சகரியா 14

Zechariah 14

யெகோவாவின் வருகையும் ஆட்சியும்

எருசலேமே, யெகோவாவின் நாள் ஒன்று வருகிறது, அப்பொழுது உங்கள் பகைவர்கள் உங்களைக் கொள்ளையிட்டு, பொருட்களை உங்கள் முன்னிலையிலேயே பங்கிட்டுக் கொள்வார்கள். ஏசா 13:9வெளி 16:14ஏசா 2:12அப் 2:20ஏசா 13:6மல்கி 4:1யோவே 2:31யோவே 3:14

யெகோவாவே எருசலேமுக்கு எதிராகப் போரிடும்படி எல்லா நாடுகளையும் ஒன்றுதிரட்டுவார்; அந்த நகரம் கைப்பற்றப்படும், வீடுகள் கொள்ளையிடப்படும், பெண்கள் கற்பழிக்கப்படுவார்கள். நகர மக்களில் அரைப்பகுதியினர் நாடுகடத்தப்படுவார்கள், ஆனால் மீதியான மக்களோ நகரத்தைவிட்டு வெளியேற்றப்பட மாட்டார்கள். லூக் 21:20-24ஏசா 13:16ரோம 9:27-29மத் 24:19-22மாற் 13:14மத் 24:15-16கலா 4:26-27ஏசா 65:6-9 அப்பொழுது யெகோவா வெளியே போய் யுத்தநாளில் சண்டையிடுவதைப்போல் அந்த நாடுகளுக்கு விரோதமாக சண்டையிடுவார். சகரி 12:9யோவே 3:9-17சகரி 2:8-9செப்ப 3:192 நாளாக 20:15தானி 2:44-45யாத் 15:1-6யோவே 3:2 அந்த நாளில் அவருடைய கால்கள் எருசலேமுக்குக் கிழக்கேயுள்ள ஒலிவமலையின்மேல் நிற்கும். அப்பொழுது ஒலிவமலையானது கிழக்கு மேற்கு என இரண்டாகப் பிளக்கப்படும். ஒரு பெரும் பள்ளத்தாக்கு உண்டாகி அம்மலையின் அரைப்பங்கு வடக்குப் புறமாகவும், மற்ற அரைப்பங்கு தெற்குப் புறமாகவும் பிரிந்து விலகும். மீகா 1:3-4எசேக் 11:23அப் 1:11-12யோவே 3:12-14சகரி 14:10சகரி 14:7ஏசா 64:1-2நாகூ 1:5-6 நீங்களோ என் மலையின் பள்ளத்தாக்கின் வழியாகத் தப்பி ஓடிப்போவீர்கள். ஏனெனில் அந்தப் பள்ளத்தாக்கு ஆத்சால்வரை நீண்டிருக்கும். நீங்களோ யூதாவின் அரசனான உசியாவின் நாட்களில் உண்டான பூமியதிர்ச்சிக்குத் தப்பியோடியதைப்போல ஓடிப்போவீர்கள். அப்பொழுது என் இறைவனாகிய யெகோவா வருவார். அவருடன் பரிசுத்தர்கள் அனைவரும் வருவார்கள். யூதா 1:14-15ஆமோ 1:1மத் 25:31மத் 16:271 தெச 3:132 தெச 1:7-10உபா 33:2ஏசா 29:6

அந்த நாளில் வெளிச்சமோ, குளிரோ, உறைபனியோ இராது. யோவா 12:46சங் 112:4சங் 97:10-112 பேது 1:19ஏசா 60:1-3நீதி 4:18-19வெளி 11:15கொலோ 1:12 அந்த நாள் பகலுமின்றி, இரவுமின்றி ஒரு நிகரற்ற நாளாயிருக்கும். அது யெகோவாவினால் அறியப்பட்ட ஒரு நாள். ஆனால் மாலைப் பொழுதிலும் வெளிச்சம் திரும்பிவரும். வெளி 22:51 தெச 5:2தானி 12:4ஏசா 30:26வெளி 21:23அப் 1:7அப் 15:18அப் 17:31

அந்த நாளில் வாழ்வளிக்கும் தண்ணீர் எருசலேமிலிருந்து பாயும். அதன் அரைப்பங்கு கிழக்கே சவக்கடலுக்கும், அரைப்பங்கு மேற்கே மத்திய தரைக்கடலுக்கும் ஓடும். குளிர் காலத்திலும், கோடைகாலத்திலும் இவ்வாறே இருக்கும். வெளி 22:1-2யோவா 7:38யோவா 4:14யோவா 4:10வெளி 7:16-17யோவே 3:18ஏசா 49:10எசேக் 47:1-12

யெகோவாவே பூமி முழுவதற்கும் அரசனாயிருப்பார். அந்நாளில் ஒரே யெகோவா இருப்பார், அவருடைய பெயர் ஒரே பெயராயிருக்கும். எபே 4:5-6வெளி 11:15தானி 7:27உபா 6:4ஏசா 2:2-4செப்ப 3:9தானி 2:44-45ஏசா 45:22-25

கேபா முதல் எருசலேமுக்குத் தெற்கேயுள்ள ரிம்மோன்வரை இருக்கும் நிலமெல்லாம் அரபா சமபூமியைப் போலாகும். எருசலேமோ, பென்யமீன் வாசல் தொடங்கி முதலாம் வாசல் வழியாக, மேலும் மூலைவாசல் வரையிலும், அனானயேல் கோபுரத்திலிருந்து, அரசனின் திராட்சை ஆலைவரையிலும் உயர்த்தப்பட்டு, தன் இடத்தில் நிலைநிற்கும். யோசு 15:32சகரி 12:61 இராஜா 15:22எரே 30:18எரே 37:13நியாயாதி 20:45நியாயாதி 20:47எரே 38:7 எருசலேம் குடியேற்றப்படும்; எருசலேம் இனி ஒருபோதும் அழிக்கப்படமாட்டாது. அது பாதுகாப்பாயிருக்கும். வெளி 22:3ஆமோ 9:15எரே 23:5-6வெளி 21:4சகரி 8:8எசேக் 34:22-29எசேக் 37:26ஏசா 26:1

