எசேக்கியா ஆலயத்தைத் தூய்மைப்படுத்தல்
எசேக்கியா அரசனானபோது இருபத்தைந்து வயதுள்ளவனாயிருந்தான். இவன் எருசலேமில் இருபத்தொன்பது வருடங்கள் ஆட்சிசெய்தான். இவனுடைய தாய் சகரியாவின் மகளான அபியாள் என்பவள். 2இராஜா 18:1-31 நாளாக 3:132 நாளாக 26:5ஓசி 1:1ஏசா 1:1ஏசா 8:2மத் 1:9-10மீகா 1:1 அவன் தனது முற்பிதா தாவீது செய்ததுபோல, யெகோவாவின் பார்வையில் சரியானதைச் செய்தான். 2 நாளாக 28:12 நாளாக 34:2
அவனுடைய ஆட்சியின் முதலாம் வருடம், முதல் மாதத்தில் அவன் யெகோவாவின் ஆலயத்தின் கதவுகளைத் திறந்து அவற்றைப் பழுதுபார்த்தான். 2 நாளாக 28:242 நாளாக 29:7மத் 6:332 நாளாக 34:32இராஜா 16:14-18பிரச 9:10கலா 1:16சங் 101:3 அவன் ஆசாரியர்களையும், லேவியர்களையும் கொண்டுவந்து, கிழக்குப் பக்கத்திலுள்ள சதுக்கத்தில் அவர்களை ஒன்றுகூட்டினான். 2 நாளாக 32:6எரே 19:2நெகே 3:29 அவர்களிடம், “லேவியர்களே, எனக்கு செவிகொடுங்கள். நீங்கள் இப்பொழுது உங்களைப் பரிசுத்தப்படுத்துங்கள்; அத்துடன் உங்கள் முற்பிதாக்களின் இறைவனாகிய யெகோவாவின் ஆலயத்தையும் பரிசுத்தப்படுத்துங்கள். பரிசுத்த இடத்திலிருந்து எல்லா அசுத்தத்தையும் அகற்றிப்போடுங்கள். 2 நாளாக 35:61 கொரி 3:16-171 நாளாக 15:122 நாளாக 34:3-8எசேக் 8:9-182 நாளாக 29:15-162 நாளாக 29:342 கொரி 7:1 எனது முற்பிதாக்கள் உண்மையற்றவர்களாய் இருந்தார்கள். அவர்கள் எங்கள் இறைவனாகிய யெகோவாவின் பார்வையில் தீமையானதைச் செய்து, அவரைவிட்டு விலகினார்கள். அவர்கள் யெகோவாவின் உறைவிடத்திற்கு தங்கள் முகத்தை விலக்கி, அவருக்குத் தங்கள் முதுகைக் காட்டினார்கள். எசேக் 8:16எரே 2:272 நாளாக 28:2-42 நாளாக 28:23-252 நாளாக 34:21தானி 9:16எஸ்றா 5:12எஸ்றா 9:7 அத்துடன் அவர்கள் ஆலயத்தின் முன்மண்டபக் கதவுகளையும் பூட்டி, விளக்குகளை அணைத்துப் போட்டார்கள். அவர்கள் இஸ்ரயேலின் இறைவனின் பரிசுத்த இடத்தில் தூபங்காட்டவோ, தகன காணிக்கைகளைச் செலுத்தவோ இல்லை. 