மீதமுள்ள தேசத்தின் பங்கீடு
பின் இஸ்ரயேல் மக்கள் சீலோ என்னும் இடத்தில் ஒன்றுகூடி அங்கே சபைக் கூடாரத்தை அமைத்தார்கள். அந்த நாடு அவர்களுடைய கட்டுப்பாட்டிற்குள் கொண்டுவரப்பட்டது, யோசு 19:511 சாமு 1:3யோசு 21:2எரே 26:6யோசு 22:91 இராஜா 14:21 இராஜா 2:271 சாமு 1:24 ஆனால் இஸ்ரயேலில் இன்னும் ஏழு கோத்திரங்கள் தங்கள் சொத்துரிமையைப் பெறாமல் இருந்தன.
எனவே யோசுவா இஸ்ரயேலரிடம் கூறியதாவது: “உங்கள் முற்பிதாக்களின் இறைவனாகிய யெகோவா உங்களுக்கு அளித்துள்ள நாட்டை, உங்கள் கைவசமாக்குவதற்கு இன்னும் எவ்வளவு காலத்திற்குத் தாமதிப்பீர்கள்? நீதி 13:4நியாயாதி 18:9நீதி 15:19மத் 20:6நீதி 10:4பிலி 3:13-14செப்ப 3:162 பேது 1:10-11 ஒவ்வொரு கோத்திரத்திலிருந்தும் மூன்றுபேரை நியமியுங்கள். நான் அவர்களை நாட்டைச் சுற்றிப்பார்த்து மதிப்பீடு செய்ய அனுப்புவேன். அவர்கள் ஒவ்வொரு கோத்திரத்திற்கும் கொடுக்கப்படவேண்டிய சொத்துரிமை அளவுப்படி அதை விவரமாய் எழுதிக்கொண்டு என்னிடம் திரும்பி வரவேண்டும். யோசு 18:3யோசு 18:6யோசு 18:9யோசு 3:12யோசு 4:2எண் 1:4எண் 13:2 நீங்கள் தேசத்தை ஏழு பங்குகளாகப் பிரிக்கவேண்டும். யூதா கோத்திரம் தென்பகுதியிலும், யோசேப்பின் குடும்பம் வடபகுதியிலும் தொடர்ந்து குடியிருக்கட்டும். யோசு 15:1-12யோசு 16:1-10யோசு 19:1-9 நாட்டின் ஏழு பிரிவுகளின் விவரங்களையும் எழுதியபின் என்னிடம் கொண்டுவாருங்கள். நான் நமது இறைவனாகிய யெகோவாவுக்கு முன்பாக உங்களுக்காகச் சீட்டுப்போட்டு, உங்கள் பங்கைக் குறிப்பிடுவேன். யோசு 14:2யோசு 18:10அப் 13:19யோசு 18:8எண் 26:54-55எண் 33:54எண் 34:13நீதி 16:33 லேவி கோத்திரத்தார் உங்கள் நாட்டில் உங்கள் மத்தியில் பங்கைப் பெறுவதில்லை. ஏனெனில் யெகோவாவுக்கு ஆசாரியர்களாகப் பணிசெய்வதே அவர்கள் பங்கு. காத், ரூபன், மனாசேயின் பாதிக் கோத்திரம் ஏற்கனவே யோர்தானின் கிழக்குப் பகுதியில் தங்கள் சொத்துரிமையைப் பெற்றிருந்தார்கள். அதை யெகோவாவின் அடியவனாகிய மோசே கொடுத்திருந்தான்.” யோசு 13:33எண் 18:20யோசு 13:8-31உபா 10:9உபா 18:1-2உபா 3:12-17எண் 18:23எண் 32:29-41
