2 இராஜாக்கள் 21

2 Kings 21

யூதாவின் அரசன் மனாசே

மனாசே அரசனானபோது அவன் பன்னிரண்டு வயதுடையவனாயிருந்தான். அவன் எருசலேமில் ஐம்பத்தைந்து வருடங்கள் அரசாண்டான். அவனுடைய தாயின் பெயர் எப்சிபாள். ஏசா 62:41 நாளாக 3:132 நாளாக 32:332இராஜா 20:21மத் 1:10நீதி 5:19 இவன் இஸ்ரயேலருக்கு முன்பாக யெகோவா துரத்திய மக்களின் வெறுக்கத்தக்க பழக்கவழக்கங்களைப் பின்பற்றி, யெகோவாவின் பார்வையில் தீமைசெய்தான். 2 நாளாக 33:2-42 நாளாக 36:142இராஜா 16:2-42இராஜா 21:162இராஜா 21:72இராஜா 22:17உபா 12:31எசேக் 16:51 தனது தகப்பனாகிய எசேக்கியா அழித்த வழிபாட்டு மேடைகளை இவன் திரும்பக் கட்டினான். அத்துடன் இஸ்ரயேல் அரசனான ஆகாப் செய்ததுபோல, பாகாலுக்கு பலிபீடங்களைக் கட்டி, அசேரா விக்கிரக தூணையும் அமைத்தான். வானத்தின் எல்லா நட்சத்திரக் கூட்டங்களையும் விழுந்து வழிபட்டான். 2இராஜா 17:162இராஜா 18:41 இராஜா 16:31-33உபா 17:3உபா 4:191 இராஜா 18:211 இராஜா 18:262 நாளாக 32:12 யெகோவா எருசலேமில் என் பெயரை வைப்பேன் என்று கூறியிருந்த யெகோவாவின் ஆலயத்தில் அவன் பலிபீடங்களைக் கட்டினான். 1 இராஜா 8:292 சாமு 7:13எரே 32:341 இராஜா 9:32இராஜா 16:10-16உபா 12:5யாத் 20:24சங் 132:13-14 யெகோவாவின் ஆலயத்திலுள்ள இரண்டு முற்றங்களிலும் வானத்தின் நட்சத்திரக் கூட்டங்களுக்கெல்லாம் பலிபீடங்களைக் கட்டினான். 1 இராஜா 7:121 இராஜா 6:362இராஜா 23:122இராஜா 23:42 நாளாக 33:152 நாளாக 33:52இராஜா 23:6எசேக் 40:28 தன் சொந்த மகனையே நெருப்பில் பலியிட்டு, மந்திரவித்தை, பில்லிசூனியம் ஆகியவற்றைச் செய்து, ஜோசியக்காரரிடமும், குறிசொல்கிறவர்களிடமும் ஆலோசனை பெற்றான். யெகோவாவின் பார்வையில் அதிக தீமையானவற்றைச் செய்து அவருக்குக் கோபமூட்டினான். 2இராஜா 17:17லேவி 18:21லேவி 19:312இராஜா 16:3லேவி 19:262 நாளாக 33:6உபா 18:10-141 நாளாக 10:13

மனாசே தான் செய்த செதுக்கப்பட்ட அசேரா விக்கிரக தூணைக் கொண்டுபோய் ஆலயத்தில் வைத்தான். இந்த ஆலயத்தைப் பற்றியே யெகோவா தாவீதுக்கும் அவன் மகன் சாலொமோனுக்கும், “இஸ்ரயேலிலுள்ள எல்லாக் கோத்திரங்களிலுமிருந்து, நான் தெரிந்துகொண்ட எருசலேமிலும், அதிலுள்ள இந்த ஆலயத்திலும் என்னுடைய பெயரை என்றென்றுமாக வைப்பேன் என்று சொல்லியிருந்தார். 2 நாளாக 7:161 இராஜா 8:291 இராஜா 9:32 நாளாக 7:122 சாமு 7:132 நாளாக 33:152 நாளாக 33:72 நாளாக 7:20 என்னுடைய அடியவனாகிய மோசே இஸ்ரயேலுக்குக் கொடுத்த சட்டங்கள் அனைத்தையும் கைக்கொண்டு, நான் அவர்களுக்குக் கட்டளையிட்ட எல்லாவற்றையும் செய்யக் கவனமாயிருங்கள். அப்படி இருப்பீர்களானால் அவர்களுடைய முற்பிதாக்களுக்கு நான் கொடுத்த நாட்டிலிருந்து திரும்பவும் அவர்களை அலைந்து திரிய விடமாட்டேன்” என்றும் யெகோவா கூறியிருந்தார். 2 சாமு 7:101 நாளாக 17:92 நாளாக 33:82இராஜா 18:11-12உபா 28:1-14உபா 5:28-29எசேக் 22:2-16எசேக் 33:25-29 ஆனால் மக்களோ அதைக் கவனித்துக் கேட்கவில்லை. இஸ்ரயேலருக்கு முன்பாக யெகோவா அழித்த நாட்டினரைக் காட்டிலும் அதிகமான தீமையை இஸ்ரயேலர் செய்யத்தக்கதாக மனாசே அவர்களை வழிதவறி நடக்கப்பண்ணினான். நீதி 29:121 இராஜா 14:162 நாளாக 33:92 நாளாக 36:16தானி 9:10-11தானி 9:6எசேக் 16:51-52ஓசி 5:11

