புதிய கற்பலகைகள்
மேலும் யெகோவா மோசேயிடம், “நீ முந்தினவைகளைப்போன்ற இரண்டு கற்பலகைகளைச் செதுக்கி எடுத்துக்கொள். நீ உடைத்துப்போட்ட முந்தின கற்பலகைகளில் இருந்த வார்த்தைகளை நான் இந்தக் கற்பலகைகளில் எழுதுவேன். யாத் 32:19உபா 10:1-4யாத் 31:18சங் 119:89யாத் 34:28உபா 9:15-17யாத் 32:16 நாளை காலையில் நீ ஆயத்தமாகி, சீனாய் மலைக்குமேல் ஏறி வா. மலை உச்சியில் எனது முன்னிலையில் வந்து நில். யாத் 19:20உபா 9:25யாத் 19:11யாத் 19:24யாத் 24:12 உன்னுடன் வேறெவரும் வரக்கூடாது. மலையின் எந்தப்பகுதியிலும் எங்காவது காணப்படவும் கூடாது. ஆடுமாடுகளும் அந்த மலைக்கு முன்னால் மேயக்கூடாது” என்றார். யாத் 19:12-13யாத் 19:211 தீமோ 2:5எபி 12:20லேவி 16:17
மோசே யெகோவா தனக்குக் கட்டளையிட்டபடியே, முந்தின கற்பலகைகளைப்போன்ற இரண்டு கற்பலகைகளையும் செதுக்கி, அதிகாலையில் எழுந்து, அந்த இரண்டு கற்பலகைகளையும் தன் கைகளில் எடுத்துக்கொண்டு, சீனாய் மலைக்கு ஏறிப்போனான். அப்பொழுது யெகோவா மேகத்தில் இறங்கி அங்கே மோசேயுடன் நின்று, யெகோவா என்ற தமது பெயரைப் பிரசித்தப்படுத்தினார். யாத் 33:19யாத் 33:9லூக் 9:34-35எண் 11:25எண் 11:17நீதி 18:10சங் 102:21உபா 32:3 அவர் மோசேயின் முன்னால் கடந்து போகையில், “யெகோவா! யெகோவா! மன இரக்கமும், கிருபையும் உள்ள இறைவன். கோபப்படுவதற்குத் தாமதிக்கிறவர். அன்பிலும், உண்மையிலும் நிறைந்தவர். சங் 86:15யோவே 2:13சங் 103:8-13சங் 145:8நெகே 9:17யோனா 4:2எண் 14:17-19சங் 86:5 ஆயிரம் தலைமுறைகளுக்கு அசையாத அன்பைக் காட்டுகிறவர். கொடுமையையும், கலகத்தையும், பாவத்தையும் மன்னிக்கிறவர். அப்படியிருந்தும் அவர் குற்றவாளிகளைத் தண்டியாமல் தப்பவிடுகிறவர் அல்ல. பெற்றோரின் பாவத்திற்காக பிள்ளைகளையும், பிள்ளைகளின் பிள்ளைகளையும் அவர்களின் மூன்றாம், நான்காம் தலைமுறைவரைக்கும் தண்டிக்கிறவர்” என்று பிரசித்தப்படுத்தினார். யாத் 20:5-6சங் 103:3உபா 5:9-10எபே 1:71 யோவா 1:9நாகூ 1:2-3எண் 14:18-23எரே 32:18
உடனே மோசே, தரையில் விழுந்து வழிபட்டான். யாத் 4:312 நாளாக 20:18ஆதி 17:3 அவன், “யெகோவாவே, நான் உம்முடைய கண்களில் தயவு பெற்றிருந்தேன் என்றால், யெகோவாவாகிய நீர் எங்களுடன் வாரும். மக்கள் பிடிவாத குணமுள்ளவர்களாய் இருந்தாலும் எங்கள் கொடுமைகளையும், பாவத்தையும் மன்னித்து, எங்களை உமது உரிமைச்சொத்தாக ஏற்றுக்கொள்ளும்” என்றான். சங் 33:12உபா 32:9சங் 94:14யாத் 33:13-17எரே 10:16சங் 135:4சங் 28:9யாத் 32:9