நாட்டை அளந்து பார்த்துப் பங்கிட அவர்கள் புறப்பட்டபோது யோசுவா அவர்களிடம், “நாட்டைச் சுற்றிப்பார்த்து அதன் விவரத்தை எழுதிக்கொண்டு என்னிடம் திரும்பிவாருங்கள். நான் சீலோவிலே யெகோவாவின் முன்னிலையில் உங்களுக்காக சீட்டுப்போடுவேன்” என்று அறிவுறுத்தினான். அப் 1:24-26யோசு 18:10ரோம 14:191 சாமு 14:41ஆதி 13:17யோசு 13:7யோசு 14:1-2யோசு 15:1 உடனே அவர்கள் புறப்பட்டு நாட்டின் வழியாகச் சென்றார்கள். அவர்கள் நாட்டின் விவரங்களைப் பட்டணம் பட்டணமாக ஏழு பகுதிகளாகப் பிரித்து, ஒரு புத்தகச்சுருளில் எழுதி சீலோவில் கூடாரத்தில் இருந்த யோசுவாவிடம் கொண்டுவந்தார்கள். அப் 13:19
அப்பொழுது யோசுவா, சீலோவில் யெகோவாவின் முன்னிலையில் அவர்களுக்கு சீட்டுப்போட்டு, இஸ்ரயேலரின் கோத்திரப் பிரிவுகளின்படி அவர்களுக்குரிய நிலத்தை பிரித்துக்கொடுத்தான். கொலோ 1:12அப் 13:19யோசு 18:6அப் 26:18எசேக் 47:22எசேக் 48:29யோவா 17:2யோசு 18:8
பென்யமீனின் பங்கு
வம்சம் வம்சமாக பென்யமீன் கோத்திரத்திற்கு முதலாவது சீட்டு விழுந்தது. அவர்களுக்குக் கொடுக்கப்பட்ட நிலப்பரப்பின் பங்கு யூதா, யோசேப்பு கோத்திரங்களுக்குக் கொடுக்கப்பட்ட நிலங்களுக்கு இடையில் இருந்தது. உபா 10:1-22உபா 13:12யோசு 15:1-8யோசு 16:1-10
அவர்களுடைய வடக்கு எல்லை யோர்தான் நதியில் ஆரம்பித்து, எரிகோவின் வடமலைச் சாரலைக் கடந்து, மேற்கே உள்ள மலைநாட்டிற்குச் சென்று, பெத் ஆவென் பாலைவனத்தை வந்து சேர்ந்தது. யோசு 16:1யோசு 7:2ஓசி 10:5ஓசி 4:15ஓசி 5:8யோசு 2:1யோசு 3:16யோசு 6:1 அங்கிருந்து பெத்தேல் என்னும் லூஸின் தெற்கு மலைச்சரிவைக் கடந்து, பின்னர் கீழ் பெத் ஓரோனின் தெற்கே மலையில் அமைந்துள்ள அதரோத் ஆதாருக்குச் சென்றது. ஆதி 28:19யோசு 16:2-3நியாயாதி 1:22-26யோசு 10:11யோசு 16:5யோசு 21:22
அந்த எல்லையானது தெற்கே பெத் ஓரோனை நோக்கியுள்ள குன்றிலிருந்து, மேற்குப்புறமாகத் தெற்கே திரும்பி, யூதாவின் நகரமான கீரியாத்யாரீம் அதாவது கீரியாத் பாகாலில் முடிவடைந்தது. இதுவே பென்யமீனின் மேற்கு எல்லை. யோசு 15:91 நாளாக 13:5-61 சாமு 7:1-22 சாமு 6:2யோசு 15:60
