ஏசாவின் சந்ததி
ஏதோம் என்று அழைக்கப்படும் ஏசாவின் வம்சவரலாறு: ஆதி 22:171 நாளாக 1:35உபா 23:7ஆதி 25:24-34ஏசா 63:1எண் 20:14-21ஆதி 27:35-41ஆதி 32:3-7
ஏசா கானான் நாட்டுப் பெண்களிலிருந்து மனைவிகளை எடுத்தான்: ஏத்தியனான ஏலோனின் மகள் ஆதாளையும், ஏவியனான சிபியோனின் பேத்தியும் ஆனாகின் மகளுமான அகோலிபாமாளையும் திருமணம் செய்தான். ஆதி 36:25ஆதி 27:46ஆதி 28:9ஆதி 9:25ஆதி 26:34-35 அத்துடன் இஸ்மயேலின் மகளும் நெபாயோத்தின் சகோதரியுமான பஸ்மாத்தையும் மனைவியாக்கிக் கொண்டான். ஆதி 28:9ஆதி 25:13
ஆதாள் ஏசாவுக்கு எலிப்பாஸைப் பெற்றாள், பஸ்மாத் ரெகுயேலைப் பெற்றாள். 1 நாளாக 1:35யாத் 2:18யோபு 2:11எண் 10:29 அகோலிபாமாள் எயூஷ், யாலாம், கோராகு ஆகியோரைப் பெற்றாள். கானானில் ஏசாவுக்கு பிறந்த மகன்கள் இவர்களே. ஆதி 35:29
ஏசா தன் மனைவிகள், மகன்கள், மகள்களோடு, தன் வீட்டிலுள்ள எல்லோரையும் அழைத்துக்கொண்டு போனான். அவர்களுடன் தன் வளர்ப்பு மிருகங்களையும், மற்ற மிருகங்கள் எல்லாவற்றையும், கானானில் தான் சம்பாதித்த பொருட்கள் யாவற்றையும் எடுத்துக்கொண்டு, தன் சகோதரன் யாக்கோபை விட்டுச் சற்றுத் தூரமான நாட்டுக்குப் போனான். ஆதி 32:3ஆதி 12:5ஆதி 13:11ஆதி 13:6ஆதி 17:8ஆதி 25:23ஆதி 28:4வெளி 18:13 அவர்களுடைய உடைமைகள் அதிகமாய் இருந்தபடியால், அவர்களால் ஒரே இடத்தில் சேர்ந்து வாழ முடியவில்லை; அவர்களுடைய வளர்ப்பு மிருகங்கள் அதிகமாய் இருந்தபடியால், அவர்கள் இருந்த நிலப்பகுதி அவர்களுக்கு போதுமானதாக இல்லை. ஆதி 13:6ஆதி 17:8ஆதி 28:4ஆதி 13:11எபி 11:9 ஆதலால் ஏதோம் என்னும் ஏசா, சேயீர் மலைநாட்டில் குடியேறினான். ஆதி 32:3மல்கி 1:3எசேக் 35:2-71 நாளாக 4:422 நாளாக 20:102 நாளாக 20:23உபா 2:5ஆதி 14:6
சேயீர் மலைநாட்டில் குடியிருந்த ஏதோமியரின் தகப்பனான ஏசாவின் வம்சவரலாறு. ஆதி 19:37
ஏசாவின் மகன்களின் பெயர்கள் இவையே: 1 நாளாக 1:35-54ஆதி 36:3-4
ஏசாவின் மனைவியான ஆதாளின் மகன் எலிப்பாஸ், ஏசாவின் மனைவியான பஸ்மாத்தின் மகன் ரெகுயேல்.
எலிப்பாஸின் மகன்கள்: 1 நாளாக 1:35-36ஆதி 36:15-16
தேமான், ஓமார், செப்போ, கத்தாம், கேனாஸ் என்பவர்கள். ஏசாவின் மகன் எலிப்பாஸுக்கு திம்னாள் என்னும் வைப்பாட்டி இருந்தாள்; அவள் அவனுக்கு அமலேக்கைப் பெற்றாள். இவர்கள் ஏசாவின் மனைவி ஆதாளின் பேரன்கள். உபா 25:17-19யாத் 17:8-161 சாமு 15:2-9உபா 23:7ஆதி 14:7ஆதி 36:22எண் 24:18-201 நாளாக 1:36
ரெகுயேலின் மகன்கள்; 1 நாளாக 1:37ஆதி 36:17
நாகாத், செராகு, சம்மா, மீசா. இவர்கள் ஏசாவின் மனைவி பஸ்மாத்தின் பேரன்கள்.
