புதுப்பிக்கப்பட்ட வேண்டுதல்
ஆகையால் என் மகனே, நீ கிறிஸ்து இயேசுவில் இருக்கும் கிருபையிலே பெலன்கொள். 2 கொரி 12:9-102 தீமோ 1:7எபே 6:10பிலி 4:131 கொரி 16:13ஆகா 2:42 பேது 3:181 தீமோ 1:18 அநேக சாட்சிகளுக்கு முன்னால் நான் போதித்தவற்றை நீ கேட்டறிந்தாய். இவற்றை மற்றவர்களுக்குக் போதிக்கத் திறமையுள்ளவர்களான நம்பத்தகுந்த மனிதரிடம் ஒப்புவி. 2 தீமோ 1:13-141 தீமோ 4:61 தீமோ 6:12மல்கி 2:7தீத் 1:5-92 தீமோ 3:10எஸ்றா 7:25எரே 23:28 கிறிஸ்து இயேசுவின் நல்ல போர்வீரனைப்போல், என்னுடனேகூட துன்பங்களைத் தாங்கிக்கொள். எபி 12:2-3யாக் 1:122 தீமோ 4:52 தீமோ 1:8எபே 6:11-182 கொரி 10:3-5எபி 10:322 தீமோ 2:10 போர்வீரனாக பணிசெய்யும் யாரும், பொது வாழ்க்கை விவகாரங்களில் ஈடுபடமாட்டான். அவன் தனது அதிகாரியையே பிரியப்படுத்த விரும்புகிறான். 1 தெச 2:4லூக் 8:142 பேது 2:201 கொரி 7:22-231 கொரி 9:25-26லூக் 9:59-622 கொரி 5:92 தீமோ 4:10 அதேபோல் யாரும், விளையாட்டு வீரனாக போட்டியில் ஈடுபடும்போது, அவன் ஒழுங்குமுறையின்படி விளையாடாவிட்டால், வெற்றி வீரனுக்குரிய கிரீடத்தைப் பெற்றுக்கொள்ளமாட்டான். 1 கொரி 9:24-27வெளி 3:112 தீமோ 4:7-8கொலோ 1:29யாக் 1:12லூக் 13:24எபி 2:7பிலி 1:15 கஷ்டப்பட்டு வேலைசெய்யும் விவசாயியே விளைச்சலின் பங்கை முதலில் பெறவேண்டும். எபி 10:361 கொரி 9:7-111 கொரி 3:6-91 கொரி 9:23யோவா 4:35-38லூக் 10:2ஏசா 28:24-26மத் 20:1 நான் சொல்வதைச் சிந்தித்துப்பார் ஏனெனில் இவை எல்லாவற்றிலும் கர்த்தர் உனக்கு நுண்ணறிவைத் தருவாராக. யாக் 1:51 யோவா 5:20ஆதி 41:38-39லூக் 24:45எபே 1:17-18யோவா 14:26நீதி 2:3-61 தீமோ 4:15
இயேசுகிறிஸ்துவை நினைவிற்கொள். அவர் மரித்தோரிலிருந்து உயிருடன் எழுப்பப்பட்டார். அவர் தாவீதின் சந்ததியில் வந்தவர். இதுவே எனது நற்செய்தி. அப் 2:24ரோம 2:161 கொரி 15:11-202 தெச 2:14மத் 1:11 கொரி 15:41 தீமோ 2:7எபி 12:2-3 இதற்காகவே நான் குற்றவாளியைப்போல் விலங்கிடப்படும் அளவுக்கு துன்பப்படுகிறேன். ஆனால் இறைவனின் வார்த்தையோ விலங்கிடப்படவில்லை. அப் 28:312 தீமோ 1:8பிலி 1:7எபே 6:19-20கொலோ 4:32 தீமோ 4:171 பேது 2:12அப் 9:16 ஆகையால் தெரிந்துகொள்ளப்பட்டவர்களுக்காக, நான் எல்லாவற்றையும் சகிக்கிறேன். அவர்கள் கிறிஸ்து இயேசுவில் இருக்கும் இந்த இரட்சிப்பை நித்திய மகிமையுடன் பெற்றுக்கொள்ளும்படியே நான் இவற்றைச் சகிக்கிறேன். 1 பேது 5:10கொலோ 1:242 கொரி 1:62 தீமோ 2:31 கொரி 9:221 பேது 2:101 தெச 5:91 தீமோ 1:13-14
இதுவும் நம்பத்தகுந்த ஒரு வாக்கு: ரோம 6:8கொலோ 3:3-4ரோம 6:51 தீமோ 1:152 கொரி 4:10யோவா 14:191 தெச 5:102 கொரி 13:4
நாம் கிறிஸ்துவுடன் மரித்திருந்தால்,
நாமும் அவருடன் வாழ்வோம்.
