எரேமியா 11

Jeremiah 11

உடன்படிக்கையை மீறுதல்

யெகோவாவிடமிருந்து எரேமியாவுக்கு வந்த வார்த்தை இதுவே. “இந்த உடன்படிக்கையின் நிபந்தனைகளைக் கேட்டு அவைகளை யூதா நாட்டு மக்களுக்கும், எருசலேமில் குடியிருப்பவர்களுக்கும் சொல். எரே 11:6யாத் 19:52 நாளாக 23:162 நாளாக 29:102 நாளாக 34:312இராஜா 11:172இராஜா 23:2-3எரே 34:13-16 இஸ்ரயேலின் இறைவனாகிய யெகோவா சொல்வது இதுவே என்று அவர்களுக்குச் சொல். ‘இந்த உடன்படிக்கையின் நிபந்தனைகளுக்குக் கீழ்படியாத மனிதன் சபிக்கப்பட்டவன். உபா 27:26உபா 28:15-68உபா 29:19-20கலா 3:10-13 நான் உங்கள் முற்பிதாக்களை இரும்புச் சூளையாகிய எகிப்திலிருந்து கொண்டுவந்தபோது, இந்த நிபந்தனைகளையே அவர்களுக்குக் கட்டளையிட்டிருந்தேன். எனக்குக் கீழ்ப்படிந்து, நான் உங்களுக்குக் கட்டளையிடுகிற எல்லாவற்றையும் செய்யுங்கள். அப்பொழுது நீங்கள் என் மக்களாயிருப்பீர்கள்; நான் உங்கள் இறைவனாயிருப்பேன். லேவி 26:12உபா 4:20எரே 7:22-23சகரி 8:81 இராஜா 8:512 கொரி 6:16எரே 24:7உபா 11:27 அப்பொழுது பாலும் தேனும் நிரம்பி வழிகிற நாட்டை உங்கள் முற்பிதாக்களுக்குக் கொடுப்பதாக நான் ஆணையிட்ட உறுதிமொழியை நிறைவேற்றுவேன் என்று சொல்லியிருந்தேன்.’ அந்நாட்டையே இன்று நீங்கள் உரிமையாக்கியிருக்கிறீர்கள்” என்றார். உபா 7:12-13எரே 28:6சங் 105:9-111 கொரி 14:16உபா 27:15-26உபா 6:3யாத் 13:5யாத் 3:8-17

அதற்கு நான், “ஆமென் யெகோவாவே” என்றேன்.

அப்பொழுது யெகோவா என்னிடம், “நான் கூறும் இந்த வார்த்தைகள் எல்லாவற்றையும் யூதாவின் பட்டணங்களிலும், எருசலேமின் வீதிகளிலும் போய் பிரசித்தப்படுத்து. அதாவது இந்த உடன்படிக்கையின் நிபந்தனைகளைக் கவனித்துக் கேட்டு அவைகளைப் பின்பற்றுங்கள். யாக் 1:22ரோம 2:13எரே 19:2எரே 3:12எரே 7:2யோவா 13:17ஏசா 58:1எரே 11:2-4 நான் எகிப்திலிருந்து உங்கள் முற்பிதாக்களைக் கொண்டுவந்த நாளிலிருந்து இன்றுவரை எனக்குக் கீழ்ப்படியுங்கள் என்று திரும்பத்திரும்ப எச்சரித்திருந்தேன். 2 நாளாக 36:151 சாமு 8:9எபே 4:17யாத் 15:26யாத் 23:21-222 தெச 3:12உபா 10:12-13உபா 11:26-28 ஆனால் அவர்கள் அதற்குச் செவிகொடுக்கவுமில்லை; அதைக் கவனிக்கவுமில்லை. அதற்குப் பதிலாக தங்கள் பொல்லாத இருதயங்களின் பிடிவாதத்தின்படி நடந்தார்கள். அவர்கள் அதைக் கைக்கொள்ளாததினால், நான் அவர்களுக்குக் கைக்கொள்ளும்படி கட்டளையிட்டிருந்த இந்த உடன்படிக்கையின் சாபங்களை அவர்கள்மேல் வரப்பண்ணினேன்.” எரே 7:24எரே 7:26எசேக் 20:8எரே 3:17எரே 35:15உபா 28:15-68உபா 29:21-24உபா 30:17-19

