யெகோவா யோபுக்கு மறுமொழி கொடுத்தல்
அப்பொழுது யெகோவா பெருங்காற்றிலிருந்து யோபுவுடன் பேசினார்: யோபு 40:61 இராஜா 19:112இராஜா 2:11யாத் 19:16-19யோபு 37:1-22இராஜா 2:1உபா 4:11-12எசேக் 1:4
“அறிவற்ற வார்த்தைகளினால் யோபு 42:3யோபு 35:161 தீமோ 1:7யோபு 34:35யோபு 27:11யோபு 12:3யோபு 23:4-5யோபு 24:25
என் ஆலோசனையை தெளிவற்றதாக்குகிற இவன் யார்?
இப்பொழுது நீ ஒரு திடமனிதனாய் நில்; யோபு 40:7யாத் 12:11எரே 1:171 இராஜா 18:461 பேது 1:13யோபு 13:15யோபு 13:22யோபு 23:3-7
நான் உன்னிடம் கேள்வி கேட்கப்போகிறேன்,
நீ எனக்குப் பதில் சொல்லவேண்டும்.
“நான் பூமிக்கு அஸ்திபாரம் போடும்போது நீ எங்கேயிருந்தாய்? சங் 104:5எபி 1:10நீதி 30:4எபி 1:2ஆதி 1:1சங் 102:25நீதி 8:22நீதி 8:29-30
உனக்கு விளங்கினால் அதை எனக்குச் சொல்.
அதின் அளவைக் குறித்தவர் யார்? அதின்மேல் அளவுநூலைப் பிடித்தது யார்? ஏசா 40:12யோபு 11:9சகரி 2:1-22 கொரி 10:16ஏசா 34:11ஏசா 40:22யோபு 28:25நீதி 8:27
நீ சொல், உனக்குத் தெரிந்திருக்குமே!
அதின் தூண்கள் எதன்மேல் அமைக்கப்பட்டிருக்கின்றன? யோபு 26:7சங் 104:5சங் 93:12 பேது 3:5ஏசா 28:16சங் 118:22சகரி 12:1எபே 2:20-21
அதின் மூலைக்கல்லை வைத்தவர் யார்?
அப்பொழுது விடிவெள்ளிகள் ஒன்றாகக்கூடி பாட்டுப்பாடின; வெளி 5:11யோபு 1:6எஸ்றா 3:11-12வெளி 22:16யோபு 2:1சங் 104:4வெளி 2:28சகரி 4:7
இறைத்தூதர்கள் ஒன்றுகூடி மகிழ்ச்சியால் ஆர்ப்பரித்தனரே.
“கடல் தன் கருப்பையிலிருந்து வெடித்து வெளிப்பட்டபோது, ஆதி 1:9எரே 5:22நீதி 8:29சங் 104:8-9சங் 33:7யோபு 38:10
அதைக் கதவுகளுக்குப் பின்வைத்து அடைத்தவர் யார்?
நான் மேகத்தை அதற்கு உடையாக வைத்தபோதும், ஆதி 1:2
காரிருளினால் அதைச் சுற்றியபோதும்,
நான் அதற்கு எல்லைகளை அமைத்துத் எரே 5:22சங் 104:9யோபு 26:10சங் 33:7ஆதி 1:9-10ஆதி 9:15
தாழ்ப்பாள்களையும் கதவுகளையும் வைத்தபோது நீ எங்கேயிருந்தாய்?
நான் அதனிடம், ‘நீ இதுவரை வா, மீறி வராதே; சங் 89:9நீதி 8:29மாற் 4:39-41சங் 65:6-7லூக் 8:32-33ஏசா 27:8யோபு 2:6சங் 93:3-4
உன் அகங்கார அலைகள் அடங்குவதாக’ என்று சொன்னபோது நீ எங்கேயிருந்தாய்?
“உன் வாழ்நாளில் காலைநேரத்திற்குக் கட்டளையிட்டு, சங் 74:16ஆதி 1:5சங் 148:3-5யோபு 8:92 பேது 1:19லூக் 1:78சங் 136:7-8யோபு 15:7
அதிகாலைப்பொழுதுக்கு அதின் இடத்தைக் காட்டினதுண்டோ?
