தங்கக் கன்றுக்குட்டி
மோசே மலையிலிருந்து இறங்கிவரத் தாமதித்ததை மக்கள் கண்டபோது, அவர்கள் ஆரோனைச் சுற்றி ஒன்றுகூடி அவனிடம், “எங்களை எகிப்திலிருந்து வெளியே கொண்டுவந்த மோசேக்கு என்ன நடந்ததென்று தெரியவில்லை. ஆகையால் நீர் வந்து, எங்களை வழிநடத்தும்படி தெய்வங்களை எங்களுக்காகச் செய்யும்” என்றார்கள். அப் 7:40உபா 9:92 பேது 3:4யாத் 24:18மத் 24:48உபா 9:11-12அப் 17:29உபா 4:15-18
அப்பொழுது ஆரோன் அவர்களிடம், “உங்கள் மனைவிகளும், மகன்களும், மகள்களும் அணிந்திருக்கும் தங்கக் காதணிகளைக் கழற்றி என்னிடம் கொண்டுவாருங்கள்” என்றான். யாத் 12:35-36நியாயாதி 8:24-27எசேக் 16:11-12எசேக் 16:17ஓசி 2:8யாத் 35:22ஆதி 24:47ஆதி 24:22 அப்படியே அனைவரும் தங்கள் காதணிகளைக் கழற்றி ஆரோனிடம் கொண்டுவந்தார்கள். ஏசா 40:19-20ஏசா 46:6நியாயாதி 17:3-4எரே 10:9 அவர்கள் தன்னிடம் கொடுத்ததை அவன் எடுத்து கன்றுக்குட்டி வடிவில் அதை வார்ப்பித்து, ஒரு கருவியினால் அதை வடிவமைத்து அதை ஒரு விக்கிரகமாகச் செய்தான். அப்பொழுது அவர்கள், “இஸ்ரயேலரே! இவையே உங்கள் தெய்வங்கள். இவைகளே உங்களை எகிப்திலிருந்து வெளியே கொண்டுவந்தன” என்றார்கள். நெகே 9:181 இராஜா 12:28அப் 7:41உபா 9:16யாத் 32:8ஏசா 44:9-102இராஜா 10:29ஓசி 13:2
அதைக்கண்ட ஆரோன் அந்தக் கன்றுக்குட்டிக்கு முன்பாக ஒரு பலிபீடத்தைக் கட்டி, “நாளைக்கு யெகோவாவுக்கு ஒரு பண்டிகை கொண்டாடப்படும்” என அறிவித்தான். 2இராஜா 10:20லேவி 23:2லேவி 23:371 கொரி 5:81 இராஜா 12:32-331 இராஜா 21:91 சாமு 14:352 நாளாக 30:5 மறுநாள் அதிகாலையில் மக்கள் எழுந்து தகன காணிக்கைகளைப் பலியிட்டு, சமாதான காணிக்கைகளைச் செலுத்தினார்கள். அதன்பின் மக்கள் சாப்பிடுவதற்கும் குடிப்பதற்கும் உட்கார்ந்து களியாட்டத்தில் ஈடுபட்டார்கள். 1 கொரி 10:7எண் 25:2அப் 7:41-42யாத் 32:17-19ஆமோ 2:8ஆமோ 8:10யாத் 24:4-5நியாயாதி 16:23-25
அப்பொழுது யெகோவா மோசேயிடம், “நீ கீழே இறங்கிப்போ. ஏனெனில், எகிப்திலிருந்து நீ வெளியே கொண்டுவந்த உன் மக்கள் சீர்கெட்டுப் போனார்கள். யாத் 32:11ஓசி 9:9உபா 9:12யாத் 19:24ஆதி 6:11-12நியாயாதி 2:19தானி 9:24உபா 32:5 நான் அவர்களுக்குக் கட்டளையிட்டபடி நடக்காமல், விரைவில் வழிதவறி கன்றுக்குட்டி உருவமுடைய ஒரு விக்கிரகத்தைத் தங்களுக்காக செய்திருக்கிறார்கள். அவர்கள் அதை வணங்கி, பலிசெலுத்தி, ‘இஸ்ரயேலரே! இவையே உங்கள் தெய்வங்கள், இவையே உங்களை எகிப்திலிருந்து வெளியே கொண்டுவந்தன’ என்று சொல்லியிருக்கிறார்கள்” என்றார். 1 இராஜா 12:28யாத் 20:23யாத் 20:3-4உபா 9:16யாத் 22:20நியாயாதி 2:17யாத் 32:4
