பிரசங்கி 2

Ecclesiastes 2

இன்பங்கள் அர்த்தமற்றவை

“வா, இப்பொழுது நன்மையானது என்னவென்று கண்டுபிடிக்கும்படி இன்பத்தை அனுபவித்துச் சோதித்துப் பார்ப்போம்” என்று நான் எனக்குள் சொல்லிக்கொண்டேன். ஆனால் அதுவும் அர்த்தமற்றது என்று நிரூபிக்கப்பட்டது. லூக் 12:19பிரச 8:15யாக் 5:1யாக் 5:5சங் 27:82இராஜா 5:5பிரச 1:16-17பிரச 11:9 சிரிப்பு மூடத்தனமானது என்றும், இன்பம் என்ன பலனைக் கொடுக்கிறது என்றும் நான் சொன்னேன். நீதி 14:131 பேது 4:2-4பிரச 7:2-6ஆமோ 6:3-6ஏசா 22:12-13 திராட்சை இரசத்தினால் என்னை உற்சாகப்படுத்தியும், மூடத்தனமாயும் நடந்து பார்த்தேன்; அப்பொழுது இன்னும் என் மனமே ஞானத்தினால் எனக்கு வழிகாட்டிக் கொண்டிருந்தது. மனிதர் தங்களுடைய வாழ்வின் குறுகிய நாட்களில், வானத்தின் கீழே செய்யப் பயனுள்ளது என்ன என்று பார்க்க விரும்பினேன். நீதி 20:1பிரச 1:17பிரச 12:13பிரச 6:12எபே 5:18ஆதி 47:9நீதி 31:4-51 சாமு 25:36

பெரிய வேலைகளைச் செய்தேன்; எனக்காக வீடுகளைக் கட்டினேன், திராட்சைத் தோட்டங்களை உண்டாக்கினேன். 1 இராஜா 7:1-121 நாளாக 27:271 இராஜா 10:19-201 இராஜா 15:191 இராஜா 9:12 நாளாக 26:102 நாளாக 8:1-62 நாளாக 8:11 அழகிய சோலைகளையும் பூந்தோட்டங்களையும் எனக்காக உண்டாக்கி, எல்லாவித பழமரங்களையும் அதில் நட்டேன். ஆதி 2:8-9எரே 39:4லூக் 17:27-29உன்னத 4:12உன்னத 6:2 செழித்து வளர்ந்த தோட்டங்களுக்கு நீர் பாய்ச்சுவதற்குக் குளங்களைக் கட்டினேன். நெகே 2:14எரே 17:8சங் 1:3உன்னத 7:4 ஆண்களையும் பெண்களையும் அடிமைகளாக வாங்கினேன்; மேலும் வீட்டில் பிறந்த அடிமைகளையும் வைத்திருந்தேன். எனக்குமுன் எருசலேமிலிருந்த எல்லாரைப்பார்க்கிலும், அதிகமான ஆட்டு மந்தைகளும் மாட்டு மந்தைகளும் எனக்கிருந்தன. 1 நாளாக 27:29-311 இராஜா 4:231 இராஜா 9:20-222 நாளாக 26:102 நாளாக 32:27-292இராஜா 3:4எஸ்றா 2:58ஆதி 13:2 நான் தங்கத்தையும் வெள்ளியையும் எனக்கெனக் குவித்தேன்; அரசர்களிடமிருந்தும் மாகாணங்களிலிருந்தும் கிடைத்த செல்வங்களைச் சேர்த்தேன். பாடகர்களும் பாடகிகளும் எனக்கிருந்தனர்; மனித இருதயத்திற்கு மகிழ்ச்சியைக் கொடுப்பவர்களான பல பெண்களையும் 1 வைத்திருந்தேன். 1 இராஜா 10:101 இராஜா 9:282 சாமு 19:351 இராஜா 10:141 நாளாக 25:11 நாளாக 25:61 இராஜா 10:211 இராஜா 14:21-22 எனக்குமுன் எருசலேமிலிருந்த எல்லாரைப்பார்க்கிலும் நான் மிகப்பெரியவனானேன். இவை எல்லாவற்றின் மத்தியிலும் என் ஞானம் என்னைவிட்டு நீங்காமல் இருந்தது. 1 நாளாக 29:25பிரச 1:161 இராஜா 10:232 நாளாக 9:22-231 இராஜா 10:71 இராஜா 3:122 நாளாக 1:1

என் கண்கள் ஆசை வைத்த எதையும் நான் பெறாமல் விடவில்லை; பிரச 3:22பிரச 5:18பிரச 9:9சங் 119:37சங் 128:21 யோவா 2:16பிரச 2:22பிரச 11:9

என் இருதயத்துக்கு எந்த இன்பங்களையும் நான் கொடுக்க மறுக்கவில்லை.

