ஆசாரியர்களின் அர்ப்பணிப்பு
“அவர்கள் ஆசாரியர்களாக எனக்கு ஊழியம் செய்யும்படி, அவர்களை அர்ப்பணம் செய்வதற்கு நீ செய்யவேண்டியது இதுவே: குறைபாடற்ற ஒரு இளங்காளையையும், இரண்டு செம்மறியாட்டுக் கடாக்களையும் எடுத்துக்கொள்ளவேண்டும். 1 பேது 1:19யாத் 12:5யாத் 29:21எபி 7:26லேவி 4:3லேவி 5:15-16லேவி 6:6மல்கி 1:13-14 சிறந்த கோதுமை மாவினால் புளிப்பில்லாத அப்பத்தையும், எண்ணெய் சேர்த்துப் பிசைந்த அடை அப்பங்களையும், எண்ணெய் கலந்த அதிரசங்களையும் செய்யவேண்டும். எண் 6:151 கொரி 5:7யாத் 12:8யாத் 29:23லேவி 2:15லேவி 2:4-5லேவி 6:19-23லேவி 7:10 அவற்றை ஒரு கூடையில் வைத்து, அந்தக் காளையுடனும் இரண்டு செம்மறியாட்டுக் கடாக்களுடனும் காணிக்கையாகக் கொடுக்கவேண்டும். லேவி 8:2லேவி 8:26லேவி 8:31எண் 6:17 பின்பு ஆரோனையும், அவன் மகன்களையும் சபைக் கூடாரத்தின் வாசலுக்கு முன்பாக வரச்செய்து, அவர்களைத் தண்ணீரால் கழுவவேண்டும். யாத் 40:12எபி 10:221 பேது 3:21உபா 23:11எபே 5:26யாத் 26:36யாத் 30:18-21யாத் 40:28 உடைகளை எடுத்து, உள் அங்கி, ஏபோத்துடன் அணியும் அங்கி, ஏபோத், மார்பு அணி ஆகியவற்றை ஆரோனுக்கு உடுத்தவேண்டும். அத்துடன் திறமையாய் நெய்யப்பட்ட இடைப்பட்டியினால் ஏபோத்தை அவனுக்குக் கட்டவேண்டும். யாத் 28:2-8லேவி 8:7-8 அவனுடைய தலையில் தலைப்பாகையையும் அணிவித்து, அதன்மேல் பரிசுத்த தங்கக்கீரிடத்தையும் வைக்கவேண்டும். லேவி 8:9யாத் 28:36-39 பின்பு அபிஷேக எண்ணெயை எடுத்து, அவன் தலையின்மேல் ஊற்றி, அவனை அபிஷேகம் செய்யவேண்டும். லேவி 21:10எண் 35:25யாத் 28:41ஏசா 61:1யோவா 3:34லேவி 10:7சங் 133:2சங் 89:20 அதன்பின், அவனுடைய மகன்களை வரவழைத்து, அவர்களுக்கும் உள் அங்கிகளை அணிவிக்கவேண்டும். லேவி 8:13யாத் 28:40 அவர்களுக்கும் குல்லாக்களை அணியவேண்டும். பின் இடைப்பட்டிகளை ஆரோனுக்கும் அவன் மகன்களுக்கும் கட்டவேண்டும். ஆசாரியத்துவம் ஒரு நிரந்தர நியமத்தினால் அவர்களுக்கு உரியதாயிருக்கிறது. எண் 18:7லேவி 8:22-28உபா 18:5யாத் 40:15எபி 5:4-5லேவி 8:33எண் 16:10எண் 16:35
“இவ்விதமாக ஆரோனையும், அவன் மகன்களையும் நீ அர்ப்பணிக்கவேண்டும்.