மேலும் யெகோவா என்னிடம், “யூதாவின் மக்கள் மத்தியிலும், எருசலேம் குடிகளின் மத்தியிலும் ஒரு சதித்திட்டம் உண்டாயிருக்கிறது. ஓசி 6:9அப் 23:12-15எசேக் 22:25-31எரே 5:31எரே 6:13எரே 8:10யோவா 11:53மத் 21:38-39 அவர்களோ, என் வார்த்தைகளைக் கேட்க மறுத்த தங்கள் முற்பிதாக்களின் பாவங்களுக்கே திரும்பியிருக்கிறார்கள். வேறு தெய்வங்களுக்குப் பணிசெய்ய அவைகளைப் பின்பற்றினார்கள். இஸ்ரயேல் குடும்பத்தாரும், யூதா குடும்பத்தாரும் நான் அவர்களுடைய முற்பிதாக்களுடன் செய்த உடன்படிக்கையை மீறிவிட்டார்கள். உபா 31:16எசேக் 16:591 சாமு 15:11நியாயாதி 2:12-13நியாயாதி 2:17நியாயாதி 2:19எரே 3:6-11சங் 78:8-10 ஆகையால் யெகோவா சொல்வது இதுவே: ‘அவர்கள் தப்பித்துக்கொள்ள முடியாத பேராபத்தை அவர்கள்மேல் கொண்டுவருவேன். அவர்கள் என்னை நோக்கிச் சத்தமிட்டுக் கூப்பிட்டாலும், அவர்களுக்கு நான் செவிகொடுக்கமாட்டேன். எசேக் 8:18ஏசா 1:15நீதி 1:28மீகா 3:4சகரி 7:132இராஜா 22:16எரே 14:12ஏசா 24:17 அப்பொழுது யூதாவின் பட்டணங்களும், எருசலேமின் மக்களும் தாங்கள் தூபங்காட்டும் தெய்வங்களிடத்திற்குப் போய், அவைகளை நோக்கி அழுது கூப்பிடுவார்கள். ஆனால் பேராபத்து அவர்கள்மேல் வரும்போது, அந்த தெய்வங்கள் அவர்களுக்கு உதவி செய்யவேமாட்டாது. உபா 32:37எரே 2:282 நாளாக 28:22ஏசா 45:20நியாயாதி 10:14எரே 44:17-27 யூதாவே! உன் பட்டணங்களின் எண்ணிக்கையைப் போலவே உன் தெய்வங்களின் எண்ணிக்கையும் அதிகம். நீங்கள் அந்த வெட்கக்கேடான பாகால் தெய்வத்திற்குத் தூபங்காட்டுவதற்கு அமைத்த மேடைகள், எருசலேமின் வீதிகளின் எண்ணிக்கையைப்போல் இருக்கின்றன.’ எரே 2:282இராஜா 23:132இராஜா 21:4-52இராஜா 23:4-5உபா 32:16-17ஓசி 12:11ஏசா 2:8எரே 19:5

“ஆகவே எரேமியாவே, நீ இந்த மக்களுக்காக மன்றாட வேண்டாம். அவர்களுக்காக நீ வேண்டுதலோ, விண்ணப்பமோ செய்யவேண்டாம். ஏனெனில், அவர்கள் தங்கள் துன்ப வேளையில் என்னை நோக்கிக் கூப்பிடும்போது நான் அவர்களுக்குச் செவிகொடுக்கமாட்டேன். எரே 7:16எரே 11:111 யோவா 5:16எரே 14:11யாத் 32:10சங் 66:18ஓசி 5:6எரே 15:1

“என் அன்புக்குரிய மக்கள் என் ஆலயத்திற்குள் ஏன் வந்திருக்கிறார்கள்? நீதி 2:14தீத் 1:151 கொரி 13:6எசேக் 16:25-34எசேக் 23:2-21ஆகா 2:12-14ஓசி 3:1ஏசா 1:11-15

அவர்கள், அநேகருடன் தங்கள் தீய திட்டங்களைத் தீட்டுகிறார்களே!

பலியிடப்பட்ட மாமிசம் தண்டனையிலிருந்து உங்களைத் தப்புவிக்குமோ?

நீங்கள் உங்களது கொடுமையில் ஈடுபடும்போது

மகிழ்ச்சியடைகிறீர்களோ!”

அழகும், செழிப்பும், பழம் நிறைந்ததுமான ஒலிவமரம் ரோம 11:17-24ஏசா 27:11சங் 52:8சங் 80:16எசேக் 15:4-7எசேக் 20:47-48ஏசா 1:30-31எரே 21:14

என்று யெகோவா உங்களை அழைத்தார்.

