ஏசாயா 48

Isaiah 48

பிடிவாதமுள்ள இஸ்ரயேல்

“யாக்கோபின் குடும்பத்தாரே, இதைக் கேளுங்கள். எரே 4:2சங் 68:26உபா 6:13ஆதி 32:28ஏசா 1:10-14ஏசா 65:16எரே 5:2எரே 7:9-10

இஸ்ரயேலின் பெயரால் அழைக்கப்படுகிறவர்களே,

யூதாவின் வம்சத்திலிருந்து வந்தவர்களே,

யெகோவாவின் பெயரினால் ஆணையிடுகிறவர்களே, கேளுங்கள்;

நீங்கள் இஸ்ரயேலின் இறைவனை வழிபடுகிறவர்கள்;

ஆயினும், நீங்கள் உண்மையுடனும், நீதியுடனும் அப்படிச் செய்யவில்லை.

நீங்கள் உங்களைப் பரிசுத்த நகரத்தின் குடிமக்களென்று சொல்லி, மீகா 3:11ஏசா 10:20ஏசா 52:1ரோம 2:17எரே 21:2மத் 27:531 சாமு 4:3-5தானி 9:24

இஸ்ரயேலின் இறைவனைச் சார்ந்திருக்கிறீர்கள்;

சேனைகளின் யெகோவா என்பது அவரது பெயர்.

முற்காலத்துக் காரியங்களை முன்கூட்டியே நான் உங்களுக்கு முன்னறிவித்தேன்; ஏசா 42:9ஏசா 41:22யோசு 21:45ஏசா 44:7-8ஏசா 45:21ஏசா 43:9ஏசா 46:9-10யோசு 23:14-15

எனது வாய் அவைகளை அறிவித்தது, நானே அவைகளைத் தெரியப்படுத்தினேன்.

பின்பு திடீரென நான் செயலாற்ற அவை நிறைவேறிற்று.

நீ எவ்வளவு பிடிவாதமுள்ளவனாயிருந்தாய் என்றும், அப் 7:51யாத் 32:9சகரி 7:11-12நீதி 29:1எசேக் 3:4-9ரோம 2:5எரே 19:15எரே 5:3

உன் கழுத்தின் தசைநார் இரும்பு என்றும்,

உன் நெற்றி வெண்கலமென்றும் நான் அறிந்திருந்தேன்.

ஆகையால் அவைகளை வெகுகாலத்திற்கு முன்னமே உனக்கு அறிவித்தேன்; ஏசா 48:3லூக் 1:70அப் 15:18எரே 44:15-18ஏசா 42:8-9ஏசா 44:7ஏசா 46:10

அவை நடைபெறும் முன்பே அவைகளை உனக்குக் கூறினேன்.

ஆதலால், ‘எனது விக்கிரகங்களே இவற்றைச் செய்தன;

எனது மரச்சிலையும், உலோகச் சிலையுமே இவற்றைத் திட்டமிட்டன’

என்று நீ சொல்லமுடியாது.

இவற்றை நீ கேட்டிருக்கிறாய்; இவை எல்லாவற்றையும் கவனி. வெளி 4:1ஏசா 42:9ரோம 16:25-26ஏசா 43:19ஏசா 43:8-10யோவா 15:15மத் 10:271 கொரி 2:9

இவற்றை நீ அறிவிக்கமாட்டாயோ?

“இதுமுதல் புதிய காரியங்களை நான் உனக்குச் சொல்வேன்,

இவைகளோ நீ அறியாத மறைவான காரியங்கள்.

அவை வெகுகாலத்திற்கு முன்பு அல்ல, இப்பொழுதுதான் உருவாக்கப்படுகின்றன;

நீ இதற்குமுன் அவைகளைப்பற்றிக் கேள்விப்பட்டிருக்கவில்லை.

ஆகவே, ‘ஆம், நான் அவைகளை அறிந்திருந்தேன்’

என்று உன்னால் சொல்லமுடியாது.

