தமிழ் வேதாகமம் Tamil Bible

உன்னதப்பாட்டு 2

Song 2
அத்தியாயம் 2

நான் சாரோனின் 1 ரோஜாவும், பள்ளத்தாக்குகளின் லீலிமலராக இருக்கிறேன். ஓசி 14:5ஏசா 57:15ஏசா 35:1-2உன்னத 5:13உன்னத 2:16உன்னத 6:3சங் 85:11

மணவாளன்

முட்களுக்குள்ளே லீலிமலர் எப்படியிருக்கிறதோ, 1 பேது 2:12ஏசா 55:13மத் 10:16மத் 6:28-29பிலி 2:15-16

அப்படியே இளம்பெண்களுக்குள்ளே எனக்குப் பிரியமானவளும் இருக்கிறாள்.

மணவாளி

காட்டுமரங்களுக்குள்ளே கிச்சிலி மரம் எப்படியிருக்கிறதோ, உன்னத 8:5எபி 1:1-6ஏசா 25:4ஏசா 32:2எபி 12:2யோவா 1:14-181 யோவா 1:3-4எசேக் 47:12

அப்படியே இளம் ஆண்களுக்குள்ளே என் நேசர் இருக்கிறார்;

அதின் நிழலிலே ஆர்வமுடன் உட்காருகிறேன்,

அதின் பழம் என் வாய்க்கு இனிப்பாக இருக்கிறது.

என்னை விருந்துசாலைக்கு அழைத்துக்கொண்டுபோனார்; யோவா 15:9-15ரோம 5:8-10ரோம 8:28-39உன்னத 1:4வெளி 3:20சங் 84:10ஏசா 11:10உன்னத 6:4

என்மேல் பறந்த அவருடைய கொடி நேசமே.

திராட்சைரசத்தால் என்னைத் தேற்றுங்கள், உன்னத 5:82 சாமு 6:19ஓசி 3:12 சாமு 13:1-2ஏசா 26:8-9லூக் 24:32பிலி 1:23சங் 119:130-131

கிச்சிலிப்பழங்களால் என்னை ஆற்றுங்கள்;

நேசத்தால் சோகமடைந்திருக்கிறேன்.

அவருடைய இடதுகை என் தலையின்கீழ் இருக்கிறது; ஏசா 54:5-10செப்ப 3:17எரே 32:41உன்னத 8:3-5எபே 5:25-29ஏசா 62:4-5யோவா 3:29நீதி 4:8

அவருடைய வலதுகை என்னை அணைத்துக்கொள்கிறது.

மணவாளன்

எருசலேமின் இளம்பெண்களே! உன்னத 3:5உன்னத 8:4உன்னத 1:5நீதி 5:19உன்னத 5:8-9எபே 5:22-33உன்னத 2:9உன்னத 5:16

எனக்குப் பிரியமானவளுக்கு மனதிருப்தி உண்டாகும்வரை

நீங்கள் அவளை விழிக்கச் செய்யாமலும்,

எழுப்பாமலும் இருக்கும்படி வெளிமான்கள்மேலும் வெளியின் மரைகள்மேலும் உங்களுக்கு ஆணையிடுகிறேன்.

நேசரின் வேண்டுகோள்

மணவாளி

இது என் நேசருடைய சத்தம்! யோவா 10:27ஏசா 52:7யோவா 3:29வெளி 3:20உன்னத 2:172 சாமு 6:16அப் 14:10அப் 3:8

இதோ, அவர் மலைகளின்மேல் குதித்தும் மேடுகளின்மேல் துள்ளியும் வருகிறார்.

என் நேசர் வெளிமானுக்கும் மரைக்குட்டிக்கும் ஒப்பாக இருக்கிறார்; உன்னத 8:14உன்னத 2:171 கொரி 13:121 பேது 1:10-122 கொரி 3:13-182 சாமு 2:18கொலோ 2:17எபே 2:14-15

இதோ, அவர் எங்கள் மதிலுக்கு வெளியே நின்று

சன்னல் வழியாகப் பார்த்து,

தட்டியின் வழியாகத் தமது மலர்ந்த முகத்தைக் காண்பிக்கிறார்.

என் நேசர் என்னோடே பேசி: உன்னத 2:13உன்னத 4:7-8வெளி 22:172 கொரி 11:22 கொரி 6:17-18சங் 45:10-11வெளி 19:7-9உன்னத 2:8

மணவாளன்

என் பிரியமே!

என் அழகு மிகுந்தவளே! எழுந்துவா.

இதோ, மழைக்காலம் சென்றது, ஏசா 60:1-2பிரச 3:11எபே 5:8ஏசா 54:6-8பிரச 3:4ஏசா 40:2மத் 5:4வெளி 11:14-15

மழைபெய்து ஓய்ந்தது.

பூமியிலே மலர்கள் காணப்படுகிறது; ஏசா 55:12கொலோ 3:16எரே 8:7சங் 148:7-13சங் 89:15எபே 1:13-14எபே 5:18-20ஓசி 14:5-7

குருவிகள் பாடும் காலம் வந்தது,

காட்டுப்புறாவின் சத்தம் நமது தேசத்தில் கேட்கப்படுகிறது.

அத்திமரம் காய்காய்த்தது; உன்னத 2:102 கொரி 6:1-2ஏசா 55:10-11ஏசா 61:11லூக் 13:6-7உன்னத 7:11-132 கொரி 5:20ஆகா 2:19

திராட்சைக்கொடிகள் பூப்பூத்து

வாசனையும் நறுமணத்தையும் கொடுக்கிறது;

என் பிரியமே! என் அழகு மிகுந்தவளே!

நீ எழுந்து வா.

கன்மலையின் வெடிப்புகளிலும், எஸ்றா 9:5-6உன்னத 1:5உன்னத 5:2யாத் 3:6உன்னத 8:13யாத் 33:22-23யாத் 4:11-13எசேக் 7:16

மலையுச்சிகளின் மறைவிடங்களிலும் தங்குகிற என் புறாவே!

உன் முகத்தோற்றத்தை எனக்குக் காட்டு,

உன் சத்தத்தை நான் கேட்கட்டும்;

உன் சத்தம் இன்பமும்,

உன் முகத்தோற்றம் அழகுமாக இருக்கிறது என்றார்.

திராட்சைத் தோட்டங்களைக் கெடுக்கிற குழிநரிகளையும் லூக் 13:322 பேது 2:1-3உன்னத 7:12சங் 80:13எசேக் 13:4-16வெளி 2:2உன்னத 2:13

சிறுநரிகளையும் 2நமக்குப் பிடியுங்கள்;

நம்முடைய திராட்சைத்தோட்டங்கள்

பூவும் பிஞ்சுமாக இருக்கிறதே.

மணவாளி

என் நேசர் என்னுடையவர், உன்னத 6:3உன்னத 7:10எரே 31:33சங் 48:14சங் 63:11 கொரி 3:21-23கலா 2:20வெளி 21:2-3

நான் அவருடையவள்.

அவர் லீலிமலர்களுக்குள்ளே மேய்கிறார்.

என் நேசரே! பகல் குளிர்ச்சியாகி, உன்னத 4:62 பேது 1:19எபி 10:1எபி 8:5லூக் 1:78ரோம 13:12உன்னத 2:8-9உன்னத 8:14

நிழல் சாய்ந்துபோகும்வரைக்கும்,

நீர் திரும்பி, குன்றும் பிளப்புமான கன்மலைகளில்

குதித்துவரும் கலைமானுக்கும்

மரைகளின் குட்டிக்கும் சமானமாக இரும்.