உபாகமம் 16

Deuteronomy 16
அத்தியாயம் 16

பஸ்கா பண்டிகை

“ஆபீப் 1 மாதத்தைக் கவனித்திருந்து, அதில் உன் தேவனாகிய யெகோவாவுக்குப் பஸ்காவை அனுசரிக்கக்கடவாய்; ஆபீப் மாதத்திலே இராக்காலத்தில் உன் தேவனாகிய யெகோவா உன்னை எகிப்திலிருந்து புறப்படச்செய்தார். யாத் 13:4யாத் 34:18யாத் 12:2-20எண் 28:16லேவி 23:5யாத் 23:15எண் 9:2-5யாத் 12:29-42 யெகோவா தமது நாமம் விளங்கும்படி தெரிந்துகொள்ளும் இடத்தில், உன் தேவனாகிய யெகோவாவுக்குப் பஸ்காவின் பலியாகிய ஆடுமாடுகளைப் பலியிடுவாயாக. உபா 12:5உபா 12:261 கொரி 5:7லூக் 22:15லூக் 22:8மத் 26:17மாற் 14:12எண் 28:16-19 நீ எகிப்துதேசத்திலிருந்து புறப்பட்ட நாளை நீ உயிரோடிருக்கும் நாட்களெல்லாம் நினைக்கும்படி, பஸ்கா பலியுடனே புளிப்புள்ள அப்பம் சாப்பிடாமல், சிறுமையின் அப்பமாகிய புளிப்பில்லா அப்பங்களை ஏழுநாட்கள் வரைக்கும் சாப்பிடுவாயாக; நீ விரைவாக எகிப்துதேசத்திலிருந்து புறப்பட்டபடியினால் இப்படிச் செய்யவேண்டும். யாத் 12:39யாத் 12:19-20யாத் 34:18யாத் 12:14-15யாத் 12:8யாத் 13:3-9லூக் 22:19எண் 9:11 ஏழுநாட்களளவும் உன் எல்லைகளிலெங்கும் புளிப்புள்ள அப்பம் உன்னிடத்தில் காணப்படக்கூடாது; நீ முதல் நாள் மாலையில் செலுத்திய பலியின் மாம்சத்தில் ஏதாகிலும் இரவுமுழுதும் விடியற்காலம் வரைக்கும் வைக்கவேண்டாம். யாத் 12:10யாத் 34:25யாத் 13:7யாத் 12:15யாத் 12:8 உன் தேவனாகிய யெகோவா உனக்குக்கொடுக்கும் உன்னுடைய வாசல்களில் எதிலும் நீ பஸ்காவை அடிக்கவேண்டாம். உபா 12:5-6உபா 16:2 உன் தேவனாகிய யெகோவா தமது நாமம் விளங்கும் இடத்திலே, நீ எகிப்திலிருந்து புறப்பட்ட நேரமாகிய சாயங்காலத்திலே சூரியன் மறையும்போது பஸ்காவை அடித்து, 1 பேது 1:19-20உபா 12:5யாத் 12:6-9எபி 9:26மத் 26:20எபி 1:2-3எண் 9:11எண் 9:3 உன் தேவனாகிய யெகோவா தெரிந்துகொண்ட இடத்திலே, அதைப் பொரித்துச் சாப்பிட்டு, விடியற்காலத்திலே உன் கூடாரங்களுக்குத் திரும்பிப்போவாயாக. 2 நாளாக 35:132இராஜா 23:23உபா 16:2உபா 16:6யாத் 12:8-9யோவா 11:55யோவா 2:13யோவா 2:23 நீ ஆறு நாட்களும் புளிப்பில்லாத அப்பம் சாப்பிடவேண்டும், ஏழாம் நாள் உன் தேவனாகிய யெகோவாவுக்கு அனுசரிக்கப்படும் நாளாயிருக்கும்; அதிலே யாதொரு வேலையும் செய்யவேண்டாம். யாத் 12:15-16யாத் 13:6-8லேவி 23:36லேவி 23:6-8எண் 28:17-192 நாளாக 7:9யோவே 1:14நெகே 8:18

வாரங்களின் பண்டிகை

“ஏழு வாரங்களை எண்ணுவாயாக; அறுப்பு அறுக்கத் துவங்கும் காலமுதல் நீ அந்த ஏழு வாரங்களையும் எண்ணவேண்டும். யாத் 23:16யாத் 34:22அப் 2:12 நாளாக 8:13உபா 16:10உபா 16:16லேவி 23:15-16எண் 28:26-30 அவைகள் முடிந்தபோது வாரங்களின் பண்டிகையை உன் தேவனாகிய யெகோவாவுக்கென்று ஆசரித்து, உன் தேவனாகிய யெகோவா உன்னை ஆசீர்வதித்ததற்குத்தக்கதாக உன்னால் முடிந்த மனப்பூர்வமான காணிக்கையாகிய பகுதியைச் செலுத்தி, 1 கொரி 16:22 கொரி 8:102 கொரி 9:5-11உபா 16:16-17ஆகா 2:15-19யோவே 2:14லேவி 12:8லேவி 25:26 உன் தேவனாகிய யெகோவா தமது நாமம் விளங்கும்படி தெரிந்துகொள்ளும் இடத்திலே, நீயும், உன் மகனும், மகளும், வேலைக்காரனும், வேலைக்காரியும், உன் வாசல்களில் இருக்கிற லேவியனும், உன்னிடத்தில் இருக்கிற பரதேசியும், திக்கற்ற பிள்ளையும், விதவையும், உன் தேவனாகிய யெகோவாவுடைய சந்நிதியில் சந்தோஷப்பட்டு, உபா 12:12உபா 12:7உபா 12:182 கொரி 1:24உபா 16:14ஆப 3:18ஏசா 64:5ஏசா 66:10-14 நீ எகிப்தில் அடிமையாயிருந்ததை நினைத்து, இந்தக் கட்டளைகளைக் கைக்கொண்டு இவைகளின்படி செய்யக்கடவாய். உபா 15:15உபா 16:15எபே 2:1-3எபே 2:11புலம் 3:19-20ரோம 6:17-18