சிபியோனின் பேத்தியும் ஆனாகின் மகளுமான அகோலிபாமாள் ஏசாவுக்குப் பெற்ற மகன்கள்: ஆதி 36:21 நாளாக 1:35ஆதி 36:18ஆதி 36:5
எயூஷ், யாலாம், கோராகு என்பவர்கள்.
ஏசாவின் சந்ததிகளில் வந்த வம்சத்தலைவர்கள்: ஒபதி 1:9ஆதி 36:11-12யோபு 2:111 நாளாக 1:35-361 நாளாக 1:451 நாளாக 1:51-54ஆமோ 1:12யாத் 15:15
ஏசாவின் மூத்த மகனான எலிப்பாஸின் மகன்கள்:
தேமான், ஓமார், செப்போ, கேனாஸ், கோராகு, கத்தாம், அமலேக்கு என்பவர்கள். ஏதோம் நாட்டிலுள்ள எலிப்பாஸின் வழிவந்த வம்சத்தலைவர்கள் இவர்களே. இவர்கள் ஆதாளின் பேரன்கள். யாத் 15:15
ஏசாவின் மகன் ரெகுயேலின் மகன்கள்: 1 நாளாக 1:37ஆதி 36:13ஆதி 36:4
நகாத், செராகு, சம்மா, மீசா ஆகியோரும் வம்சத்தலைவர்களே. இவர்கள் ஏதோம் நாட்டிலுள்ள ரெகுயேலின் வழிவந்த வம்சத்தலைவர்கள்; இவர்கள் ஏசாவின் மனைவி பஸ்மாத்தின் பேரன்கள்.
ஏசாவின் மனைவி அகோலிபாமாளின் மகன்கள்: ஆதி 36:141 நாளாக 1:35ஆதி 36:5
எயூஷ், யாலாம், கோராகு ஆகியோரும் வம்சத்தலைவர்களே. இவர்கள் ஆனாகின் மகளும் ஏசாவின் மனைவியுமான அகோலிபாமாளின் வழிவந்தவர்கள்.
ஏதோம் என்னும் ஏசாவின் மகன்கள் இவர்களே. இவர்கள் அவர்களின் வம்சத்தலைவர்கள்.
அந்த நிலப்பரப்பில் வாழ்ந்துகொண்டிருந்த ஓரியரான சேயீரின் மகன்கள்: உபா 2:12உபா 2:22ஆதி 14:61 நாளாக 1:38-42ஆதி 36:2ஆதி 36:22-30
லோத்தான், சோபால், சிபியோன், ஆனாகு, திஷோன், ஏசேர், திஷான். ஏதோமிலிருந்த சேயீரின் இந்த மகன்கள் ஓரியரின் வம்சத்தலைவர்கள் ஆவர்.
லோத்தானின் மகன்கள்: 1 நாளாக 1:39
ஓரி, ஓமாம். திம்னாள் லோத்தானின் சகோதரி.
சோபாலின் மகன்கள்: 1 நாளாக 1:40
அல்வான், மானகாத், ஏபால், செப்போ, ஓனாம்.
சிபியோனின் மகன்கள்: 1 இராஜா 1:381 இராஜா 1:441 இராஜா 4:282 சாமு 13:292 சாமு 18:9உபா 2:10லேவி 19:19சகரி 14:15
அயா, ஆனாகு என்பவர்கள். இந்த ஆனாகுவே, தன் தகப்பன் சிபியோனின் கழுதைகளை மேய்த்துக் கொண்டிருக்கும்போது, பாலைவனத்திலே வெந்நீரூற்றுக்களைக் கண்டுபிடித்தவன்.
ஆனாகின் பிள்ளைகள்: ஆதி 36:21 நாளாக 1:41ஆதி 36:14ஆதி 36:18ஆதி 36:5
திஷோன், ஆனாகின் மகளான அகோலிபாமாள் என்பவர்கள்.
திஷோனுடைய மகன்கள்: 1 நாளாக 1:41
எம்தான், எஸ்பான், இத்ரான், கெரான் என்பவர்கள்.
ஏசேருடைய மகன்கள்: 1 நாளாக 1:381 நாளாக 1:42ஆதி 36:21
பில்கான், சகவான், அக்கான் என்பவர்கள்.