“அதன்பின் சபைக் கூடாரத்தின் முன்பாக காளையைக் கொண்டுவர வேண்டும். ஆரோனும் அவனுடைய மகன்களும் தங்கள் கைகளைக் காளையின் தலைமேல் வைக்கவேண்டும். லேவி 1:4லேவி 8:14யாத் 29:15யாத் 29:192 கொரி 5:21ஏசா 53:6லேவி 16:21லேவி 3:2 பின் சபைக் கூடாரத்தின் வாசலில் யெகோவா முன்னிலையில் அக்காளையை கொல்லவேண்டும். யாத் 29:4லேவி 1:3-5லேவி 8:15லேவி 9:12லேவி 9:8 அந்தக் காளையின் இரத்தத்தில் கொஞ்சத்தை எடுத்து, உன் கை விரலினால் பலிபீடத்தின் கொம்புகளின்மேல் பூசி, மிஞ்சிய இரத்தத்தைப் பலிபீடத்தின் அடியிலே ஊற்றவேண்டும். யாத் 27:2லேவி 8:15லேவி 9:9யாத் 30:2யாத் 38:2எபி 10:4எபி 9:13-14எபி 9:22 பின்பு அதன் உள் உறுப்புகளை மூடியுள்ள கொழுப்புகள் அனைத்தையும், ஈரலை மூடியுள்ள கொழுப்பையும், இரண்டு சிறுநீரகங்களையும், அதன் மேலுள்ள கொழுப்பையும் எடுத்து பலிபீடத்தின்மேல் எரிக்கவேண்டும். லேவி 3:3-41 சாமு 2:16யாத் 29:18யாத் 29:22யாத் 29:25ஏசா 1:11ஏசா 34:6ஏசா 43:24 ஆனால் காளையின் இறைச்சியும், தோலும், குடலும் முகாமுக்கு வெளியே எரிக்கப்படவேண்டும். இது பாவநிவாரண காணிக்கை. லேவி 4:11-12லேவி 4:212 நாளாக 29:24யாத் 30:10எஸ்றா 8:35எபி 13:11-13லேவி 16:11லேவி 16:27
“அதன்பின் செம்மறியாட்டுக் கடாக்களில் ஒன்றைக் கொண்டுவர வேண்டும். அதன் தலைமேல் ஆரோனும், அவன் மகன்களும் தங்கள் கைகளை வைக்கவேண்டும். யாத் 29:19யாத் 29:10யாத் 29:3லேவி 1:4-9லேவி 8:18-21 பின்பு அதைக் கொன்று, அதன் இரத்தத்தைப் பலிபீடத்தின் எல்லா பக்கங்களிலும் தெளிக்கவேண்டும். யாத் 29:11-12 அந்த செம்மறியாட்டுக் கடாவை துண்டங்களாக வெட்டி, அதன் உட்பாகங்களையும், கால்களையும் கழுவி, அவற்றை மற்ற இறைச்சித் துண்டுகளுடனும், அதன் தலையுடனும் வைக்கவேண்டும். எரே 4:14லேவி 1:13லேவி 1:9லேவி 8:21லேவி 9:14மத் 23:26 அதன்பின் செம்மறியாடுகள் முழுவதையும் பலிபீடத்தில் எரிக்கவேண்டும். இது யெகோவாவுக்கு நெருப்பினால் செலுத்தப்படும் மகிழ்ச்சியூட்டும் தகன காணிக்கையாகும். ஆதி 8:211 இராஜா 18:381 இராஜா 3:41 சாமு 7:9எபே 5:2யாத் 29:25ஆதி 22:13ஆதி 22:2
“பின்பு மற்ற செம்மறியாட்டுக் கடாவையும் கொண்டுவர வேண்டும். ஆரோனும் அவன் மகன்களும் அதன்மேல் தங்கள் கைகளை வைக்கவேண்டும். யாத் 29:3லேவி 8:22-29 அந்தக் கடாவையும் வெட்டிக்கொன்று, அதன் இரத்தத்தில் கொஞ்சத்தை ஆரோனுடைய, அவன் மகன்களுடைய வலது காது மடலிலும், வலது கையின் பெருவிரலிலும், வலது காலின் பெருவிரலிலும் பூசவேண்டும். பின்பு இரத்தத்தைப் பலிபீடத்தின் எல்லா