இவ்வாறு, பூமியின் ஓரங்களைப் பிடித்து யோபு 37:3சங் 104:35யாத் 14:27யோபு 24:13-17சங் 104:21-22சங் 139:9-12சங் 19:4-6
அதிலிருந்து கொடியவர்களை உதறித் தள்ளும்படி சொன்னதுண்டோ?
முத்திரையிடப்பட்ட களிமண்போல் பூமி உருப்பெறுகிறது; சங் 104:6சங் 104:2
அதின் இயற்கைத் தோற்றங்களும் உடைகளைப்போல் நிற்கின்றன.
கொடியவர்களுக்கு வெளிச்சம் மறுக்கப்படுகிறது; சங் 10:15யோபு 18:5சங் 37:17நீதி 4:19யாத் 10:21-23எசேக் 30:22யோபு 18:18யோபு 5:14
உயர்த்தப்பட்ட அவர்களின் புயம் முறிக்கப்படும்.
“கடலின் ஊற்றுக்களுக்கு நீ போனதுண்டோ? நீதி 8:24யோபு 26:5-6சங் 77:19எரே 51:36
அல்லது ஆழத்தின் உள்ளிடங்களில் நடந்திருக்கிறாயோ?
மரண வாசல்கள் உனக்குக் காண்பிக்கப்பட்டதுண்டோ? சங் 9:13சங் 107:18யோபு 3:5யோபு 12:22சங் 107:10சங் 107:14சங் 23:4ஆமோ 5:8
மரண இருளின் வாசல்களை நீ கண்டதுண்டோ?
பூமியின் அகன்ற வெளிகளை நீ விளங்கிக்கொண்டாயோ? எரே 31:37சங் 89:11-12வெளி 20:9ஏசா 40:28யோபு 28:24சங் 74:17
இவைகளெல்லாம் உனக்குத் தெரியுமானால் எனக்குச் சொல்.
“வெளிச்சம் வசிக்கும் இடத்திற்குப் போகும் வழி எது? எசேக் 32:8ஆமோ 4:13உபா 4:19ஆதி 1:14-18ஆதி 1:3-4ஏசா 45:7யோபு 38:12-13மத் 27:45
இருள் எங்கே குடியிருக்கிறது?
அவற்றை அவை இருக்கும் இடத்திற்குக் கூட்டிச்செல்ல உன்னால் முடியுமா? ஆதி 10:19ஆதி 23:17யோபு 26:10
அவைகள் தங்குமிடத்திற்கான பாதைகளை நீ அறிவாயோ?
இவை உனக்குத் தெரிந்திருக்குமே; யோபு 15:7யோபு 38:12யோபு 38:4
இவைகளுக்கு முன்னே நீ பிறந்து பல வருடங்கள் வாழ்ந்துவிட்டாய் அல்லவா!
“உறைபனியின் களஞ்சியங்களுக்குள் நீ போயிருக்கிறாயோ? யோபு 37:6சங் 135:7யோபு 6:16சங் 33:7
பனிக்கட்டி மழையின் களஞ்சியங்களைக் கண்டிருக்கிறாயோ?
கஷ்ட காலத்திலும், கலகமும் யுத்தமும் வரும் நாட்களிலும் பயன்படுத்தும்படி யோசு 10:11ஏசா 30:30யாத் 9:18எசேக் 13:11-13யோபு 36:13வெளி 16:21யாத் 9:24யோபு 36:31
நான் அவைகளைச் சேர்த்து வைத்திருக்கிறேன்.
மின்னல் புறப்படும் இடத்திற்கு வழி எங்கே? யோபு 38:12-13யோனா 4:8மத் 24:27
கீழ்காற்று பூமியின்மேல் வீசுவதற்கான வழி எங்கே?
பலத்த மழைக்கு வாய்க்காலை வெட்டுபவர் யார்? யோபு 28:26சங் 29:3-10யோபு 36:27-28யோபு 37:3-6
இடி மின்னலோடு வரும் மழைக்கு வழியை ஏற்படுத்துகிறவர் யார்?
ஒருவரும் குடியிராத நிலத்திற்கும், எரே 14:22எபி 6:7-8சங் 107:35ஏசா 35:1-2ஏசா 43:19-20யோபு 36:27சங் 104:10-14சங் 147:8-9
எவருமே இல்லாத பாலைவனத்திற்கும் பசுமையைக் கொடுப்பதற்காகவும்,
வனாந்திரமான பாழ்நிலத்தை பசுமையாக்கி, சங் 107:35சங் 104:14
அதில் புல் பூண்டுகளை முளைக்கப்பண்ணும்படி செய்கிறவர் யார்?
