அப்போஸ்தலருடைய நடபடிகள் 28

Acts 28
அத்தியாயம் 28

மெலித்தாவில் கரைசேர்தல்

நாங்கள் தப்பிக் கரையைச் சேர்ந்தப்பின்பு, அந்தத் தீவின் பெயர் மெலித்தா என்று அறிந்தோம். அப் 27:26அப் 27:44அப் 27:39அப் 16:10 அறிமுகமில்லாத அந்தத் தீவின் மக்கள் எங்களுக்குப் பாராட்டின அன்பு கொஞ்சமல்ல. அந்த நேரத்திலே பிடித்திருந்த மழைக்காகவும் குளிருக்காகவும் அவர்கள் நெருப்பை மூட்டி, எங்கள் அனைவரையும் சேர்த்துக்கொண்டார்கள். கொலோ 3:11எபி 13:2ரோம 1:142 கொரி 11:27அப் 28:41 கொரி 14:11மத் 10:42நீதி 24:11-12 பவுல் சில விறகுகளை வாரி அந்த நெருப்பின்மேல் போடும்போது, ஒரு விரியன்பாம்பு வெப்பம் தாங்காமல் வெளியே வந்து அவனுடைய கையைக் கவ்விக்கொண்டது. மத் 23:33மத் 12:342 கொரி 11:23அப் 28:42 கொரி 6:9ஏசா 30:6ஏசா 41:24ஏசா 59:5 விரியன்பாம்பு அவன் கையிலே தொங்குகிறதை அறிமுகமில்லாத அந்தத் தீவின் மக்கள் கண்டபோது, இந்த மனிதன் கொலைபாதகன், இதற்குச் சந்தேகமில்லை; இவன் கடலிலிருந்து தப்பிவந்தும், பழியானது இவனைப் பிழைக்க விடவில்லை என்று தங்களுக்குள்ளே சொல்லிக்கொண்டார்கள். லூக் 13:2லூக் 13:4அப் 28:2அப் 28:5யோவா 7:24ஏசா 43:20யோவா 9:1-2மத் 23:35 அவன் அந்த விரியன் பாம்பை தீயிலே உதறிப்போட்டு, ஒரு தீங்கும் அடையாதிருந்தான். லூக் 10:19மாற் 16:18சங் 91:13எண் 21:6-9வெளி 9:3-4யோவா 3:14-15ரோம 16:20 அவனுக்கு வீக்கங்கொண்டு, அல்லது அவன் உடனடியாக விழுந்து சாவானென்று அவர்கள் பார்த்துக்கொண்டிருந்தார்கள்; நெடுநேரமாகப் பார்த்துக்கொண்டிருந்தும், ஒரு சேதமும் அவனுக்கு வராததைக் கண்டபோது, தங்களுடைய எண்ணத்தை மாற்றி, அவர் ஒரு தெய்வம் என்று சொல்லிக்கொண்டார்கள். அப் 12:22அப் 14:11-13மத் 21:9மத் 27:22 தீவிற்கு முதலாளியாகிய புபிலியு என்னும் பெயர்கொண்டவனுடைய நிலங்கள் அந்த இடத்திற்கு அருகில் இருந்தது; அவன் எங்களை ஏற்றுக்கொண்டு, மூன்று நாட்கள் அன்போடு உபசரித்தான். மத் 10:40-41அப் 13:7அப் 18:12அப் 23:24அப் 28:2லூக் 19:6-9 புபிலியுவினுடைய தகப்பன் காய்ச்சலாலும் இரத்த பேதியினாலும் வியாதிப்பட்டு கிடந்தான்; பவுல் அவனிடத்திற்குப்போய் ஜெபம்பண்ணி, அவன்மேல் கரங்களை வைத்து, அவனைக் குணமாக்கினான். அப் 9:40மாற் 6:5யாக் 5:14-16மத் 9:18மத் 10:8மாற் 16:181 கொரி 12:281 கொரி 12:9 இது நடந்தபின்பு, தீவிலே இருந்த மற்ற வியாதிக்காரர்களும் வந்து குணமாக்கப்பட்டார்கள். அப் 5:12அப் 5:15மத் 4:24மாற் 6:54-56 அவர்கள் எங்களுக்கு அதிக மரியாதை செய்து, நாங்கள் கப்பல் ஏறிப்போகிறபோது எங்களுக்குத் தேவையானவைகளை ஏற்றினார்கள். 1 தெச 2:6மத் 6:31-34பிலி 4:11-12பிலி 4:191 தீமோ 5:17-181 தீமோ 5:3-42 கொரி 8:2-62 கொரி 9:5-11