யெகோவா இறைவாக்கினரான தமது பணியாட்கள் மூலம் சொன்னதாவது: 2 நாளாக 33:102 நாளாக 36:15மத் 23:34-37நெகே 9:26நெகே 9:30 “யூதாவின் அரசனாகிய மனாசே இந்த அருவருக்கத்தக்க பாவங்களையெல்லாம் செய்திருக்கிறான். அவனுக்கு முன் இருந்த எமோரியரைப் பார்க்கிலும் கூடுதலான கொடுமைகளைச் செய்து, தன்னுடைய விக்கிரகங்களினால் யூதாவைப் பாவத்துக்குள் வழிநடத்தினான். 1 இராஜா 21:262இராஜா 24:3-42இராஜா 21:9எரே 15:41 இராஜா 14:161 இராஜா 15:301 இராஜா 16:192இராஜா 21:16 ஆகையினால் இஸ்ரயேலின் இறைவனாகிய யெகோவா சொல்வது இதுவே: கேட்கும் ஒவ்வொருவருடைய காதுகளும் அதிரும்படியாக யூதாவின்மேலும், எருசலேமின்மேலும் ஒரு பெரிய அழிவைக் கொண்டுவரப் போகிறேன் என்று கூறுகிறார். எரே 19:31 சாமு 3:112இராஜா 22:16ஆமோ 3:2தானி 9:12மீகா 3:12ஏசா 28:16லூக் 23:28-29 சமாரியாவுக்கு எதிராக பயன்படுத்தப்பட்ட அளவு நூலையும், ஆகாபின் வீட்டிற்கு எதிராய் பயன்படுத்தப்பட்ட தூக்கு நூலையும் நான் எருசலேமுக்கு மேலாகப் பிடிப்பேன். ஒருவன் ஒரு பாத்திரத்தைத் துடைத்து, அதைத் தலைகீழாக கவிழ்க்கிறதுபோல் நான் எருசலேமைத் துடைத்து அழித்துவிடுவேன். ஆமோ 7:7-8புலம் 2:8ஏசா 34:112இராஜா 10:11எசேக் 23:31-34ஏசா 10:22ஏசா 28:17எரே 25:9 நான் என் உரிமைச்சொத்திலிருந்து மீதியாயிருப்பவர்களை கைவிட்டு, அவர்களை அவர்களுடைய பகைவர்களின் கையில் ஒப்புக்கொடுப்பேன். அவர்கள் தங்களுடைய பகைவர்கள் எல்லோராலும் கொள்ளையிடப்பட்டு சூறையாடப்படுவார்கள். எரே 23:332இராஜா 19:4சங் 89:38-452 நாளாக 15:22 நாளாக 36:16-172இராஜா 19:30-312இராஜா 24:2ஆமோ 5:2 ஏனெனில், அவர்களுடைய முற்பிதாக்கள் எகிப்திலிருந்து வந்த நாளிலிருந்து இன்றுவரை என்னுடைய பார்வையில் தீமையானவற்றையே செய்து எனக்குக் கோபமூட்டிக்கொண்டே இருக்கிறார்கள்.” தானி 9:5-11உபா 31:27உபா 31:29உபா 9:21எசேக் 16:15-22எசேக் 20:13எசேக் 20:21எசேக் 20:30