அதற்கு யெகோவா, “நான் உன்னுடன் ஒரு உடன்படிக்கை செய்கிறேன். முழு உலகத்திலும், எந்த நாட்டினரின் மத்தியிலும் முன் ஒருபோதும் செய்யப்படாத அதிசயங்களை உன் மக்களுக்கு முன்பாகச் செய்வேன். யெகோவாவாகிய நான் உனக்காகச் செய்யப்போகும் செயல் எவ்வளவு பிரமிப்புக்குரியதாய் இருக்கும் என்பதை உன்னோடுகூட வாழும் மக்கள் காண்பார்கள். உபா 10:21சங் 77:14ஏசா 64:3சங் 66:5எரே 32:212 சாமு 7:23சங் 66:3சங் 78:12 இன்று நான் உனக்குக் கட்டளையிடுகிறதற்கு நீ கீழ்ப்படி. நான் எமோரியர், கானானியர், ஏத்தியர், பெரிசியர், ஏவியர், எபூசியர் ஆகியோரை உனக்கு முன்பாக வெளியே துரத்திவிடுவேன். யாத் 33:2உபா 6:25யாத் 3:17உபா 6:3யாத் 3:8ஆதி 15:18-21உபா 12:28உபா 12:32 நீ போய்ச்சேரும் நாட்டிலுள்ள மக்களோடு எந்த விதமான உடன்படிக்கையையும் செய்யாதிருக்கக் கவனமாயிரு. மீறினால் அவர்கள் உங்கள் மத்தியில் கண்ணியாயிருப்பார்கள். யாத் 23:32-33யோசு 23:12-13உபா 7:2உபா 7:16நியாயாதி 2:2-3சங் 106:36நியாயாதி 8:27 நீயோ அவர்களுடைய பலிபீடங்களை இடித்து, விக்கிரகங்களை உடைத்து, அவர்களுடைய அசேரா விக்கிரகக் கம்பங்களை வெட்டி 1 அழித்துவிடவேண்டும். 2இராஜா 18:4உபா 7:25-26உபா 7:5யாத் 23:24உபா 12:2-3உபா 16:212 நாளாக 31:12 நாளாக 34:3-4 நீ வேறெந்த தெய்வத்தையும் வணங்காதே. வைராக்கியமுடையவர் என்ற பெயருடைய யெகோவா, தமக்குரிய வழிபாட்டைக் குறித்து வைராக்கியமுடைய இறைவன். உபா 4:24உபா 32:211 கொரி 10:22யாத் 20:3-5மத் 4:10நாகூ 1:2உபா 29:20உபா 6:15
“நீ அந்நாட்டிலுள்ள மக்களோடு உடன்படிக்கை செய்யாமலிருக்க கவனமாயிரு. ஏனெனில், அவர்கள் தங்கள் தெய்வங்களுக்குப் பலிசெலுத்திப் பாவம் செய்யும்போது, பலிகளைச் சாப்பிடும்படி உங்களை அழைத்தால், ஒருவேளை நீங்கள் அவர்களுடன் சேர்ந்து அதைச் சாப்பிடுவீர்கள். நியாயாதி 2:171 கொரி 8:4உபா 31:16எண் 25:2சங் 106:281 கொரி 10:271 கொரி 8:101 கொரி 10:20-21 நீங்கள் உங்கள் மகன்களுக்கு அவர்களுடைய மகள்களை மனைவிகளாகத் தெரிந்துகொள்ளும்போது, அவர்களுடைய மகள்கள் தங்கள் தெய்வங்களுக்குப் பலிகளைச் செலுத்தி பாவம் செய்து, அதைச் செய்யும்படி உங்கள் மகன்களையும் தூண்டுவார்கள். 1 இராஜா 11:2-4உபா 7:3-4எஸ்றா 9:2நெகே 13:25எண் 25:1-2நெகே 13:232 கொரி 6:14-17
“வார்க்கப்பட்ட விக்கிரகங்களைச் செய்யவேண்டாம். லேவி 19:4யாத் 32:8ஏசா 46:6-7அப் 17:29அப் 19:26எரே 10:14
“புளிப்பில்லாத அப்பப்பண்டிகையைக் கொண்டாடுங்கள். நான் உனக்குக் கட்டளையிட்டபடியே ஏழுநாட்களுக்குப் புளிப்பில்லாத அப்பங்களைச் சாப்பிடவேண்டும். குறித்த காலமான ஆபீப் மாதத்திலே இதைச் செய்யுங்கள். ஏனெனில், அந்த மாதத்திலேயே நீங்கள் எகிப்திலிருந்து புறப்பட்டு வந்தீர்கள். யாத் 13:4லேவி 23:6உபா 16:1-4யாத் 13:6-7அப் 12:3யாத் 12:15-20யாத் 12:2யாத் 23:15
