2 சாமுவேல் 23

2 Samuel 23

தாவீதின் இறுதி வார்த்தைகள்

தாவீதின் இறுதி வார்த்தைகள் இவையே: 1 சாமு 16:12-132 சாமு 7:8-9சங் 89:20கொலோ 3:16சங் 78:70-71லூக் 24:441 நாளாக 16:4-51 நாளாக 16:7

“ஈசாயின் மகனான தாவீதின் இறைவாக்கு:

மகா உன்னதமானவரால் உயர்த்தப்பட்ட மனிதன்

இந்த இறைவாக்கைச் சொன்னான். அவன் யாக்கோபின் இறைவனால் அபிஷேகம் செய்யப்பட்டவன்.

அவன் இஸ்ரயேலில் பாடல்களைப் பாடுபவன்.

“யெகோவாவின் ஆவியானவர் என் மூலமாகப் பேசினார். 2 பேது 1:21மத் 22:43அப் 2:25-31மாற் 12:36எபி 3:7-8

அவரது வார்த்தை என் நாவிலிருந்தது.

இஸ்ரயேலின் இறைவன் என்னிடம் பேசி, இஸ்ரயேலின் உபா 32:42 சாமு 22:32யாத் 18:21சங் 72:2உபா 16:18-20யாத் 23:6-8எபி 1:8சங் 82:3-4

கற்பாறையானவர் என்னிடம் சொன்னதாவது:

‘ஒருவன் நியாயத்துடன் மனிதர்களை அரசாளும்போதும்,

இறை பயத்துடன் ஆட்சி செய்யும்போதும்,

அவன் காலையில் மேகங்களால் நியாயாதி 5:31சங் 72:6ஓசி 6:5சங் 89:36ஓசி 6:3ஏசா 4:2ஏசா 60:1ஏசா 60:18-20

மூடப்படாத சூரியனின் ஒளியைப்போல் இருப்பான்.

பூமியிலிருந்து புல்லை முளைக்கச் செய்யும் மழையின்

பின் தோன்றும் செழிப்பைப் போலவும் இருப்பான்.’

“எனது குடும்பம் இறைவனுக்கு உகந்ததாய் இருக்கவில்லையா? ஏசா 55:32 சாமு 7:14-16ஏசா 9:6-7எரே 32:40சங் 89:28-29எபி 6:191 நாளாக 17:11-14அப் 13:34

அவர் என்னுடன் ஒரு நித்திய உடன்படிக்கையை செய்யவில்லையா?

அதை ஒழுங்குபடுத்தியும், எல்லாப் பக்கத்திலும் பாதுகாத்துமிருந்தாரே.

அவர் எனது இரட்சிப்பை முழுமையாக்க மாட்டாரோ.

அவர் எனது எல்லா விருப்பத்தையும் நிறைவேற்ற மாட்டாரோ.

கையால் சேர்க்கப்படாத முட்களைப்போல் எசேக் 2:6உபா 13:13ஏசா 33:121 சாமு 2:122 சாமு 20:1ஆதி 3:18உன்னத 2:2மத் 13:41

தீய மனிதர்கள் வெளியே வீசப்பட வேண்டும்.

ஆனால் முட்களைத் தொடுகிற எவனும் எபி 6:82 தெச 2:82 சாமு 22:8-102 தெச 1:8ஏசா 27:4யோவா 15:6லூக் 19:14லூக் 19:27

இரும்பு ஆயுதத்தையோ அல்லது ஈட்டியையோ பயன்படுத்துகிறான்.

அவை கிடக்கும் இடத்திலேயே எரித்துப் போடப்படும்.”

தாவீதின் வலிமையுள்ள மனிதர்

தாவீதின் வலிமைவாய்ந்த வீரர்களின் பெயர்கள்: 1 நாளாக 11:11-471 நாளாக 27:21 நாளாக 27:32

தக்கெமோனியனான யோசேப்பாசெபெத் அந்த மூவரில் முக்கியமானவன். இவன் ஒரு போர்முனையில் எண்ணூறு பேரைக் குத்திக் கொன்றான்.

அவனுக்கு அடுத்தாக அகோகியனான தோதோவின் மகன் எலெயாசார் என்பவன். இவன் பெலிஸ்தியர் பாஸ்தம்மீம் என்னும் இடத்தில் போருக்குக் கூடியிருந்தபோது, தாவீதுடன் இருந்து பெலிஸ்தியரை நிந்தித்த வலிமைமிக்க மூவரில் ஒருவன். அவ்வேளையில் இஸ்ரயேலர் பின்வாங்கி ஓடினார்கள். 1 நாளாக 11:12-141 நாளாக 27:41 சாமு 17:261 சாமு 17:101 சாமு 17:361 சாமு 17:45-46ஏசா 63:3ஏசா 63:5 ஆனாலும் இவனே நிலைநின்று தன் கை சோர்ந்து, வாளோடு விறைத்துப் போகும்வரை பெலிஸ்தியரை வெட்டி வீழ்த்தியவன். அன்றையதினம் யெகோவா பெரும் வெற்றியைக் கொடுத்தார். போர்வீரர் எலெயாசாரிடம் திரும்பினார்கள். இறந்தவர்களிடம் கொள்ளையிட மட்டுமே அவனிடம் திரும்பி வந்தார்கள். 1 சாமு 11:131 சாமு 19:51 சாமு 14:231 சாமு 14:62 கொரி 4:52இராஜா 5:1எபே 6:10-18ஏசா 53:12