மேலும் மனாசே எருசலேமை ஒரு எல்லையிலிருந்து மறு எல்லைவரைக்கும் அதிக குற்றமில்லாத இரத்தம் சிந்தி நிரப்பினான். அத்துடன் யெகோவாவின் பார்வையில் தான் செய்த பாவத்தோடு, யூதாவையும் பாவம் செய்யப்பண்ணி அவர்களையும் தீமையானவற்றைச் செய்யப் பண்ணினான். 2 நாளாக 33:92இராஜா 21:11எண் 35:331 இராஜா 14:15-162இராஜா 21:72இராஜா 24:3-4உபா 21:8-9யாத் 32:21

மனாசேயின் ஆட்சியின் மற்ற நிகழ்வுகளும், அவனுடைய பாவங்கள் உட்பட அவன் செய்த யாவும் யூதா அரசர்களின் வரலாற்றுப் புத்தகத்திலல்லவோ எழுதப்பட்டுள்ளன. 2 நாளாக 33:1-202இராஜா 20:20-21 மனாசே தன் முற்பிதாக்களைப்போல இறந்து, தன் அரண்மனைத் தோட்டமாகிய ஊசாவில் அடக்கம் செய்யப்பட்டான். அவனுக்குப்பின் அவன் மகனான ஆமோன் அரசனானான். 2 நாளாக 33:202இராஜா 21:262 நாளாக 21:202 நாளாக 24:162 நாளாக 24:252 நாளாக 28:272 நாளாக 32:33எரே 22:19

யூதாவின் அரசனான ஆமோன்

ஆமோன் அரசனானபோது இருபத்தி இரண்டு வயதுடையவனாயிருந்தான். இவன் எருசலேமில் இரண்டு வருடங்கள் ஆட்சிசெய்தான். இவனுடைய தாய் யோத்பா பட்டணத்தைச் சேர்ந்த ஆரூத்சின் மகள் மெசுல்லேமேத் என்பவள். 2 நாளாக 33:21-231 நாளாக 3:141 இராஜா 15:251 இராஜா 16:81 இராஜா 22:512இராஜா 15:23மத் 1:10 இவனும் தன் தகப்பனாகிய மனாசே செய்ததுபோல யெகோவாவின் பார்வையில் தீமையையே செய்தான். 2 நாளாக 33:22-232இராஜா 21:112இராஜா 21:2-7அப் 7:51மத் 23:32எண் 32:14 தன் தகப்பனுடைய எல்லா வழிகளிலும் நடந்து, அவன் வணங்கிய விக்கிரகங்களையே வணங்கினான். தன் முற்பிதாக்களின் இறைவனாகிய யெகோவாவைக் கைவிட்டதோடு, யெகோவாவின் வழிகளிலும் அவன் நடக்கவில்லை. 1 இராஜா 11:332இராஜா 22:171 நாளாக 28:9உபா 32:15எரே 2:13யோனா 2:8

ஆமோனின் அதிகாரிகள் அவனுக்கு எதிராகச் சதிசெய்து, அரசனை அவனுடைய அரண்மனையில் கொலைசெய்தார்கள். 2இராஜா 12:202 நாளாக 33:24-252இராஜா 14:191 இராஜா 15:271 இராஜா 16:92இராஜா 15:252இராஜா 15:30 அதன்பின் அந்த நாட்டு மக்கள் ஆமோன் அரசனுக்கு எதிராகச் சதிசெய்த எல்லோரையும் கொலைசெய்து, அவனுடைய இடத்தில் அவனுடைய மகன் யோசியாவை அரசனாக்கினார்கள். 2இராஜா 14:51 இராஜா 12:11 இராஜா 12:201 சாமு 11:152 நாளாக 22:12 நாளாக 26:12 நாளாக 33:252இராஜா 11:17

ஆமோனின் ஆட்சியின் மற்ற நிகழ்வுகளும், அவன் செய்தவைகளும் யூதா அரசர்களின் வரலாற்றுப் புத்தகத்திலல்லவோ எழுதப்பட்டுள்ளன. 2இராஜா 20:202இராஜா 21:17 இவன் ஊசாவின் தோட்டத்தில் தன் கல்லறையில் அடக்கம் செய்யப்பட்டான். அவனுக்குப்பின் அவனுடைய மகன் யோசியா அரசனானான். 2இராஜா 21:18மத் 1:101 இராஜா 13:5