2 நாளாக 28:24லேவி 24:2-82 நாளாக 29:32இராஜா 16:17-18மல்கி 1:10 அதனால் யெகோவாவின் கோபம் யூதாவின்மேலும், எருசலேமின்மேலும் இறங்கியது. அவர் அவர்களைப் பயங்கரத்திற்கும், திகிலிற்கும், இகழ்ச்சிக்கும் உரிய பொருளாக வைத்திருக்கிறார். அதையே இன்று நீங்கள் உங்கள் சொந்தக் கண்களால் காண்கிறீர்கள். எரே 25:18எரே 25:92 நாளாக 24:18உபா 28:25எரே 19:8எரே 29:181 இராஜா 9:82 நாளாக 34:24-25 இதனாலேயே நமது தந்தையர்கள் வாளினால் மடிந்தார்கள்; நம்முடைய மகன்களும், மகள்களும், நம்முடைய மனைவிகளும் சிறைபிடிக்கப்பட்டிருக்கிறார்கள். 2 நாளாக 28:172 நாளாக 28:5-8புலம் 5:7லேவி 26:17 இப்பொழுது நான் இஸ்ரயேலின் இறைவனாகிய யெகோவாவுடன் ஒரு உடன்படிக்கையை செய்ய எண்ணியுள்ளேன். அப்பொழுதுதான் அவரது கோபம் நம்மைவிட்டுத் திரும்பும். எரே 50:52 நாளாக 23:16எஸ்றா 10:32 நாளாக 15:12-132 நாளாக 34:30-322 நாளாக 6:7-82 கொரி 8:52இராஜா 23:26 என் மகன்களே, இப்பொழுது நீங்கள் அசட்டையாய் இராதீர்கள். ஏனெனில் அவர் முன்நின்று அவருக்குப் பணிசெய்வதற்கும் அவர் முன்னிலையில் ஊழியம் செய்து தூபங்காட்டுவதற்குமே யெகோவா உங்களைத் தெரிந்துகொண்டிருக்கிறார்” என்றான். உபா 10:8எண் 8:6-14எண் 18:2-7எண் 3:6-9கலா 6:7-8எண் 16:35-40
எனவே வேலையைச் செய்யத் தொடங்கிய லேவியர்கள்: 1 நாளாக 15:5-71 நாளாக 23:7-231 நாளாக 6:16-211 நாளாக 6:442 நாளாக 31:13யாத் 6:16-25எண் 3:17எண் 3:19-20
கோகாத்தியரிலிருந்து:
அமசாயின் மகன் மாகாத், அசரியாவின் மகன் யோயேல்;
மெராரியரிலிருந்து:
அப்தியின் மகன் கீஷ், எகலேலின் மகன் அசரியா;
கெர்சோனியரிலிருந்து:
சிம்மாவின் மகன் யோவா, யோவாவின் மகன் ஏதேன்.
எலிசாபானின் சந்ததிகளிலிருந்து: 1 நாளாக 6:391 நாளாக 15:81 நாளாக 15:171 நாளாக 25:2லேவி 10:4
சிம்ரி, ஏயேல்;
ஆசாப்பின் சந்ததிகளிலிருந்து:
சகரியா, மத்தனியா;
ஏமானின் சந்ததிகளிலிருந்து: 1 நாளாக 6:331 நாளாக 15:191 நாளாக 25:11 நாளாக 25:31 நாளாக 25:6
யெகியேல், சிமேயி;
எதுத்தூனின் சந்ததிகளிலிருந்து:
செமாயா, ஊசியேல்.
