மத்தேயு 27

Matthew 27

யூதாஸின் தற்கொலை

மறுநாள் அதிகாலையில் தலைமை ஆசாரியர்களும் ஜனத்தின் தலைவர்களும், இயேசுவை மரண தண்டனைக்கு உள்ளாக்கும் ஒரு தீர்மானத்தை எடுத்தார்கள். மாற் 15:1யோவா 18:28லூக் 22:66மீகா 2:1சங் 2:2மத் 23:13மத் 26:3-4அப் 5:21 இயேசுவை கட்டிக் கொண்டுபோய், ஆளுநர் பிலாத்துவிடம் ஒப்படைத்தார்கள். அப் 3:13மத் 20:191 தீமோ 6:13லூக் 13:12 தீமோ 2:9அப் 12:6அப் 21:33அப் 22:25

அவரைக் காட்டிக்கொடுத்த யூதாஸ், இயேசு மரணத் தீர்ப்புக்குள்ளானதைக் கண்டபோது மனத்துயரம் அடைந்தான். எனவே, தனக்குக் கொடுத்த முப்பது வெள்ளிக்காசை தலைமை ஆசாரியரிடமும் யூதரின் தலைவர்களிடம் திருப்பிக் கொடுத்தான். அவன் அவர்களிடம், 2 கொரி 7:10யோபு 20:15-29லூக் 22:47-48யோவா 13:2யோவா 13:27யோபு 20:5லூக் 22:2-6மத் 26:14-16 “குற்றமற்ற இரத்தத்தை நான் காட்டிக்கொடுத்து, பாவம் செய்துவிட்டேன்” என்றான். 1 யோவா 3:121 இராஜா 21:271 பேது 1:191 சாமு 15:241 சாமு 15:301 சாமு 28:16-201 தீமோ 4:22இராஜா 24:4

அதற்கு அவர்கள், “அதைப்பற்றி எங்களுக்கு என்ன? அது உன் பாடு” என்றார்கள்.

எனவே யூதாஸ் பணத்தை ஆலயத்தினுள் எறிந்துவிட்டுப் புறப்பட்டுப் போனான். அவன் போய், தன்னைத்தானே தூக்கிலிட்டுக்கொண்டு செத்தான். அப் 1:18-192 சாமு 17:231 இராஜா 16:181 சாமு 31:4-5யோபு 2:9யோபு 7:15லூக் 1:21லூக் 1:9

தலைமை ஆசாரியர் அந்தப் பணத்தை எடுத்து, “இது இரத்தப்பழியுள்ள பணம். ஆகையால் இதைக் காணிக்கையில் சேர்ப்பது மோசேயின் சட்டத்திற்கு எதிரானது” என்றார்கள். உபா 23:18லூக் 6:7-9ஏசா 61:8யோவா 18:28மத் 23:24 எனவே அவர்கள் அந்தப் பணத்தைக்கொண்டு, குயவனின் வயலை வாங்குவதற்குத் தீர்மானித்தார்கள். அந்நிலத்தை அந்நியரை அடக்கம் செய்யும் இடமாக ஒதுக்கிவைத்தார்கள். அதனாலேயே இன்றுவரை அந்த இடம் “இரத்தநிலம்” என்று அழைக்கப்படுகிறது. அப் 1:19மத் 28:152 நாளாக 5:9உபா 34:6நியாயாதி 1:26யோசு 4:9 இதனால் இறைவாக்கினன் எரேமியாவினால் கூறப்பட்டது நிறைவேறியது: “அவர்கள் முப்பது வெள்ளிக்காசை எடுத்தார்கள். அதுவே இஸ்ரயேல் மக்கள் அவருக்கு மதிப்பிட்ட விலை. சகரி 11:12-13லேவி 27:2-7மத் 1:22யாத் 21:32மத் 26:15 கர்த்தர் எனக்குக் கட்டளையிட்டபடியே, அவர்கள் அதைக்கொண்டு குயவனுடைய நிலத்தை வாங்கினார்கள்.” 1 சகரி 11:13

பிலாத்துவுக்கு முன் இயேசு

இயேசுவைக் கொண்டுவந்து ஆளுநர் முன்னால் நிறுத்தினார்கள். ஆளுநர் அவரிடம், “நீ யூதருடைய அரசனா?” என்று கேட்டார். லூக் 23:2-3மாற் 15:2-5மத் 26:25யோவா 18:29-38மத் 2:2மத் 26:64மாற் 14:621 தீமோ 6:13

