தாவீதும் மேவிபோசேத்தும்
இதன்பின்பு தாவீது, “யோனத்தானுக்காக நான் தயவுகாட்டும்படி, சவுலின் குடும்பத்தில் யாராவது இன்னும் உயிரோடிருக்கிறார்களா?” என்று கேட்டான். 1 சாமு 20:42மாற் 9:41மத் 25:401 பேது 3:82 சாமு 1:261 இராஜா 2:7மத் 10:42யோவா 19:26-27
அப்பொழுது சீபா என்னும் பெயருடைய சவுலின் வீட்டுப் பணியாளன் ஒருவன் இருந்தான். அவனைத் தாவீதுக்கு முன்பாக வரும்படி அழைத்தார்கள். அரசன் அவனிடம், “நீ தானா சீபா?” என்று கேட்டான். 2 சாமு 16:1-42 சாமு 19:172 சாமு 19:27-29ஆதி 15:2-3ஆதி 24:2ஆதி 39:6
அதற்கு அவன், “உமது அடியானே தான்” என்றான்.
அரசன் அவனிடம், “இறைவனுடைய தயவை நான் காட்டும்படி சவுலின் குடும்பத்தில் ஒருவரும் இல்லையா?” என்று கேட்டான். 2 சாமு 4:4தீத் 3:3-41 சாமு 20:14-17உபா 10:15லூக் 6:36மத் 5:44-452 சாமு 19:26உபா 4:37
அதற்கு சீபா, “இரண்டு கால்களும் முடமான யோனத்தானின் மகன் ஒருவன் இன்னும் உயிரோடிருக்கிறான்” என்றான்.
“அவன் எங்கே?” என அரசன் கேட்டான். 2 சாமு 17:27-29
அதற்கு சீபா, “அவன் லோதேபாரில் அம்மியேலின் மகன் மாகீரின் வீட்டில் இருக்கிறான்” என்றான்.
எனவே தாவீது அரசன், அம்மியேலின் மகன் மாகீரின் வீட்டிலிருந்த யோனத்தானின் மகனை லோதேபாரிலிருந்து கொண்டுவரச் செய்தான்.
சவுலின் மகனான யோனத்தானின் மகன் மேவிபோசேத் தாவீதிடம் வந்தபோது, முகங்குப்புற விழுந்து வணக்கம் தெரிவித்தான். 1 நாளாக 9:402 சாமு 16:42 சாமு 19:24-301 நாளாக 8:341 சாமு 25:231 சாமு 20:41ஆதி 18:2ஆதி 33:3
அப்போது தாவீது அவனிடம், “மேவிபோசேத்தே” என்றான்.
அதற்கு அவன், “இதோ உமது அடியேன்” என்றான்.
தாவீது அவனிடம், “பயப்படாதே; உன் தகப்பன் யோனத்தானின் நிமித்தம் நிச்சயம் உனக்கு தயவுகாட்டுவேன். உன் பாட்டன் சவுலுக்கு சொந்தமாயிருந்த நிலங்களையெல்லாம் உனக்குத் திரும்பக் கொடுப்பேன். மேலும் நீ எப்போதும் என்னுடைய பந்தியில் சாப்பிடுவாய்” என்றான். 2 சாமு 9:11 இராஜா 2:72 சாமு 19:282 சாமு 9:3லூக் 1:29-30லூக் 22:30ரூத் 2:11-122இராஜா 25:29
இதைக் கேட்ட மேவிபோசேத் தாவீதை வணங்கி, “செத்த நாய் போன்ற என்னை நீர் கவனத்தில்கொள்வதற்கு உமது அடியவன் எம்மாத்திரம்?” என்றான். 2 சாமு 16:9மத் 15:26-271 சாமு 24:14-151 சாமு 26:202 சாமு 3:8
அதன்பின் அரசன் சவுலின் பணியாளனாயிருந்த சீபாவை அழைப்பித்து அவனிடம், “சவுலுக்கும் அவன் குடும்பத்தாருக்கும் சொந்தமாயிருந்த யாவற்றையும் உன் எஜமானின் பேரனுக்குக் கொடுத்துள்ளேன். 2 சாமு 16:42 சாமு 19:291 சாமு 9:1ஏசா 32:8 நீயும் உன் மகன்களும் உன் பணியாட்களும் அந்த நிலத்தை அவனுக்காகப் பயிரிடுங்கள். உன் எஜமானுடைய பேரனின் பராமரிப்புக்காக அதன் விளைச்சலைக் கொண்டுவாருங்கள். ஆனாலும் உன் எஜமானின் பேரன் மேவிபோசேத் எப்போதும் என்னுடைய பந்தியில் சாப்பிடுவான்” என்றான். சீபாவுக்கு பதினைந்து மகன்களும் இருபது வேலைக்காரரும் இருந்தார்கள். 2 சாமு 9:72 சாமு 19:282இராஜா 25:292 சாமு 9:11-13லூக் 14:15
அப்பொழுது சீபா அரசனிடம், “என் தலைவனாகிய அரசன் எனக்குக் கட்டளையிட்டவைகளை எல்லாம் நான் நிறைவேற்றுவேன்” என்றான். எனவே மேவிபோசேத் அரசனின் மகன்களில் ஒருவனைப்போல் தாவீதின் பந்தியில் சாப்பிட்டு வந்தான். 2 சாமு 16:1-42 சாமு 19:262 சாமு 19:17
மேவிபோசேத்துக்கு மீகா என்னும் பெயருடைய வாலிபனான ஒரு மகன் இருந்தான். சீபாவின் குடும்பத்தார் அனைவரும் மேவிபோசேத்துக்கு பணியாட்களாயிருந்தார்கள். 1 நாளாக 8:34-401 நாளாக 8:81 நாளாக 9:40-44மீகா 7:5-6 மேவிபோசேத்துக்கு இரண்டு கால்களும் முடமாயிருந்தபடியாலும், எப்பொழுதும் அரசனுடைய பந்தியில் சாப்பிட்டபடியாலும் எருசலேமிலேயே வாழ்ந்து வந்தான். 2 சாமு 9:72 சாமு 9:10-112 சாமு 9:3