புதிய கற்பலகைகள். உபா. 1:1-5.
யெகோவா மோசேயை நோக்கி: “முந்தினக் கற்பலகைகளை போன்ற இரண்டு கற்பலகைகளை இழைத்துக்கொள்; நீ உடைத்துப்போட்ட முந்தின பலகைகளில் இருந்த வார்த்தைகளை அவைகளில் எழுதுவேன். யாத் 32:19உபா 10:1-4யாத் 31:18சங் 119:89யாத் 34:28உபா 9:15-17யாத் 32:16 அதிகாலையில் நீ ஆயத்தமாகி, சீனாய் மலையில் ஏறி, அங்கே மலையின் மேல் காலையில் என்னுடைய சமுகத்தில் வந்து நில். யாத் 19:20உபா 9:25யாத் 19:11யாத் 19:24யாத் 24:12 உன்னோடு ஒருவனும் அங்கே வரக்கூடாது; மலையில் எங்கும் ஒருவனும் காணப்படவும்கூடாது; இந்த மலையின் அருகில் ஆடுமாடு மேயவும்கூடாது” என்றார். யாத் 19:12-13யாத் 19:211 தீமோ 2:5எபி 12:20லேவி 16:17 அப்பொழுது மோசே முந்தின கற்பலகைகளைப் போன்ற இரண்டு கற்பலகைகளை இழைத்து, அதிகாலையில் எழுந்து, யெகோவா தனக்குக் கட்டளையிட்டபடியே அந்த இரண்டு கற்பலகைகளையும் தன்னுடைய கையிலே எடுத்துக்கொண்டு, சீனாய் மலையில் ஏறினான். யெகோவா ஒரு மேகத்தில் இறங்கி, அங்கே அவன் அருகே நின்று, யெகோவாவுடைய நாமத்தைக் கூறினார். யாத் 33:19யாத் 33:9லூக் 9:34-35எண் 11:25எண் 11:17நீதி 18:10சங் 102:21உபா 32:3 யெகோவா அவனுக்கு முன்பாக கடந்துபோகிறபோது, அவர்: “யெகோவா, யெகோவா; இரக்கமும், கிருபையும், நீடிய சாந்தமும், மகா தயவும், சத்தியமுள்ள தேவன். சங் 86:15யோவே 2:13சங் 103:8-13சங் 145:8நெகே 9:17யோனா 4:2எண் 14:17-19சங் 86:5 ஆயிரம் தலைமுறைகளுக்கு இரக்கத்தைக் காக்கிறவர்; அக்கிரமத்தையும், மீறுதலையும், பாவத்தையும் மன்னிக்கிறவர்; குற்றவாளியைக் குற்றம் இல்லாதவனாக விடாமல், தகப்பன்மார்கள் செய்த அக்கிரமத்தைப் பிள்ளைகளிடத்திலும், பிள்ளைகளுடைய பிள்ளைகளிடத்திலும் மூன்றாம் நான்காம் தலைமுறைவரை தண்டிக்கிறவர்” என்று கூறினார். யாத் 20:5-6சங் 103:3உபா 5:9-10எபே 1:71 யோவா 1:9நாகூ 1:2-3எண் 14:18-23எரே 32:18 மோசே உடனே தரைவரைக்கும் குனிந்து பணிந்துகொண்டு: யாத் 4:312 நாளாக 20:18ஆதி 17:3 “ஆண்டவரே, உம்முடைய கண்களில் எனக்குக் கிருபை கிடைத்ததானால், எங்கள் நடுவில் ஆண்டவர் எழுந்தருளவேண்டும்; இந்த மக்கள் பிடிவாதமுள்ளவர்கள் 1; நீரோ, எங்களுடைய அக்கிரமத்தையும் எங்களுடைய பாவத்தையும் மன்னித்து, எங்களை உமக்குச் சுதந்திரமாக ஏற்றுக்கொள்ளும்” என்றான். சங் 33:12உபா 32:9சங் 94:14யாத் 33:13-17எரே 10:16சங் 135:4சங் 28:9யாத் 32:9
உடன்பட்டிக்கை மறுபடியும் செய்யப்பட்டது.