“கர்ப்பத்திலிருந்து வரும் முதற்பேறானவைகள் எல்லாம் எனக்கே சொந்தம். உனக்குரிய கால்நடையில் உள்ள ஆட்டு மந்தையிலிருந்தோ மாட்டு மந்தையிலிருந்தோ பிறக்கும் தலையீற்றான எல்லா கடாக்களும் காளைகளும் எனக்கே உரியவை. யாத் 13:2யாத் 22:29யாத் 13:12எண் 18:15-17எசேக் 44:30லூக் 2:23 ஒரு செம்மறியாட்டுக் குட்டியைக் கொடுத்து கழுதையின் தலையீற்றை மீட்டுக்கொள்ள வேண்டும். அப்படி அதை மீட்காவிட்டால் அதன் கழுத்தை முறித்து விடவேண்டும். உன் மகன்களில் முதற்பேறான எல்லோரையும் மீட்டுக்கொள்ள வேண்டும். யாத் 13:13உபா 16:16யாத் 23:15யாத் 13:15எண் 18:151 சாமு 9:7-82 சாமு 24:24யாத் 13:10
“ஒருவரும் வெறுங்கையோடு என்முன் வரக்கூடாது.
“ஆறுநாட்கள் வேலைசெய், ஆனால் ஏழாம் நாளிலோ ஓய்ந்திருக்க வேண்டும். உழவு காலத்திலும், அறுப்புக் காலத்திலும் அப்படியே ஓய்ந்திருக்க வேண்டும். யாத் 23:121 சாமு 8:12உபா 21:4யாத் 35:2லூக் 13:14உபா 5:12-15ஏசா 30:24லூக் 23:56
“கோதுமை அறுவடையின் முதற்பலன்களை கொண்டு, வாரங்களின் பண்டிகையையும், வருட முடிவில் தானிய சேர்ப்பின் பண்டிகையையும் கொண்டாடுங்கள். யாத் 23:16உபா 16:10-15யோவா 7:2எண் 28:16-31அப் 2:1எண் 29:12-39 ஒரு வருடத்தில் மூன்றுமுறை உங்கள் எல்லா ஆண்களும் இஸ்ரயேலின் இறைவனான ஆண்டவராகிய யெகோவாவுக்குமுன் வரவேண்டும். யாத் 23:14உபா 16:16யாத் 23:17ஆதி 32:28ஆதி 33:20சங் 84:7 நான் நாடுகளை உங்களுக்கு முன்பாக வெளியே துரத்தி, உங்கள் நிலப்பரப்பை விரிவுபடுத்துவேன். ஒவ்வொரு வருடமும் மூன்றுமுறை நீங்கள் உங்கள் இறைவனாகிய யெகோவாவுக்கு முன்பாக நிற்கப் போகும்போது, ஒருவனும் உங்கள் நாட்டை அபகரிக்க ஆசைகொள்ளமாட்டான். சங் 78:55யாத் 33:21 நாளாக 4:10அப் 18:10உபா 12:20நீதி 16:7உபா 19:8உபா 7:1
“புளிப்புள்ள எதனுடனும் ஒரு பலியின் இரத்தத்தை எனக்குச் செலுத்தவேண்டாம். பஸ்கா பண்டிகையின் பலியிலுள்ள எதையும் மறுநாள் காலைவரை வைக்கவேண்டாம். யாத் 23:18யாத் 12:101 கொரி 5:7-8உபா 16:3யாத் 12:20யாத் 12:8எண் 9:12யாத் 29:34
“உங்கள் நிலத்திலுள்ள முதற்பலன்களில் சிறந்தவற்றையே உங்கள் இறைவனாகிய யெகோவாவின் ஆலயத்துக்குக் கொண்டுவர வேண்டும். யாத் 23:19உபா 14:21உபா 26:21 கொரி 15:20உபா 26:10மத் 6:33நீதி 3:9-10யாக் 1:18
“வெள்ளாட்டுக்குட்டியை அதன் தாயின் பாலிலே சமைக்கவேண்டாம்” என்றார்.
