அப்போஸ்தலரின் உரிமைகள்
நான் ஒரு சுதந்திரமுடைய மனிதன் அல்லவா? நான் ஒரு அப்போஸ்தலன் அல்லவா? நம்முடைய கர்த்தராகிய இயேசுவை நான் காணவில்லையா? நான் கர்த்தரில் செய்த ஊழியத்தின் கிரியையாய் நீங்கள் இருக்கிறீர்கள் அல்லவோ? அப் 9:171 கொரி 3:61 கொரி 9:191 தீமோ 2:7அப் 23:11அப் 9:32 தீமோ 1:11கலா 1:15-17 நான் மற்றவர்களுக்கு ஒருவேளை அப்போஸ்தலனாய் இல்லாதிருக்கலாம். ஆனால் நிச்சயமாக, உங்களுக்கு, நான் அப்போஸ்தலன்தான்; ஏனெனில், கர்த்தரில் என் அப்போஸ்தல ஊழியத்திற்கு நீங்களே அடையாளமாய் இருக்கிறீர்கள். 2 கொரி 12:122 கொரி 3:1-3யோவா 6:27
என்மேல் நியாயந்தீர்க்கிறவர்களுக்கு, நான் கொடுக்கும் பதில் இதுவே. 1 கொரி 14:372 கொரி 10:7-82 கொரி 12:16-192 கொரி 13:102 கொரி 13:32 கொரி 13:52 தீமோ 4:16அப் 22:1 உணவையும் பானத்தையும் உங்களிடமிருந்து பெற்றுக்கொள்ளும் உரிமை எங்களுக்கு இல்லையோ? 1 தெச 2:62 தெச 3:8-9லூக் 10:71 கொரி 9:7-141 தெச 2:9கலா 6:6மத் 10:101 தீமோ 5:17-18 மற்ற அப்போஸ்தலர்களும், கர்த்தருடைய சகோதரர்களும், கேபாவும் அவனவன் விசுவாசியான தன்தன் மனைவியைக் கூட்டிக் கொண்டுபோகிறதுபோல், நாங்களும் செய்வதற்கு எங்களுக்கும் உரிமை இல்லையோ? யோவா 1:421 கொரி 7:391 கொரி 7:7அப் 1:14கலா 1:19எபி 13:4மத் 8:141 கொரி 1:12 அல்லது வாழ்க்கைச் செலவுக்காக நானும் பர்னபாவும் மட்டும்தான் வேலைசெய்ய வேண்டுமோ? 2 தெச 3:7-9அப் 13:1-21 தெச 2:9அப் 18:3அப் 4:361 கொரி 4:11-12அப் 11:22அப் 14:12
எவன் தன் செலவுக்கான பணத்தைத் தானே செலுத்தி படைவீரனாய்ப் பணிபுரிவான்? எவன் திராட்சைத் தோட்டத்தை உண்டாக்கி அதன் பழங்களைச் சாப்பிடாதிருப்பான்? எவன் மந்தையை மேய்த்து அதன் பாலைக் குடியாதிருப்பான்? நீதி 27:18உபா 20:62 தீமோ 2:3-41 கொரி 3:6-81 தீமோ 1:18அப் 20:28எரே 23:2-3நீதி 27:27 இதை மனித வழக்கத்தின்படி மட்டும் சொல்கிறேனோ? மோசேயின் சட்டமும் இதைச் சொல்லவில்லையா? 1 கொரி 14:341 கொரி 7:401 தெச 2:131 தெச 4:8ஏசா 8:20ரோம 3:31ரோம 6:19 “தானியக்கதிரை போரடிக்கும் எருதின் வாயைக் கட்டவேண்டாம்” 1 என்று மோசேயின் சட்டத்தில் எழுதப்பட்டிருக்கிறதே. இவைகளை மாடுகளைக்குறித்தா, இறைவன் கவலைப்படுகிறார்? உபா 25:41 தீமோ 5:18சங் 104:27யோனா 4:11சங் 145:15-16உபா 22:1-4உபா 5:14லூக் 12:24-28 நிச்சயமாக இதை அவர் நமக்காகத்தான் சொல்லியிருக்கிறார். ஆம், அது நமக்காகவே எழுதப்பட்டிருக்கிறது. ஏனெனில் உழுகிறவனும், போரடிக்கிறவனும் விளைச்சலில் தங்களுக்குரிய பங்கைப் பெற்றுக்கொள்வோம் என்ற எதிர்பார்ப்பில்தானே தங்கள் வேலையைச் செய்யவேண்டும். 2 தீமோ 2:6ரோம 15:4ரோம 4:23-241 கொரி 3:92 கொரி 4:15யோவா 4:35-38லூக் 17:7-8மத் 24:22 நாங்கள் உங்கள் மத்தியில் ஆவிக்குரிய விதையை விதைத்தோமே. அப்படியிருக்க, உங்களிடமிருந்து எங்களுக்குத் தேவையானவற்றை அறுவடை செய்வது நியாயமற்றதோ? ரோம 15:27கலா 6:62 கொரி 11:15மத் 10:102இராஜா 5:13மல்கி 3:8-9 உங்களிடத்திலிருந்து உதவியைப் பெற்றுக்கொள்ள மற்றவர்களுக்கு உரிமை இருக்குமாயின், எங்களுக்கு இன்னும் அதிகமான உரிமை இருக்காதோ? 1 கொரி 9:151 கொரி 9:182 கொரி 11:121 தெச 2:6-92 கொரி 11:7-101 கொரி 9:21 கொரி 4:11-121 கொரி 4:14-15
அப்படியிருந்தும், இந்த உரிமையை நாங்கள் உபயோகிக்கவில்லை. மாறாக நாங்கள் கிறிஸ்துவின் நற்செய்திக்குத் தடை ஏற்படாதவாறு, எல்லாவற்றையும் சகித்துக்கொள்கிறோம்.