நாம் பாடுகளைத் தாங்கினால், ரோம 8:17மத் 10:33வெளி 20:4லூக் 12:9வெளி 20:6வெளி 5:10லூக் 9:261 பேது 4:13-16
நாமும் அவருடன் ஆளுகை செய்வோம்.
நாம் கிறிஸ்துவை மறுதலித்தால்,
அவரும் நம்மை மறுதலிப்பார்;
நாம் அவருக்கு உண்மையாய் இராவிட்டாலும், எண் 23:19ரோம 3:31 தெச 5:242 தெச 3:3தீத் 1:21 கொரி 1:9எபி 6:18மத் 24:35
அவர் நமக்கு உண்மையுள்ளவராகவே இருப்பார். ஏனெனில்,
அவர் தம்மைத்தாம் மறுதலிக்கமாட்டார்.
இறைவனுக்கேற்ற வேலையாள்
இந்தக் காரியங்களை அவர்களுக்கு நினைப்பூட்டி, வாக்குவாதத்தில் ஈடுபடவேண்டாமென்று இறைவனுக்கு முன்பாக, அவர்களை எச்சரிக்கை செய். அப்படிப்பட்ட வாக்குவாதமோ கேட்கிறவர்களைப் பாழாக்குமேயன்றி, அதனால் வேறு ஒரு பயனும் இல்லை. தீத் 3:9-112 தீமோ 2:232 தீமோ 4:1ரோம 14:11 தீமோ 5:211 தீமோ 6:4-5எபி 13:9அப் 15:24 நீயோ ஏற்றுக்கொள்ளப்பட்ட வேலையாளாக இறைவனுக்குமுன் நிற்பதற்கு, உன்னால் இயன்ற எல்லா முயற்சியையும்செய்; வெட்கப்படாத வேலையாளாகவும், சத்தியத்தின் வார்த்தையை சரியாக கடைப்பிடிக்கிறவனாகவும் இருக்க முயற்சிசெய். 1 தெச 2:42 பேது 1:101 தீமோ 4:62 கொரி 10:182 கொரி 5:91 தீமோ 4:12-16கலா 1:102 பேது 3:14 பக்தியில்லாத பேச்சை விட்டுவிலகு. ஏனெனில் அதில் ஈடுபடுகிறவர்கள், இன்னும் அதிகதிகமாய் இறைவனை மறுதலிக்கிறவர்களாவார்கள். தீத் 3:91 தீமோ 6:202 தீமோ 2:142 தெச 2:7-8தீத் 1:14ஓசி 12:11 தீமோ 4:7எஸ்றா 10:10 அவர்களுடைய போதனை புற்றுநோயைப்போல் பரவும். அவர்களுக்குள் இமெனேயும், பிலேத்தும் அப்படிப்பட்டவர்களாய் இருக்கிறார்கள். 1 தீமோ 1:20நாகூ 3:15யாக் 5:3 அவர்கள் சத்தியத்தைவிட்டு விலகிப் போய்விட்டார்கள். உயிர்த்தெழுதல் ஏற்கெனவே நடந்துவிட்டது என அவர்கள் சொல்லி சிலரின் விசுவாசத்தை அழித்துவிட்டார்கள். 1 கொரி 15:121 தீமோ 1:19எபி 3:101 கொரி 11:191 யோவா 2:191 தீமோ 6:101 தீமோ 6:212 தீமோ 2:14 அப்படியிருந்தும், இறைவனின் உறுதியான அஸ்திபாரம் நிலைத்து நிற்கிறது: “தன்னுடையவர்களை கர்த்தர் அறிவார்” என்றும், “கர்த்தரின் பெயரை அறிக்கையிடுகிற ஒவ்வொருவரும், அநீதியான செயல்களிலிருந்து கட்டாயமாக விலகவேண்டும்” என்றும் அதில் முத்திரையாகப் பொறிக்கப்பட்டுள்ளன. யோவா 10:141 கொரி 8:3நாகூ 1:71 யோவா 3:7-10எண் 16:5யோவா 10:27-30லூக் 13:27கொலோ 3:5-8