கூடாரப் பண்டிகை

“நீ உன் களத்தின் பலனையும் உன் ஆலையின் பலனையும் சேர்த்தபின்பு, கூடாரப்பண்டிகையை ஏழு நாட்கள் ஆசரித்து, யாத் 23:16யோவா 7:22 நாளாக 5:3லேவி 23:34-36யாத் 34:22எண் 29:12-40சகரி 14:16-182 நாளாக 7:8-10 உன் பண்டிகையில் நீயும், உன் மகனும், மகளும், வேலைக்காரனும், வேலைக்காரியும், உன் வாசல்களில் இருக்கிற லேவியனும், பரதேசியும், திக்கற்ற பிள்ளையும், விதவையும் சந்தோஷப்படக்கடவீர்கள்; நெகே 8:9-12உபா 16:111 தெச 5:16உபா 26:11பிரச 9:7ஏசா 12:1-6ஏசா 25:6-8ஏசா 30:29 உனக்கு உண்டான எல்லா வரத்திலும் உன் கைகளுடைய எல்லா செயலிலும் உன் தேவனாகிய யெகோவா உன்னை ஆசீர்வதித்தபடியால், யெகோவா தெரிந்துகொள்ளும் இடத்தில் உன் தேவனாகிய யெகோவாவுக்கு ஏழு நாட்கள் பண்டிகையை ஆசரித்து சந்தோஷமாயிருப்பாயாக. உபா 30:16லேவி 23:36-42உபா 16:10உபா 28:8-12உபா 7:13எண் 29:12-38 வருடத்தில் மூன்றுமுறை புளிப்பில்லாத அப்பப்பண்டிகையிலும், வாரங்களின் பண்டிகையிலும், கூடாரப்பண்டிகையிலும், உன் ஆண்மக்கள் எல்லோரும் உன் தேவனாகிய யெகோவா தெரிந்துகொள்ளும் இடத்திலே, அவர் சந்நிதிக்கு முன்பாக வந்து காணப்படக்கடவர்கள். நீதி 3:9-10சங் 96:8ஆகா 1:9யாத் 23:14-17மத் 2:11யாத் 34:201 நாளாக 29:14-171 நாளாக 29:3-9 ஆனாலும் அவர்கள் யெகோவாவுடைய சந்நிதியில் வெறுங்கையோடே வராமல், உன் தேவனாகிய யெகோவா உனக்கு அருளிய ஆசீர்வாதத்திற்குத்தக்கதாக, அவனவன் தன் தன் தகுதிக்கு ஏற்றபடி காணிக்கையைக் கொண்டுவரக்கடவன். 2 கொரி 9:6-72 கொரி 8:12உபா 16:10மாற் 12:41-44லேவி 27:8எஸ்றா 2:63

நியாயாதிபதிகள்

“உன் தேவனாகிய யெகோவா உன் கோத்திரங்கள்தோறும் உனக்குக் கொடுக்கும் வாசல்களிலெல்லாம், நியாயாதிபதிகளையும் தலைவர்களையும் ஏற்படுத்துவாயாக; அவர்கள் நீதியுடன் மக்களுக்கு நியாயத்தீர்ப்புச் செய்யக்கடவர்கள். 1 நாளாக 23:41 நாளாக 26:292 நாளாக 19:5-11உபா 1:15-17உபா 17:12உபா 17:9உபா 19:17-18உபா 21:2 நியாயத்தைப் புரட்டாதிருப்பாயாக; பாரபட்சம் பார்க்காமலும், லஞ்சம் வாங்காமலும் இருப்பாயாக; லஞ்சம் ஞானிகளின் கண்களைக் குருடாக்கி, நீதிமான்களின் நியாயங்களைத் தாறுமாறாக்கும். லேவி 19:15யாத் 23:2நீதி 17:23உபா 10:17உபா 24:17ஆப 1:4உபா 27:19பிரச 7:7 நீ பிழைத்து, உன் தேவனாகிய யெகோவா உனக்குக் கொடுக்கும் தேசத்தைச் சொந்தமாக்கிக்கொள்ள நீதியையே பின்பற்றுவாயாக. பிலி 4:8எசேக் 18:9எசேக் 18:5மீகா 6:8உபா 25:13-16உபா 4:1ரோம 10:5

அந்நிய தெய்வங்களை வணங்குதல்

“நீ உன் தேவனாகிய யெகோவாவுக்கு உண்டாக்கும் பலிபீடத்திற்கு அருகில் எந்த தோப்பையும் உண்டாக்கவேண்டாம்; 2 நாளாக 33:32இராஜா 17:162இராஜா 21:3யாத் 34:131 இராஜா 14:151 இராஜா 16:33நியாயாதி 3:7உபா 7:5 எந்த சிலையையும் நிறுத்தவேண்டாம்; உன் தேவனாகிய யெகோவா அதை வெறுக்கிறார். லேவி 26:1யாத் 20:4உபா 12:31எரே 44:4வெளி 2:15வெளி 2:6சகரி 8:17