யாத் 14:23; உபா 7:1-5; 16:1-17
அதற்கு அவர்: “இதோ, நான் ஒரு உடன்படிக்கை செய்கிறேன்; பூமியெங்கும் எந்த தேசங்களிடத்திலும் செய்யப்படாத அதிசயங்களை உன்னுடைய மக்கள் எல்லோருக்கும் முன்பாகவும் செய்வேன்; உன்னோடு இருக்கிற மக்கள் எல்லோரும் யெகோவாவுடைய செயல்களைக் காண்பார்கள்; உன்னோடு இருந்து, நான் செய்யும் காரியம் பயங்கரமாக இருக்கும். உபா 10:21சங் 77:14ஏசா 64:3சங் 66:5எரே 32:212 சாமு 7:23சங் 66:3சங் 78:12 இன்று நான் உனக்குக் கட்டளையிடுகிறதைக் கைக்கொள்; எமோரியர்களையும், கானானியர்களையும், ஏத்தியர்களையும், பெரிசியர்களையும், ஏவியர்களையும், எபூசியர்களையும் உனக்கு முன்பாகத் துரத்திவிடுகிறேன். யாத் 33:2உபா 6:25யாத் 3:17உபா 6:3யாத் 3:8ஆதி 15:18-21உபா 12:28உபா 12:32 நீ போய்ச் சேருகிற தேசத்தின் குடிகளோடு உடன்படிக்கை செய்யாதபடி எச்சரிக்கையாக இரு; செய்தால் அது உன்னுடைய நடுவில் கண்ணியாக இருக்கும். யாத் 23:32-33யோசு 23:12-13உபா 7:2உபா 7:16நியாயாதி 2:2-3சங் 106:36நியாயாதி 8:27 அவர்களுடைய பலிபீடங்களை இடித்து, சிலைகளைத் தகர்த்து, தோப்புகளை வெட்டிப்போடுங்கள். 2இராஜா 18:4உபா 7:25-26உபா 7:5யாத் 23:24உபா 12:2-3உபா 16:212 நாளாக 31:12 நாளாக 34:3-4 யெகோவாவுடைய நாமம் எரிச்சலுள்ளவர் என்பது, அவர் எரிச்சலுள்ள தேவன்; ஆகையால், அந்நிய தேவனை நீ பணிந்துகொள்ளவேண்டாம். உபா 4:24உபா 32:211 கொரி 10:22யாத் 20:3-5மத் 4:10நாகூ 1:2உபா 29:20உபா 6:15 அந்த தேசத்தின் குடிகளோடு உடன்படிக்கை செய்வாயானால், அவர்கள் தங்களுடைய தெய்வங்களைப் பின்பற்றி, விபசாரம் செய்வார்கள், தங்களுடைய தெய்வங்களுக்குப் பலியிடுவார்கள்; ஒருவன் உன்னை அழைக்கும்போது, நீ போய், அவனுடைய பலி செலுத்தியதில் சாப்பிடுவாய்; நியாயாதி 2:171 கொரி 8:4உபா 31:16எண் 25:2சங் 106:281 கொரி 10:271 கொரி 8:101 கொரி 10:20-21 அவர்கள் மகள்களில் உன்னுடைய மகன்களுக்கு பெண்களை எடுப்பாய்; அவர்கள் மகள்கள் தங்களுடைய தெய்வங்களை விபசார மார்க்கமாகப் பின்பற்றுவதும் இல்லாமல், உன்னுடைய மகன்களையும் தங்களுடைய தெய்வங்களை விபசார மார்க்கமாகப் பின்பற்றும்படி செய்வார்கள். 