மனாசேயும் எப்பிராயீமும்
அதற்குப்பின்பு, உம்முடைய தகப்பனார் வியாதியாயிருக்கிறார்” என்று யோசேப்புக்குச் சொல்லப்பட்டது. அப்பொழுது அவன் தன் இரண்டு மகன்களாகிய மனாசேயையும் எப்பிராயீமையும் தன்னோடு அழைத்துப்போனான். ஆதி 41:50-52ஆதி 46:20ஆதி 50:23சங் 128:6யோவா 11:3யோபு 42:16 “இதோ, உம்முடைய மகனாகிய யோசேப்பு உம்மிடத்தில் வந்திருக்கிறார்” என்று யாக்கோபுக்கு தெரிவிக்கப்பட்டது; அப்பொழுது இஸ்ரவேல் தன்னை திடப்படுத்திக்கொண்டு, கட்டிலின்மேல் உட்கார்ந்தான். 1 சாமு 23:16உபா 3:28எபே 6:10நீதி 23:15சங் 41:3நெகே 2:18 யாக்கோபு யோசேப்பை நோக்கி: “சர்வவல்லமையுள்ள தேவன் கானான் தேசத்திலுள்ள லூஸ் என்னும் இடத்தில் எனக்குக் காட்சியளித்து, என்னை ஆசீர்வதித்து: ஆதி 35:9-12யாத் 6:3ஆதி 17:1ஆதி 28:3ஆதி 28:12-19ஆதி 35:6-7ஓசி 12:4நியாயாதி 1:23 நான் உன்னைப் பலுகவும் பெருகவும் செய்து, உன்னைப் பல ஜனக்கூட்டமாக்கி, உனக்குப் பின்வரும் உன் சந்ததிக்கு இந்த தேசத்தை என்றென்றைக்கும் சொந்தமாகக் கொடுப்பேன் என்று என்னோடு சொன்னார். ஆதி 17:8ஆதி 35:11ஆமோ 9:14-15உபா 32:8யாத் 1:7ஆதி 12:2ஆதி 13:15-16ஆதி 17:13 நான் உன்னிடத்தில் எகிப்திற்கு வருவதற்குமுன்னே உனக்கு எகிப்துதேசத்தில் பிறந்த உன் இரண்டு மகன்களும் என்னுடைய மகன்கள்; ரூபன் சிமியோன் என்பவர்களைப்போல, எப்பிராயீமும் மனாசேயும் என்னுடையவர்கள். ஆதி 41:50-52ஆதி 46:20யோசு 14:41 நாளாக 5:1-2யோசு 13:72 கொரி 6:18வெளி 7:6-7எபே 1:5 இவர்களுக்குப்பின், நீ பெறும் பிள்ளைகள் உன்னுடையவர்கள்; அவர்கள் தங்கள் தங்கள் சகோதரர்களுடைய பெயரால் அழைக்கப்பட்டு அவர்களுக்குரிய சொத்தில் பங்குபெறுவார்கள். யோசு 14:4 நான் பதானை விட்டு வருகையில், கானான்தேசத்தில் எப்பிராத்தாவுக்குக் கொஞ்சம் தூரம் இருக்கும்போது, வழியிலே ராகேல் என்னருகில் மரணமடைந்தாள்; அவளை அங்கே பெத்லகேம் என்னும் எப்பிராத்தா ஊருக்குப் போகிற வழியிலே அடக்கம்செய்தேன்” என்றான். ஆதி 35:16-19ஆதி 35:9மத் 2:181 சாமு 1:11 சாமு 10:21 சாமு 17:12ஆதி 25:20மீகா 5:2 இஸ்ரவேல் யோசேப்பின் மகன்களைப் பார்த்து: “இவர்கள் யார்” என்று கேட்டான். யோசேப்பு தன் தகப்பனை நோக்கி: “இவர்கள் இந்த இடத்தில் தேவன் எனக்கு அருளின மகன்கள்” என்றான். அப்பொழுது அவன்: “நான் அவர்களை ஆசீர்வதிக்க அவர்களை என் அருகில் கொண்டுவா” என்றான். ஆதி 27:4ஆதி 33:5எபி 11:211 நாளாக 25:51 நாளாக 26:4-51 சாமு 1:201 சாமு 1:271 சாமு 2:20-21 முதிர்வயதினால் இஸ்ரவேலின் கண்கள் மங்கலாயிருந்தால், அவன் நன்றாகப் பார்க்கமுடியாமலிருந்தது. அவர்களை அவனருகில் சேரச்செய்தான்; அப்பொழுது அவன் அவர்களை முத்தம்செய்து அணைத்துக்கொண்டான். ஆதி 27:1ஆதி 27:271 இராஜா 19:201 சாமு 3:21 சாமு 4:15ஆதி 31:55ஆதி 45:15ஏசா 59:1 இஸ்ரவேல் யோசேப்பை நோக்கி: “உன் முகத்தைக் காண்பேன் என்று நான் நினைக்கவில்லை; ஆனாலும், இதோ, உன் சந்ததியையும் காணும்படி தேவன் எனக்கு அருள்செய்தார்” என்றான். எபே 3:20ஆதி 45:26ஆதி 37:33ஆதி 37:35ஆதி 42:36 அப்பொழுது அவனுடைய முழங்கால்கள் நடுவே இருந்த பிள்ளைகளை யோசேப்பு பின்னிடச்செய்து, அவனுடைய முகத்திற்கு முன்பாகத் தரைமட்டும் குனிந்து