தந்திரமுள்ள நிர்வாகி
இயேசு தமது சீடர்களிடம் சொன்னதாவது: “ஒரு செல்வந்தன் இருந்தான். அவனது உடைமைகளையெல்லாம், அவனது நிர்வாகி வீண்செலவு செய்வதாக, அவன்மேல் குற்றம் சுமத்தப்பட்டது. 1 பேது 4:10மத் 25:14-301 கொரி 4:1-2யாக் 4:3லூக் 12:42தீத் 1:7லூக் 15:13லூக் 15:30 எனவே அந்த செல்வந்தன் அவனைக் கூப்பிட்டு அவனிடம், ‘உன்னைப்பற்றி நான் கேள்விப்படுகிறது என்ன? நீ வந்து, உனது நிர்வாகத்தைக் குறித்த கணக்கை என்னிடம் ஒப்படைத்துவிடு. இனிமேலும் நீ எனது நிர்வாகியாக இருக்கமுடியாது’ என்றான். 1 பேது 4:51 சாமு 2:23-241 தீமோ 5:242 கொரி 5:10பிரச 11:9-10பிரச 12:14வெளி 20:121 கொரி 1:11
“அதைக்கேட்ட அந்த நிர்வாகி, ‘இப்போது நான் என்ன செய்வேன்? எனது எஜமான் என்னை வேலையில் இருந்து நீக்கி விடப்போகிறாரே. நிலத்தைக் கொத்தவோ எனக்குப் பெலன் இல்லை. பிச்சை எடுக்கவும் எனக்கு வெட்கமாய் இருக்கிறது. 2 தெச 3:11அப் 3:2எஸ்த 6:6ஓசி 9:5ஏசா 10:3எரே 5:31யோவா 9:8லூக் 12:17 இங்கு நான் எனது வேலையை இழந்து விடும்போது, மக்கள் தங்களுடைய வீடுகளிலே என்னை ஏற்றுக்கொள்ளத்தக்கதாக, நான் என்ன செய்யவேண்டும் என்று எனக்குத் தெரியும்,’ என்று தனக்குள்ளே சொல்லிக்கொண்டான். யாக் 3:15எரே 4:22நீதி 30:9
“தன்னுடைய எஜமானிடம் கடன்பட்டிருந்த எல்லோரையும் கூப்பிட்டான். வந்தவர்களில், முதலாவது ஆளிடம், ‘எனது எஜமானுக்கு நீ எவ்வளவு கொடுக்க வேண்டியுள்ளது?’ என்றான். லூக் 7:41-42மத் 18:24
“அதற்கு அவன், ‘மூன்று ஆயிரம் லிட்டர் 1 எண்ணெய் கொடுக்க வேண்டியுள்ளது’ என்றான். லூக் 16:12தீத் 2:10லூக் 16:9
“அந்த நிர்வாகி அவனிடம், ‘சீக்கிரமாய் உட்கார்ந்து, உனது கணக்கு சீட்டை எடுத்து, அதில் ஆயிரத்து ஐந்நூறு என்று எழுதிக்கொள்’ என்றான்.
“பின்பு அவன் இரண்டாவது ஆளிடம், ‘நீ எவ்வளவு கொடுக்க வேண்டியுள்ளது?’ என்று கேட்டான். லூக் 20:12லூக் 20:9உன்னத 8:11-12
“ ‘ஆயிரம் மூட்டை கோதுமை’ 2 என்று அவன் பதிலளித்தான்.
“அப்பொழுது அவன் அவனிடம், ‘உனது கணக்குச் சீட்டை எடுத்து, அதை எண்ணூறு என்று எழுதிக்கொள்’ என்றான்.