மேலும் யெகோவா மோசேயிடம், “இந்த மக்களை நான் கவனித்துப் பார்த்தேன். அவர்களோ பிடிவாத குணமுள்ளவர்களாய் இருக்கிறார்கள். அப் 7:51ஏசா 48:4உபா 9:13யாத் 33:3யாத் 33:5யாத் 34:92 நாளாக 30:8உபா 31:27 அவர்களுக்கு எதிராக என் கோபம் எரியும்படியும், நான் அவர்களை அழிக்கும்படியும் என்னை விட்டுவிடு; அதன்பின் நான் உன்னை ஒரு பெரிய நாடாக்குவேன்” என்றார். உபா 9:14எண் 14:12உபா 9:19யாத் 22:24எண் 16:45-48எண் 14:19-20எண் 16:22யாத் 32:11
ஆனால் மோசேயோ தன் இறைவனாகிய யெகோவாவின் தயவை நாடினான். அவன் அவரிடம், “யெகோவாவே, நீர் மகா வல்லமையினாலும், பலமுள்ள கரத்தினாலும், எகிப்திலிருந்து வெளியே கொண்டுவந்த உம்முடைய மக்களுக்கு எதிராக உமது கோபம் ஏன் எரியவேண்டும்? உபா 9:18-20உபா 9:26-29சங் 106:23ஏசா 63:17எரே 12:1-2எண் 11:11எண் 16:22சங் 74:1-2 ‘இஸ்ரயேலரை மலைகளில் கொன்று, பூமியின் மேற்பரப்பிலிருந்து அழித்து ஒழிக்கும்படியான தீய நோக்கத்துடனே, அவர் அவர்களை வெளியே கொண்டுவந்தார்’ என எகிப்தியர் ஏன் சொல்லவேண்டும்? ஆகவே உமது கோபத்தின் உக்கிரத்தைத் தணித்து, மனமிரங்கி, மக்கள்மேல் பேராபத்தைக் கொண்டுவராதிரும். எண் 14:13-16உபா 9:28யாத் 32:14யோசு 7:9ஆமோ 7:3ஆமோ 7:6உபா 13:17உபா 32:26-27 உமது அடியார்களான ஆபிரகாம், ஈசாக்கு, இஸ்ரயேல் ஆகியோரை நினைவிற்கொள்ளும். ‘உங்கள் சந்ததியை வானத்து நட்சத்திரங்களைப்போல் பெருகப்பண்ணி, நான் உங்கள் சந்ததியினருக்கு வாக்குப்பண்ணிய இந்த நாடு முழுவதையும் அவர்களுக்குக் கொடுப்பேன். அந்த நாடு என்றும் அவர்களுக்கு உரிமைச்சொத்தாய் இருக்கும்’ என்று நீர் உம்மைக் கொண்டு அவர்களுக்கு ஆணையிட்டுச் சொன்னீரே” என்றான். எபி 6:13ஆதி 12:7ஆதி 22:16ஆதி 15:18ஆதி 15:5ஆதி 15:7ஆதி 35:11-12உபா 7:8 அப்பொழுது யெகோவா மனமிரங்கி, தன் மக்கள்மேல் தான் கொண்டுவருவதாக அச்சுறுத்திய பேராபத்தைக் கொண்டுவரவில்லை. யோனா 3:10எரே 26:13சங் 106:451 நாளாக 21:15எரே 18:82 சாமு 24:16யோனா 4:2எரே 26:19
மோசே மலையிலிருந்து தனது கைகளில் இரண்டு சாட்சி கற்பலகைகளுடன் கீழே இறங்கிப் போனான். அந்தக் கற்பலகைகளில் முன்னும் பின்னுமாக இரண்டு பக்கங்களிலும் எழுதப்பட்டிருந்தன. உபா 9:15உபா 5:22யாத் 16:34யாத் 24:18யாத் 31:18யாத் 40:20சங் 19:7வெளி 5:1 அந்தக் கற்பலகைகள் இறைவனின் கைவேலையாயிருந்தன. அதில் இறைவனால் எழுதப்பட்டிருந்த எழுத்துக்கள் பொறிக்கப்பட்டிருந்தன. யாத் 31:18எபி 8:102 கொரி 3:3உபா 10:1உபா 9:15உபா 9:9-11யாத் 34:1யாத் 34:4
ஆரவாரம் செய்யும் மக்களின் சத்தத்தை யோசுவா கேட்டபோது, அவன் மோசேயிடம், “முகாமில் யுத்த சத்தம் கேட்கிறது” என்றான். யாத் 24:13யாத் 17:91 சாமு 17:201 சாமு 17:521 சாமு 4:5-6ஆமோ 1:14ஆமோ 2:2யாத் 32:18
அதற்கு மோசே சொன்னது: தானி 5:23தானி 5:4யாத் 15:1-18
“அது வெற்றியின் சத்தமும் அல்ல;
தோல்வியின் சத்தமும் அல்ல;
நாம் கேட்பது பாடலின் சத்தம்.”