இந்த லேவியர்கள் தங்கள் சகோதரர்களை ஒன்றுசேர்த்து, அவர்களைச் சுத்திகரித்தபின் யெகோவாவின் வார்த்தையைப் பின்பற்றி அரசன் கட்டளையிட்டபடியே, யெகோவாவின் ஆலயத்தை தூய்மைப்படுத்துவதற்காக உள்ளே சென்றனர். 1 நாளாக 23:282 நாளாக 30:122 நாளாக 29:5 ஆசாரியர்கள் யெகோவாவின் பரிசுத்த இடத்தை தூய்மைப்படுத்துவதற்காக அதற்குள்ளே சென்றார்கள். அவர்கள் யெகோவாவின் ஆலயத்திற்குள் அசுத்தமாகக் கண்ட யாவற்றையும் யெகோவாவின் ஆலயத்தின் வெளிமுற்றத்திற்குக் கொண்டுவந்தார்கள். அதை லேவியர்கள் எடுத்து கீதரோன் பள்ளத்தாக்கிற்கு சுமந்துகொண்டு போனார்கள். 2 நாளாக 15:161 இராஜா 6:19-202 நாளாக 3:82 நாளாக 5:72இராஜா 23:4-62 சாமு 15:23யாத் 26:33-34எசேக் 36:29 அவர்கள் தங்கள் சுத்திகரிப்பு வேலையை முதலாம் மாதம், முதலாம் நாளில் ஆரம்பித்து, மாதத்தின் எட்டாம் நாளில் யெகோவாவுக்குமுன் மண்டபத்திற்கு வந்தார்கள். யெகோவாவினுடைய ஆலயத்தை இன்னும் எட்டு நாட்களுக்கு பரிசுத்தப்படுத்தினார்கள். இவ்வாறு அதை முதலாம் மாதம் பதினாறாம் நாளில் செய்துமுடித்தனர். 1 நாளாக 28:111 இராஜா 6:32 நாளாக 29:32 நாளாக 29:72 நாளாக 3:4யாத் 12:2-8
அதன்பின்பு அவர்கள் எசேக்கியா அரசனிடம் போய், “நாங்கள் யெகோவாவின் ஆலயம் முழுவதையும் தூய்மைப்படுத்திவிட்டோம். தகன பலிபீடம், அதன் பாத்திரங்கள், இறைசமுக அப்பங்களை ஒழுங்குபடுத்தும் மேஜை, அதன் பொருட்கள் ஆகியவற்றைத் தூய்மைப்படுத்திவிட்டோம். 2 நாளாக 13:112 நாளாக 4:12 நாளாக 4:7-8 அத்துடன் ஆகாஸ் அரசன் தான் அரசனாயிருந்த காலத்தில் உண்மையற்றவனாய் அவன் அகற்றிப்போட்ட பொருட்களையெல்லாம் கொண்டுவந்து, பரிசுத்தப்படுத்தி இருக்கிறோம். அவை இப்பொழுது யெகோவாவின் பீடத்தின்முன் இருக்கின்றன” என்று அறிவித்தார்கள். 2 நாளாக 28:24
அடுத்தநாள் அதிகாலையில் எசேக்கியா அரசன் பட்டணத்தின் அதிகாரிகள் எல்லோரையும் ஒன்றுசேர்த்துக்கொண்டு யெகோவாவினுடைய ஆலயத்திற்குப் போனான். யாத் 24:4ஆதி 22:3எரே 25:4யோசு 6:12 அவர்கள் அரசிற்காகவும், பரிசுத்த இடத்திற்காகவும், யூதாவுக்காகவும் பாவநிவாரண காணிக்கையாக ஏழு காளைகளையும், ஏழு செம்மறியாட்டுக் கடாக்களையும், ஏழு செம்மறியாட்டுக் கடாக்களையும், ஏழு வெள்ளாட்டுக் கடாக்களையும் கொண்டுவந்தார்கள். அரசன் ஆசாரியர்களான ஆரோனின் சந்ததிகளிடம், “யெகோவாவின் பலிபீடத்தில் இதைப் பலியிடுங்கள்” எனக் கட்டளையிட்டான். லேவி 4:3-14எசேக் 45:23யோபு 42:81 நாளாக 15:26எஸ்றா 8:35எண் 23:1எண் 23:14எண் 