ஆனால் இப்போது அவர் கடும்புயலின் இரைச்சலுடன்

அதை நெருப்பினால் கொளுத்துவார்.

அதன் கொப்புகள் முறிக்கப்படும்.

உங்களை நாட்டிய சேனைகளின் யெகோவா பேராபத்தை உங்களுக்கு நியமித்திருக்கிறார். ஏனெனில், இஸ்ரயேல் குடும்பத்தாரும், யூதா குடும்பத்தாரும் தீமை செய்து, பாகாலுக்குத் தூபங்காட்டியதின் மூலம் எனக்குக் கோபமூட்டினார்கள். ஏசா 5:2எரே 12:2எரே 2:21எரே 19:152 சாமு 7:10எசேக் 17:5ஏசா 61:3எரே 11:11

எரேமியாவுக்கு எதிரான சதி

யெகோவா எனக்கு வெளிப்படுத்தினதால், என் பகைவர்கள் எனக்கெதிராக சதி செய்ததை நான் அறிந்துகொண்டேன். அந்த வேளையில் அவர்கள் என்ன செய்கிறார்கள் என்பதை அவர் எனக்குக் காண்பித்தார். 1 சாமு 23:11-122இராஜா 6:9-10எசேக் 8:6-182இராஜா 6:14-20எரே 11:19ரோம 3:7மத் 21:3 நானோ வெட்டப்படுவதற்குக் கொண்டுபோகப்படும் ஒரு சாதுவான செம்மறியாட்டுக் குட்டியைப்போல் இருந்தேன். அவர்கள் எனக்கெதிராகச் சதித்திட்டம் தீட்டியிருந்ததை நான் அறியாதிருந்தேன். ஏசா 53:7-8எரே 20:10சங் 83:4எரே 18:18யோபு 28:13சங் 31:13லூக் 20:10-15எண் 1:14

அவர்கள், “இந்த மரத்தையும் அதன் பழத்தையும் அழிப்போம்;

வாழ்வோரின் நாட்டிலிருந்து அவனை வெட்டிவிடுவோம்.

அவனுடைய பெயர் இனி ஒருபோதும் நினைக்கப்படாதே போகட்டும்”

என்று சொல்லியிருந்ததையும் நான் அறிந்திருக்கவில்லை.

சேனைகளின் யெகோவாவே, எரே 20:12எரே 17:101 சாமு 16:7சங் 7:9வெளி 2:23ஆதி 18:25எரே 15:15எரே 17:18

இருதயத்தையும், மனதையும் நீதியாய் நியாயம் தீர்த்து

சோதித்தறிகிறவரே! அவர்கள்மேல் உமது பழிவாங்குதல் வருவதை நான் காணவேண்டும்.

ஏனெனில் என் வழக்கை நானே உம்மிடம் ஒப்புவித்துவிட்டேன்.

ஆகவே உன் உயிரை வாங்கத்தேடும் ஆனதோத் மனிதரைப் பற்றி யெகோவா சொல்வது இதுவே: அவர்களோ, “யெகோவாவினுடைய பெயரில் இறைவாக்கு உரைக்காதே! அப்படிச் செய்தால் எங்கள் கைகளால் நீ சாவாய்” என்று சொல்கிறார்கள். ஆமோ 2:12ஏசா 30:10எரே 12:5-6எரே 20:10லூக் 13:33-34அப் 7:51-52ஆமோ 7:13-16எரே 20:1-2 ஆகவே சேனைகளின் யெகோவா சொல்வது இதுவே: “அவர்களை நான் தண்டிப்பேன். அவர்களுடைய வாலிபர்கள் வாளால் வெட்டுண்டு சாவார்கள். அவர்களுடைய மகன்களும், மகள்களும் பஞ்சத்தால் சாவார்கள். எரே 18:211 தெச 2:15-162 நாளாக 36:17எரே 9:21புலம் 2:21 அவர்களுக்கு ஒருவரும் மீந்திருக்கமாட்டார்கள். ஏனெனில், நான் தண்டிக்கும் வருடத்தில், ஆனதோத் மனிதர்மேல் பேராபத்தைக் கொண்டுவருவேன்.” எரே 23:12ஓசி 9:7எரே 50:27லூக் 19:44மீகா 7:4ஏசா 14:20-22எரே 11:19எரே 44:27