பூமியின் அழிவு
இதோ, யெகோவா பூமியை அழித்து ஏசா 2:19நாகூ 2:10ஏசா 24:20ஏசா 42:152இராஜா 21:13எசேக் 12:20எசேக் 35:14ஏசா 6:11-12
சீர்குலைக்கப்போகிறார்.
அதன் மேற்பரப்பைப் பாழாக்கி,
குடிகளைச் சிதறடிப்பார்.
மக்களைப்போலவே ஆசாரியனுக்கும், ஓசி 4:9எசேக் 7:12-13புலம் 5:12-142 நாளாக 36:14-172 நாளாக 36:20தானி 9:5-8உபா 23:19-20எபே 6:8-9
வேலைக்காரனைப் போலவே தலைவனுக்கும்,
வேலைக்காரியைப் போலவே தலைவிக்கும்,
வாங்குபவனைப் போலவே விற்பவனுக்கும்,
இரவல் வாங்குபவனைப் போலவே இரவல் கொடுப்பவனுக்கும்,
கடனாளியைப்போலவே கடன் கொடுப்பவனுக்குமாக
எல்லோருக்கும் ஒரேவிதமாகவே நடக்கும்.
பூமி முழுவதும் அழிக்கப்பட்டு ஏசா 24:1ஏசா 6:112 நாளாக 36:21உபா 29:23உபா 29:28எசேக் 36:4ஏசா 21:17ஏசா 22:25
முழுமையாகக் கொள்ளையடிக்கப்படும்.
யெகோவாவே இந்த வார்த்தையைப் பேசியிருக்கிறார்.
பூமி வறண்டு வாடுகிறது, ஓசி 4:3ஏசா 2:11-12ஏசா 3:26ஏசா 33:9ஏசா 28:1ஏசா 64:6எரே 12:4எரே 4:28
உலகம் நலிந்து வாடுகிறது;
பூமியில் உயர்த்தப்பட்டவர்கள் தளர்ந்து போகிறார்கள்.
பூமி அதன் மக்களால் கறைப்படுத்தப்பட்டிருக்கிறது; எபி 13:20ரோம 8:20-21தானி 7:25எபி 9:12 நாளாக 33:92இராஜா 17:7-232இராஜா 22:13-172இராஜா 23:26-27
அவர்கள் சட்டங்களுக்குக் கீழ்ப்படியவில்லை.
அவர்கள் அதன் ஒழுங்குவிதிகளைச் சீர்குலைத்து,
நித்திய உடன்படிக்கையையும் மீறினார்கள்.
ஆகவே சாபம் பூமியைச் சூழ்ந்து பற்றிப் பிடித்திருக்கிறது. மல்கி 4:1மத் 7:14சகரி 5:3-4எசேக் 5:3லேவி 26:22மல்கி 4:6ரோம 9:272 பேது 3:10
பூமியின் மக்களே தங்கள் குற்றத்தைச் சுமக்கவேண்டும்.
ஆதலால் பூமியின் குடிகள் எரிக்கப்பட்டுப் போனார்கள்.
மிகச் சிலரே மீந்திருக்கிறார்கள்.
புதுத் திராட்சை இரசம் வற்றுகிறது, திராட்சைக்கொடி தளர்கிறது; ஏசா 16:10ஏசா 16:8யோவே 1:10-12ஓசி 9:1-2ஏசா 32:9-13
மகிழ்ச்சியாயிருக்கும் இதயங்களெல்லாம் பெருமூச்சு விடுகின்றன.
மேளத்தின் ஆனந்த ஒலி ஓய்ந்தது, ஓசி 2:11எசேக் 26:13எரே 7:34வெளி 18:22எரே 16:9எரே 25:10ஏசா 23:15-16ஏசா 5:12
களிகூர்ந்தவர்களின் சத்தமும் நின்றுவிட்டது;
யாழின் இன்னிசை அடங்கிற்று.
இனிமேல் அவர்கள் திராட்சை இரசத்தைப் பாட்டுடன் குடிப்பதில்லை, பிரச 9:7ஏசா 5:22ஆமோ 6:5-7ஆமோ 8:10ஆமோ 8:3எபே 5:18-19ஏசா 5:11-12ஏசா 5:20
மதுபானம் அதைக் குடிப்பவருக்குக் கசப்பாய் இருக்கும்.
அழிக்கப்பட்ட பட்டணம் பாழாய்க் கிடக்கிறது; வெளி 18:2வெளி 17:5-62இராஜா 25:42இராஜா 25:9-10ஆதி 11:9ஏசா 23:1ஏசா 24:12ஏசா 25:2
வீடுகளின் நுழைவாசல்கள் ஒவ்வொன்றும் அடைபட்டுக் கிடக்கும்.
அவர்கள் வீதிகளில் திராட்சை இரசத்திற்காக அழுகிறார்கள்; ஓசி 7:14ஆமோ 5:16-20ஏசா 16:10ஏசா 24:7-9ஏசா 32:13ஏசா 8:22ஏசா 9:19எரே 48:33
இன்பமெல்லாம் துன்பமாக மாறுகின்றன;
சந்தோஷம் அனைத்தும் பூமியினின்று அகற்றப்படுகின்றன.
பட்டணம் பாழாக விடப்பட்டிருக்கிறது, ஏசா 32:14எரே 9:11புலம் 1:1புலம் 1:4புலம் 2:9புலம் 5:18மீகா 1:12மீகா 1:9
அதன் வாசல் கதவுகள் துண்டுகளாக நொறுக்கப்பட்டிருக்கின்றன.
