யோவான் 20

John 20

வெறுமையான கல்லறை

வாரத்தின் முதலாவது நாள் அதிகாலையிலே, இன்னும் இருட்டாயிருக்கையிலே மகதலேனா மரியாள் கல்லறைக்குப் போனாள். அங்கே கல்லறையின் வாசலில் இருந்த கல் புரட்டப்பட்டிருப்பதை அவள் கண்டாள். மாற் 16:9மத் 27:60யோவா 19:25லூக் 24:1-10மாற் 15:46வெளி 1:10யோவா 20:18-19யோவா 20:26 எனவே அவள் சீமோன் பேதுருவிடமும், இயேசு அன்பு செலுத்திய மற்றச் சீடர்களிடமும் ஓடிவந்து, “கல்லறையிலிருந்து கர்த்தரின் உடலை அவர்கள் எடுத்துக்கொண்டுபோய் விட்டார்கள். அவர்கள் அவரை எங்கே வைத்திருக்கிறார்களோ எங்களுக்குத் தெரியாது!” என்றாள். யோவா 13:23யோவா 20:13யோவா 19:26யோவா 21:24யோவா 21:20யோவா 21:7மத் 27:63-64யோவா 20:15

எனவே பேதுருவும், மற்றச் சீடனும் கல்லறையை நோக்கிச் சென்றார்கள். லூக் 24:12 அவர்கள் இருவரும் ஒருமித்து ஓடினார்கள். ஆனால் மற்றச் சீடனோ பேதுருவை முந்திக் கொண்டு கல்லறைக்கு முதலில் போய்ச் சேர்ந்தான். 2 சாமு 18:231 கொரி 9:242 கொரி 8:12லேவி 13:30 அவன் குனிந்து பார்த்தபோது, மென்பட்டுத் துணிகள் அங்கே கிடப்பதைக் கண்டான். அவனோ உள்ளே போகவில்லை. யோவா 19:40யோவா 11:44யோவா 20:11 பின்பு அவனுக்குப்பின்னாக வந்த சீமோன் பேதுருவோ, வந்து சேர்ந்தவுடன் கல்லறைக்கு உள்ளே போனான். அங்கே மென்பட்டுத் துணிகள் கிடப்பதைக் கண்டான். லூக் 22:31-32யோவா 18:17யோவா 18:25-27யோவா 21:15-17யோவா 21:7யோவா 6:67-69மத் 16:15-16 இயேசுவின் தலையைச் சுற்றிக் கட்டியிருந்த துணியும் அங்கே கிடந்தது. அது மென்பட்டுத் துணியோடு அல்லாமல், தனியாக மடித்து வைக்கப்பட்டிருந்தது. யோவா 11:44 பின்பு முதலாவதாகக் கல்லறைக்கு வந்திருந்த மற்றச் சீடனும் உள்ளே போனான். அவனும் கண்டு விசுவாசித்தான். யோவா 20:25யோவா 1:50யோவா 20:4யோவா 20:29 ஆனால் இயேசு மரித்தோரிலிருந்து உயிரோடு எழுந்திருக்க வேண்டும் என்ற வேதவசனத்தை அவர்கள் இன்னும் புரிந்துகொள்ளவில்லை. சங் 16:10ஏசா 25:8ஏசா 53:10-12ஏசா 26:19லூக் 24:44-461 கொரி 15:4லூக் 24:26ஓசி 13:14 பின்பு சீடர்கள் தங்கள் வீடுகளுக்குச் சென்றார்கள். யோவா 16:32யோவா 7:53

இயேசு மகதலேனா மரியாளுக்குக் காட்சியளித்தல்

ஆனால் மரியாளோ கல்லறைக்கு வெளியே அழுதுகொண்டு நின்றாள். அவள் அழுதுகொண்டு குனிந்து கல்லறையினுள்ளே பார்த்தாள். யோவா 20:5 அங்கே வெள்ளையுடை அணிந்த இரண்டு இறைத்தூதர்கள், இயேசுவின் உடல் வைக்கப்பட்டிருந்த இடத்தில் உட்கார்ந்திருந்தார்கள். ஒரு தூதன் தலைமாட்டிலும் இன்னொரு தூதன் கால்மாட்டிலும் இருந்தார்கள். லூக் 24:3-7வெளி 3:4தானி 7:9மாற் 16:5-6வெளி 7:142 நாளாக 5:12அப் 1:10லூக் 24:22-23

அவர்கள் அவளிடம், “பெண்ணே, ஏன் அழுகிறாய்?” என்று கேட்டார்கள். யோவா 20:15யோவா 16:20-221 சாமு 1:8யோவா 14:27-28யோவா 2:4சங் 43:3-5அப் 21:13பிரச 3:4