அடுத்தவன் ஆகேயின் மகன் சம்மா என்னும் ஆராரியன். ஒருமுறை பெலிஸ்தியர் சிறுபயறு நிறைந்து விளைந்திருந்த இடத்திலே ஒன்றாகத் திரண்டிருந்தபோது இஸ்ரயேலர் அவர்களிடமிருந்து தப்பி ஓடினார்கள். 1 நாளாக 11:13-141 நாளாக 11:272 சாமு 23:33 ஆனால் சம்மாவோ வயல் நடுவில் நின்று தனியாக பெலிஸ்தியரை எதிர்த்து, அவர்களைக் கொன்று அதைக் காத்துக்கொண்டான். யெகோவா பெரும் வெற்றியைக் கொண்டுவந்தார். 2 சாமு 23:10நீதி 21:31சங் 3:8சங் 44:2

அறுவடை காலத்தில் முப்பது படைத்தலைவர்களில் மூன்றுபேர் தாவீதைச் சந்திக்க அதுல்லாம் குகைக்கு வந்தார்கள். அப்பொழுது பெலிஸ்தியரின் படை ரெப்பாயீம் பள்ளத்தாக்கில் முகாமிட்டிருந்தது. 1 சாமு 22:12 சாமு 5:181 நாளாக 11:15-191 நாளாக 14:92 சாமு 5:22ஏசா 17:5யோசு 12:15யோசு 15:35 அந்த நேரத்தில் தாவீது அரணான இடத்தில் இருந்தான். பெலிஸ்தியரின் படையோ பெத்லெகேமில் இருந்தது. 1 சாமு 22:4-51 நாளாக 12:161 சாமு 10:51 சாமு 13:231 சாமு 13:41 சாமு 14:61 சாமு 22:11 சாமு 24:22 தாவீது தாகமாயிருந்தபடியால், “யாராவது பெத்லெகேம் வாசலருகேயுள்ள கிணற்றிலிருந்து எனக்குக் குடிக்கத் தண்ணீர் கொண்டுவருவீர்களா?” என்று கேட்டான். யோவா 4:14ஏசா 41:17ஏசா 44:3யோவா 4:10யோவா 7:37எண் 11:4-5சங் 42:1-2சங் 63:1 எனவே அந்த மூன்று வீரரும் பெலிஸ்தியரின் முகாமின் உள்ளே சென்று பெத்லெகேம் வாசலருகேயுள்ள கிணற்றில் தண்ணீர் எடுத்துத் தாவீதிடம் கொண்டுவந்தார்கள். ஆனாலும் தாவீது அதைக் குடிக்க மறுத்தான். அதற்குப் பதிலாக யெகோவாவுக்குமுன் அதை ஊற்றினான். ஆதி 35:142 கொரி 5:141 சாமு 7:6புலம் 2:19எண் 28:7பிலி 2:17ரோம 5:71 சாமு 19:5 “யெகோவாவே, நான் இதைக் குடிப்பதை எண்ணிப்பார்க்கவும் கூடாது. இது தங்கள் உயிரைப் பணயம் வைத்துச் சென்ற வீரர்களின் இரத்தமல்லவா?” என்று சொல்லி தாவீது அதைக் குடிக்க மறுத்தான். லேவி 17:101 கொரி 15:301 இராஜா 21:31 சாமு 2:301 சாமு 26:112 சாமு 20:20ஆதி 44:17ஆதி 9:4

இப்படிப்பட்ட செயல்களை இந்த மூன்று வீரர்களும் செய்தார்கள்.

யோவாபின் சகோதரனும், செருயாவின் மகனுமான அபிசாய் என்பவன் அந்த மூன்றுபேரில் முதல்வனாயிருந்தான். இவனே ஈட்டியால் முந்நூறுபேரைக் கொலைசெய்து அந்த மூன்றுபேரைப்போல் பேர்பெற்றவனானான். 2 சாமு 10:102 சாமு 10:141 நாளாக 11:20-212 சாமு 18:21 நாளாக 2:161 சாமு 26:6-82 சாமு 2:182 சாமு 20:10 அவன் அந்த மூன்று தலைவர்களில் அதிகமாய் மதிக்கப்படவில்லையோ? அவன் அவர்களுடன் சேர்க்கப்படாத போதிலும் அவர்களுக்குத் தளபதியானான். மத் 13:23மத் 13:81 நாளாக 11:251 கொரி 15:412 சாமு 23:132 சாமு 23:162 சாமு 23:9