பக்கங்களிலும் தெளிக்கவேண்டும். ஏசா 50:51 பேது 1:2எபி 10:22எபி 12:24எபி 9:19-23ஏசா 52:15லேவி 14:14லேவி 14:16 பலிபீடத்திலுள்ள இரத்தத்திலும், அபிஷேக எண்ணெயிலும் கொஞ்சம் எடுத்து, ஆரோன் மேலும் அவன் உடைகளின்மேலும், அவன் மகன்கள்மேலும், அவர்களுடைய உடைகள்மேலும் தெளிக்கவேண்டும். அதன்பின் அவனும், அவன் மகன்களும் அர்ப்பணிக்கப்படுவார்கள். அவர்களுடைய உடைகளும் அர்ப்பணிக்கப்படும். எபி 9:22யாத் 29:1யாத் 29:7லேவி 8:30யாத் 30:25-31எபி 10:29ஏசா 11:2-5ஏசா 61:1-3
“அந்தச் செம்மறியாட்டின் கொழுப்பையும், அதன் கொழுத்த வாலையும், அதன் உள் உறுப்புகளை மூடியுள்ள கொழுப்பையும், ஈரலின் மேலுள்ள கொழுப்பையும், இரு சிறுநீரகங்களையும், அவற்றை மூடியுள்ள கொழுப்பையும், வலது தொடையையும் எடுக்கவேண்டும். இதுவே ஆரோனுடைய அவன் மகன்களுடைய அர்ப்பணிப்பிற்கான செம்மறியாட்டுக் கடா. யாத் 29:13லேவி 10:14லேவி 3:9லேவி 7:3லேவி 7:32-33லேவி 8:25-27லேவி 9:19லேவி 9:21 அவற்றுடன் யெகோவா முன்பாக வைக்கப்பட்டிருந்த புளிப்பில்லாத அப்பங்களுள்ள கூடையிலிருந்து ஒரு அப்பத்தையும், எண்ணெய் சேர்த்து சுடப்பட்ட ஒரு அடை அப்பத்தையும், ஒரு அதிரசத்தையும் எடுத்துக்கொள்ளவேண்டும். யாத் 29:2-3லேவி 8:26 அவற்றையெல்லாம் ஆரோனுடைய, அவன் மகன்களுடைய கைகளில் கொடுத்து, அவற்றை யெகோவா முன்பாக அசைவாட்டும் காணிக்கையாக அசைவாட்டவேண்டும். லேவி 7:30லேவி 8:27யாத் 29:26-27லேவி 10:14லேவி 9:21 பின்பு அவற்றை அவர்களின் கைகளிலிருந்து வாங்கி, பலிபீடத்தின் மேலுள்ள தகன காணிக்கைகளுடன் யெகோவாவுக்கு நெருப்பினால் செலுத்தப்படும் மகிழ்ச்சியூட்டும் நறுமண காணிக்கையாக எரிக்கவேண்டும். லேவி 8:28யாத் 29:411 சாமு 2:28லேவி 1:13லேவி 1:9லேவி 10:13லேவி 2:16லேவி 2:2 ஆரோனின் அர்ப்பணிப்பிற்கான செம்மறியாட்டுக் கடாவின் நெஞ்சுப்பகுதியை எடுத்து, பின்பு அதை யெகோவா முன்னிலையில் அசைவாட்டும் காணிக்கையாக அசைவாட்டவேண்டும். இது உன் பங்காயிருக்கும். லேவி 8:29லேவி 7:31சங் 99:6லேவி 7:34
“ஆரோனுடைய, அவன் மகன்களுடைய அர்ப்பணிப்பிற்குரிய செம்மறியாட்டுக் கடாவின் பாகங்களாகிய அசைவாட்டப்பட்ட நெஞ்சுப்பகுதியையும், செலுத்தப்பட்ட தொடையையும் மிகவும் பரிசுத்தமான பங்காக வேறுபிரித்து வைக்கவேண்டும். லேவி 10:15எண் 18:11உபா 18:3எபி 7:28லேவி 7:31-34லேவி 7:37லேவி 8:28-31லேவி 9:21 இஸ்ரயேலர்கள் சமாதான காணிக்கைகளையும், நன்றியறிதல் காணிக்கைகளையும் யெகோவாவுக்குச் செலுத்தும் போதெல்லாம் இந்தப் பாகங்கள் ஆரோனுக்கும் அவன் மகன்களுக்கும் கொடுக்கப்படவேண்டிய பங்கு ஆகும். உபா 18:3யாத் 29:27லேவி 10:14-15லேவி 3:1லேவி 7:11-38எண் 15:19-20எண் 18:24எண் 18:29