அதற்கு அவளோ, “அவர்கள் என் கர்த்தரை எடுத்துக்கொண்டுபோய் விட்டார்கள். அவர்கள் அவரை எங்கே வைத்தார்களோ எனக்குத் தெரியவில்லை” என்றாள். இதைச் சொல்லிவிட்டு, அவள் திரும்பியபோது இயேசு அங்கே நிற்பதைக் கண்டாள். ஆனால் அவர் இயேசுவே என்று அவள் அறிந்துகொள்ளவில்லை. லூக் 24:16யோவா 21:4மத் 28:9மாற் 16:9உன்னத 3:3-4யோவா 8:59லூக் 24:31மாற் 16:12

அப்பொழுது இயேசு, “பெண்ணே, நீ ஏன் அழுகிறாய்? நீ யாரைத் தேடுகிறாய்?” என்று கேட்டார். யோவா 18:7யோவா 20:13யோவா 1:38உன்னத 3:21 சாமு 1:16யோவா 18:4மத் 28:5மாற் 16:6

அவள் அவரைத் தோட்டக்காரன் என நினைத்து அவரிடம், “ஐயா, நீர் அவரைக் கொண்டு போயிருந்தால், அவரை எங்கே வைத்தீர் என்று எனக்குச் சொல்லும். நான் அவரை எடுத்துச் செல்வேன்” என்றாள்.

அப்பொழுது இயேசு அவளிடம், “மரியாளே!” என்றார். யோவா 10:3யோவா 1:381 சாமு 3:101 சாமு 3:6அப் 10:3அப் 9:4யாத் 3:4யாத் 33:17

அவள் அவர் நின்ற பக்கமாய்த் திரும்பி, “ரபூனி!” என்று எபிரெய மொழியில் சத்தமாய் சொன்னாள். ரபூனி என்றால், “போதகரே” என்று அர்த்தம்.

அப்பொழுது இயேசு அவளிடம், “நீ என்னைப் பற்றிக்கொள்ளாதே. ஏனெனில் நான் இன்னும் என் பிதாவினிடத்திற்குத் திரும்பிப் போகவில்லை. நீயோ என் சகோதரரிடம் போய் அவர்களிடம், ‘நான் என் பிதாவினிடத்திற்கும், உங்கள் பிதாவினிடத்திற்கும், என் இறைவனிடத்திற்கும், உங்கள் இறைவனிடத்திற்கும் திரும்பிப் போகிறேன்’ என்று சொல்” என்றார். யோவா 16:28எபே 4:8-101 பேது 1:3கலா 4:6-7யோவா 17:11எபே 1:17-23கலா 3:26எபி 2:11-13

மகதலேனா மரியாள் சீடர்களிடம் போய், “நான் கர்த்தரைக் கண்டேன்!” என்று அறிவித்தாள், அவள், கர்த்தர் தனக்குக் கூறிய காரியங்களையும் அவர்களுக்குச் சொன்னாள். லூக் 24:10மத் 28:10லூக் 24:22-23மாற் 16:10-13யோவா 20:1

இயேசு தமது சீடர்களுக்குக் காட்சியளித்தல்

வாரத்தின் முதலாவது நாளாகிய அன்றே மாலைவேளையில், சீடர்கள் ஒன்றாய் கூடியிருக்கையில், யூதருக்குப் பயந்ததினால் கதவுகளைப் பூட்டிக்கொண்டு உள்ளே இருந்தார்கள். இயேசு அங்கே வந்து, அவர்கள் நடுவே நின்று, “உங்களுக்குச் சமாதானம்” என்றார். யோவா 20:26யோவா 14:27யோவா 20:21லூக் 24:36-492 தெச 3:16எபே 2:14யோவா 7:13மாற் 16:14 அவர் இதைச் சொன்னபின்பு, தமது கைகளையும் விலாவையும் அவர்களுக்குக் காண்பித்தார். சீடர்கள் கர்த்தரைக் கண்டபோது பெருமகிழ்ச்சி அடைந்தார்கள். யோவா 16:221 யோவா 1:1யோவா 20:27லூக் 24:39-41யோவா 16:20ஏசா 25:8-9யோவா 19:34மத் 28:8