“அநீதியுள்ள அந்த நிர்வாகி, இப்படித் தந்திரமாக செயல்பட்டதை, அந்த எஜமான் பாராட்டினான். ஏனெனில் ஒளியின் மக்களைவிட, இந்த உலகத்தின் மக்கள் தங்களுடன் வாழ்கிறவர்களோடு, எப்படி நடந்துகொள்ள வேண்டும் என்பதில் புத்தியுள்ளவர்களாய் இருக்கிறார்கள். 1 தெச 5:5எபே 5:8யோவா 12:36லூக் 16:10நீதி 6:6-8யாத் 1:101 கொரி 3:181 யோவா 3:10 உங்களுக்கு நண்பர்களைச் சம்பாதித்துக் கொள்ளும்படி, உலகத்தின் செல்வத்தை உபயோகப்படுத்துங்கள். அது உங்களைவிட்டு எடுபடும் போது, நீங்கள் நித்தியமான குடியிருப்புகளில் வரவேற்கப்படுவீர்கள் என்று நான் உங்களுக்குச் சொல்கிறேன். மத் 19:211 தீமோ 6:17-19தானி 4:27மத் 6:24நீதி 19:17லூக் 14:14லூக் 16:111 தீமோ 6:9-10
“மிகச் சிறியவற்றில் உண்மையுள்ளவன், பெரியவற்றிலும் உண்மையுள்ளவனாய் இருப்பான். சிறியவற்றில் அநீதியுள்ளவனாய் இருக்கிறவன், பெரியவற்றிலும் அநீதியுள்ளவனாய் இருப்பான். லூக் 16:11-12மத் 25:21லூக் 19:17மத் 25:23எபி 3:2யோவா 12:6யோவா 13:27யோவா 13:2 எனவே, இந்த உலகத்தின் செல்வத்தைப் பயன்படுத்துவதில், நீங்கள் உண்மையற்றவர்களாய் இருந்தால், உண்மையான செல்வத்தை, யார் உங்களை நம்பி, உங்கள் கையில் கொடுப்பான்? லூக் 12:33யாக் 2:5நீதி 8:18-19எபே 3:8லூக் 16:9லூக் 18:22வெளி 3:18 இன்னொருவனுடைய சொத்தைக் கையாள்வதில் நீங்கள் நம்பகமாக நடக்கவில்லையென்றால், யார் தன் சொத்தை உங்களுக்கு சொந்தமாய் இருக்கும்படி கொடுப்பான்? லூக் 19:13-26யோபு 1:21மத் 25:14-291 நாளாக 29:14-161 பேது 1:4-5எசேக் 16:16-21கொலோ 3:3-4ஓசி 2:8
“எந்த வேலைக்காரனும், இரண்டு எஜமான்களுக்கு பணிசெய்ய முடியாது. அவன் ஒருவனை வெறுத்து, இன்னொருவனில் அன்பு செலுத்துவான். அல்லது அவன் ஒருவனுக்கு உண்மையுள்ளவனாய் இருந்து, மற்றவனை அலட்சியம் செய்வான். அப்படியே நீங்கள் இறைவனுக்கும், பணத்துக்கும் பணிசெய்ய முடியாது” என்றார். 1 யோவா 2:15-16மத் 6:24யாக் 4:4ரோம 8:5-8யோசு 24:15லூக் 14:26லூக் 11:23மத் 4:10
பண ஆசை பிடித்தவர்களான பரிசேயர் இதைக் கேட்டபோது, இயேசுவை ஏளனம் செய்தார்கள். லூக் 23:35லூக் 12:15லூக் 20:47ஏசா 56:11எரே 6:13எரே 8:10மத் 23:132 தீமோ 3:2 இயேசு அவர்களிடம் சொன்னதாவது: “நீங்கள் மனிதருடைய பார்வையில், உங்களை நீதிமான்கள் எனக் காண்பிக்கிறீர்கள். ஆனால் இறைவனோ, உங்கள் இருதயங்களை அறிவார். மனிதரிடையே உயர்வாய் மதிக்கப்படும் காரியங்கள், இறைவனுடைய பார்வையில் அருவருப்பாய் இருக்கிறது. 1 சாமு 16:7நீதி 21:21 கொரி 4:5எரே 17:10நீதி 16:5அப் 15:81 பேது 3:4லூக் 11:39