அதன்பின் யெகோவா மோசேயிடம், “இந்த வார்த்தைகளை எழுது. ஏனெனில் இந்த வார்த்தைகளின்படியே உன்னோடும் இஸ்ரயேலரோடும் நான் உடன்படிக்கை செய்திருக்கிறேன்” என்றார். யாத் 24:4உபா 31:9உபா 4:13யாத் 17:14யாத் 24:7யாத் 34:10 அங்கே மோசே இரவும் பகலும் அப்பம் சாப்பிடாமலும், தண்ணீர் குடியாமலும் நாற்பது நாட்கள் யெகோவாவோடு இருந்தான். அவர் பத்துக் கட்டளைகளான உடன்படிக்கையின் வார்த்தைகளைக் கற்பலகைகளில் எழுதினார். யாத் 34:1உபா 4:13உபா 9:18உபா 9:25யாத் 24:18யாத் 31:18யாத் 32:162 கொரி 3:7
மோசேயின் பிரகாசமான முகம்
மோசே, சாட்சியின் பலகைகளைத் தனது கையில் வைத்துக்கொண்டு, சீனாய் மலையிலிருந்து கீழே இறங்கி வந்தான். அவன் யெகோவாவோடு பேசியதனால் அவனுடைய முகம் பிரகாசமாயிருந்தது. ஆனால் அவனோ அதை அறியாதிருந்தான். மத் 17:2லூக் 9:29யாத் 32:15வெளி 1:162 கொரி 3:132 கொரி 3:7-9வெளி 10:1அப் 6:15 ஆரோனும், இஸ்ரயேலர் எல்லோரும் மோசேயைப் பார்த்தபோது, அவனுடைய முகம் பிரகாசமாயிருந்தது. அதனால் அவர்கள் அவனுக்கு அருகில் வருவதற்குப் பயந்தார்கள். மாற் 9:3லூக் 5:8மாற் 9:15எண் 12:8 ஆனால் மோசேயோ அவர்களை அழைத்தான். அப்பொழுது ஆரோனும், சமுதாயத்தின் எல்லா தலைவர்களும் அவனிடம் திரும்பி வந்தார்கள். அவன் அவர்களுடன் பேசினான். யாத் 3:15யாத் 24:1-3ஆதி 45:15ஆதி 45:3 அதன்பின் இஸ்ரயேலர் எல்லோரும் அவனை நெருங்கி வந்தார்கள். யெகோவா சீனாய் மலையில் கொடுத்த கட்டளைகள் எல்லாவற்றையும் அவன் அவர்களுக்குக் கொடுத்தான். 1 கொரி 11:231 கொரி 15:31 இராஜா 22:14யாத் 21:1யாத் 24:3மத் 28:20எண் 15:40
மோசே அவர்களுடன் பேசி முடிந்ததும், அவன் தன் முகத்தை முகத்திரையால் மூடிக்கொண்டான். 2 கொரி 4:4-62 கொரி 3:13-18ரோம 10:4 ஆனாலும் மோசே, யெகோவாவுடன் பேசும்படி அவர் முன்னிலையில் போகும்போதெல்லாம், அவன் அங்கிருந்து திரும்பி வரும்வரை முகத்திரையை நீக்கிவிடுவான். அவன் தனக்குக் கட்டளையிடப்பட்டதை வெளியே வந்து இஸ்ரயேலருக்குச் சொல்லும்போது, 2 கொரி 3:16எபி 10:19-22எபி 4:16 இஸ்ரயேலர் அவன் முகம் பிரகாசிப்பதைக் கண்டார்கள். எனவே மோசே, தான் யெகோவாவுடன் பேசுவதற்கு உள்ளே போகும்வரை, அந்த முகத்திரையைத் திரும்பவும் தன் முகத்தின்மேல் போட்டுக்கொள்வான். யாத் 34:29-30தானி 12:3பிரச 8:1யோவா 5:35மத் 13:43மத் 5:16பிலி 2:15