கவனமாய் பற்றிக்கொள்ள எச்சரிக்கை
எனவே நாம் கேட்டறிந்த உண்மைகளை அதிக கவனமாய் பற்றிக்கொள்ள வேண்டும். அப்பொழுதுதான், நாம் அவைகளிலிருந்து விலகிப்போகாமல் இருப்போம். லூக் 8:152 பேது 1:12-13நீதி 7:1-2நீதி 2:1-6உபா 4:9எபி 1:1-22 பேது 3:12 பேது 1:15 இறைவனின் தூதர்கள் மூலமாய் பேசப்பட்டசெய்தி உறுதிப்படுத்தியபடியால், அதை மீறியதற்கும், கீழ்ப்படியாததற்கும் நீதியான தண்டனை கொடுக்கப்பட்டது. அப் 7:53கலா 3:19எபி 10:28யூதா 1:5உபா 27:26உபா 17:12உபா 17:5உபா 4:3-4 அப்படியானால், இப்படிப்பட்ட பெரிதான இரட்சிப்பை நாம் அலட்சியம் செய்தால், நாம் எப்படித் தப்பமுடியும்? இந்த இரட்சிப்போ முதலாவது கர்த்தராகிய இயேசுவினாலேயே அறிவிக்கப்பட்டது. அவர் சொன்னதைக் கேட்டவர்கள் அதை நமக்கு உறுதிப்படுத்தினார்கள். எபி 10:28-29எபி 12:25எபி 5:9அப் 4:121 பேது 4:17-18எசேக் 17:15ரோம 2:3எபி 1:2 இறைவனும் அடையாளங்களினாலும், அதிசயங்களினாலும், பலவித அற்புதங்களினாலும், தம்முடைய திட்டத்தின்படியே, பரிசுத்த ஆவியானவருடைய வரங்களையும் பகிர்ந்துகொடுத்து, அதற்குச் சாட்சி அளித்தார். அப் 14:3எபே 1:5மாற் 16:201 கொரி 12:4-11எபே 4:8-11ரோம 15:18-19அப் 19:11-12யோவா 4:48
இயேசு பூரண மானிடர்
வரப்போகும் உலகத்தைக்குறித்து நாம் பேசுகிறோமே, அதை இறைவன் தமது தூதர்களுக்குக் கீழ்ப்படுத்தவில்லை. வெளி 11:152 பேது 3:13எபி 6:5 ஒரு இடத்திலே ஒருவர் சாட்சியாய் சொல்லுகையில், சங் 8:4-8சங் 144:3யோபு 7:17-18ஏசா 51:12யோபு 15:14யோபு 25:6எபி 4:41 பேது 1:11
“இறைவனே, மனிதனில் நீர் கரிசனை கொள்வதற்கும்,
மானிடமகனில் நீர் அக்கறை கொள்வதற்கும் அவன் எம்மாத்திரம்?
நீர் அவர்களைத் தேவதூதர்களைப்பார்க்கிலும் சற்றுச் சிறியவர்களாகப் படைத்து 1, சங் 8:5பிலி 2:6-7
அவர்களை மகிமையினாலும் கனத்தினாலும் முடிசூட்டினீர்.
எல்லாவற்றையும் அவர்கள் பாதங்களுக்குக் கீழ்ப்படுத்தினீர்.” 2 யோவா 13:31 கொரி 15:27சங் 8:61 பேது 3:22தானி 7:141 கொரி 15:24-25எபே 1:21-22பிலி 2:9-11
இதில் இறைவன் எல்லாவற்றையும் அவர்களுக்குக் கீழ்ப்படுத்தினார் என்பதிலிருந்து, அவர் அவர்களுக்குக் கீழ்ப்படுத்தாமல் எதையுமே விட்டுவிடவில்லை என்பது தெளிவாகிறது. இருந்தபோதும் எல்லாம் அவர்களுக்கு இன்னும் அடிபணியவில்லை. ஆனாலும் சிறிது காலத்திற்கு இறைத்தூதர்களிலும் சற்றுச் சிறியவராக்கப்பட்ட இயேசுவோ, மரண வேதனையடைந்தவராய் இறைவனுடைய கிருபையினாலே, ஒவ்வொருவருக்காகவும் மரணத்தை ருசிப்பார்த்தபடியால் இப்பொழுது மகிமையினாலும் கனத்தினாலும் முடிசூட்டப்பட்டதைக் காண்கிறோம். பிலி 2:7-9வெளி 5:91 யோவா 2:21 யோவா 4:9-10ரோம 5:18அப் 2:332 கொரி 5:15யோவா 3:16