மழைக்கு ஒரு தகப்பன் உண்டோ? எரே 14:22சங் 147:8எரே 10:13நீதி 3:201 இராஜா 17:11 சாமு 12:17-182 சாமு 1:21ஆமோ 4:7
பனித்துளிகளைப் பெற்றெடுத்தவர் யார்?
யாருடைய கருப்பையிலிருந்து பனிக்கட்டி வருகிறது? சங் 147:16-17யோபு 37:10யோபு 38:8யோபு 6:16
வானங்களிலிருந்து வரும் உறைபனியைப் பெற்றெடுக்கிறவர் யார்?
தண்ணீர்கள் கல்லைப்போலவும், யோபு 37:10
ஆழத்தின் மேற்பரப்பு உறைந்துபோகவும் செய்கிறவர் யார்?
“அழகான கார்த்திகை நட்சத்திரத்தை நீ இணைக்கமுடியுமோ? ஆமோ 5:8யோபு 9:9
மிருகசீரிட நட்சத்திரத்தைக் கட்டவிழ்க்க உன்னால் முடியுமோ?
விடிவெள்ளிக் கூட்டங்களை அதினதின் காலத்தில் கொண்டுவருவாயோ? யோபு 38:312இராஜா 23:5யோபு 9:9
சிம்மராசி நட்சத்திரத்தையும் அதின் கூட்டத்தையும் வழிநடத்த உன்னால் முடியுமோ?
வானமண்டலத்தை ஆளும் சட்டங்களை நீ அறிவாயோ? எரே 31:35-36ஆதி 8:22ஆதி 1:16எரே 33:25யோபு 38:12-13சங் 148:6சங் 119:90-91
பூமியின்மேல் அவைகளின் ஆட்சியை நீ அமைப்பாயோ?
“நீ மேகங்களுக்குச் சத்தமிட்டுச் சொல்லி யோபு 22:111 சாமு 12:18ஆமோ 5:8யாக் 5:18யோபு 36:27-28சகரி 10:1
வெள்ளம் உன்னை மூடும்படிச் செய்வாயோ?
மின்னல்களின் தாக்குதல்களை அதின் வழியிலே அனுப்புவது நீயா? யோபு 36:32யோபு 37:31 சாமு 22:122இராஜா 1:102இராஜா 1:14யாத் 9:23-25யாத் 9:29ஏசா 6:8
‘இதோ பார், நாங்கள் இருக்கிறோம்’ என அவை உன்னிடம் அறிவிக்குமோ?
இருதயத்தை ஞானத்தால் நிரப்பியவரும், யோபு 32:8சங் 51:6பிரச 2:26நீதி 2:6யாக் 1:5யாத் 31:3யோபு 9:4யாக் 1:17
மனதுக்கு விளங்கும் ஆற்றலைக் கொடுத்தவரும் யார்?
யாருக்கு மேகங்களைக் கணக்கிடும் ஞானம்? சங் 147:4ஆதி 15:5ஆதி 8:1ஆதி 9:15
வானத்தின் தண்ணீர்ச் சாடிகளை,
தூசியானது மண்கட்டிகளாகி ஒன்றோடொன்று ஒட்டிக்கொள்ளவும்,
மேகங்களிலுள்ள தண்ணீரைப் பொழியச்செய்கிறவர் யார்?
“நீ சிங்கத்திற்கு இரையை தேடி, சங் 104:21யோபு 4:10-11சங் 145:15-16சங் 34:10
அவைகளின் பசியை தீர்ப்பாயோ?
சிங்கக்குட்டிகள் குகைகளிலும் யோபு 37:8ஆதி 49:9எண் 23:24எண் 24:9
புதர்களுக்குள்ளும் இருக்கும்போது அவைகளின் பசியை நீ தீர்ப்பாயோ?
காக்கைக்குஞ்சுகள் லூக் 12:24மத் 6:26சங் 147:9சங் 104:27-28
இறைவனை நோக்கிக் கூப்பிட்டு,
உணவின்றி அலையும்போது உணவைக் கொடுப்பது யார்?