ரோமுக்கு வந்துசேர்தல்

மூன்று மாதங்கள் சென்றபின்பு, அந்தத் தீவிலே மழைகாலத்திற்கு தங்கியிருந்த மிதுனம் என்னும் அடையாளமுடைய அலெக்சந்திரியா பட்டணத்துக் கப்பலில் நாங்கள் ஏறிப் புறப்பட்டு, அப் 27:61 கொரி 8:4ஏசா 45:20அப் 6:9யோனா 1:16யோனா 1:5 சீரகூசா பட்டணத்தைச் சேர்ந்து, அங்கே மூன்று நாட்கள் தங்கினோம். அந்த இடத்தைவிட்டுக் கரையோரமாகச் சுற்றி பயணம்செய்து, ரேகியு துறைமுகத்திற்கு வந்துசேர்ந்தோம். மறுநாளில் தென்றல் காற்றடிக்கும்போது புறப்பட்டு, இரண்டாம் நாள் புத்தேயோலி பட்டணத்திற்கு வந்து, அப் 27:13 அங்கே சகோதரர்களைக் கண்டோம்; அவர்கள் எங்களை ஏழுநாட்கள் தங்களிடத்தில் இருக்கும்படி வேண்டிக்கொண்டார்கள்; அந்தப்படி நாங்கள் இருந்து, பின்பு ரோமாபுரிக்குப் போனோம். அப் 19:1அப் 20:6அப் 21:4அப் 21:7-8ஆதி 7:4ஆதி 8:10-12அப் 9:42-43யோவா 21:23 அந்த இடத்திலுள்ள சகோதரர்கள் நாங்கள் வருகிற செய்தியைக் கேள்விப்பட்டு, சிலர் அப்பியுபரம்வரைக்கும், சிலர் மூன்று தங்கும் விடுதி என்ற இடம்வரைக்கும், எங்களுக்கு எதிர்கொண்டுவந்தார்கள்; அவர்களைப் பவுல் கண்டு, தேவனை ஸ்தோத்திரித்துத் தைரியமடைந்தார்கள். எபி 13:3ரோம 15:241 கொரி 12:21-221 சாமு 30:63 யோவா 1:6-8அப் 10:25அப் 21:5யாத் 4:14 நாங்கள் ரோமாபுரியில் சேர்ந்தபோது, நூறுபேருக்குத் தலைவன் தன் காவலலிருந்தவர்களைப் போர்த்தலைவனிடத்தில் ஒப்புக்கொடுத்தான்; அப்பொழுது பவுல் தன்னைக் காத்திருக்கிற போர்ச்சேவகனுடனே தனித்துக் குடியிருக்கும்படி உத்தரவு பெற்றுக்கொண்டான். அப் 27:3அப் 24:23அப் 28:30-31ரோம 1:7-152இராஜா 25:8அப் 18:2அப் 19:21அப் 2:10

பவுல் ரோமாபுரியில் பிரசங்கித்தல்

மூன்று நாட்களுக்குப்பின்பு, பவுல் யூதர்களில் முக்கியமானவர்களை வரவழைத்தான்; அவர்கள் கூடிவந்திருந்தபோது, அவன் அவர்களை நோக்கி: சகோதரர்களே, நம்முடைய மக்களுக்கும் நம்முடைய முன்னோர்களின் பழக்கங்களுக்கும் விரோதமானதொன்றையும் நான் செய்யாமலிருந்தும், கட்டப்பட்டவனாக எருசலேமிலிருந்து ரோமர்கள் கைகளில் ஒப்புக்கொடுக்கப்பட்டேன். அப் 25:8அப் 6:14அப் 25:10அப் 21:33-40அப் 22:5அப் 24:10-16அப் 23:1-11அப் 25:2 அவர்கள் என்னை நியாயம் விசாரித்தபோது மரணத்திற்குரிய குற்றம் ஒன்றும் என்னிடத்தில் காணாதபடியினால், என்னை விடுதலையாக்க மனதாயிருந்தார்கள். அப் 26:31-32அப் 23:29அப் 22:24-25அப் 22:30அப் 24:10அப் 24:22அப் 25:7-8 யூதர்கள் அதற்கு எதிர்பேசினபோது, நான் இராயனிடத்தில் முறையிடவேண்டியதாயிருந்தது; ஆனாலும் என் மக்கள்மேல் எந்தவொரு குற்றஞ்சாட்டவேண்டுமென்று நான் அப்படிச் செய்யவில்லை. அப் 26:32அப் 25:10-12அப் 25:21அப் 25:251 பேது 2:22-23ரோம 12:19-21 இந்தக் காரியத்தினிமித்தமே உங்களைக் காணவும் உங்களோடு பேசவும் உங்களை அழைப்பித்தேன். இஸ்ரவேலுடைய நம்பிக்கைக்காகவே இந்தச் சங்கிலியால் கட்டப்பட்டிருக்கிறேன் என்றான். 2 தீமோ 2:9அப் 26:6-7எபே 6:20அப் 26:29பிலி 1:13அப் 21:33அப் 23:6அப் 24:15 அதற்கு அவர்கள்: உன்னைக்குறித்து யூதேயாவிலிருந்து எங்களுக்குக் கடிதம் ஒன்றும் வரவுமில்லை, வந்த சகோதரர்களில் ஒருவனும் உன்பேரில் ஒரு தீங்கானக் காரியத்தையும் அறிவித்ததுமில்லை, அதைப்பற்றிப் பேசினதுமில்லை. ஏசா 41:11ஏசா 50:8ஏசா 54:17அப் 22:5யாத் 11:7 எங்கும் இந்த மதப்பிரிவிற்கு விரோதமாகப் பேசுகிறதாக நாங்கள் அறிந்திருக்கிறபடியால், இதைக்குறித்து உன்னுடைய கருத்து என்னவென்று கேட்டறிய விரும்புகிறோம் என்றார்கள். 1 பேது 2:12அப் 24:141 பேது 3:161 பேது 4:14-16அப் 16:20-21அப் 17:6-7அப் 24:5-61 கொரி 11:19 அதற்காக அவர்கள் ஒரு நாளைக்குறித்து, அந்த நாளில் அநேகம்பேர் அவன் தங்கியிருந்த வீட்டிற்கு அவனிடத்தில் வந்தார்கள். அவன் காலைதுவங்கி மாலைவரை மோசேயின் நியாயப்பிரமாணத்திலும் தீர்க்கதரிசிகளின் புத்தகங்களிலிருந்தும் இயேசுவிற்குரியவைகளை அவர்களுக்குப் போதித்து, தேவனுடைய ராஜ்யத்தைக்குறித்துச் சாட்சிக்கொடுத்து வலியுறுத்திப் பேசினான். அப் 17:2-3அப் 19:8அப் 18:28அப் 26:22-23லூக் 24:26-27அப் 26:6அப் 8:35லூக் 24:44 அவன் சொன்னவைகளைச் சிலர் ஏற்றுக்கொண்டனர், சிலர் விசுவாசிக்காமலிருந்தார்கள். அப் 14:4அப் 17:4-5அப் 19:8-9அப் 18:6-8ரோம 3:3அப் 13:48-50ரோம 11:4-6 இப்படி அவர்கள் ஒருவரோடொருவர் கருத்து வேறுபட்டவர்களாக, புறப்பட்டுப்போகும்போது, பவுல் அவர்களுக்குச் சொன்ன வார்த்தையாவது: மத் 15:72 பேது 1:21மாற் 7:6

