யோவா 10:102 தீமோ 2:12வெளி 22:5ஆதி 3:6வெளி 20:4
ஆகையால், ஒரு மீறுதலின் பிரதிபலனாக, எல்லா மனிதருக்கும் தண்டனையின் தீர்ப்பு உண்டானதுபோல, ஒரு நீதிச் செயலின் பிரதிபலனாக, எல்லா மனிதருக்கும் வாழ்வைக் கொண்டுவருகிற, நீதிமான்கள் என்ற தீர்ப்பு உண்டானது. 1 கொரி 15:22ரோம 5:12ரோம 5:15அப் 13:39ரோம 5:19ரோம 4:251 தீமோ 2:4-6எபி 2:9 ஆகவே, ஒரு மனிதனுடைய கீழ்ப்படியாமையின் மூலமாக, எல்லோரும் பாவிகள் ஆக்கப்பட்டார்கள். அதுபோலவே, ஒரு மனிதனுடைய கீழ்ப்படிதலினாலே, எல்லோரும் நீதிமான்களாக்கப்படுவார்கள். ரோம 5:182 கொரி 5:21பிலி 2:8ரோம 5:12எபே 1:6ரோம 5:15தானி 9:24ஏசா 53:10-12
அதிகரிக்கும் மீறுதல்களை புரிந்துகொள்ளும்படியாக மோசேயின் சட்டம் கொடுக்கப்பட்டது. ஆனால், பாவம் பெருகிய இடத்தில் அவரின் கிருபை இன்னும் அதிகமாய்ப் பெருகிற்று. ரோம 6:1சங் 25:11தீத் 3:3-7ரோம 6:14கலா 3:19-25ரோம 4:15எபே 2:1-5ஏசா 1:18 மரணத்தின் மூலமாய் பாவம் ஆளுகை செய்தது. அதுபோலவே, கிருபையும் நீதியின் மூலமாய், நமது கர்த்தராகிய இயேசுகிறிஸ்துவின் வழியாக, நித்திய ஜீவனையும் கொண்டுவரும்படி ஆளுகை செய்கிறது. தீத் 2:11யோவா 1:16-17ரோம 5:14ரோம 6:14ரோம 6:23ரோம 8:10ரோம 5:12ரோம 5:17