என் எல்லா வேலையிலும் என் இருதயம் மகிழ்ந்தது,

என் எல்லா உழைப்புக்குமான வெகுமதி இதுவே.

அப்படியிருந்தும் என் கைகள் செய்த எல்லாவற்றையும், பிரச 1:141 யோவா 2:16-17பிரச 1:31 தீமோ 6:6யாத் 39:43ஆதி 1:31பிரச 2:17-23ஆப 2:13

அவற்றை அடைய நான் பட்ட பிரசாயத்தையும் பார்த்தபோது,

இவை யாவும் அர்த்தமற்றவையாகவே இருந்தன,

எல்லாம் காற்றைத் துரத்திப்பிடிக்கும் முயற்சியே;

சூரியனுக்குக் கீழே பலன் ஒன்றுமில்லை.

ஞானமும் மூடத்தனமும் அர்த்தமற்றவை

பின்பு நான் ஞானத்தை ஆராய்ந்து பார்க்கவும், பிரச 1:17பிரச 7:25பிரச 1:9-10

பைத்தியக்காரத்தனத்தையும் மூடத்தனத்தையும் அறிந்துகொள்ளவும்

என் மனதை திருப்பினேன்.

அரசனுக்குப்பின் அவனுடைய இடத்தில் வருகிறவன்,

முன்பு அவனால் செய்யப்பட்டதைப் பார்க்கிலும் இவனால் அதிகமாய் என்ன செய்யமுடியும்?

இருளைப் பார்க்கிலும் வெளிச்சம் நல்லதாய் இருப்பதுபோலவே, எபே 5:8பிரச 7:11-12பிரச 11:7மத் 6:23லூக் 11:34-35மல்கி 3:18சங் 119:105பிரச 7:19

மூடத்தனத்தைப் பார்க்கிலும் ஞானம் நல்லது எனக் கண்டேன்.

ஒரு ஞானமுள்ளோரின் கண்கள் வெளிச்சத்தை நோக்கியிருக்கின்றன, சங் 49:10நீதி 17:24பிரச 9:111 யோவா 2:11பிரச 3:19பிரச 9:1-3பிரச 10:2-3பிரச 6:6

மூடரோ இருளில் நடப்பார்கள்;

ஆனால் அவர்கள் இருவருக்கும் ஒரே முடிவே ஏற்படுகிறது என்பதை

நான் உணர்ந்துகொண்டேன்.

பின்பு நான், மூடரின் முடிவே என்னையும் மேற்கொள்ளும், பிரச 6:8பிரச 1:141 இராஜா 3:12பிரச 1:16பிரச 1:18பிரச 1:2பிரச 2:16

“ஆகவே ஞானமுள்ளவனாய் இருப்பதால்

நான் பெறும் இலாபம் என்ன?” என்று

என் இருதயத்தில் சிந்தித்தேன்.

“இதுவும் அர்த்தமற்றதே” என்று என் இருதயத்தில் சொல்லிக்கொண்டேன்.

மூடரைப் போலவே ஞானமுள்ளோரும் நெடுங்காலம் ஞாபகத்தில் இருக்கமாட்டார்கள்; பிரச 1:11பிரச 9:5யாத் 1:8எபி 9:27மல்கி 3:16சங் 88:122 சாமு 3:33பிரச 2:14

வருங்காலத்தில் இருவரும் மறக்கப்பட்டுப் போவார்கள்.

மூடரைப் போலவே, ஞானமுள்ளோரும் இறந்துபோவார்கள்.