ஒரு பெரிய வீட்டில் தங்கத்தினாலும் வெள்ளியினாலும் செய்யப்பட்ட பாத்திரங்கள் மட்டுமல்ல, மரத்தினாலும் களிமண்ணினாலும் செய்யப்பட்ட பாத்திரங்களும் உண்டு. அவற்றில் சில சிறப்பான நோக்கத்திற்காகவும், சில சாதாரணமாகவும் உபயோகிக்கப்படுகின்றன. ரோம 9:21-231 பேது 2:51 தீமோ 3:151 கொரி 3:9எபே 2:22எஸ்றா 1:6எஸ்றா 6:51 கொரி 3:16-17 ஒரு மனிதன் மதிப்பற்ற காரியங்களிலிருந்து சுத்திகரிக்கப்படுவானாகில், அவன் மதிப்புக்குரிய நோக்கங்களுக்கு ஏற்ற கருவியாவான். அவன் பரிசுத்தமாக்கப்பட்டு, எஜமானுக்கு உகந்தவனாகவும், எந்த நல்ல செயல்களைச் செய்வதற்கும் ஆயத்தம் பண்ணப்பட்டவனாகவும் இருப்பான். 2 தீமோ 3:17எபே 2:102 கொரி 7:1சங் 119:91 பேது 1:221 யோவா 3:32 தீமோ 2:20ஏசா 52:11
வாலிப பருவத்தின் தீமையான ஆசைகளைவிட்டு ஓடி, சுத்த இருதயத்துடன் கர்த்தரை நோக்கிக் கூப்பிடுவோருடன் சேர்ந்து நீதி, விசுவாசம், அன்பு, சமாதானம் ஆகியவற்றை நாடித்தேடு. 1 பேது 2:111 பேது 3:111 கொரி 6:181 தீமோ 6:11சங் 119:9எபி 12:141 தீமோ 4:12சங் 66:18-19 மதிகேடும் அறிவற்றதுமான விவாதங்களில் கலந்து கொள்ளாதே. ஏனெனில், அவை வாக்குவாதங்களையே உண்டுபண்ணுகின்றவை என்பது உனக்குத் தெரியும். 2 தீமோ 2:14தீத் 3:91 தீமோ 4:71 தீமோ 6:4-51 தீமோ 1:42 தீமோ 2:16 கர்த்தரின் ஊழியக்காரன் வாக்குவாதத்தில் ஈடுபடக்கூடாது. ஆனால் அவன் எல்லோரிடமும் தயவுள்ளவனாக, போதிக்கும் திறமையுள்ளவனாக, சகிப்புத்தன்மை உள்ளவனாக இருக்கவேண்டும். தீத் 3:2யாக் 1:19-20தீத் 1:71 தெச 2:71 தீமோ 3:2-3எபே 4:2பிலி 2:141 தீமோ 6:11 அவன் தன்னை எதிர்க்கிறவர்களை இறைவன் அவர்களுக்கு மனந்திரும்புதலைக் கொடுப்பார் என்ற எதிர்பார்ப்புடன், கனிவாக அறிவுறுத்தவேண்டும். இந்த மனந்திரும்புதல் சத்தியத்தின் அறிவுக்கு அவர்களை வழிநடத்தி, அப் 11:18கலா 6:11 தீமோ 2:41 யோவா 5:16அப் 8:22மத் 11:291 பேது 3:15அப் 2:38 அவர்களைத் தெளிந்த புத்தியுள்ளவர்களாக்கும். எனவே, பிசாசு தனது திட்டத்தைத் செய்ய, இவர்களை சிறைப்பிடித்திருக்கிற கண்ணியிலிருந்து அவர்கள் தப்பித்துக்கொள்வார்கள். 1 தீமோ 3:7ஏசா 49:25-26சங் 124:7கொலோ 1:13ஏசா 42:6-7எபே 5:14ஏசா 8:15வெளி 20:2-3