எருசலேமுக்கு எதிராகப் போரிட்ட மக்கள் கூட்டங்கள் அனைவரையும் யெகோவா தாக்குவார். யெகோவாவினால் கொள்ளைநோய் கொண்டுவரப்படும்: அவர்கள் காலூன்றி நிற்கையிலேயே அவர்களின் உடலிலிருந்து தசை அழுகிப்போகும். அவர்கள் கண்கள் அதினதின் குழியிலேயே அழுகிப்போகும். அவர்கள் நாவுகளும் அவர்களின் வாய்க்குள்ளேயே அழுகிவிடும். எசேக் 39:17-20ஏசா 66:15-16மீகா 4:11-13எசேக் 38:18-22மீகா 7:16-17சங் 110:5-6சங் 90:11சகரி 12:9 அந்த நாளில் மனிதர் யெகோவாவிடமிருந்து வரும் பெரும் திகிலினால் சூழப்படுவார்கள். ஒவ்வொருவனும் மற்றொருவனின் கையைப் பற்றிப்பிடிப்பான்; அவர்கள் ஒருவரையொருவர் தாக்குவார்கள். எசேக் 38:21நியாயாதி 7:22சகரி 12:41 சாமு 14:15-232 நாளாக 20:22-24வெளி 17:12-17சகரி 11:6 யூதாவும் எருசலேமில் சண்டையிடும். சுற்றுப்புறங்களிலுள்ள நாடுகளின் செல்வங்களான தங்கமும், வெள்ளியும், உடைகளும் பெருந்திரளாய்ச் சேர்க்கப்படும். ஏசா 23:18சகரி 12:22 நாளாக 14:13-152இராஜா 7:6-18சகரி 10:4-5சகரி 12:5-72 நாளாக 20:25-27எசேக் 39:17-20 அதேபோன்ற ஒரு கொள்ளைநோய் அவர்களின் முகாம்களிலுள்ள குதிரைகள், கோவேறு கழுதைகள், ஒட்டகங்கள், கழுதைகள் மற்றும் அங்குள்ள மிருகங்கள் எல்லாவற்றையும் தாக்கும். சகரி 14:12

ஆனால் அப்பொழுது எருசலேமைத் தாக்கிய, எல்லா நாடுகளிலும் சிலர் தப்பிப் பிழைத்திருப்பார்கள். அவர்கள் எல்லோரும், வருடந்தோறும் சேனைகளின் யெகோவாவாகிய அரசரை வழிபடவும், கூடாரப்பண்டிகையைக் கொண்டாடவும் எருசலேமுக்குப் போவார்கள். ஏசா 66:23சகரி 14:17-19ஏசா 66:18-21சகரி 8:20-23ஏசா 60:6-9உபா 31:10-13யோவா 1:49யோவா 7:37-39 பூமியிலுள்ள மக்கள் கூட்டங்களில் யாராவது சேனைகளின் யெகோவாவாகிய அரசரை ஆராதிக்க எருசலேமுக்குப் போகாதிருந்தால், அவர்களுடைய இடங்களில் மழை பெய்யாது. ஆமோ 4:7-8ஏசா 60:12எரே 14:4யாக் 5:17வெளி 11:6உபா 11:17ஆதி 12:31 இராஜா 17:1 எகிப்து நாட்டு மக்களும் போய் அதில் பங்கெடுக்காவிட்டால், அங்கும் மழை பெய்யாது. கூடாரப்பண்டிகையைக் கொண்டாடப் போகாத நாடுகளையும் யெகோவா அதே கொள்ளைநோயால் வாதிப்பார். உபா 11:10-11சகரி 14:12சகரி 14:15 இதுவே எகிப்தியருக்கு வரும் தண்டனை. கூடாரப்பண்டிகையைக் கொண்டாடப் போகாத எல்லா நாடுகளுக்கும் கொடுக்கப்படும் தண்டனையும் இதுவே. யோவா 3:19

அந்த நாளில் குதிரைகளின் மணிகளில், “யெகோவாவுக்குப் பரிசுத்தம்” என்று பொறிக்கப்பட்டிருக்கும். ஆலயத்திலுள்ள சமையல் பானைகளும், பலிபீடத்திற்கு முன்பாக உள்ள தூய்மையான கிண்ணங்களைப்போல் இருக்கும். 1 கொரி 3:16-17யாத் 39:301 பேது 2:5ஏசா 23:18லேவி 8:9யாத் 28:33-36யாத் 37:16லேவி 6:28 அப்பொழுது எருசலேமிலும், யூதாவிலும் உள்ள ஒவ்வொரு பானையும், சேனைகளின் கர்த்தருக்கு என்று தூய்மையாக்கப்பட்டதாக இருக்கும்; அங்கு பலியிட வருகிற யாவரும் அப்பானைகளில் சிலவற்றை எடுத்து அவைகளில் சமைப்பார்கள்; அந்த நாளில் சேனைகளின் யெகோவாவின் ஆலயத்தில், இனி ஒருபோதும் கானானியன் இருப்பதில்லை. எசேக் 44:91 கொரி 10:31யோவே 3:17ரோம 14:6-7மாற் 11:15-17வெளி 22:15எபே 2:19-22யோவா 2:15-16