அதற்கு இயேசு, “ஆம், நீர் சொல்கிறபடியேதான்” என்றார். ஆனால் தலைமை ஆசாரியர்களாலும் மற்றும் யூதரின் தலைவர்களாலும் குற்றம் சாட்டப்பட்ட போது அவர் பதில் ஒன்றும் கொடுக்கவில்லை. மத் 26:63ஏசா 53:71 பேது 2:23அப் 8:32யோவா 19:9-11மத் 27:14மாற் 15:3-5சங் 38:13-14 அப்பொழுது பிலாத்து அவரிடம், “உனக்கு எதிராக இவர்கள் கொண்டுவரும் சாட்சியத்தை நீ கேட்கவில்லையா?” என்று கேட்டான். மத் 26:62அப் 22:24யோவா 18:35 ஆனால் இயேசு ஒரு குற்றச்சாட்டுக்கும் மறுமொழியாக எந்த ஒரு பதிலும் சொல்லாதது ஆளுநனை மிகவும் ஆச்சரியத்துக்கு உள்ளாக்கியது. ஏசா 8:181 கொரி 4:9சங் 71:7சகரி 3:8

பண்டிகை நாளில் மக்கள் கேட்டுக்கொள்ளும் சிறைக்கைதியை விடுதலை செய்வது ஆளுநனின் வழக்கமாயிருந்தது. அப் 24:27அப் 25:9யோவா 18:38-40யோவா 19:16லூக் 23:16மத் 26:5மாற் 15:6-15 அக்காலத்தில் பரபாஸ் என்னும் பேர்போன ஒரு கைதி இருந்தான். மாற் 15:7அப் 3:14யோவா 18:40லூக் 23:18-19லூக் 23:25ரோம 1:32 எனவே காலையில் ஆளுநனின் வீட்டிற்கு முன் மக்கள் ஒன்றுகூடி வந்தபோது, பிலாத்து அவர்களிடம், “யாரை நான் உங்களுக்காக விடுதலை செய்யவேண்டும்: பரபாஸையா அல்லது கிறிஸ்து என அழைக்கப்படும் இயேசுவையா?” எனக் கேட்டான். 1 இராஜா 18:21யோவா 19:15யோசு 24:15மாற் 15:9-12மத் 27:21-22மத் 1:16 ஏனெனில், பொறாமையினாலேயே அவர்கள் இயேசுவைத் தன்னிடம் ஒப்படைத்திருக்கிறார்கள் என்பது பிலாத்துவுக்குத் தெரியும். நீதி 27:4அப் 5:17மாற் 15:10அப் 13:45அப் 7:9ஆதி 37:11யாக் 4:5பிரச 4:4

பிலாத்து நீதிபதியின் இருக்கையில் அமர்ந்திருந்தபோது, அவனுடைய மனைவி, “அந்த குற்றமற்ற மனிதரை ஒன்றும் செய்யவேண்டாம். ஏனெனில் அவர் நிமித்தம் நான் இன்று கனவில் மிகவும் வேதனைப்பட்டேன்” என்று ஒரு செய்தியை அவனுக்கு அனுப்பினாள். சகரி 9:91 பேது 2:22நீதி 29:1மத் 27:241 யோவா 2:1ஆதி 20:3-6ஆதி 31:24ஆதி 31:29

ஆனால் தலைமை ஆசாரியர்களும் தலைவர்களும் பரபாஸை விடுதலை செய்யும்படியும், இயேசுவைக் கொலை செய்யும்படியும் கேட்பதற்காக, மக்களைத் தூண்டிவிட்டார்கள். அப் 3:14-15யோவா 19:15-16யோவா 18:40மாற் 15:11லூக் 23:18-20அப் 14:18-19அப் 19:23-29

“இந்த இருவரில், யாரை நான் உங்களுக்கு விடுதலை செய்யவேண்டும்?” என ஆளுநன் கேட்டான்.

“பரபாஸை” என அவர்கள் பதிலளித்தார்கள்.

“அப்படியானால், கிறிஸ்து என அழைக்கப்படும் இயேசுவை நான் என்ன செய்யவேண்டும்?” என்று பிலாத்து கேட்டான். ஏசா 53:2-3யோவா 19:14-15அப் 13:38ஏசா 49:7மாற் 15:12-14லூக் 23:20-24மத் 1:16மத் 27:17

அவர்கள் எல்லோரும், “அவனைச் சிலுவையில் அறையும்!” என்று பதிலளித்தார்கள்.

“ஏன்? அவன் என்ன குற்றம் செய்தான்?” என பிலாத்து கேட்டான். அப் 23:12-15அப் 7:57ஆதி 37:18-19அப் 17:5-7அப் 22:22-23அப் 23:101 சாமு 19:3-151 சாமு 20:31-33

ஆனால் அவர்களோ, “அவனைச் சிலுவையில் அறையும்!” என்று இன்னும் அதிகமாகச் சத்தமிட்டார்கள்.