கூடுதல் போதனைகள்
“மோசேயின் சட்டமும், இறைவாக்கினரின் வார்த்தைகளும், யோவான் ஸ்நானகனுடைய காலம்வரைக்கும் அறிவிக்கப்பட்டன. ஆனால் அந்தக் காலத்திலிருந்தே, இறைவனுடைய அரசைப்பற்றிய நற்செய்தி பிரசங்கிக்கப்படுகிறது. எல்லோரும் பலவந்தமாய் அதற்குள் செல்வதற்கு முயற்சிக்கிறார்கள். மத் 11:9-14மத் 21:32அப் 3:24-25மத் 3:2யோவா 1:45லூக் 16:31லூக் 7:26-29அப் 3:18 வானமும், பூமியும் மறைந்து போகலாம், மோசேயின் சட்டத்தில் இருக்கிற எழுத்தின் சிறிய புள்ளிகூட மறைந்துபோகாது. மத் 5:18லூக் 21:331 பேது 1:25ஏசா 40:8ரோம 3:31ஏசா 51:6சங் 102:25-27வெளி 20:11
“தனது மனைவியை விவாகரத்து செய்துவிட்டு, இன்னொரு பெண்ணைத் திருமணம் செய்பவன், விபசாரம் செய்கிறான். விவாகரத்து செய்யப்பட்ட ஒரு பெண்ணை யாராவது திருமணம் செய்தால், அவனும் விபசாரம் செய்கிறான். மத் 19:9மாற் 10:11-12மத் 5:31-321 கொரி 7:10-121 கொரி 7:4
செல்வந்தனும் லாசருவும்
“ஒரு பணக்காரன் இருந்தான். அவன் கருஞ்சிவப்பும் மென்பட்டுமான உடை உடுத்தி, ஒவ்வொரு நாளும் சுகபோகமாய் வாழ்ந்து கொண்டிருந்தான். எசேக் 16:49லூக் 18:24-25ஆமோ 6:4-6எசேக் 27:7யாக் 5:1-5எசேக் 16:13நியாயாதி 8:26யோபு 21:11-15 அவனுடைய வாசலருகே, லாசரு என்னும் ஒரு பிச்சைக்காரன் படுத்திருந்தான். அவன் புண்கள் நிறைந்தவனாய், அப் 3:2யாக் 2:5யோபு 2:71 சாமு 2:8ஏசா 1:6யாக் 1:9லூக் 16:21சங் 34:19 பணக்காரனின் மேஜையில் இருந்து விழுவதைச் சாப்பிடுவதற்கு ஆசையாயிருந்தான். நாய்களுங்கூட வந்து, அவன் புண்களை நக்கின. மத் 15:27யோவா 6:12மாற் 7:281 கொரி 4:112 கொரி 11:27
“காலப்போக்கில் அந்தப் பிச்சைக்காரன் இறந்தான். தேவதூதர்கள் அவனைத் தூக்கிக்கொண்டுபோய், ஆபிரகாமின் மடியிலே 3 அமர்த்தினார்கள். அந்தப் பணக்காரனும் இறந்து அடக்கம்பண்ணப்பட்டான். 1 பேது 2:24சங் 49:16-19வெளி 14:13யாக் 1:11பிரச 8:10மத் 18:10நீதி 14:32சங் 49:6-12 அவன் நரகத்திலே வேதனைப்பட்டுக் கொண்டிருந்தான். அவன் மேலே நோக்கிப் பார்த்தபோது, தூரத்திலே ஆபிரகாமையும், அவனுடைய மார்பில் சாய்ந்திருந்த லாசருவையும் கண்டான். 