மோசே முகாமுக்குக் கிட்டவந்தபோது, கன்றுக்குட்டியையும் மக்களின் ஆட்டத்தையும் கண்டான். அதைக்கண்ட மோசே கடுங்கோபம் கொண்டு, தன் கையில் இருந்த கற்பலகைகளை மலையடிவாரத்தில் எறிந்து துண்டுகளாக உடைத்தான். உபா 9:16-172 சாமு 6:14உபா 27:26எபே 4:26யாத் 15:20யாத் 32:11யாத் 32:4-6எரே 31:32 அத்துடன் அவர்கள் செய்துவைத்திருந்த கன்றுக்குட்டியை எடுத்து, அதை நெருப்பில்போட்டு எரித்து தூளாக அரைத்து, தண்ணீரின்மேல் தூவி, இஸ்ரயேலரைக் குடிக்கச் செய்தான். உபா 9:212இராஜா 23:152இராஜா 23:6உபா 7:25உபா 7:5நீதி 1:31நீதி 14:14
அதன்பின் மோசே ஆரோனிடம், “இந்த மக்கள் உனக்கு என்ன செய்தார்கள்? நீ அவர்களை இவ்வளவு பெரிய பாவத்தைச்செய்ய வழிநடத்துவதற்கு அவர்கள் உனக்கு என்ன செய்தார்கள்?” என்று கேட்டான். ஆதி 20:9யோசு 7:19-261 இராஜா 14:161 இராஜா 21:221 சாமு 26:192இராஜா 21:9-11உபா 13:6-8ஆதி 26:10
அதற்கு ஆரோன், “என் ஆண்டவனே, கோபங்கொள்ள வேண்டாம். இவர்கள் எவ்வளவாய் தீமையின் பக்கம் சார்ந்து நடக்கின்ற மக்கள் என்பதை நீர் அறிவீர்தானே! உபா 9:241 சாமு 15:24யாத் 14:11யாத் 15:24யாத் 16:20நீதி 4:16சங் 36:4உபா 31:27 அவர்கள் என்னிடம், ‘எகிப்திலிருந்து எங்களைக் கொண்டுவந்த மோசேக்கு என்ன நடந்ததென்று எங்களுக்குத் தெரியவில்லை. ஆகையால் எங்களை வழிநடத்த எங்களுக்கு தெய்வங்களைச் செய்துகொடும்’ என்றார்கள். யாத் 32:1-4யாத் 32:8 ஆகவே நான் அவர்களிடம், ‘தங்க நகைகள் இருப்பவர்கள் அதைக் கழற்றுங்கள்’ என்றேன். அப்படியே அவர்கள் அந்த தங்க நகைகளை என்னிடம் கொடுத்தார்கள். நான் அதை நெருப்பில் போட்டேன். அதிலிருந்து இந்த கன்றுக்குட்டி வந்தது” என்றான். யாத் 32:4ஆதி 3:12-13லூக் 10:29ரோம 3:10
மக்கள் கட்டுக்கடங்காமல் திரிவதையும், அவர்களுடைய பகைவர்களுக்கு முன்பாக அவர்கள் கேலிப்பொருளாகும்படி, ஆரோன் அவர்களை கட்டுப்பாடின்றி விட்டுவிட்டதையும் மோசே கண்டான். ஏசா 47:3மீகா 1:11வெளி 16:152 நாளாக 28:19தானி 12:2உபா 9:20யாத் 33:4-6எசேக் 16:63 அப்பொழுது மோசே முகாமின் வாசலில் நின்று, “யெகோவாவின் பக்கத்தில் இருப்பவர்கள் என்னிடம் வாருங்கள்” என்றான். லேவியர் எல்லோரும் அவனிடம் வந்து சேர்ந்தார்கள். 2இராஜா 9:32மத் 12:302 சாமு 20:11யோசு 5:13