நீங்கள் காதாரக்கேட்டும் உணராதிருப்பீர்கள், ஏசா 6:9-10எசேக் 12:2ஏசா 42:19-20மத் 13:14-15மாற் 4:122 கொரி 4:4-6லூக் 24:45யோவா 12:38-40

கண்ணாரக்கண்டும் பார்க்காதிருப்பீர்கள்.

இவர்கள் கண்களினால் காணாமலும், ஏசா 6:10

காதுகளினால் கேளாமலும்,

இருதயத்தினால் உணர்ந்து குணப்படாமலும்,

நான் இவர்களை ஆரோக்கியமாக்காமலும் இருக்கும்படிக்கு,

இந்த மக்களின் இருதயம் கொழுத்திருக்கிறது;

காதுகளினால் மந்தமாகக் கேட்டுத் தங்களுடைய கண்களை மூடிக்கொண்டார்கள்’

என்று இந்த மக்களினிடத்திற்குப்போய்ச் சொல்லு என்பதைப் பரிசுத்த ஆவியானவர் ஏசாயா தீர்க்கதரிசியைக்கொண்டு நம்முடைய முற்பிதாக்களுடனே நன்றாகச் சொல்லியிருக்கிறார்.

ஆதலால் தேவனுடைய இரட்சிப்பு யூதரல்லாதவர்களுக்கு அனுப்பப்பட்டிருக்கிறதென்றும், அவர்கள் அதற்குச் செவிகொடுப்பார்களென்றும் உங்களுக்குத் தெரிந்திருக்கக்கடவது என்றான். லூக் 2:30-32அப் 26:17-18ரோம 3:29-30லூக் 3:6ரோம 15:8-16அப் 11:18அப் 13:46-47அப் 14:27 இப்படி அவன் சொன்னபின்பு, யூதர்கள் தங்களுக்குள்ளே மிகவும் விவாதம்பண்ணிக்கொண்டு, போய்விட்டார்கள். பின்பு பவுல் தனக்காக வாடகைக்கு வாங்கியிருந்த வீட்டிலே இரண்டு வருடங்கள் முழுதும் தங்கி, தன்னிடத்தில் வந்த அனைவரையும் ஏற்றுக்கொண்டு, மிகுந்த தைரியத்துடனே தடையில்லாமல், தேவனுடைய ராஜ்யத்தைக்குறித்துப் பிரசங்கித்து, கர்த்தராகிய இயேசுகிறிஸ்துவைப்பற்றிய சத்தியங்களை உபதேசித்துக்கொண்டிருந்தான். அப் 4:29எபே 6:19-20அப் 28:23மத் 4:232 தீமோ 4:17அப் 20:25அப் 8:12பிலி 1:14