23:29 எனவே அவர்கள் காளைகளை வெட்டினார்கள். ஆசாரியர்கள் இரத்தத்தை எடுத்து பலிபீடத்தின்மேல் தெளித்தார்கள். அடுத்ததாக அவர்கள் செம்மறியாட்டுக் கடாக்களை வெட்டி அதன் இரத்தத்தை பலிபீடத்தில் தெளித்தார்கள். அதன்பின் செம்மறியாட்டுக் குட்டிகளை வெட்டி, அதன் இரத்தத்தையும் பலிபீடத்தில் தெளித்தனர். லேவி 4:18லேவி 8:19லேவி 8:24எபி 9:21-22லேவி 1:5லேவி 4:34லேவி 4:7லேவி 8:14-15 அதன்பின் பாவநிவாரண காணிக்கைக்கான வெள்ளாடுகள் அரசனுக்கும், கூடியிருந்தவர்களுக்கும் முன்பாக கொண்டுவரப்பட்டன. அவர்கள் அவற்றின்மேல் தங்கள் கைகளை வைத்தனர். லேவி 4:15லேவி 1:4லேவி 4:24 இஸ்ரயேல் முழுவதற்கும் பாவநிவர்த்தி செய்வதற்காக ஆசாரியர்கள் வெள்ளாடுகளை வெட்டி, அதன் இரத்தத்தைப் பாவநிவாரண காணிக்கையாக பலிபீடத்தில் படைத்தார்கள். ஏனெனில் அரசன் எல்லா இஸ்ரயேலுக்குமாக தகன காணிக்கைகளையும், பாவநிவாரண காணிக்கைகளையும் செலுத்தும்படி கட்டளையிட்டிருந்தான். 2 கொரி 5:18-21கொலோ 1:20-21தானி 9:24எசேக் 45:15எசேக் 45:17எபி 2:17லேவி 14:20லேவி 4:13-35
தாவீது, அரசனின் தரிசனக்காரனான காத், இறைவாக்கினன் நாத்தான் ஆகியவர்கள் கற்பித்தவிதமாகவே, அரசன் லேவியர்களை கைத்தாளம், யாழ், வீணை ஆகியவற்றுடன் யெகோவாவின் ஆலயத்தில் நிறுத்தினான்; இது யெகோவாவினால் அவரது இறைவாக்கினர்கள் மூலமாய்க் கட்டளையிடப்பட்டிருந்தது. 2 நாளாக 8:141 நாளாக 23:51 நாளாக 15:16-221 நாளாக 16:4-51 நாளாக 16:421 நாளாக 25:1-71 நாளாக 9:332 நாளாக 35:15 எனவே லேவியர்கள் தாவீதின் வாத்தியக் கருவிகளுடனும், ஆசாரியர்கள் தங்கள் எக்காளங்களுடனும் ஆயத்தமாக நின்றனர். 1 நாளாக 23:51 நாளாக 15:24ஆமோ 6:51 நாளாக 16:62 நாளாக 5:12-13ஏசா 38:20யோசு 6:4-9எண் 10:10
எசேக்கியா பலிபீடத்தின்மேல் தகன காணிக்கைகளைப் பலியிடும்படி கொடுத்தான். காணிக்கை செலுத்தத் தொடங்கியவுடனே, எக்காளங்களுடனும் இஸ்ரயேலின் அரசன் தாவீதின் இசைக் கருவிகளுடனும் யெகோவாவுக்கான துதிபாடல்களும் ஆரம்பித்தன. 2 நாளாக 23:182 நாளாக 20:212 நாளாக 7:3சங் 136:1சங் 137:3-4 தகன காணிக்கை செலுத்துமட்டும் பாடகர் பாட, எக்காளம் முழங்க, சபையோர் எல்லோரும் தலைகுனிந்து வழிபட்டார்கள். சங் 68:24-26சங் 89:15வெளி 5:8-14