நீ கேள்விப்படவுமில்லை, அறியவுமில்லை; சங் 58:3ஓசி 5:7எசேக் 16:3-5ஏசா 42:19-20எரே 6:10யோவா 12:39-40மல்கி 2:11மத் 13:13-15

முந்திய காலத்திலிருந்தே உன் செவிகள் திறக்கப்பட்டிருக்கவில்லை.

நீ எவ்வளவு துரோகி,

பிறப்பிலிருந்தே நீ கலகக்காரன்; இதை நான் நன்கு அறிவேன்.

நான் என் பெயரின் நிமித்தமாகவே எனது கடுங்கோபத்தைத் தாமதமாக்குகிறேன்; சங் 79:9ஏசா 37:35சங் 106:8சங் 143:11சங் 78:381 சாமு 12:22தானி 9:17-19எசேக் 20:14

எனது புகழ்ச்சியின் நிமித்தமாகவே உன்னில் பொறுமையாயிருக்கிறேன்;

நீ அழிந்துபோகாதபடிக்கு எனது கோபத்தை உன்மேல் வரவிடாதிருக்கிறேன்.

இதோ, நான் உன்னைப் புடமிட்டுச் சுத்திகரித்தேன், ஆயினும் வெள்ளியைப்போலல்ல; 1 பேது 4:12நீதி 17:3யோபு 23:10எபி 12:10-11சங் 66:101 பேது 1:7எரே 9:7மல்கி 3:2-3

உபத்திரவத்தின் சூளையிலே உன்னைச் சோதித்துப்பார்த்தேன்.

என் நிமித்தமாக, என் நிமித்தமாகவே இதை நான் செய்கிறேன். ஏசா 42:8எசேக் 20:9எசேக் 20:14ஏசா 37:351 சாமு 12:22எசேக் 20:22ஏசா 43:25எரே 14:7

என் பெயர் களங்கப்பட நான் எப்படி இடமளிப்பேன்?

என் மகிமையை நான் வேறொருவருக்கும் கொடுக்கமாட்டேன்.

இஸ்ரயேலுக்கு சுதந்திரம்

“யாக்கோபே, நான் அழைத்த இஸ்ரயேலே, ஏசா 41:4வெளி 1:8வெளி 22:13ஏசா 44:6வெளி 17:14ரோம 8:28ஏசா 43:11ஏசா 55:3

எனக்குச் செவிகொடு,

நானே அவர்;

ஆரம்பமும் முடிவும் நானே.

என் சொந்தக் கரமே பூமியின் அஸ்திபாரங்களை அமைத்தது; எபி 1:10-12சங் 102:25யாத் 20:11ஏசா 45:18ஏசா 40:26ஏசா 42:5ஏசா 40:12சங் 119:89-91

என் வலதுகரம் வானங்களை விரித்தது;

நான் அவைகளை அழைப்பிக்கின்றபோது,

அவை ஒன்றாய் எழுந்து நிற்கும்.

“நீங்கள் எல்லோரும் ஒன்றாய் கூடிவந்து, நான் சொல்வதைக் கேளுங்கள்: ஏசா 43:9ஏசா 13:17-18எரே 50:21-29ஏசா 13:4-5ஏசா 41:22ஏசா 45:20-21ஏசா 46:10-11எரே 51:20-24

உங்கள் விக்கிரகங்களில் எது இந்தக் காரியங்களை முன்னறிவித்தது?

யெகோவாவுக்குப் பிரியமானவன்

அவருடைய நோக்கத்தை, பாபிலோனுக்கு விரோதமாக நிறைவேற்றுவான்;

அவனுடைய கை பாபிலோனியர்களுக்கு விரோதமானதாகவே இருக்கும்.

நான், நானே பேசினேன்; யோசு 1:8ஏசா 45:1-2சங் 45:4எசேக் 1:2

மெய்யாகவே நான் அவனை அழைத்தேன்.