வணங்கினான். ஆதி 42:61 இராஜா 2:192இராஜா 4:37எபே 6:1யாத் 20:12யாத் 34:8ஆதி 18:2ஆதி 19:1 பின்பு, யோசேப்பு அவ்விருவரையும் கொண்டுவந்து, எப்பிராயீமைத் தன் வலது கையினாலே இஸ்ரவேலின் இடது கைக்கு நேராகவும், மனாசேயைத் தன் இடது கையினாலே இஸ்ரவேலின் வலது கைக்கு நேராகவும் விட்டான். அப்பொழுது இஸ்ரவேல், மனமறிய, தன் வலது கையை நீட்டி, இளையவனாகிய எப்பிராயீமுடைய தலையின்மேலும், மனாசே மூத்தவனாயிருந்தும், தன் இடது கையை மனாசேயுடைய தலையின்மேலும் வைத்தான். ஆதி 41:511 தீமோ 4:141 தீமோ 5:22அப் 13:3அப் 6:6அப் 8:17-19உபா 34:9யாத் 15:6 அவன் யோசேப்பை ஆசீர்வதித்து: ஆதி 17:1கொலோ 2:6எபி 11:211 கொரி 10:311 இராஜா 3:61 தீமோ 6:6-102 கொரி 1:12உபா 33:1
“என் பிதாக்களாகிய ஆபிரகாமும் ஈசாக்கும் வழிபட்டு வணங்கிய தேவனும்,
நான் பிறந்த நாள்முதல் இந்த நாள்வரைக்கும் என்னை ஆதரித்துவந்த தேவனும்,
எல்லாத் தீமைக்கும் விலக்கி என்னை மீட்ட தூதனுமானவர் இந்தப் பிள்ளைகளை ஆசீர்வதிப்பாராக, சங் 34:22ஆதி 28:13-15ஆதி 48:5ஆதி 49:222 தீமோ 4:18அப் 15:17யோசு 17:17எண் 26:28-37
என் பெயரும் என் பிதாக்களாகிய ஆபிரகாம் ஈசாக்கு என்பவர்களின் பெயரும் இவர்களுக்கு வைக்கப்படக்கடவது;
பூமியில் இவர்கள் மிகுதியாகப் பெருகுவார்களாக” என்றான்.
தகப்பன் தன் வலதுகையை எப்பிராயீமுடைய தலையின்மேல் வைத்ததை யோசேப்பு கண்டு, அது தனக்குப் பிரியமில்லாததால், எப்பிராயீமுடைய தலையின்மேல் இருந்த தன் தகப்பனுடைய கையை மனாசேயினுடைய தலையின்மேல் வைப்பதற்காக எடுத்து: ஆதி 48:14ரோம 9:7-81 நாளாக 21:71 இராஜா 16:251 சாமு 16:7ஆதி 28:8ஆதி 38:10எண் 11:1 “என் தகப்பனே, அப்படியல்ல, இவன் மூத்தவன், இவனுடைய தலையின்மேல் உம்முடைய வலதுகையை வைக்கவேண்டும்” என்றான். அப் 10:14அப் 11:8யாத் 10:11ஆதி 19:18ஆதி 27:15ஆதி 29:26ஆதி 43:33ஆதி 49:3 அவனுடைய தகப்பனோ தடுத்து: “அது எனக்குத் தெரியும், என் மகனே, எனக்குத் தெரியும்; இவனும் ஒரு ஜனக்கூட்டமாவான், இவனும் பெருகுவான்; இவனுடைய தம்பியோ இவனிலும் அதிகமாகப் பெருகுவான்; அவனுடைய சந்ததியார் திரளான மக்களாவார்கள்” என்றான். உபா 33:17எண் 1:33-35ஆதி 17:20-21ஆதி 25:28ஆதி 48:14உபா 1:10எசேக் 27:10ஏசா 7:17 இந்த விதமாக அவன் அன்றையதினம் அவர்களை ஆசீர்வதித்து: “தேவன் உன்னை எப்பிராயீமைப்போலவும் மனாசேயைப்போலவும் ஆக்குவாராக என்று இஸ்ரவேலர்கள் உன்னை முன்னிட்டு வாழ்த்துவார்கள்” என்று சொல்லி, எப்பிராயீமை மனாசேக்கு மேலாக வைத்தான். ரூத் 4:11-12ஆதி 24:60ஆதி 28:3எண் 10:22-23எண் 13:11எண் 13:16எண் 2:18-21எண் 7:48 பின்பு, இஸ்ரவேல் யோசேப்பை நோக்கி: “இதோ, நான் மரணமடையப்போகிறேன்; தேவன் உங்களோடு இருப்பார்; அவர் உங்கள் பிதாக்களின் தேசத்திற்கு உங்களைத் திரும்பவும் போகச் செய்வார் என்றும், ஆதி 46:4ஆதி 50:24ஆதி 26:3ஆதி 28:15எபி 7:23-25எபி 7:31 இராஜா 2:2-42 பேது 1:14 உன் சகோதரர்களுக்குக் கொடுத்ததைவிட, நான் என் பட்டயத்தாலும், என் வில்லினாலும், எமோரியர்கள் கையிலிருந்து சம்பாதித்த ஒரு நிலத்தை உனக்கு அதிகமான பங்காகக் கொடுத்தேன்” என்றும் சொன்னான். யோவா 4:5யோசு 24:321 நாளாக 5:2ஆமோ 2:9உபா 21:17ஆதி 15:16ஆதி 33:19ஆதி 34:28