தனது முயற்சியால் பயன் இல்லை என்றும், ஒரு புரட்சி எழும்புவதையும் பிலாத்து கண்டான்; எனவே அவன் ஒரு பாத்திரத்தில் தண்ணீரை எடுத்து, மக்களுக்கு முன்பாகத் தன் கைகளைக் கழுவினான். பின்பு அவன், “இந்த மனிதனுடைய இரத்தப்பழிக்கு நீங்களே பொறுப்பாளிகள். நானோ குற்றமற்றவன்” என்றான். மத் 27:42 கொரி 5:21சங் 26:61 பேது 3:18உபா 21:6-8யோவா 19:4யோபு 9:30-31மத் 26:5

அதற்கு எல்லா மக்களும், “அவனுடைய இரத்தப்பழி எங்கள்மேலும், எங்கள் பிள்ளைகள் மேலும் சுமரட்டும்” என்றார்கள். யோசு 2:19அப் 5:28அப் 7:521 தெச 2:15-16உபா 19:10மத் 23:30-37எண் 35:331 இராஜா 2:32

அப்பொழுது பரபாஸை அவர்களுக்காக பிலாத்து விடுதலையாக்கி, இயேசுவையோ சவுக்கினால் அடித்து சிலுவையில் அறையும்படி அவர்களிடம் ஒப்படைத்தான். ஏசா 53:5யோவா 19:1மாற் 15:15ஏசா 50:6லூக் 23:161 பேது 2:24லூக் 23:24-25மத் 20:19

படைவீரர்கள் இயேசுவை ஏளனம் செய்தல்

அதற்குப் பின்பு ஆளுநனின் படைவீரர்கள், இயேசுவைத் தங்கள் தலைமையகத்துக்குக் கொண்டுபோய், அவரைச் சுற்றி எல்லா படைவீரர்களையும் ஒன்றுகூட்டினார்கள். யோவா 18:28யோவா 18:33அப் 10:1அப் 23:35மாற் 15:16-20அப் 27:1யோவா 18:3யோவா 19:8-9 அங்கே அவர்கள் இயேசுவின் உடைகளைக் கழற்றி, கருஞ்சிவப்பு மேலுடையை அவருக்கு உடுத்தினார்கள். யோவா 19:2-5லூக் 23:11மாற் 15:17 அவர்கள் முட்களினால் ஒரு கிரீடத்தைச் செய்து, அதை இயேசுவின் தலையின்மேல் வைத்தார்கள். அவர்கள் அவரது வலதுகையில் ஒரு தடியைக் கொடுத்து, அவர் முன்னால் முழங்காற்படியிட்டு, “யூதரின் அரசரே, வாழ்க!” என்று சொல்லி, அவரை ஏளனம் செய்தார்கள். ஏசா 53:3மத் 20:19யோவா 19:2-3மாற் 15:18சங் 69:19-20எபி 12:2-3ஏசா 49:7எரே 20:7 அவர்மேல் துப்பி, தடியை எடுத்து அவரைத் தலையில் திரும்பத்திரும்ப அடித்தார்கள். ஏசா 50:6மத் 26:67ஏசா 53:7மாற் 15:19ஏசா 49:7ஏசா 52:14ஏசா 53:3யோபு 30:8-10 அவர்கள் இயேசுவை ஏளனம் செய்தபின், அந்த உடையைக் கழற்றிவிட்டு அவரது உடையை உடுத்தினார்கள். அதற்குப் பின்பு அவர்கள் இயேசுவை சிலுவையில் அறையும்படிக்குக் கொண்டுபோனார்கள். ஏசா 53:71 இராஜா 21:101 இராஜா 21:13அப் 7:58எபி 13:12மத் 21:39யோவா 19:16யோவா 19:27