கப்சேயேல் ஊரைச்சேர்ந்த யோய்தாவின் மகன் பெனாயா, மிகவும் பலமுள்ள போர்வீரனாயிருந்தான்; அவன் பல துணிச்சலான செயல்களைச் செய்திருந்தான். இவன் மோவாபியரில் இரண்டு சிறந்த வீரர்களை கொலைசெய்திருந்தான். அதோடு உறைபனி காலத்தில் ஒரு குழிக்குள் இறங்கி ஒரு சிங்கத்தையும் கொன்றான். 2 சாமு 20:232 சாமு 8:18யோசு 15:211 நாளாக 11:22-241 இராஜா 1:261 இராஜா 1:381 இராஜா 1:81 இராஜா 2:29-35 அவன் ஒரு உடல் பருத்த எகிப்தியனை அடித்து வீழ்த்தினான். எகிப்தியன் தனது கையில் ஈட்டியை வைத்திருந்தும் பெனாயா ஒரு தடியுடன் எதிர்த்துப் போனான். அவன் ஈட்டியைப் பறித்து, அதனாலேயே எகிப்தியனைக் கொன்றான். 1 நாளாக 11:231 சாமு 17:51கொலோ 2:15 இவ்விதமாக யோய்தாவின் மகன் பெனாயா பல வீரச்செயல்களைச் செய்தான். அவனும் மற்ற மூன்று தலைவர்களைப்போல் பிரபலமானவனாக இருந்தான். அந்த முப்பது தலைவர்களில் எவரையும்விட இவனே மதிப்புக்குரியவனாயிருந்தான். ஆனாலும் அந்த மூன்றுபேருள் இவன் சேர்க்கப்படவில்லை. தாவீது அவனைத் தன் மெய்க்காவலருக்குப் பொறுப்பாக நியமித்தான். 1 நாளாக 27:61 சாமு 22:142 சாமு 20:232 சாமு 8:8

அந்த முப்பதுபேரின் பெயர்களாவன: 2 சாமு 2:181 நாளாக 27:71 நாளாக 11:26

யோவாபின் சகோதரன் ஆசகேல்,

பெத்லெகேமைச் சேர்ந்த தோதோவின் மகன் எல்க்கானான்,

ஆரோதியனான சம்மா, 1 நாளாக 11:27-28நியாயாதி 7:1

ஆரோதியனான எலிக்கா,

பல்தியனான ஏலேஸ், 2 சாமு 14:21 நாளாக 11:27-281 நாளாக 27:9-10

தெக்கோவியனான இக்கேசின் மகன் ஈரா,

ஆனதோத்தியனான அபியேசர், யோசு 21:181 நாளாக 11:191 நாளாக 11:281 நாளாக 27:12

ஊஷாத்தியனான மெபுன்னாயி,

அகோகியனான சல்மோன், 1 நாளாக 27:132இராஜா 25:231 நாளாக 11:30

நெத்தோபாத்தியனான மகராயி,

நெத்தோபாத்தியனான பானாவின் மகன் ஏலேப், 1 நாளாக 11:30-311 நாளாக 27:15யோசு 18:28

பென்யமீனியரின் கிபியா ஊரைச்சேர்ந்த ரிபாயின் மகன் இத்தாயி,

பிரத்தோனியனான பெனாயா, நியாயாதி 12:151 நாளாக 27:14நியாயாதி 12:13நியாயாதி 2:9யோசு 24:301 நாளாக 11:31-32உபா 1:24

காயாஸ் பள்ளத்தாக்கைச் சேர்ந்தவனான ஈத்தாயி,

அர்பாத்தியனான அபிஅல்போன், 2 சாமு 3:161 நாளாக 11:32-33

பர்குமியனான அஸ்மாவேத்,

சால்போனியனான எலியாபா, 1 நாளாக 11:34

யாசேனின் மகன்களில் ஒருவனான

யோனத்தான், ஆராரியனான சம்மா, 1 நாளாக 11:271 நாளாக 11:352 சாமு 23:11

ஆராரியனான சாராரின் மகன் அகியாம்,

மாகாத்தியனான அகஸ்பாயின் மகன் எலிப்பெலேத், 2 சாமு 11:32 சாமு 15:121 நாளாக 27:33-342 சாமு 10:62 சாமு 10:82 சாமு 15:312 சாமு 17:23

கீலொனியனான அகிதோப்பேலின் மகன் எலியாம்,

கர்மேலியனான எஸ்ராயி, 1 நாளாக 11:37யோசு 15:55

அர்பியனான பாராயி,

சோபா ஊரானான நாத்தானின் மகன் ஈகால், 1 நாளாக 11:382 சாமு 8:3

காதியனான பானி,

அம்மோனியனான சேலேக், 1 நாளாக 11:371 நாளாக 11:392 சாமு 4:2

செருயாவின் மகனும் யோவாபின் யுத்த ஆயுதங்களைச் சுமக்கிறவனுமான பேரோத்தியனான நகராய்,

இத்திரியனான ஈரா, 1 நாளாக 2:532 சாமு 20:261 நாளாக 11:40

இத்திரியனான காரேப்,

ஏத்தியனான உரியா என்பவர்களே. 2 சாமு 11:31 இராஜா 15:52 சாமு 12:9மத் 1:61 நாளாக 11:412 சாமு 11:6-27

எல்லாமாக முப்பத்தேழுபேர் இருந்தார்கள்.