2 பேது 2:4லூக் 16:28மத் 18:9மத் 23:33சங் 9:17வெளி 14:10-11ஏசா 14:15ஏசா 14:9 எனவே அவன், ‘தந்தை ஆபிரகாமே’ என்று அவனைக் கூப்பிட்டு, ‘என்னில் இரக்கம் கொண்டு, லாசரு தனது விரலின் நுனியைத் தண்ணீரில் தோய்த்து, என் நாவைக் குளிரப்பண்ணும்படி, அவனை அனுப்பும். நான் இந்த நெருப்பில் கிடந்து வேதனைப்படுகிறேனே’ என்றான். வெளி 22:1யோவா 4:10யோவா 4:14வெளி 7:16-17மத் 25:41யாக் 3:6ஏசா 66:24லூக் 16:30
“அதற்கு ஆபிரகாம் அவனிடம், ‘மகனே, நீ உன் வாழ்நாட்களில் நலன்களையே அனுபவித்தாய் என்பதை நினைவிற்கொள். லாசருவோ, இன்னல்களையே அனுபவித்தான். இப்பொழுது அவன், இங்கு ஆறுதல் பெறுகிறான். நீயோ வேதனைப்படுகிறாய். லூக் 6:241 யோவா 2:15சங் 17:14மாற் 9:45பிலி 3:19ரோம 8:7எபி 11:25சங் 37:35-36 இவை எல்லாவற்றையும் தவிர, உங்களுக்கும் எங்களுக்கும் இடையே ஒரு பெரும் பிளவு ஏற்படுத்தப்பட்டிருக்கிறது. இதனால், இங்கிருந்து உங்களிடத்திற்குக் கடந்துவர விரும்பினாலும் அப்படி வரமுடியாது. அங்கிருந்து எங்களிடத்திற்கு கடந்து வரவும், ஒருவராலும் முடியாது’ என்றான். யோவா 3:36சங் 49:14சங் 50:22மல்கி 3:182 தெச 1:4-10யாக் 1:11-12யாக் 5:1-7மத் 25:46
“அதற்கு அவன், ‘அப்படியானால் தகப்பனே, நான் உம்மிடம் கெஞ்சிக்கேட்கிறேன். லாசருவை என்னுடைய தகப்பன் வீட்டிற்கு அனுப்பும். ஏனெனில், எனக்கு ஐந்து சகோதரர் இருக்கிறார்கள். அவன் போய், அவர்களுக்கு எச்சரிக்கை செய்யட்டும். இந்த வேதனை நிறைந்த இடத்திற்கு, அவர்களும் வராமல் இருக்கட்டும்’ என்றான். அப் 2:40சங் 49:12-131 தெச 4:6அப் 20:23
“அதற்கு ஆபிரகாம் அவனிடம், ‘மோசேயும், இறைவாக்கினர்களும் எழுதிக் கொடுத்தவை அவர்களிடம் உண்டு; அவர்கள் அவற்றிற்கு செவிகொடுக்கட்டும்’ என்றான். அப் 15:21லூக் 16:16லூக் 24:272 பேது 1:19-212 தீமோ 3:15-17அப் 17:11-12ஏசா 34:16யோவா 5:39-47
“அதற்கு அவன், ‘இல்லை, தந்தை ஆபிரகாமே, இறந்தவர்களிலிருந்து ஒருவன் அவர்களிடம் போனால், அவர்கள் மனந்திரும்புவார்கள்’ என்றான். லூக் 16:24வெளி 16:9-11லூக் 3:8லூக் 13:5லூக் 13:3
“அப்பொழுது ஆபிரகாம் அவனிடம், ‘மோசேக்கும், இறைவாக்கினர்களுக்கும் அவர்கள் செவிகொடாவிட்டால், இறந்தவர்களிலிருந்து ஒருவன் உயிரோடு எழுந்து போனாலும், அவர்கள் நம்பமாட்டார்கள்’ என்று சொன்னான்.” 2 கொரி 4:3அப் 28:23யோவா 11:43-532 கொரி 5:11அப் 19:8அப் 26:28யோவா 12:10-11ஆதி 9:27