ஆலயத்தில் ஊழியம் செய்கிறவர்கள் ஆலயத்திலிருந்தே தங்கள் உணவைப் பெறுகிறார்கள் என்பதையும், பலிபீடத்தில் பணிசெய்கிறவர்கள் பலியிடப்படும் காணிக்கைகளில் ஒரு பங்கைப் பெறுகிறார்கள் என்பதையும் நீங்கள் அறியாதிருக்கிறீர்களா? லேவி 6:26எண் 18:8-20எண் 5:9-101 கொரி 10:181 சாமு 2:28உபா 18:1-5உபா 10:9லேவி 6:16-18 அப்படியே நற்செய்தியைப் பிரசங்கிக்கிறவர்கள் நற்செய்தி ஊழியத்திலிருந்தே தங்கள் வாழ்க்கைக்குரிய தேவைகளைப் பெற்றுக்கொள்ள வேண்டுமென்று, கர்த்தர் கட்டளையிட்டிருக்கிறார். மத் 10:101 தீமோ 5:17-181 கொரி 9:4கலா 6:6லூக் 10:7
ஆனாலும் இந்த உரிமை எதையும் நான் அனுபவிக்கவில்லை. மேலும், அத்தகைய காரியங்களை நீங்கள் எனக்குச் செய்வீர்கள் என்ற எதிர்பார்ப்பிலும் நான் இதை எழுதவில்லை. இப்பொழுது எனக்கிருக்கும் இத்தகைய எனது பெருமித உணர்வை ஒருவன் அவத்தமாக்குகிறதைப் பார்க்கிலும், நான் சாவதே நலமாயிருக்கும். 1 தெச 2:92 தெச 3:81 கொரி 9:122 கொரி 11:9-12அப் 18:3அப் 20:24அப் 20:341 கொரி 4:12 எனினும் நற்செய்தியைப் பிரசங்கிக்கும்பொழுது நான் பெருமைப்பட ஒன்றுமில்லை. ஏனெனில், நான் பிரசங்கிக்கவேண்டிய கட்டாயத்தில் இருக்கிறேன். நற்செய்தியை நான் பிரசங்கிக்காவிட்டால், எனக்கு ஐயோ, கேடு வரும். ரோம 1:14எரே 20:9கொலோ 4:17லூக் 9:62அப் 26:16-20அப் 4:20ஆமோ 3:8அப் 9:15 நான் பிரசங்கிப்பதை ஒரு தொண்டாக செய்வேனாயின், எனக்கு அதற்கான வெகுமதி உண்டு; மனவிருப்பம் இன்றி நான் இதைச் செய்தாலும், எனக்கு ஒப்புவிக்கப்பட்ட பொறுப்பையே செய்து முடிக்கிறேன். கலா 2:71 கொரி 3:81 நாளாக 28:9கொலோ 1:25மத் 10:411 நாளாக 29:51 நாளாக 29:91 கொரி 3:14 அப்படியானால், எனக்குக் கிடைக்கும் வெகுமதி என்ன? நான் எனக்குரிய உரிமைகளை பெற்றுக்கொள்ளாமலும், எவரிடமிருந்தும் எதையும் எதிர்பாராமலும், நற்செய்தியை இலவசமாக பிரசங்கிப்பதில் கிடைக்கும் மனத்திருப்தியே எனக்குரிய வெகுமதி. 2 கொரி 11:7-91 கொரி 10:331 கொரி 8:91 தெச 2:62 தெச 3:8-92 கொரி 12:13-181 கொரி 7:311 கொரி 9:6-7
பவுலுக்கு தன் சுதந்திரத்தின் பயன்
நான் சுதந்திரமான மனிதன். எந்த ஒரு மனிதனுக்கும் என்மேல் உரிமையில்லாதிருந்தும், அநேகரை கிறிஸ்துவுக்குள்ளாக ஆதாயப்படுத்திக்கொள்ள, எல்லோருக்கும் என்னை அடிமையாக்கிக்கொள்கிறேன். கலா 5:13மத் 18:151 கொரி 10:33யாக் 5:19-201 தீமோ 4:16மத் 20:26-281 கொரி 9:20-222 தீமோ 2:10 யூதர்களை ஆதாயப்படுத்திக்கொள்ள, நான் யூதருக்கு