லேவியராகமம் 24

Leviticus 24

எண்ணெயும் அப்பமும்

யெகோவா மோசேயிடம், “விளக்குகள் தொடர்ந்து எரிந்து ஒளி கொடுக்கும்படியாக, ஒலிவ விதைகளை இடித்துப் பிழிந்தெடுத்த தெளிந்த எண்ணெயைக் கொண்டுவரும்படி இஸ்ரயேலருக்குக் கட்டளையிடு. 2 கொரி 4:6எபே 5:8-14யாத் 27:20-21யோவா 8:12அப் 26:18எபே 1:17-18பிலி 2:15-161 சாமு 3:3-4 சபைக் கூடாரத்திலே, சாட்சிப்பெட்டியின் திரைக்கு வெளியே, இந்த விளக்குகளை ஆரோன் யெகோவா முன்னிலையில் மாலைவேளை தொடங்கி விடியும்வரை தொடர்ந்து எரியும்படிச் செய்யவேண்டும். இது தலைமுறைதோறும் ஒரு நிரந்தர நியமமாக இருக்கவேண்டும். சுத்தத் தங்கத்தினாலான குத்துவிளக்கின் மேலுள்ள விளக்குகள் யெகோவா முன்னிலையில் தொடர்ந்து எரியும்படி அவன் பார்த்துக்கொள்ளவேண்டும். யாத் 31:8யாத் 37:17-24யாத் 39:371 நாளாக 28:151 இராஜா 7:49யாத் 25:31-39எபி 9:2எரே 52:19

“சிறந்த மாவை எடுத்து, ஒவ்வொரு அப்பத்திற்கும் பத்தில் இரண்டு எப்பா அளவு மாவைப் பயன்படுத்தி, பன்னிரண்டு அப்பங்களைச் சுடவேண்டும். யாத் 25:301 இராஜா 18:311 சாமு 21:4-5யாத் 40:23அப் 26:7யாக் 1:1மத் 12:4 ஒவ்வொரு வரிசையிலும் ஆறு அப்பங்களாக, யெகோவா முன்னிலையில் காணப்படும் சுத்தத் தங்கத்தினாலான மேஜையின்மேல் இரண்டு வரிசைகளில் அவற்றை வைக்கவேண்டும். 1 இராஜா 7:48யாத் 25:23-242 நாளாக 13:112 நாளாக 4:19யாத் 37:10-16எபி 9:21 கொரி 14:40யாத் 39:36 ஒவ்வொரு வரிசையிலும் அப்பத்திற்கான ஞாபகார்த்தப் பங்காகவும், நெருப்பினால் யெகோவாவுக்குச் செலுத்தப்படும் ஒரு காணிக்கையாகவும் இருக்கும்படி, கொஞ்சம் சுத்தமான நறுமணத்தூளையும் போடவேண்டும். லேவி 2:2வெளி 8:3-41 கொரி 11:23-25அப் 10:31அப் 10:4எபே 1:6யாத் 12:14யாத் 13:9 ஒவ்வொரு ஓய்வுநாளிலும் இஸ்ரயேலர் சார்பான, நிரந்தர உடன்படிக்கையாக இந்த அப்பம் யெகோவாவுக்கு முன்பாக நித்தமும் வைக்கப்பட வேண்டும். 2 நாளாக 2:4எண் 4:71 நாளாக 9:321 நாளாக 23:29மத் 12:3-5நெகே 10:33 இது ஆரோனுக்கும் அவன் மகன்களுக்கும் உரியது. அவர்கள் இதை ஒரு பரிசுத்த இடத்தில் சாப்பிடவேண்டும். ஏனெனில், இது யெகோவாவுக்கு நெருப்பினால் செலுத்தப்படும் காணிக்கைகளில் அவர்களுடைய நிரந்தரமான உரிமையில் மகா பரிசுத்தமான பங்கு.” லேவி 8:31லூக் 6:4மத் 12:4மாற் 2:26லேவி 10:17லேவி 6:161 சாமு 21:6லேவி 21:22