தெற்கு எல்லையானது கீரியாத்யாரீம் நகர்ப்புறத்தில் ஆரம்பித்து, மேற்கே சென்று நெப்தோவின் நீர் நிலையருகில் முடிவடைந்தது. யோசு 15:9 மேலும் இவ்வெல்லை ரெப்பா பள்ளத்தாக்கின் வடக்கே உள்ள, பென் இன்னோம் பள்ளத்தாக்கிற்கு எதிரே உள்ள மலையடிவாரத்தை அடைந்தது. அங்கிருந்து கின்னோம் பள்ளத்தாக்கின் வழியாக எபூசியரின் நகர் அமைந்த மலைச்சாரலின் தென்புற வழியேசென்று, என்ரொகேலை அடைந்தது. 2இராஜா 23:10யோசு 15:7-8ஏசா 30:331 நாளாக 14:91 இராஜா 1:92 நாளாக 28:32 நாளாக 33:62 சாமு 17:17 அங்கிருந்து எல்லையானது வடக்கே வளைந்து, என்சேமேசுக்குத் திரும்பி அதும்மீம் ஏற்றத்தின் எதிரே உள்ள கெலிலோத்தை அடைந்து, “போகனின் கல்” என்னும் இடத்திற்குச்சென்றது. போகன் ரூபனின் மகன். யோசு 15:6 அது தொடர்ந்து பெத் அரபாவின் வடக்கு மலைச்சரிவுக்குச்சென்று, கீழே அரபாவை நோக்கிச்சென்றது. யோசு 15:6யோசு 15:61 பின்னர் பெத் ஓக்லாவின் வடக்கே மலைச்சரிவிலே சென்று, சவக்கடலின் வளைகுடாக்கடலில் முடிவடைந்தது. உப்புக்கடல் தெற்கே யோர்தான் நதியின் முகத்துவாரத்தில் இருந்தது. இது பென்யமீனின் தெற்கு எல்லை. ஆதி 14:3யோசு 15:2உபா 3:17ஆதி 19:25ஏசா 11:15யோசு 12:3யோசு 3:16எண் 34:3
அவர்களுடைய கிழக்கு எல்லையாக யோர்தான் நதி அமைந்தது.
இவைகளே பென்யமீன் குடும்பங்களுக்குரிய சொத்துரிமையாய் கொடுக்கப்பட்ட நிலங்களின் எல்லை.
வம்சம் வம்சமாக பென்யமீன் கோத்திரத்திற்கு கொடுக்கப்பட்ட பட்டணங்களாவன: யோசு 18:12யோசு 15:6யோசு 18:19யோசு 2:1யோசு 6:1லூக் 10:30லூக் 19:1
எரிகோ, பெத் ஓக்லா, எமேக் கேசீஸ், பெத் அரபா, செமராயீம், பெத்தேல், 1 இராஜா 12:29-322 நாளாக 13:4ஆதி 10:18யோசு 15:6யோசு 18:18 ஆவீம், பாரா, ஒப்ரா 1 சாமு 13:17 கேம்பார் அம்மோனி, ஒப்னி, கேபா, ஆகிய பன்னிரண்டு நகரங்களும் அவற்றின் கிராமங்களும் ஆகும். எஸ்றா 2:26ஏசா 10:29யோசு 21:17நெகே 7:30
கிபியோன், ராமா, பேரோத், யோசு 9:171 இராஜா 3:4-51 இராஜா 9:21 சாமு 1:1ஏசா 28:21எரே 31:15யோசு 10:2யோசு 15:34 மிஸ்பா, கெபிரா, மோத்சா, எஸ்றா 2:25நியாயாதி 10:17யோசு 9:17 ரெக்கேம், இர்பெயேல், தாராலா, சேலா, ஏலேப், எபூசியப் பட்டணம் அதாவது எருசலேம், கிபியா, கீரியாத் ஆகிய பதினான்கு பட்டணங்களும் அவற்றின் கிராமங்களும் ஆகும். 2 சாமு 21:14யோசு 15:81 சாமு 10:261 சாமு 13:15-162 சாமு 5:8ஓசி 10:9ஏசா 10:29நியாயாதி 19:12-15
இவையே பென்யமீன் கோத்திர வம்சங்களுக்குக் கொடுக்கப்பட்ட சொத்துரிமை.