ஏசாயா 61

Isaiah 61

யெகோவாவினுடைய தயவின் வருடம்

ஆண்டவராகிய யெகோவாவின் ஆவியானவர் என் மேலிருக்கிறார்; லூக் 4:18-19லூக் 7:22ஏசா 42:7மத் 11:5சங் 147:3ஏசா 42:1சகரி 9:11-12அப் 10:38

ஏழைகளுக்கு நற்செய்தியை அறிவிக்கும்படி,

யெகோவா என்னை அபிஷேகம் பண்ணினார்.

உள்ளமுடைந்தவர்களுக்குக் காயங்கட்டவும்,

சிறைப்பட்டவர்களுக்கு விடுதலையை அறிவிக்கவும்,

கட்டுண்டோரை இருளிலிருந்து விடுவிக்கவும்,

யெகோவாவின் தயவின் வருடத்தையும், மத் 5:4ஏசா 34:8லூக் 4:19ஏசா 57:182 தெச 2:16-17யோவா 16:20-221 தெச 2:16ஏசா 25:8

நமது இறைவன் அநீதிக்குப் பழிவாங்கப்போகும் நாளையும் அறிவிக்கவும்,

துக்கப்படும் அனைவரையும் ஆறுதல்படுத்தவும்,

சீயோனில் துக்கப்படுகிறவர்களுக்கு சங் 30:11எரே 17:7-8யோவா 16:20ஏசா 61:10சங் 45:7பிரச 9:81 பேது 2:9ஏசா 60:20-21

சாம்பலுக்குப் பதிலாக அழகின் மகுடத்தையும்,

துயரத்திற்குப் பதிலாக

ஆனந்த தைலத்தையும்,

மனச்சோர்வுக்குப் பதிலாக

துதியின் உடையையும் கொடுப்பதற்காகவும்

அவர் என்னை அனுப்பியிருக்கிறார்.

அவர்கள் யெகோவா தமது சிறப்பை வெளிப்படுத்துவதற்காக,

அவரால் நாட்டப்பட்ட

நீதியின் விருட்சங்கள் என அழைக்கப்படுவார்கள்.

அவர்கள் ஆதிகாலத்தின் இடிபாடுகளை திரும்பக் கட்டி, ஏசா 58:12ஆமோ 9:14-15எசேக் 36:33-36எசேக் 36:23-26ஏசா 49:6-8

நெடுங்காலமாய்ப் பாழாய் கிடந்த இடங்களைப் பழைய நிலைக்குக் கொண்டுவருவார்கள்.

தலைமுறை தலைமுறைகளாய் பாழடைந்து

சூறையாடப்பட்டுக் கிடந்த பட்டணங்களைப் புதுப்பிப்பார்கள்.

பிறநாட்டார் உங்கள் மந்தைகளை மேய்ப்பார்கள்; ஏசா 60:10-14ஏசா 14:1-2எபே 2:12-20

அந்நியர் உங்கள் வயல்களிலும் திராட்சைத் தோட்டங்களிலும் வேலை செய்வார்கள்.

நீங்கள் யெகோவாவின் ஆசாரியர்கள் என்று அழைக்கப்படுவீர்கள்; யாத் 19:61 பேது 2:51 பேது 2:9ஏசா 60:5-7ஏசா 66:21வெளி 5:102 கொரி 11:23வெளி 20:6

நமது இறைவனின் ஊழியர்கள் என்று பெயரிடப்படுவீர்கள்.

நீங்கள் நாடுகளின் செல்வத்தை சாப்பிடுவீர்கள்,

அவர்களின் செல்வத்தில் பெருமையும் பாராட்டுவீர்கள்.

என் மக்கள் தங்கள் வெட்கத்திற்குப் பதிலாக யோபு 42:10சகரி 9:12ஏசா 40:2ஏசா 60:19-20சங் 16:112இராஜா 2:9ஏசா 51:112 கொரி 4:17

நாட்டில் இரட்டிப்பான பங்கைப் பெறுவார்கள்.

அவமானத்திற்குப் பதிலாக

அவர்கள் தங்கள் உரிமையில் மகிழ்ச்சியடைவார்கள்.

ஆகவே அவர்கள் தங்கள் நாட்டில் இரட்டிப்பான பங்கை உரிமையாக்கிக்கொள்வார்கள்.

நித்திய மகிழ்ச்சி அவர்களுக்கு உரியதாயிருக்கும்.

“ஏனெனில் யெகோவாவாகிய நான், கொள்ளையையும் 1 மீறுதல்களையும் வெறுக்கிறேன். சங் 11:7எரே 9:24சகரி 8:16-17ஆதி 17:7ஏசா 55:3எரே 32:40சங் 25:8-12சங் 37:28

நான் நீதியை நேசிக்கிறேன்.

என் உண்மையின் நிமித்தம் அவர்களுக்கு வெகுமதி கொடுத்து,

அவர்களுடன் ஒரு நித்திய உடன்படிக்கையையும் செய்வேன்.

அவர்களுடைய சந்ததிகள் பல நாடுகளின் மத்தியிலும், ஏசா 44:3சங் 115:14அப் 3:26ஆதி 22:18ஏசா 65:23ரோம 9:3-4சகரி 8:13ரோம 11:16-24

அவர்களுடைய சந்ததியினர் பல மக்கள் கூட்டங்களின் மத்தியிலும்

நன்கு அறியப்படுவார்கள்.

அவர்களைக் காண்போர் அனைவரும்,

அவர்கள் யெகோவாவினால் ஆசீர்வதிக்கப்பட்ட மக்கள்

என்பதை ஏற்றுக்கொள்வார்கள்.”

நான் யெகோவாவிடம் பெரிதாய் களிகூருகிறேன். வெளி 19:7-8பிலி 3:9சங் 132:9சங் 132:16வெளி 21:2ஏசா 49:18வெளி 7:9-14ரோம 14:17

என் ஆத்துமா என் இறைவனில் மகிழுகிறது.

ஏனெனில் மணவாளன் தன் தலையை ஒரு ஆசாரியன் அழகுபடுத்துவது போலவும்,

ஒரு மணவாட்டி தன் நகைகளால் தன்னை அலங்கரிப்பது போலவும்,

யெகோவா இரட்சிப்பின் உடைகளை எனக்கு உடுத்தி,

நேர்மையின் ஆடையால் என்னை அலங்கரித்து இருக்கிறார்.

மண் தன் தாவரங்களை விளைவிப்பது போலவும், 1 பேது 2:9ஏசா 58:11மாற் 4:26-32ஏசா 55:10-11ஏசா 45:8ஏசா 62:1ஏசா 62:7சங் 85:11

ஒரு தோட்டம் தன்னில் விதைக்கப்பட்ட விதைகளை வளரச்செய்வது போலவும்,

ஆண்டவராகிய யெகோவா நீதியையும்,

துதியையும் எல்லா நாடுகளுக்கு முன்பாகவும் வளரப்பண்ணுவார்.