யூதனைப் போலானேன். மோசேயின் சட்டத்திற்குக் கீழ்ப்பட்டவர்களுக்கு, நானும் மோசேயின் சட்டத்திற்குக் கீழ்ப்பட்டவனைப் போலானேன். அவ்வாறே, நான் மோசேயின் சட்டத்திற்குக் கீழ்ப்படாதவர்களை ஆதாயப்படுத்திக்கொள்ள, மோசேயின் சட்டத்திற்குக் கீழ்ப்படாதவனைப் போலானேன். அப் 16:3கலா 5:18அப் 21:20-26அப் 17:2-3அப் 18:18கலா 4:21கலா 4:5ரோம 11:14 மோசேயின் சட்டம் இல்லாதவர்களை ஆதாயப்படுத்திக்கொள்ள, நானும் மோசேயின் சட்டம் இல்லாதவன் போலானேன். ஆனால் நான் இறைவனுடைய சட்டத்திற்கு உட்படாதவனல்ல, நான் கிறிஸ்துவின் சட்டத்துக்குக் கீழ்ப்பட்டவன். ரோம 2:12கலா 3:2ரோம 2:141 கொரி 7:19-22மத் 5:17-20கலா 5:13-14தீத் 2:2-121 தெச 4:1-2 பலவீனரை ஆதாயப்படுத்திக்கொள்ள, நான் பலவீனருக்கு பலவீனனானேன். எப்படியாவது சிலரையாவது இரட்சிப்புக்குள் வழிநடத்தும்படி, நான் எல்லோருக்கும் எல்லாமானேன். 1 கொரி 10:33ரோம 15:11 கொரி 9:19ரோம 11:14கலா 6:11 கொரி 8:131 கொரி 7:162 கொரி 11:29 நற்செய்தியின் ஆசீர்வாதங்களில் நான் பங்கு பெறும்படியாகவே நற்செய்தியின் நிமித்தமே இவை எல்லாவற்றையும் நான் செய்கிறேன். 2 தீமோ 2:101 கொரி 9:25-27மாற் 8:351 யோவா 1:3கலா 2:5எபி 3:142 கொரி 2:41 கொரி 9:12
சுயஒழுக்கம் அவசியம்
ஓட்டப் பந்தயத்தில் எல்லோரும் ஓடுகிறார்கள். ஆனால் ஒருவனே பரிசைப் பெறுவான். இது உங்களுக்குத் தெரியாதா? பரிசைப் பெற்றுக்கொள்ளத்தக்க விதத்திலே ஓடுங்கள். பிலி 3:14எபி 12:12 தீமோ 4:7-8வெளி 3:11பிலி 2:161 கொரி 9:26கலா 5:7எரே 12:5 விளையாட்டுக்களில் பங்குபெறும் ஒவ்வொருவரும், கடுமையான சுயக்கட்டுப்பாடு பயிற்சியில் ஈடுபடுகிறார்கள். அவர்கள் அழிந்துபோகும் ஒரு கிரீடத்தைப் பெறுவதற்காகவே அவ்வாறு செய்கிறார்கள்; ஆனால் நாமோ, அழியாத ஒரு கிரீடத்தைப் பெறுவதற்காக அப்படிச் செய்கிறோம். 2 தீமோ 2:5வெளி 2:101 தீமோ 6:122 தீமோ 4:7-8யாக் 1:12வெளி 3:112 பேது 1:61 பேது 1:4 ஆதலால், நான் குறிக்கோள் இல்லாமல் ஓடும் மனிதனைப்போல ஓடமாட்டேன்; நான் காற்றில் குத்துகிற மனிதனைப்போல, குத்துச் சண்டையிடமாட்டேன். 2 பேது 1:102 தீமோ 2:5பிலி 1:21கொலோ 1:292 தீமோ 1:12லூக் 13:241 பேது 5:1எபே 6:12 நான் என் உடலை அடக்கி, எனக்கு அடிமையாக்கிக்கொள்கிறேன். ஏனெனில் நான் மற்றவர்களுக்குப் பிரசங்கித்தபின், அதன் பரிசுக்குத் தகுதியில்லாதவனாய் விழுந்துபோகாதபடி இப்படிச் செய்கிறேன். ரோம 8:131 கொரி 9:25கொலோ 3:52 கொரி 13:5-61 பேது 2:111 கொரி 6:12-132 கொரி 6:4-51 கொரி 8:13