எசேக்கியேல் 26

Ezekiel 26

தீருவுக்கு எதிரான இறைவாக்கு

அரசன் யோயாக்கீன் சிறைப்பிடிக்கப்பட்ட பதினோராம் வருடம் மாதத்தின் முதலாம் நாளிலே, யெகோவாவின் வார்த்தை எனக்கு வந்தது. எசேக் 20:1எசேக் 1:2எசேக் 8:1எரே 39:2 “மனுபுத்திரனே, எருசலேமைக்குறித்து, ‘ஆகா, நாடுகளுக்குரிய வாசல் உடைந்திருக்கிறது. அதன் கதவுகள் திறந்து ஊசலாடுகின்றன. இப்பொழுது அவள் பாழானாள்: நான் செழிப்பேன்’ என்று தீரு சொல்லியிருக்கிறாள்.” ஏசா 23:1-18எசேக் 36:2எரே 25:22யோவே 3:42 சாமு 5:11ஆமோ 1:9-10எசேக் 25:10எசேக் 25:2-3 ஆகவே ஆண்டவராகிய யெகோவா கூறுவது இதுவே. தீருவே நான் உனக்கு விரோதமாக இருக்கிறேன். கடல் தன் அலைகளை எழும்பப்பண்ணுவதுபோல், நான் அநேக நாடுகளை உனக்கு விரோதமாய்க் கொண்டுவருவேன். எரே 51:42ஏசா 5:30எசேக் 27:32-34மீகா 4:11எசேக் 21:3எசேக் 27:26எசேக் 28:22எசேக் 38:3 அவர்கள் தீருவின் மதில்களை அழித்து, அவர்களுடைய கோபுரங்களை வீழ்த்தி விடுவார்கள். நான் அவளது இடிபாடுகளை வழித்தெடுத்து, அவளை ஒரு வெறும் பாறையாக்கிவிடுவேன். ஆமோ 1:10ஏசா 23:11எசேக் 26:9எசேக் 24:7-8எசேக் 26:12எரே 5:10லேவி 14:41-45சகரி 9:3 கடலின் நடுவே ஒரு தீவாய் இருக்கும் குடியேற்றமில்லாத அவள், மீன் வலைகளை உலர்த்தும் இடமாவாள். நானே இதைச் சொன்னேன், என்று ஆண்டவராகிய யெகோவா அறிவிக்கிறார். அவள் நாடுகளின் கொள்ளைப் பொருளாவாள். எசேக் 29:19எசேக் 25:7எசேக் 26:19எசேக் 27:32எசேக் 47:10எசேக் 26:14 நாட்டின் உட்பகுதியிலுள்ள அவளது குடியிருப்புகள் வாளினால் கொள்ளையிடப்படும். அப்பொழுது நானே யெகோவா என்பதை அவர்கள் அறிந்துகொள்வார்கள். எசேக் 16:46எசேக் 26:8எசேக் 16:48எசேக் 25:11எசேக் 25:14எசேக் 25:17எசேக் 25:5எசேக் 25:7

“ஆகவே ஆண்டவராகிய யெகோவா கூறுவது இதுவே. நான் அரசருக்கெல்லாம் அரசனான பாபிலோன் அரசன் நேபுகாத்நேச்சாரை குதிரைகள், தேர்கள், குதிரைவீரர்கள், பெரும் இராணுவப்படை ஆகியவற்றோடு வடக்கேயிருந்து தீருவுக்கு விரோதமாய்க் கொண்டுவரப் போகிறேன்.” தானி 2:37எஸ்றா 7:12எசேக் 23:24நாகூ 2:3-4ஓசி 8:10ஏசா 10:8எரே 25:9எரே 52:32 அவன் நாட்டின் உட்பகுதியிலுள்ள உங்கள் குடியிருப்புகளை வாளினால் சூறையாடுவான். அவன் உனக்கு விரோதமாய் முற்றுகையிட்டு, உன் மதில்களுக்கு எதிராக முற்றுகை அரணைக் கட்டி, உனக்கு விரோதமாய் தனது கேடயங்களை உயர்த்துவான். எசேக் 21:22எரே 32:24எரே 52:4எரே 6:62 சாமு 20:15 அவன் உன் மதில்களுக்கு எதிராக இடிக்கும் இயந்திரங்களின் முனைகளை வைத்து, தனது போராயுதங்களினால் உன் கோபுரங்களைத் தகர்ப்பான். 2 நாளாக 26:15 அவனுடைய குதிரைகள் அநேகமாயிருப்பதனால், அவை எழுப்பும் தூசி உன் நகரத்தையும் மூடத்தக்க அளவு இருக்கும். மதில்கள் உடைக்கப்பட்ட பட்டணத்திற்குள் மனிதர் நுழைவதுபோல், அவன் உன் வாசலில் நுழைவான். அப்பொழுது போர்க்குதிரைகளும், வண்டிகளும், தேர்களும் இரைகிற சத்தத்தினால் உன் மதில்கள் அதிரும். எசேக் 26:15எசேக் 27:28எரே 47:3எசேக் 26:7எரே 4:13யோசு 6:20யோசு 6:5நாகூ 2:3-4 அவனுடைய குதிரைகளின் குளம்புகள் உன் வீதிகளையெல்லாம் மிதிக்கும். அவன் உன் மக்களை வாளினால் கொல்வான். உன் பலத்த தூண்களும் நிலத்தில் சாயும். ஏசா 26:5ஏசா 5:28ஆப 1:8எரே 43:13எரே 51:27 அவர்கள் உன் செல்வங்களைச் சூறையாடி, உன் வியாபாரப் பொருட்களைக் கொள்ளையிடுவார்கள். அவர்கள் உன் மதில்களை இடித்து, உன் அருமையான வீடுகளை நொறுக்கி, அவைகளிலுள்ள கற்களையும், மரங்களையும் அவைகளின் இடிபாடுகளையும் கடலுக்குள் எறிந்துவிடுவார்கள். ஏசா 23:82 நாளாக 32:27ஆமோ 5:11சகரி 9:3-42 நாளாக 36:10தானி 11:8எசேக் 26:5எசேக் 27:3-36 உன் சத்தமான பாடல்களுக்கு நான் ஒரு முடிவு வரப்பண்ணுவேன். உன் வீணையின் இசை இனிமேல் கேட்கப்படமாட்டாது. ஏசா 23:16எரே 7:34ஏசா 14:11ஏசா 24:8-9எரே 16:9எரே 25:10ஆமோ 6:4-7எசேக் 28:13 நான் உன்னை ஒரு வெறுமையான பாறையாக்குவேன். நீ மீன் பிடிக்கும் வலைகளை உலர்த்தும் இடமாக மாறுவாய். நீ ஒருபோதும் திரும்பக் கட்டப்படமாட்டாய். ஏனெனில், யெகோவாவாகிய நானே இதைச் சொன்னேன் என்று ஆண்டவராகிய யெகோவா அறிவிக்கிறார். யோபு 12:14மல்கி 1:4உபா 13:16எசேக் 26:4-5ஏசா 14:27எண் 23:19எசேக் 17:21-24எசேக் 21:32