பலிசெலுத்தி முடிவடைந்ததும் அரசனும் அவனுடன் வந்திருந்த எல்லோரும் தரையில் முழங்காற்படியிட்டு வழிபட்டார்கள். 2 நாளாக 20:181 நாளாக 29:20பிலி 2:10-11சங் 72:11ரோம 14:11 அரசன் எசேக்கியாவும், அவனுடைய அதிகாரிகளும், தாவீதும், தரிசனக்காரனான ஆசாப்பும் பாடிய வார்த்தைகளால் யெகோவாவைத் துதிக்கும்படி லேவியர்களுக்குக் கட்டளையிட்டார்கள். எனவே அவர்கள் மகிழ்ச்சியுடன் துதித்து பாடி தலைகுனிந்து வழிபட்டார்கள். பிலி 4:4சங் 32:11சங் 95:1-21 நாளாக 16:7-36சங் 100:1-2சங் 149:22 சாமு 23:1-2சங் 95:6
அப்பொழுது எசேக்கியா, “நீங்கள் இப்பொழுது உங்களை யெகோவாவுக்கென்று அர்ப்பணித்திருக்கிறீர்கள். வாருங்கள், பலிகளையும் நன்றியறிதல் காணிக்கைகளையும் யெகோவாவின் ஆலயத்திற்குக் கொண்டுவாருங்கள்” என்று சொன்னான். எனவே கூடியிருந்தவர்கள் பலிகளையும், நன்றியறிதல் காணிக்கைகளையும் கொண்டுவந்தார்கள். அத்துடன் யாருடைய இருதயம் ஏவப்பட்டதோ அவர்கள் சர்வாங்க தகன காணிக்கைகளையும் கொண்டுவந்தார்கள். 2 நாளாக 13:9யாத் 35:22யாத் 35:5எஸ்றா 1:4லேவி 1:1-3லேவி 23:38லேவி 7:12
சபையோர் கொண்டுவந்த தகன காணிக்கைகளின் எண்ணிக்கை: எழுபது காளைகள், நூறு செம்மறியாட்டுக் கடாக்கள், இருநூறு செம்மறியாட்டுக் கடாக்குட்டிகள் ஆகியனவாகும். இவையெல்லாம் யெகோவாவுக்காகத் தகன காணிக்கையாகக் கொண்டுவரப்பட்டன. 1 நாளாக 29:211 இராஜா 3:41 இராஜா 8:63எஸ்றா 6:17 பலிகளாக அர்ப்பணிக்கப்பட்ட மிருகங்களின் தொகை அறுநூறு காளைகளும், மூவாயிரம் செம்மறியாடுகளும், வெள்ளாடுகளுமாகும். ஆனால் தகன காணிக்கைக்கான மிருகங்களைத் தோல் உரிப்பதற்கு ஆசாரியர்கள் மிகக் குறைவாகவேயிருந்தனர். மற்ற ஆசாரியர்கள் தங்களைப் பரிசுத்தப்படுத்தும் வரைக்கும் அவர்கள் உறவினர்களான லேவியர்கள் அந்த வேலை முடியும்வரைக்கும் உதவிசெய்தனர். ஏனெனில் லேவியர்கள் தங்களைப் பரிசுத்தப்படுத்துவதில் ஆசாரியர்களைவிட கவனமுள்ளவர்களாக இருந்தனர். 2 நாளாக 35:112 நாளாக 30:31 நாளாக 29:172 நாளாக 29:52 நாளாக 30:16-17எண் 18:3எண் 18:6-7எண் 8:15 இவ்வாறு தகன காணிக்கைகள் ஏராளமாயிருந்தன; அத்துடன் சமாதான காணிக்கைகளின் கொழுப்பும், சமாதான காணிக்கைகளோடு செலுத்தப்பட்ட பான காணிக்கைகளும் ஏராளமாய் இருந்தன. யாத் 29:13எண் 15:5-101 நாளாக 16:37-42ஆதி 35:14லேவி 23:13லேவி 3:15-161 கொரி 14:40எஸ்றா 6:18
எனவே யெகோவாவினுடைய ஆலய ஆராதனை திரும்பவும் நிலைநிறுத்தப்பட்டது. இறைவன் தனது மக்களுக்காய் செய்து முடித்ததைக்குறித்து எசேக்கியாவும் எல்லா மக்களும் அகமகிழ்ந்தனர். ஏனெனில் இது மிகவும் விரைவாய் செய்யப்பட்டது. 1 நாளாக 29:91 தெச 3:8-9அப் 2:41எஸ்றா 6:22நீதி 16:1சங் 10:171 நாளாக 29:17-182 நாளாக 30:12