திஷானுடைய மகன்கள். எரே 25:20யோபு 1:1புலம் 4:21
ஊத்ஸ், அரான் என்பவர்கள்.
ஓரியரின் வம்சத்தலைவர்கள்: ஆதி 36:201 நாளாக 1:381 நாளாக 1:41-42ஆதி 36:28
லோத்தான், சோபால், சிபியோன், ஆனாகு, திஷோன், ஏசேர், திஷான் என்பவர்கள். 2இராஜா 11:19தானி 7:17தானி 7:23ஏசா 23:15
இவர்கள் சேயீர் நாட்டில் தங்கள் ஓரியர் வம்சப் பிரிவுகளின்படி வம்சத்தலைவர்களாய் இருந்தார்கள்.
ஏதோமின் ஆளுநர்கள்
இஸ்ரயேல் மக்களை ஒரு அரசர் ஆட்சி செய்யுமுன், ஏதோம் நாட்டில் அரசாண்ட அரசர்கள்: ஆதி 17:61 நாளாக 1:43-50ஆதி 17:16உபா 17:14-20உபா 33:5ஆதி 25:23எண் 20:14எண் 24:17-18
பேயோரின் மகன் பேலா ஏதோமில் அரசனானான். அவனுடைய பட்டணம் தின்காபா எனப் பெயரிடப்பட்டது.
பேலா இறந்தபின்பு, போஸ்றாவைச் சேர்ந்த சேராகின் மகன் யோபாப் அவனுக்குப்பின் அரசனானான். எரே 49:13எரே 49:22ஆமோ 1:12ஏசா 34:6ஏசா 63:1மீகா 2:12
யோபாப் இறந்தபின்பு, அவனுடைய இடத்தில் தேமான் நாட்டைச் சேர்ந்த உஷாம் அரசனானான். ஆதி 36:11ஆதி 36:15எரே 49:7யோபு 2:11
உஷாம் இறந்தபின்பு, மோவாப் நாட்டிலே மீதியானியரை முறியடித்த பேதாதின் மகன் ஆதாத் அவனுடைய இடத்தில் அரசனானான். இவனுடைய பட்டணம் ஆவீத் எனப் பெயரிடப்பட்டது.
ஆதாத் இறந்தபின்பு அவனுடைய இடத்தில் மஸ்ரேக்கா என்னும் இடத்தைச் சேர்ந்த சம்லா அரசனானான். 1 நாளாக 1:47
சம்லா இறந்தபின்பு, ஆற்றின் அருகில் உள்ள ரெகொபோத் என்னுமிடத்தைச் சேர்ந்த சாவூல் அவனுடைய இடத்தில் அரசனானான். 1 நாளாக 1:48ஆதி 10:11
சாவூல் இறந்தபின்பு அவனுடைய இடத்தில் அக்போரின் மகன் பாகால்கானான் அரசனானான்.
அக்போருடைய மகனாகிய பாகால்கானான் இறந்தபின்பு, அவனுடைய இடத்தில் ஆதாத் அரசனானான். இவனது பட்டணம் பாகு எனப் பெயரிடப்பட்டது. இவனது மனைவியின் பெயர் மெகேதபேல்; இவள் மத்ரேத்தின் மகளும் மேசகாபின் பேத்தியுமாவாள். 1 நாளாக 1:50யாத் 15:15
பெயரின்படியும், வம்சத்தின்படியும், நிலப்பரப்பின்படியும் ஏசாவின் வழிவந்த வம்சத்தலைவர்கள்: 1 நாளாக 1:51-54யாத் 15:15ஆதி 36:15-16ஆதி 36:31
திம்னா, அல்வா, ஏதேத்,
அகோலிபாமா, ஏலா, பினோன்,
கேனாஸ், தேமான், மிப்சார்,
மக்தியேல், ஈராம் என்பவர்களாகும். 1 நாளாக 4:14உபா 2:5யாத் 15:15ஆதி 25:12ஆதி 25:30ஆதி 36:15ஆதி 36:18-19ஆதி 36:30-31
அவர்கள் குடியேறிய நாட்டில் அவர்களின் குடியிருப்புகளின்படி ஏதோமின் வம்சத்தலைவர்கள் இவர்களே.
இவையே ஏசாவின் வம்சவரலாறு, இவன் ஏதோமியருக்குத் தகப்பன்.