மீண்டும் இயேசு அவர்களிடம், “உங்களுக்கு சமாதானம் உண்டாயிருக்கட்டும்! பிதா என்னை அனுப்பினதுபோல நானும் உங்களை அனுப்புகிறேன்” என்றார். யோவா 17:18-19மத் 28:18-20யோவா 13:20யோவா 3:17மாற் 16:15-18அப் 1:8லூக் 24:47-49மத் 10:16 இதைச் சொல்லி, இயேசு அவர்கள்மேல் ஊதி, “பரிசுத்த ஆவியானவரை பெற்றுக்கொள்ளுங்கள். யோபு 33:4ஆதி 2:7அப் 2:38யோவா 7:39அப் 19:2அப் 8:15எசேக் 37:9சங் 33:6 நீங்கள் யாருடைய பாவங்களையாவது மன்னித்தால், அவை மன்னிக்கப்படும்; நீங்கள் அவர்களுக்கு மன்னிக்காவிட்டால், அவை மன்னிக்கப்பட மாட்டாது” என்றார். மத் 18:18மத் 16:19அப் 13:38-39மாற் 2:5-10அப் 10:432 கொரி 2:6-10அப் 2:381 தீமோ 1:20

தோமாவுக்குக் காட்சியளித்தல்

இயேசு அங்கே வந்தபோது, பன்னிரண்டு சீடர்களில் ஒருவனான திதிமு என்றழைக்கப்பட்ட தோமா சீடர்களுடன் இருக்கவில்லை. யோவா 11:16எபி 10:25யோவா 6:66-67யோவா 14:5யோவா 21:2மத் 18:20மத் 10:3 எனவே மற்றச் சீடர்கள் அவனிடம், “நாங்கள் கர்த்தரைக் கண்டோம்!” என்றார்கள். யோவா 6:30மாற் 16:11எபி 3:18எபி 3:12சங் 78:321 கொரி 15:5-8அப் 10:40-41அப் 5:30-32

ஆனால், தோமா அவர்களிடம், “அவருடைய கைகளில் ஆணிகள் அடிக்கப்பட்டக் காயத்தை நான் கண்டு, எனது விரலை ஆணி பாய்ந்த காயத்திலும், அவருடைய விலாவிலும் வைத்து பார்த்தாலொழிய நான் அதை விசுவாசிக்கமாட்டேன்” என்றான்.

இது நடந்து எட்டு நாட்களுக்குப்பின் இயேசுவின் சீடர்கள் அந்த வீட்டில் மீண்டும் கூடியிருந்தார்கள். தோமாவும் அவர்களுடனே இருந்தான். கதவுகள் பூட்டப்பட்டிருந்த போதுங்கூட, இயேசு வந்து அவர்கள் நடுவில் நின்று, “உங்களுக்குச் சமாதானம் உண்டாகட்டும்” என்றார். யோவா 20:19ஏசா 54:10ஏசா 26:12யோவா 14:27யோவா 20:21லூக் 9:28மத் 17:1ஏசா 27:5 பின்பு அவர் தோமாவிடம், “இங்கே உனது விரலைப் போட்டு எனது கைகளைப் பார். உனது கையை நீட்டி என் விலாவைத் தொட்டுப்பார். அவிசுவாசியாயிராமல், விசுவாசியாயிரு” என்றார். யோவா 20:25சங் 103:13-141 யோவா 1:1-2யோவா 20:201 தீமோ 1:14-16லூக் 24:40சங் 78:38லூக் 9:41

அப்பொழுது தோமா, “என் ஆண்டவரே, என் இறைவனே!” என்றான். யோவா 1:1ஏசா 9:6ஏசா 7:141 தீமோ 3:16மத் 14:33யோவா 5:23ஏசா 25:9அப் 7:59-60

அதற்கு இயேசு அவனிடம், “நீ என்னைக் கண்டதினால் விசுவாசிக்கிறாய்; என்னைக் காணாதிருந்தும் விசுவாசிக்கிறவர்கள் ஆசீர்வதிக்கப்பட்டவர்கள்” என்றார். 1 பேது 1:82 கொரி 5:7எபி 11:1எபி 11:27லூக் 1:45யோவா 4:48யோவா 20:8எபி 11:39

யோவான் நற்செய்தியின் நோக்கம்

இயேசு தமது சீடருக்கு முன்பாகப் பல அடையாளங்களைச் செய்தார். அவை இந்தப் புத்தகத்தில் எழுதப்படவில்லை. யோவா 21:25ரோம 15:41 யோவா 5:132 தீமோ 3:15-171 கொரி 10:112 பேது 3:1-2யோவா 2:11லூக் 1:3-4 ஆனால் இயேசுவே கிறிஸ்து என்றும், இறைவனின் மகன் என்றும் நீங்கள் விசுவாசிக்கும்படியும், விசுவாசிப்பதால் அவருடைய பெயரில் நீங்கள் வாழ்வைப் பெறும்படியும் இவை எழுதப்பட்டிருக்கின்றன. அப் 10:43யோவா 3:15-161 யோவா 5:11 யோவா 4:151 யோவா 5:20யோவா 3:361 யோவா 5:10-13யோவா 6:40