மத்தேயு

Matthew · 28 அதிகாரங்கள்

அதிகாரங்கள் · Chapters

  1. 1
  2. 2
  3. 3
  4. 4
  5. 5
  6. 6
  7. 7
  8. 8
  9. 9
  10. 10
  11. 11
  12. 12
  13. 13
  14. 14
  15. 15
  16. 16
  17. 17
  18. 18
  19. 19
  20. 20
  21. 21
  22. 22
  23. 23
  24. 24
  25. 25
  26. 26
  27. 27
  28. 28

முன்னுரை

ஆசிரியர்

இந்தப் புத்தகத்தின் ஆசிரியரான மத்தேயு, இயேசுவைப் பின்பற்றுவதற்காக தனது வரி வசூலிக்கும் பணியைக் கைவிட்டார் (9:9; 13). மாற்குவும் லூக்காவும் தங்களது புத்தகங்களில் இவரை லேவி என்று குறிப்பிடுகின்றனர். இவருடைய பெயரின் அர்த்தம் ஆண்டவருடைய “வெகுமதி” என்பதாகும். பன்னிரெண்டு அப்போஸ்தலர்களில் ஒருவரான மத்தேயு தான், இந்தப் புத்தகத்தின் ஆசிரியர் என்று ஆதி சபை பிதாக்கள் பொதுவாக ஒப்புக்கொள்கின்றனர். மத்தேயு, இயேசுவின் ஊழியத்தின் நிகழ்வுகளை கண்ணாரக் கண்ட சாட்சியாவார். மற்ற சுவிசேஷங்களுடன் மத்தேயு சுவிசேஷத்தை ஒப்பீடு செய்யும் ஆய்வானது, கிறிஸ்துவின் அப்போஸ்தல சாட்சியானது பிரிக்கப்படவில்லை என்று நிரூபிக்கிறது.

எழுதப்பட்ட காலம் மற்றும் இடம்

ஏறக்குறைய கிபி 70 காலகட்டங்களில் எழுதப்பட்டிருக்கலாம். மத்தேயு சுவிசேஷத்தின் யூத தன்மையை கவனிக்கும்போது, இது பாலஸ்தீனம் அல்லது சீரியாவில் எழுதப்பட்டிருக்கலாம். ஆனாலும் இது அந்தியோகியாவில் ஆரம்பிக்கப்பட்டிருக்கலாம் என்று அநேகர் கருதுகின்றனர்.

யாருக்காக எழுதப்பட்டது

இந்த சுவிசேஷம் கிரேக்க மொழியில் எழுதப்பட்டிருப்பதால், மத்தேயு, கிரேக்க மொழி பேசும் யூத சமுதாயத்தை சேர்ந்த வாசகர்களை குறிக்கோளாகக் கொண்டிருக்கலாம் என்று தெரிகிறது. அநேகக் கூறுகள் யூத வாசகர்களைக் குறிக்கிறது. பழைய ஏற்பாட்டின் நிறைவேறுதலை மத்தேயு முக்கியத்துவப்படுத்துகிறார்; ஆபிரகாமிலிருந்து இயேசுவின் சந்ததியை வரிசைப்படுத்துதல் (1:1; 17); அவர் யூத மொழிநடையைப் பயன்படுத்துகிறார், எ. கா, “பரலோக ராஜ்யம்”, தேவனுடைய பெயரை பயன்படுத்துவதற்கு யூதர்கள் தயக்கம் காட்டுவதை பரலோகம் என்ற வார்த்தை வெளிப்படுத்துகிறது, “தாவீதின் குமாரனாகிய” இயேசுவை மையமாகக் கொண்டிருப்பது (1:1; 9:27; 12:23; 15:22; 20:30; 31; 21:9, 15; 22:41; 45). மத்தேயு யூத சமுதாயத்தை மையமாகக் காட்டுதல்.

எழுதப்பட்ட நோக்கம்

இந்த சுவிசேஷத்தை எழுதும்போது, யூத வாசகர்கள் மேசியாவாக இயேசுவை ஏற்றுக்கொள்ள வேண்டும் என்பதே மத்தேயுவின் நோக்கமாக இருக்கிறது. இங்கு கவனிக்க வேண்டிய காரியம் என்னவென்றால், தேவனுடைய ராஜ்யத்தை மனிதகுலத்திற்கு கொண்டுவருவதை வலியுறுத்துவதாகும். பழைய ஏற்பாட்டு தீர்க்கதரிசனங்களையும் எதிர்பார்ப்புகளையும் நிறைவேற்றும் ராஜாவாக இயேசுவை வலியுறுத்துகிறார் (மத்தேயு 1:1; 16:16; 20:28).

மையக் கருத்து

இயேசு-யூதர்களின் இராஜா

பொருளடக்கம்

1. இயேசுவின் பிறப்பு — 1:1-2:23

2. இயேசுவின் கலிலேய ஊழியம் — 3:1-18:35

3 இயேசுவின் யூதேயா ஊழியம் — 19:1-20:34

4. யூதேயாவில் கடைசி நாட்கள் — 21:1-27:66

5. இறுதிக்கட்ட நிகழ்வுகள் — 28:1-20