“ஆரோனின் பரிசுத்த உடைகள் அவனுடைய சந்ததிக்கு, அவர்கள் அவற்றை உடுத்தி அபிஷேகம் பண்ணப்பட்டு, அர்ப்பணிக்கப்படும்படி அவர்களுக்கே சொந்தமாகும். எண் 18:8யாத் 28:3-4யாத் 29:5-7யாத் 30:30யாத் 40:15லேவி 8:7-12எண் 20:26-28எண் 35:25 அவனுக்குப்பின் அவனுக்குரிய இடத்தில் ஆசாரியராக பரிசுத்த இடத்தில் ஊழியம் செய்வதற்கு சபைக் கூடாரத்திற்குள் வரும், அவனுடைய மகன் அந்த உடைகளை ஏழு நாட்கள் உடுத்தவேண்டும். எண் 20:28அப் 20:6-7யாத் 12:15யாத் 29:35எசேக் 43:26ஆதி 8:10ஆதி 8:12எபி 7:26
“ஆசாரியரின் அர்ப்பணிப்பிற்கான செம்மறியாட்டுக் கடாவை எடுத்து, அதன் இறைச்சியைப் பரிசுத்த இடத்திலே சமைக்கவேண்டும். லேவி 8:311 சாமு 2:131 சாமு 2:15எசேக் 46:20-24 ஆரோனும் அவன் மகன்களும், அந்த இறைச்சியையும், கூடையிலுள்ள அப்பங்களையும் சபைக்கூடார வாசலில் சாப்பிடவேண்டும். மத் 12:4யாத் 24:9-11யாத் 29:2-3யாத் 29:23லேவி 10:12-14 பரிசுத்தப்படுத்துவதற்கும் அர்ப்பணிப்புக்கும் பாவநிவிர்த்தியாக செலுத்தப்பட்ட அக்காணிக்கைகளை அவர்களே சாப்பிடவேண்டும். அவைகளை வேறு யாரும் சாப்பிடக்கூடாது, ஏனெனில் அவைகள் பரிசுத்தமானவை. எண் 18:41 கொரி 11:241 கொரி 11:26யோவா 6:53-55லேவி 10:13-18லேவி 22:10-13எண் 1:51எண் 16:40 அர்ப்பணிப்பிற்கான அந்த செம்மறியாட்டுக் கடாவின் இறைச்சியிலோ அல்லது அப்பங்களிலோ காலைவரை ஏதாவது மீதமிருந்தால், அவற்றை எரித்துவிடவேண்டும். ஏனெனில் அவை பரிசுத்தமானது, அவற்றைச் சாப்பிடக்கூடாது. யாத் 12:10லேவி 8:32யாத் 16:19யாத் 29:22யாத் 29:26யாத் 29:28லேவி 10:16லேவி 7:18-19
“ஆரோனையும், அவன் மகன்களையும் அர்ப்பணம் செய்யும்படி, நான் உனக்குக் கட்டளையிட்ட எல்லாவற்றையும் அவர்களுக்குச் செய்யவேண்டும். அதைச் செய்வதற்கு ஏழு நாட்கள் எடுத்துக்கொள். யாத் 29:30யாத் 29:37யாத் 39:42-43யாத் 40:12-16யோவா 16:14லேவி 14:8-11லேவி 8:4-36 ஒவ்வொரு நாளும் பாவநிவிர்த்தி செய்யும்படி, பாவநிவாரண காணிக்கையாக ஒரு காளையைப் பலியிடவேண்டும். பலிபீடத்திற்காகவும் பாவநிவிர்த்தி செய்து அதைப் பரிசுத்தப்படுத்து. அதை அர்ப்பணம் செய்வதற்காக எண்ணெயால் அபிஷேகம் செய்து பரிசுத்தப்படுத்து. எபி 10:11யாத் 30:28-29எபி 9:22-23யாத் 30:26யாத் 40:9-11எசேக் 48:18-20யாத் 29:10-14எசேக் 43:25 பலிபீடத்திற்காக ஏழுநாட்களுக்கு பாவநிவிர்த்தி செய்து அதை அர்ப்பணம் செய்யவேண்டும். அப்பொழுது பலிபீடம் மகா பரிசுத்தமுள்ளதாயிருக்கும். அதைத் தொடுவது எதுவானாலும் அது பரிசுத்தமாகும். யாத் 40:10மத் 23:19தானி 9:24யாத் 30:28-29மத் 23:17