நான் அவனைக் கொண்டுவருவேன்,

அவன் தன்னுடைய பணியில் வெற்றிபெறுவான்.

“நீங்கள் என் அருகே வந்து இதைக் கேளுங்கள்: யோவா 18:20யோவா 20:21-22ஏசா 45:19ஏசா 61:1-3யோவா 3:34ஏசா 11:1-5லூக் 4:18ஏசா 48:3-6

“முதல் அறிவிப்பிலிருந்தே நான் இரகசியமாய்ப் பேசவில்லை;

அது நடைபெற்ற காலத்தில் நான் அங்கு இருக்கிறேன்.”

இப்பொழுது ஆண்டவராகிய யெகோவா தமது

ஆவியானவருடன் என்னை அனுப்பியிருக்கிறார்.

யெகோவா சொல்வது இதுவே, சங் 32:8சங் 25:12யோபு 22:21-22உபா 8:17-18ஏசா 30:20சங் 73:24ஏசா 54:13யோபு 36:22

இஸ்ரயேலரின் பரிசுத்தராகிய உங்கள் மீட்பர் சொல்கிறதாவது:

“உங்கள் இறைவனாகிய யெகோவா நானே,

மிக நன்மையானவற்றை உங்களுக்குக் போதிக்கிறவர் நானல்லவா?

நீங்கள் போகவேண்டிய பாதையில் உங்களை வழிநடத்துகிறவர் நானல்லவா?

என்னுடைய கட்டளைகளுக்கு நீங்கள் கவனம் செலுத்தியிருந்தால், உபா 5:29ஏசா 66:12சங் 119:165சங் 81:13-16உபா 32:29ஏசா 45:8லூக் 19:41-42சங் 36:8

உங்களுடைய சமாதானம் நதியைப்போல் இருந்திருக்கும்;

உங்களுடைய நீதி கடலின் அலைகளைப்போல இருந்திருக்கும்.

உங்கள் சந்ததிகள் மணலைப்போல் இருந்திருப்பார்கள்; ஏசா 10:22ஆதி 22:17ஓசி 1:10எரே 33:22ரோம 9:271 இராஜா 9:7ஆதி 13:16ஏசா 14:22

உங்களுடைய பிள்ளைகள் அந்த மணலின் எண்ணற்ற துகள்களைப்போல இருந்திருப்பார்கள்;

அவர்களுடைய பெயர்கள் என் முன்னிலையில் இருந்து நீங்காமலும்,

அழிக்கப்படாமலும் இருந்திருக்கும்.”

பாபிலோனைவிட்டு வெளியேறுங்கள், ஏசா 52:9எரே 50:8எரே 51:45எரே 51:6வெளி 18:4சகரி 2:6-7யாத் 15:1-21யாத் 19:4-6

பாபிலோனியர்களை விட்டுத் தப்பியோடுங்கள்!

ஆனந்த சத்தமிட்டு அதை அறிவித்துப்

பிரசித்தப்படுத்துங்கள்!

யெகோவா தனது பணியாளன் யாக்கோபை மீட்டிருக்கிறார் என்று சொல்லி,

அந்தச் செய்தியைப் பூமியின் கடைசி எல்லைவரை அனுப்புங்கள்;

அவர் அவர்களை பாலைவனத்தின் வழியாக வழிநடத்தியபோது, அவர்கள் தாகமடையவில்லை; ஏசா 43:19-20சங் 105:41ஏசா 41:17-18யாத் 17:6ஏசா 35:6-7எண் 20:11சங் 78:20ஏசா 30:25

அவர் அவர்களுக்காக கற்பாறையிலிருந்து தண்ணீரைப் பாயச்செய்தார்.

அவர் பாறையைப் பிளந்தார்,

தண்ணீர் பொங்கி வழிந்தது.

“கொடுமையானவர்களுக்கு சமாதானம் இல்லை” என்று யெகோவா சொல்கிறார். ஏசா 57:21யோபு 15:20-24லூக் 19:42ரோம 3:17