பிரயாசமும் அர்த்தமற்றது

சூரியனுக்குக் கீழே செய்யப்படுவதெல்லாம் எனக்குத் துக்கமாகவே இருந்தது, ஆதலால் நான் வாழ்க்கையை வெறுத்தேன். அவையாவும் அர்த்தமற்றவை, எல்லாம் காற்றைத் துரத்திப்பிடிக்கும் முயற்சிக்கு ஒப்பானது. பிரச 2:11பிரச 4:2யோனா 4:81 இராஜா 19:4பிரச 1:14பிரச 2:22பிரச 3:16பிரச 6:9 சூரியனுக்குக் கீழே நான் பிரயாசப்பட்டு பெற்றதையெல்லாம் நான் வெறுத்தேன். ஏனெனில், அவற்றை நான் எனக்குப்பின் வருவோருக்கு விட்டுச்செல்ல வேண்டுமே. சங் 39:6சங் 49:10லூக் 16:27-281 கொரி 3:101 இராஜா 11:11-13அப் 20:29-30பிரச 1:13பிரச 1:3 அவர்கள் ஞானமுள்ளோராய் இருப்பார்களோ, அல்லது மூடராயிருப்பார்களோ என்று யார் அறிவார்? சூரியனுக்குக் கீழே என் முயற்சியையும் திறமையையும் உபயோகித்து நான் செய்த எல்லா வேலைகள்மேலும் அவர்கள் அதிகாரம் செலுத்துவார்களே. இதுவும் அர்த்தமற்றதே. பிரச 3:22யாக் 3:171 இராஜா 12:14-201 இராஜா 14:25-282 நாளாக 10:13-162 நாளாக 12:9-10பிரச 9:13யாக் 1:17 எனவே சூரியனுக்குக் கீழேயுள்ள என் பிரயாசங்களின் முயற்சி அனைத்தையும் குறித்து, என் இருதயம் விரக்தியடையத் தொடங்கியது. 1 கொரி 15:191 தெச 3:3-42 கொரி 1:8-10ஆதி 43:14யோபு 17:11-15சங் 39:6-7 ஏனெனில் ஒரு மனிதர்கள் தன் வேலையை ஞானத்துடனும், அறிவுடனும், திறமையுடனும் செய்கிறார்கள்; ஆகிலும் அவர்கள் தங்களுக்கு உரிமையான அனைத்தையும் அதற்காகப் பிரயாசப்படாத வேறொருவருக்கு விட்டுச்செல்ல நேரிடுகிறதே. இதுவும் அர்த்தமற்றதும், பெரும் தீமையாய் இருக்கிறது. பிரச 2:17-182 நாளாக 31:20-212 நாளாக 33:2-92 நாளாக 34:22 நாளாக 35:182 நாளாக 36:5-10பிரச 9:18எரே 22:15 சூரியனுக்குக் கீழே மனிதர்கள் மிகவும் பிரயாசப்பட்டும், கவலையுடன் போராடியும் உழைப்பதினால், அவர்கள் பெறும் இலாபம் என்ன? பிரச 1:3சங் 127:21 பேது 5:71 தீமோ 6:8பிரச 3:9பிரச 4:6மத் 6:34பிலி 4:6 அவர்களுடைய வாழ்நாளெல்லாம் அவர்கள் செய்யும் வேலை, வேதனையும் துன்பமுமே; இரவிலும் அவர்களுடைய மனம் இளைப்பாறுவதில்லை. இதுவும் அர்த்தமற்றதே. யோபு 14:1யோபு 5:7யோபு 7:13-14சங் 127:2சங் 6:6-7அப் 14:22தானி 6:18பிரச 1:18

சாப்பிட்டு, குடித்து தங்கள் வேலையில் திருப்தி காண்பதைவிட, அவர்கள் செய்யக்கூடிய நலமானது ஒன்றும் இல்லை. இதுவும் இறைவனின் கரத்திலிருந்து வருகிறது என்று நான் காண்கிறேன். பிரச 3:22பிரச 8:151 தீமோ 6:17பிரச 3:12-13பிரச 5:18-19பிரச 9:7-91 கொரி 15:32உபா 12:18 அவராலேயன்றி உணவு சாப்பிடவோ, சந்தோஷமாயிருக்கவோ யாரால் முடியும்? பிரச 2:1-121 இராஜா 4:21-24 இறைவனைப் பிரியப்படுத்துகிற மனிதருக்கு அவர் ஞானத்தையும், அறிவையும், மகிழ்ச்சியையும் கொடுக்கிறார். ஆனால் பாவிகளுக்கோ, இறைவனைப் பிரியப்படுத்துபவர்களுக்குக் கொடுக்கும்படி, செல்வத்தைச் சேர்த்துக் குவித்து வைக்கும் வேலையைக் கையளிக்கிறார். இதுவும் அர்த்தமற்றதே, காற்றைத் துரத்திப்பிடிக்கும் ஒரு முயற்சியே. நீதி 13:22யோபு 27:16-17நீதி 28:8ஏசா 3:10-11யோவா 16:242 நாளாக 31:20-21கொலோ 3:16-17நீதி 3:13-18