மோசே அவர்களிடம், “இஸ்ரயேலின் இறைவனாகிய யெகோவா சொல்வது இதுவே: ஒவ்வொருவரும் உங்கள் இடுப்பில் ஒரு வாளைக் கட்டிக்கொள்ளுங்கள். முகாமெங்கும் ஒரு முனையிலிருந்து மறுமுனைவரை அங்குமிங்குமாகச் சென்று ஒவ்வொருவனும் தன்தன் சகோதரனையும், நண்பனையும், அயலானையும் கொல்லுங்கள்” என்றான். எண் 25:5லூக் 14:26உபா 33:8-92 கொரி 5:16யாத் 32:26யாத் 32:29எண் 25:7-12 லேவியர்கள் மோசே கட்டளையிட்டபடியே செய்தார்கள். அன்று மக்களில் மூவாயிரம்பேர்வரை செத்தார்கள். உபா 33:91 கொரி 10:8எபி 2:2-3மல்கி 2:4-6எண் 16:32-35எண் 16:41 அப்பொழுது மோசே அவர்களிடம், “நீங்கள் ஒவ்வொருவரும் தன்தன் சொந்த மகன்களுக்கும், சகோதரர்களுக்கும் விரோதமாய் இருந்தபடியால், இன்று நீங்கள் யெகோவாவினுடைய பணிக்கென்று வேறுபிரிக்கப்பட்டிருக்கிறீர்கள். யெகோவா இன்றைக்கு உங்களை ஆசீர்வதித்திருக்கிறார்” என்றான். எண் 25:11-13மத் 10:37சகரி 13:3உபா 13:6-11நீதி 21:31 சாமு 15:18-22உபா 33:9-10யோவே 2:12-14
மறுநாள் மோசே மக்களிடம், “நீங்கள் பெரிய பாவம் செய்திருக்கிறீர்கள். இப்பொழுது நான் யெகோவாவிடம் ஏறிப்போவேன். ஒருவேளை உங்களுடைய பாவத்திற்காக நான் பாவநிவிர்த்தி செய்யலாம்” என்றான். 1 சாமு 12:20எண் 25:131 சாமு 12:232இராஜா 17:212 சாமு 16:12ஆமோ 5:15யாத் 32:31-32யோனா 3:9
அவ்வாறே மோசே திரும்பவும் யெகோவாவிடம் போய், “இந்த மக்கள் எவ்வளவு பெரிய பாவத்தைச் செய்திருக்கிறார்கள். அவர்கள் தங்களுக்காக தங்கத்தினால் தெய்வங்களைச் செய்திருக்கிறார்கள். யாத் 20:23தானி 9:11தானி 9:8யாத் 32:30தானி 9:5உபா 9:18-19யாத் 20:4யாத் 34:28 ஆனாலும் அவர்களுடைய பாவத்தை இப்பொழுது மன்னியும்; இல்லாவிட்டால் நீர் எழுதிய புத்தகத்திலிருந்து என் பெயரை அழித்துவிடும்” என்றான். சங் 69:28ரோம 9:3பிலி 4:3வெளி 21:27தானி 12:1வெளி 3:5சங் 139:16சங் 56:8
அப்பொழுது யெகோவா மோசேயிடம், “எனக்கு விரோதமாய்ப் பாவம் செய்தவன் எவனோ, அவனுடைய பெயரையே என் புத்தகத்திலிருந்து அழிப்பேன். உபா 29:20எசேக் 18:4லேவி 23:30சங் 69:28வெளி 20:12சங் 9:5பிலி 4:3சங் 109:13-14 இப்பொழுது நீ போய் நான் உனக்கு சொன்ன இடத்துக்கு மக்களை அழைத்துக்கொண்டு போ. இதோ! என் தூதன் உனக்குமுன் செல்வான். ஆனாலும், நான் தண்டிக்கும் காலம் வரும்போது, அவர்கள் பாவத்திற்காக நான் அவர்களைத் தண்டிப்பேன்” என்றார். உபா 32:35யாத் 23:20யாத் 3:17யாத் 33:14-15யாத் 33:2மத் 23:35ஆமோ 3:14யாத் 20:5
ஆரோன் செய்து கொடுத்த கன்றுக்குட்டியை வணங்கியதற்காக யெகோவா மக்களைப் பெரும் கொள்ளைநோயினால் வாதித்தார். 2 சாமு 12:9-10அப் 1:18அப் 7:41யாத் 32:25யாத் 32:4மத் 27:3-7