நிந்தனைக்குத் தண்டனை

ஒரு எகிப்திய மனிதனுக்கும், இஸ்ரயேல் பெண்ணுக்கும் மகனான ஒரு மனிதன் இஸ்ரயேல் மக்களுக்குள் போனான். அவனுக்கும் ஒரு இஸ்ரயேலனுக்கும் இடையில் முகாமுக்குள் சண்டை மூண்டது. யாத் 12:38எண் 11:4 அந்த நேரத்தில் இஸ்ரயேல் பெண்ணின் மகனான அவன், யெகோவாவின் பெயரை தூஷண வார்த்தைகளால் நிந்தித்தான். எனவே அவர்கள் அவனை மோசேயிடம் கொண்டுவந்தார்கள். அவனுடைய தாய் தாண் கோத்திரத்து திப்ரியின் மகளான செலோமித். யாத் 20:7யாத் 18:22யாத் 18:26யாத் 3:15ஏசா 8:21யோபு 2:5லேவி 24:15-16மத் 26:65 அவனைப்பற்றி யெகோவாவின் விருப்பம் தெளிவாகும் வரை, அவனை அவர்கள் காவலில் வைத்தார்கள். யாத் 18:15-16எண் 15:34எண் 27:5எண் 36:5-6யாத் 18:23

அப்பொழுது யெகோவா மோசேயுடன் பேசிச் சொன்னதாவது: “நீ நிந்தித்தவனை முகாமுக்கு வெளியே கொண்டுபோக வேண்டும். அவன் நிந்தித்ததைக் கேட்டவர்கள் எல்லோரும் தங்கள் கைகளை அவன் தலையில் வைக்கவேண்டும். பின்பு சபையார் அனைவரும் அவனைக் கல்லெறிந்து கொல்லவேண்டும். உபா 17:7உபா 21:21லேவி 20:27யோவா 10:31-33லேவி 20:2அப் 7:58-59உபா 13:9-10உபா 22:21 நீ இஸ்ரயேலரிடம் சொல்லவேண்டியதாவது: யாராவது தன் இறைவனை நிந்தித்தால், அக்குற்றத்திற்கு அவன் பொறுப்பாளியாவான். யாத் 22:28லேவி 5:1எண் 9:13லேவி 20:16-17 யெகோவாவின் பெயரை நிந்திக்கிற எவனும் கொல்லப்படவேண்டும். சபையார் அனைவரும் அவனைக் கல்லெறிந்து கொல்லவேண்டும். அவன் பிறநாட்டினனோ, தன் நாட்டினனோ யெகோவாவின் பெயரை நிந்தித்தால் அவன் கொல்லப்படவேண்டும்” என்றார். மத் 12:31யாக் 2:7யோவா 10:33-361 தீமோ 1:13மாற் 3:28-291 இராஜா 21:10-13அப் 26:11யாத் 20:7

“ ‘யாராவது ஒருவன் ஒரு மனித உயிரைக் கொலை செய்தால், அவன் கொல்லப்படவேண்டும். உபா 19:11-12ஆதி 9:5-6உபா 27:24யாத் 21:12-14எண் 35:30-31 யாராவது ஒருவன் இன்னொருவனுடைய மிருகத்தைக் கொன்றால், அவன் உயிருக்குப்பதில், உயிராகப் பதிலீடு செய்யவேண்டும். லேவி 24:21யாத் 21:34-36 யாராவது ஒருவன் தன் அயலானை காயப்படுத்தினால், அவன் செய்தபடியே, அவனுக்கும் திருப்பிச் செய்யப்படவேண்டும். உபா 19:21மத் 5:38மத் 7:2 முறிவுக்கு முறிவு, கண்ணுக்குக் கண், பல்லுக்குப் பல் பதிலீடு செய்யப்படவேண்டும். மற்றவனைக் காயப்படுத்தியது போலவே இவனும் அவ்விதமாய் காயப்படுத்தப்பட வேண்டும். உபா 19:21மத் 5:38யாத் 21:23-25 மிருகத்தைக் கொல்லுகிற எவனும் அதற்காகப் பதிலீடு செய்யவேண்டும். ஆனால் மனிதனைக் கொல்லுகிறவனோ கொல்லப்படவேண்டும். லேவி 24:17-18யாத் 21:33 உங்களிடம் தன் நாட்டினனுக்கும், பிறநாட்டினனுக்கும் ஒரேவிதமான சட்டம் இருக்கவேண்டும். உங்கள் இறைவனாகிய யெகோவா நானே’ ” என்றார். யாத் 12:49எண் 15:15-16எண் 9:14லேவி 19:34எண் 15:29லேவி 17:10

மோசே இஸ்ரயேலருடன் பேசினான். அவர்கள் இறைவனை நிந்தனை செய்தவனை முகாமுக்கு வெளியே கொண்டுபோய் கல்லெறிந்து கொன்றார்கள். இவ்விதமாய் மோசேக்கு யெகோவா கட்டளையிட்டபடியே இஸ்ரயேலர் செய்தார்கள். எபி 10:28-29எபி 2:2-3லேவி 24:14-16எண் 15:35-36