1 இராஜா 11:2-4உபா 7:3-4எஸ்றா 9:2நெகே 13:25எண் 25:1-2நெகே 13:232 கொரி 6:14-17 வார்ப்பிக்கப்பட்ட தெய்வங்களை உங்களுக்கு உண்டாக்கவேண்டாம். லேவி 19:4யாத் 32:8ஏசா 46:6-7அப் 17:29அப் 19:26எரே 10:14 புளிப்பில்லாத அப்பப்பண்டிகையை நீங்கள் கைக்கொண்டு, நான் உங்களுக்குக் கட்டளையிட்டபடியே, ஆபீப் மாதத்தில் குறித்த காலத்தில் ஏழுநாட்கள் புளிப்பில்லாத அப்பம் சாப்பிடுவீர்கள்; ஆபீப் மாதத்தில் எகிப்திலிருந்து புறப்பட்டாயே. யாத் 13:4லேவி 23:6உபா 16:1-4யாத் 13:6-7அப் 12:3யாத் 12:15-20யாத் 12:2யாத் 23:15 கர்ப்பம்திறந்து பிறக்கிற அனைத்தும், உன்னுடைய ஆடுமாடுகளின் முதற்பிறப்பான ஆண்கள் யாவும் என்னுடையவைகள். யாத் 13:2யாத் 22:29யாத் 13:12எண் 18:15-17எசேக் 44:30லூக் 2:23 கழுதையின் முதற்பிறப்பை ஒரு ஆட்டுக்குட்டியால் மீட்டுக்கொள்வாயாக; அதை மீட்டுக்கொள்ளாமல் இருந்தால் அதின் கழுத்தை முறித்துப்போடு; உன்னுடைய பிள்ளைகளில் முதலில் பிறந்தவைகளையெல்லாம் மீட்டுக்கொள்ளவேண்டும். வெறுங்கையோடு என்னுடைய சந்நிதியில் ஒருவனும் வரக்கூடாது. யாத் 13:13உபா 16:16யாத் 23:15யாத் 13:15எண் 18:151 சாமு 9:7-82 சாமு 24:24யாத் 13:10 ஆறுநாட்கள் வேலைசெய்து, ஏழாம் நாளில் ஓய்ந்திரு; விதைப்புக் காலத்திலும் அறுப்புக் காலத்திலும் ஓய்ந்திரு. யாத் 23:121 சாமு 8:12உபா 21:4யாத் 35:2லூக் 13:14உபா 5:12-15ஏசா 30:24லூக் 23:56 கோதுமை அறுப்பின் முதற்பலனைச் செலுத்தும் ஏழு வாரங்களின் பண்டிகையையும், வருடமுடிவிலே சேர்ப்புக்கால பண்டிகையையும் அனுசரி. யாத் 23:16உபா 16:10-15யோவா 7:2எண் 28:16-31அப் 2:1எண் 29:12-39 வருடத்தில் மூன்றுமுறை உங்களுடைய ஆண்மக்கள் எல்லோரும் இஸ்ரவேலின் தேவனாக இருக்கிற யெகோவாகிய ஆண்டவரின் சந்நிதியில் வரவேண்டும். யாத் 23:14உபா 16:16யாத் 23:17ஆதி 32:28ஆதி 33:20சங் 84:7 நான் தேசங்களை உங்களுக்கு முன்பாகத் துரத்திவிட்டு, உங்களுடைய எல்லைகளை விரிவாக்குவேன்; வருடத்தில் மூன்றுமுறை உங்களுடைய தேவனாகிய யெகோவாவுடைய சந்நிதிக்கு முன்பாக தோன்றும்போது ஒருவரும் உங்களுடைய தேசத்தின் மீது படையெடுக்க ஆசைப்படுவதில்லை. சங் 78:55யாத் 33:21 நாளாக 4:10அப் 18:10உபா 12:20நீதி 16:7உபா 19:8உபா 7:1 எனக்கு செலுத்தும் பலியின் இரத்தத்தைப் புளித்தமாவுடன் செலுத்தவேண்டாம்; பஸ்கா பண்டிகையின் பலியை அதிகாலைவரை வைக்கவும் வேண்டாம். யாத் 23:18யாத் 12:101 கொரி 5:7-8உபா 16:3யாத் 12:20யாத் 12:8எண் 9:12யாத் 29:34 உங்களுடைய நிலத்தில் முதல் முதல் விளைந்த முதற்பலனை உங்களுடைய தேவனாகிய யெகோவாவின் ஆலயத்திற்குக் கொண்டுவாருங்கள். வெள்ளாட்டுக்குட்டியை அதினுடைய தாயின் பாலிலே