“ஆண்டவராகிய யெகோவா தீருவுக்குக் கூறுவது இதுவே. உன்னில் காயப்பட்டோர் அழுகிறபோதும், படுகொலைகள் நடக்கும்போதும், நீ விழும் சத்தத்தினால் கரையோர நாடுகள் நடுங்காதோ? எசேக் 27:35எரே 49:21எசேக் 26:18எசேக் 31:16எசேக் 27:28எசேக் 32:10எபி 12:26-27ஏசா 2:19 அப்பொழுது கடற்கரை வாசிகளின் இளவரசர்கள் அனைவரும் தங்கள் அரியணைகளிலிருந்து இறங்கி, தங்கள் சித்திரத்தையலாடைகளை கழற்றி, தங்கள் வேலைப்பாடுகளமைந்த உடைகளையும் கழற்றிப்போடுவார்கள். திகிலை உடையாக உடுத்திய வண்ணம் அவர்கள் நிலத்தில் உட்காருவார்கள். ஒவ்வொரு வினாடியும், நடுக்கத்தோடு உன்னைப் பார்த்து அதிர்ச்சியடைவார்கள். எசேக் 32:10ஓசி 11:10யோபு 8:22யோனா 3:61 பேது 5:5ஏசா 3:26சங் 35:26தானி 5:6 பின்பு அவர்கள் உன்னைக்குறித்து புலம்பல் வைத்து, ஏசா 14:12எசேக் 19:12 சாமு 1:25-27எசேக் 19:14எசேக் 27:2-36எசேக் 32:16எசேக் 32:2ஏசா 23:4

“ ‘கடல் மனிதர்களால் நிறைந்து

பேர்பெற்ற நகரமே,

நீ எவ்வளவாய் அழிந்துபோனாய்?

நீயும் உன் குடிமக்களும்

கடலில் வலிமையுடையவர்களாய் இருந்தீர்கள்.

அங்கு வாழ்ந்தவர்களையெல்லாம் நீங்கள் திகிலடையச் செய்தீர்களே!

இப்பொழுது நீ விழுந்ததைக்கண்டு எசேக் 26:15ஏசா 23:5-7எசேக் 27:28-30எசேக் 27:35ஏசா 23:10-12ஏசா 41:5

கடற்கரை நாடுகள் நடுங்குகின்றன;

கடலிலுள்ள தீவுகள் உன் அழிவைக் கண்டு

திகிலடைகின்றன என்று சொல்வார்கள்.’

“ஆண்டவராகிய யெகோவா கூறுவது இதுவே. நான் உன்னைக் குடியற்ற நகரங்களைப்போல் பாழ் நகரம் ஆக்குவேன். சமுத்திரத்தின் ஆழங்களை உன்மேல் கொண்டுவருவேன். அதன் பெருவெள்ளத்தால் உன்னை மூடுவேன். எசேக் 26:3ஏசா 8:7-8தானி 11:40தானி 9:26வெளி 17:15 பின்பு நான் உன்னை குழியில் இறங்குகிற மக்களோடு பூர்வீக மக்களிடம் இறங்கச்செய்வேன். நான் உன்னைப் பூமியின் அடியில் பூர்வகால இடிபாடுகள் இருக்கும் இடங்களில், குடியிருக்கப்பண்ணுவேன். குழியில் இறங்குகிறவர்களோடு நீயும் போவாய். திரும்பி வரவுமாட்டாய். வாழ்வோர் நாட்டில் உனக்குரிய இடத்தைப் பெற்றுக்கொள்ளவுமாட்டாய். லூக் 10:15சங் 27:13எசேக் 28:25-26எசேக் 32:18-32சகரி 2:8ஆமோ 9:2எசேக் 34:1-31எசேக் 39:25-29 நான் உனக்குப் பயங்கர முடிவைக் கொண்டுவருவேன். இனிமேல் நீ இருக்கப்போவதில்லை. நீ தேடப்படுவாய். ஆனால் மறுபடியும் நீ காணப்படமாட்டாய், என்று ஆண்டவராகிய யெகோவா அறிவிக்கிறார்.” எசேக் 27:36எசேக் 28:19வெளி 18:21சங் 37:36எசேக் 26:14-16எரே 51:64