“ஒவ்வொரு நாளும் தொடர்ச்சியாக ஒரு வயதுடைய இரண்டு செம்மறியாட்டுக் குட்டிகளை பலிபீடத்தில் பலியாகச் செலுத்தவேண்டும். 1 நாளாக 16:40எண் 28:3-82 நாளாக 2:4தானி 12:112 நாளாக 13:112 நாளாக 31:3எஸ்றா 3:3தானி 9:27 காலையில் ஒரு செம்மறியாட்டுக் குட்டியையும், பொழுது மறையும்போது மற்ற செம்மறியாட்டுக் குட்டியையும் செலுத்தவேண்டும். எசேக் 46:13-152இராஜா 16:152 நாளாக 13:11அப் 26:7லூக் 1:10சங் 5:3சங் 55:16-17 முதல் செம்மறியாட்டுக் குட்டியுடன் பத்தில் ஒரு எப்பா 1 அளவான சிறந்த மாவை, நான்கில் ஒரு பங்கு ஹின் 2 அளவான இடித்துப் பிழிந்த ஒலிவ எண்ணெயிலே பிசைந்து, அதையும் நான்கில் ஒரு ஹின் அளவான திராட்சை இரசத்தையும் பானகாணிக்கையாகச் செலுத்தவேண்டும். பிலி 2:17எசேக் 45:17எசேக் 46:14ஏசா 57:6யோவே 2:14லேவி 23:13உபா 32:38யாத் 16:36 சூரியன் மறையும் வேளையிலும் காலையில் எடுத்த அதே தானியக் காணிக்கையுடனும், அதற்குரிய பானகாணிக்கையுடனும், மற்ற செம்மறியாட்டுக் குட்டியை, யெகோவாவுக்கு நெருப்பினால் செலுத்தப்படும் மகிழ்ச்சியூட்டும் நறுமண காணிக்கையாக பலியிடவேண்டும். 1 இராஜா 18:291 இராஜா 18:362இராஜா 16:15எசேக் 46:13-15எஸ்றா 9:4-5சங் 141:2தானி 9:21
“நீங்கள் இந்த தகன காணிக்கையை தலைமுறைதோறும் சபைக் கூடாரத்தின் வாசலிலே யெகோவாவுக்கு முன்பாக என்றென்றும் தொடர்ச்சியாகச் செலுத்தவேண்டும். அங்கே நான் உன்னைச் சந்தித்து உன்னோடு பேசுவேன். யாத் 25:22 நான் இஸ்ரயேல் மக்களையும் அங்கேயே சந்திப்பேன். அந்த இடம் எனது மகிமையால் அர்ப்பணிக்கப்படும். 1 இராஜா 8:112 நாளாக 5:142 நாளாக 7:1-3யாத் 40:34எசேக் 43:5மல்கி 3:11 யோவா 3:22 கொரி 3:18
“இவ்வாறு சபைக் கூடாரத்தையும், பலிபீடத்தையும் நான் அர்ப்பணம் செய்வேன். ஆசாரியர்களாக எனக்கு ஊழியம் செய்யும்படி ஆரோனையும், அவன் மகன்களையும் அர்ப்பணம் செய்வேன். லேவி 21:15யோவா 10:36லேவி 22:16லேவி 22:9வெளி 1:5-6 இப்படிச் செய்து இஸ்ரயேலர் மத்தியில் நான் குடியிருந்து அவர்களின் இறைவனாயிருப்பேன். லேவி 26:122 கொரி 6:16யாத் 25:8வெளி 21:3சகரி 2:10யோவா 14:17யாத் 15:17யோவா 14:23 அவர்கள் மத்தியில் குடியிருக்கும்படி, அவர்களை எகிப்திலிருந்து வெளியே கொண்டுவந்த, அவர்களுடைய இறைவனாகிய யெகோவா நானே என்பதை அவர்கள் அறிந்துகொள்வார்கள். அவர்களுடைய இறைவனாகிய யெகோவா நானே. யாத் 20:2எரே 31:33எசேக் 20:5லேவி 11:44லேவி 18:30லேவி 19:2