சமைக்கவேண்டாம்” என்றார். யாத் 23:19உபா 14:21உபா 26:21 கொரி 15:20உபா 26:10மத் 6:33நீதி 3:9-10யாக் 1:18 பின்னும் யெகோவா மோசேயை நோக்கி: “இந்த வார்த்தைகளை நீ எழுது; இந்த வார்த்தைகளின்படி உன்னோடும் இஸ்ரவேலோடும் உடன்படிக்கை செய்தேன்” என்றார். யாத் 24:4உபா 31:9உபா 4:13யாத் 17:14யாத் 24:7யாத் 34:10 அங்கே அவன் அப்பம் சாப்பிடாமலும் தண்ணீர் குடிக்காமலும் இரவும் பகலும் நாற்பதுநாட்கள் யெகோவாவோடு இருந்தான்; அவன் பத்துக்கற்பனைகளாகிய உடன்படிக்கையின் வார்த்தைகளைப் பலகைகளில் எழுதினான். யாத் 34:1உபா 4:13உபா 9:18உபா 9:25யாத் 24:18யாத் 31:18யாத் 32:162 கொரி 3:7
பிரகாசமான மோசேயின் முகம்
மோசே உடன்படிக்கையின் கட்டளைப் பலகைகள் இரண்டையும் தன்னுடைய கையில் எடுத்துக்கொண்டு, சீனாய் மலையிலிருந்து இறங்குகிறபோது, தன்னோடு அவர் பேசினதாலே தன்னுடைய முகம் பிரகாசமாக இருப்பதை அவன் அறியாமல் இருந்தான். மத் 17:2லூக் 9:29யாத் 32:15வெளி 1:162 கொரி 3:132 கொரி 3:7-9வெளி 10:1அப் 6:15 ஆரோனும் இஸ்ரவேலர்கள் எல்லோரும் மோசேயைப் பார்க்கும்போது, அவன் முகம் பிரகாசமாக இருப்பதைக் கண்டு, அவன் அருகில் வரப்பயந்தார்கள். மாற் 9:3லூக் 5:8மாற் 9:15எண் 12:8 மோசே அவர்களை அழைத்தான்; அப்பொழுது ஆரோனும் சபையிலுள்ள தலைவர்கள் அனைவரும் அவனிடத்திற்குத் திரும்பி வந்தார்கள்; மோசே அவர்களுடன் பேசினான். யாத் 3:15யாத் 24:1-3ஆதி 45:15ஆதி 45:3 பின்பு இஸ்ரவேல் மக்கள் எல்லோரும் அவனிடம் சேர்ந்தார்கள்; அப்பொழுது அவன் சீனாய் மலையில் யெகோவா தன்னோடு பேசினவைகளையெல்லாம் அவர்களுக்குக் கற்பித்தான். 1 கொரி 11:231 கொரி 15:31 இராஜா 22:14யாத் 21:1யாத் 24:3மத் 28:20எண் 15:40 மோசே அவர்களுடன் பேசி முடியும்வரை, தன்னுடைய முகத்தின்மேல் முக்காடு போட்டிருந்தான். 2 கொரி 4:4-62 கொரி 3:13-18ரோம 10:4 மோசே யெகோவாவுடைய சந்நிதியில் அவரோடு பேசும்படி உள்ளே நுழைந்ததுமுதல் வெளியே புறப்படும்வரை முக்காடு போடாமல் இருந்தான்; அவன் வெளியே வந்து தனக்குக் கற்பிக்கப்பட்டதை இஸ்ரவேலர்களுடன் சொல்லும்போது, 2 கொரி 3:16எபி 10:19-22எபி 4:16 இஸ்ரவேலர்கள் அவனுடைய முகம் பிரகாசமாக இருப்பதைக் கண்டார்கள். மோசே அவரோடு பேசும்படி உள்ளே நுழையும்வரை, முக்காட்டைத் திரும்பத் தன்னுடைய முகத்தின்மேல் போட்டுக்கொள்ளுவான். யாத் 34:29-30தானி 12:3பிரச 8:1யோவா 5:35மத் 13:43மத் 5:16பிலி 2:15