அப்பொழுது ஒலிவமரம் உலுக்கப்பட்டு, ஏசா 1:9எசேக் 11:16-20எசேக் 14:22-23எசேக் 6:8-11எசேக் 7:16எசேக் 9:4-6ஏசா 10:20-22ஏசா 17:5-6
பழம் பறித்தபின் சில பழங்கள் மீந்திருப்பது போலவும்,
திராட்சை அறுவடையின்பின் கிளைகளில்
சில பழங்கள் மீந்திருப்பது போலுமே
பூமியின்மேலும், நாடுகளின் இடையேயும்
மீந்திருப்போர் மட்டுமே விடப்பட்டிருப்பர்.
அவர்கள் தங்கள் குரல்களை உயர்த்தி, மகிழ்ச்சியுடன் சத்தமிடுகிறார்கள்; ஏசா 12:1-6ஏசா 25:1ஏசா 26:1ஏசா 27:2ஏசா 35:10ஏசா 35:2ஏசா 40:9ஏசா 44:23
அவர்கள் மேற்கிலிருந்து யெகோவாவின் மாட்சிமையைப் பாராட்டுகிறார்கள்.
ஆகவே கிழக்கிலே யெகோவாவை மகிமைப்படுத்துங்கள்; மல்கி 1:11ஏசா 42:10ஏசா 42:4ஏசா 49:1ஏசா 51:5ஏசா 60:91 பேது 1:71 பேது 3:15
கடலின் தீவுகளில் இஸ்ரயேலின்
இறைவனாகிய யெகோவாவின் பெயரைப் புகழ்ந்து உயர்த்துங்கள்.
“நீதியுள்ளவருக்கே மகிமை” ஏசா 21:2ஏசா 33:1எரே 3:20எரே 5:11அப் 13:47யாத் 15:11ஆப 1:3ஓசி 5:7
என்று பாடுவதை பூமியின் கடைசிகளிலிருந்து நாம் கேட்கிறோம்.
ஆனால் நானோ, “நான் அழிகிறேன், நான் அழிகிறேன்
ஐயோ எனக்குக் கேடு!
துரோகிகள் துரோகம் பண்ணுகிறார்கள்!
துரோகிகள் நம்பிக்கைத் துரோகம் செய்கிறார்கள்” என்றேன்.
பூமியின் குடிகளே, எரே 48:43-441 இராஜா 19:17ஆமோ 5:19எசேக் 14:21எரே 8:3லேவி 26:21-22
பயங்கரமும், படுகுழியும், கண்ணியுமே உங்களுக்காகக் காத்திருக்கின்றன.
பயங்கரத்தின் சத்தம் கேட்டு ஓடுபவன் ஆதி 7:11சங் 18:7ஆமோ 5:19யோபு 20:24யோசு 10:10-11சங் 18:15சங் 46:2-31 இராஜா 20:29-30
படுகுழிக்குள் விழுவான்.
குழியிலிருந்து வெளியேறுபவன்
கண்ணியில் அகப்படுவான்.
வானத்தின் மதகுகள் திறக்கப்பட்டிருக்கின்றன,
பூமியின் அஸ்திபாரங்கள் அசைகின்றன.
பூமி உடைந்து போயிருக்கிறது, ஏசா 34:4-10உபா 11:6ஏசா 24:1-5எரே 4:23-28நாகூ 1:5வெளி 20:11ஆப 3:6மத் 24:3
பூமி பிளக்கப்பட்டுப் போயிருக்கிறது,
பூமி அதிர்ந்து நடுங்குகிறது.
பூமி போதை கொண்டவன்போல் தள்ளாடுகிறது, ஏசா 19:14தானி 11:19ஏசா 29:9ஆமோ 8:14ஓசி 4:1-5வெளி 18:21புலம் 1:14சகரி 5:5-8
அது காற்றில் அடிபடும் கூடாரத்தைப்போல் அசைகிறது;
மீறுதலின் பாவம் அதன்மேல் அவ்வளவாய் இருப்பதால்,
ஒருபோதும் திரும்ப எழும்பாது விழுகிறது.
அந்த நாளிலே, மேலே வானத்தில் இருக்கும் வல்லமைகளையும், சங் 76:12சகரி 14:12-19ஏசா 34:2-17ஏசா 10:12சங் 149:6-9எசேக் 38:1-23ஏசா 10:25-27ஏசா 14:1-2
கீழே பூமியில் இருக்கும்
அரசர்களையும் யெகோவா தண்டிப்பார்.
இருண்ட அறைக்குள் கட்டப்பட்டுள்ள கைதிகளைப்போல், சகரி 9:11ஏசா 42:22எரே 38:6-13எசேக் 38:8ஏசா 10:4ஏசா 2:19ஏசா 24:17யோசு 10:16-17
அவர்கள் ஒன்றுசேர்க்கப்படுவார்கள்.
அவர்கள் சிறையில் அடைக்கப்பட்டு
அநேக நாட்களுக்குப்பின் தண்டிக்கப்படுவார்கள்.
சந்திரன் நாணமடையும், ஏசா 60:19ஏசா 13:10வெளி 21:23வெளி 22:5எபி 12:22ஏசா 12:6ஏசா 30:26மீகா 4:7
சூரியன் வெட்கமடையும்;
ஏனெனில், சேனைகளின் யெகோவா
சீயோன் மலையிலும் எருசலேமிலும்
அதன் முதியோர் முன்னிலையில் மகிமையோடு ஆளுகை செய்வார்.