அநேக பிள்ளைகளை மகிமைக்குள் கொண்டுவரும் பொருட்டு, அவர்களது இரட்சிப்பின் மூலகாரணரான கிறிஸ்துவை, வேதனை அனுபவிப்பதன் மூலமாக, முழுநிறைவுள்ள மூலகாரணராய் இறைவன் ஆக்கியது அவருக்கேற்ற செயலே. இறைவனுக்காகவும், இறைவனின் மூலமாகவுமே எல்லாம் இருக்கின்றன. ரோம 11:36கொலோ 1:16-17எபி 5:8-91 கொரி 8:6அப் 5:31எபி 12:2எபி 6:20லூக் 24:26 பரிசுத்தமாக்குகிற அவரும், பரிசுத்தமாக்கப்படுகிறவர்களும் ஒரே குடும்பத்தினரே. அதனாலேயே இயேசு அவர்களைச் சகோதரர் என்று அழைப்பதற்கு வெட்கப்படாதிருக்கிறார். எபி 10:10ரோம 8:29எபி 10:14எபி 13:12யோவா 20:17மத் 12:48-50யோவா 17:19யோவா 17:21 இயேசு அவர்களைக்குறித்து சொல்லுகிறதாவது, சங் 22:22சங் 40:10யோவா 18:20சங் 111:1சங் 22:25
“நான் உம்முடைய பெயரை, எனது சகோதரர்களுக்கு அறிவிப்பேன்;
திருச்சபையின் முன்னிலையில் உம்முடைய துதிகளைப் பாடுவேன்.” 3
மேலும், ஏசா 8:17-18ஏசா 12:2சங் 91:2ஆதி 48:9யோவா 10:291 கொரி 4:152 சாமு 22:3ஆதி 33:5
“நான் அவரில் என் நம்பிக்கையை வைப்பேன், 4
இதோ நானும் இறைவன் எனக்குக் கொடுத்த பிள்ளைகளும் இங்கே இருக்கிறோம்” 5
என்றும் கூறியுள்ளார்.
பிள்ளைகள் இரத்தமும், மாம்சமும் உடையவர்களாய் இருக்கிறபடியால், அவர்களுடைய மனித இயல்பில் இயேசுவும் பங்குகொண்டார். அவருடைய மரணத்தினால், மரணத்தின் அதிகாரத்தைத் தன்னிடம் வைத்துக்கொண்டிருந்த பிசாசை அழிக்கும்படிக்கும், 2 தீமோ 1:10ரோம 8:3கொலோ 2:151 கொரி 15:54-57யோவா 1:14ஓசி 13:14ஏசா 25:8யோவா 12:31-33 தங்களுடைய வாழ்நாள் எல்லாம் சாவைக்குறித்த பயத்தினாலே, அடிமைகளாய் இருந்தவர்களை விடுதலை செய்யும்படிக்கும் அவர் மனித இயல்பில் பங்குகொண்டார். ரோம 8:152 தீமோ 1:7லூக் 1:74-752 கொரி 1:10சங் 55:4ரோம 8:211 கொரி 15:50-57சங் 89:48 இயேசு உதவிசெய்வது இறைத்தூதர்களுக்கு அல்ல, ஆபிரகாமின் சந்ததிக்கே. கலா 3:29கலா 3:16ரோம 4:16-25ஆதி 22:18எபி 12:10எபி 6:16ரோம 2:251 பேது 1:20 இதன் காரணமாகவே, இயேசு எல்லாவிதத்திலும் தம்முடைய சகோதரர்களைப்போல் ஆகவேண்டியிருந்தது. இறைவனுடைய ஊழியத்தில், அவர் இரக்கமும் உண்மையுள்ள பிரதான ஆசாரியன் ஆவதற்காகவும், மக்களுடைய பாவங்களுக்கான பாவநிவிர்த்தியைச் செய்வதற்காகவுமே, அவர் தம்முடைய சகோதரர்களைப் போலானார். எபி 4:14பிலி 2:7-8எபி 2:14ரோம 5:102 கொரி 5:18-21எபி 7:26தானி 9:24எபி 2:11 இயேசு சோதனைக்குட்பட்டபோது, வேதனைகளை அனுபவித்தபடியால், இப்பொழுது சோதிக்கப்படுகிறவர்களுக்கு, அவர் உதவிசெய்ய வல்லவராக இருக்கிறார். 1 கொரி 10:13எபி 4:15-16எபி 7:25-26யூதா 1:24எபி 5:22 தீமோ 1:12வெளி 3:102 பேது 2:9