இயேசுவை சிலுவையில் அறைதல்

அவர்கள் இயேசுவை வெளியே கொண்டுபோகும்போது, சிரேனே ஊரைச்சேர்ந்த சீமோன் என்னும் பெயருடைய ஒருவனைக் கண்டு, சிலுவையைத் தூக்கும்படி அவனைக் கட்டாயப்படுத்தினார்கள். மாற் 15:21லூக் 23:26மத் 16:24அப் 2:10அப் 6:9அப் 11:20அப் 13:11 இராஜா 21:13 அவர்கள் கொல்கொதா எனப்பட்ட ஒரு இடத்திற்கு வந்தார்கள். கொல்கொதா என்பதன் அர்த்தம், “மண்டையோட்டின் இடம்” என்பதாகும். யோவா 19:17-19மாற் 15:22-32லூக் 23:44மாற் 15:34யோவா 19:23-24லூக் 23:27-38 அங்கே அவர்கள் இயேசுவுக்குக் கசப்பு கலந்த திராட்சை இரசத்தைக் குடிக்கக் கொடுத்தார்கள். ஆனால் அவர் அதை ருசி பார்த்தபின் குடிக்க மறுத்தார். சங் 69:21மாற் 15:23மத் 27:48யோவா 19:28-30 அவர்கள் அவரைச் சிலுவையில் அறைந்தபின், அவர்கள் சீட்டுப்போட்டு அவருடைய உடைகளைப் பங்கிட்டுக்கொண்டார்கள். “அவர்கள் எனது உடைகளைத் தங்களுக்குள்ளே பங்கிட்டு, எனது உடைகளுக்காக சீட்டுப்போட்டார்கள்” என்று இறைவாக்கினனால் கூறப்பட்ட வார்த்தை நிறைவேறும்படியே இப்படி நடந்தது. சங் 22:18மாற் 15:24-32அப் 4:10யோவா 19:23-24லூக் 23:34சங் 22:16யோவா 20:20யோவா 20:27 பின்பு அவர்கள் அங்கே உட்கார்ந்து, இயேசுவைக் காவல் காத்தார்கள். மத் 27:54மாற் 15:39மாற் 15:44 அவருடைய தலைக்கு மேலாக அவருக்கெதிரான குற்றச்சாட்டாக இப்படி எழுதி வைத்தார்கள்: யோவா 19:19-22லூக் 23:38மாற் 15:26

இவர் இயேசு, யூதரின் அரசன்.

அவருடன் இரண்டு கள்வர்கள், ஒருவன் வலதுபக்கத்திலும் மற்றொருவன் இடது பக்கத்திலுமாக சிலுவைகளில் அறையப்பட்டிருந்தார்கள். யோவா 19:18யோவா 19:31-35லூக் 23:39-43ஏசா 53:12மத் 27:44மாற் 15:27லூக் 22:37லூக் 23:32-33 அவ்வழியாகக் கடந்து போனவர்கள் ஏளனமாய் தங்கள் தலைகளை அசைத்து, அவரைப் பழித்துரைத்தார்கள். சங் 109:25புலம் 1:121 பேது 2:22-24யோபு 16:4புலம் 2:15-17லூக் 23:35-39மாற் 15:29-30சங் 109:2 அவர்கள், “ஆலயத்தை அழித்து, அதை மூன்று நாட்களில் கட்டுவேன் என்று சொன்னவனே, உன்னை நீயே விடுவித்துக்கொள்! நீ இறைவனின் மகனானால் சிலுவையிலிருந்து இறங்கி வா!” என்று பழித்துரைத்தார்கள். மத் 26:61யோவா 2:19-22மத் 4:3மத் 4:6லூக் 16:31மத் 26:63-64வெளி 11:10ஆதி 37:19-20 அவ்விதமாகவே தலைமை ஆசாரியர்களும், மோசேயின் சட்ட ஆசிரியர்களும், தலைவர்களும், அவரை ஏளனம் செய்தார்கள். சங் 35:26ஏசா 28:22ஏசா 49:7யோபு 13:9லூக் 18:32லூக் 22:52லூக் 23:35மாற் 15:31-32 மேலும் அவர்கள், “இவன் மற்றவர்களை இரட்சித்தான், ஆனால் தன்னையோ இரட்சித்துக்கொள்ள முடியாதிருக்கிறான்! இவன் இஸ்ரயேலுக்கு அரசன்! இவன் இப்பொழுது சிலுவையிலிருந்து இறங்கி வரட்டும்; அப்பொழுது நாங்கள் இவனில் விசுவாசம் வைப்போம். யோவா 1:49மத் 27:37அப் 4:14யோவா 12:13யோவா 12:47யோவா 9:24லூக் 19:38மத் 2:2 இவன் இறைவனைச் சார்ந்து இருக்கிறான். ‘நான் இறைவனின் மகன்’ என்றானே. இறைவனுக்கு விருப்பமானால், இப்பொழுது அவர் இவனை விடுவிக்கட்டும்” என்றார்கள். சங் 22:8யோவா 10:36ஏசா 36:15ஏசா 36:18ஏசா 37:10யோவா 10:30யோவா 19:7யோவா 3:16-17 அவ்விதமாகவே, இயேசுவுடனே சிலுவையில் அறையப்பட்ட கள்வர்களும் அவரை ஏளனம் செய்தார்கள். லூக் 23:39-43மத் 27:38மாற் 15:32யோபு 30:7-9சங் 35:15

இயேசுவின் மரணம்

நண்பகல் பன்னிரண்டு மணியிலிருந்து, பூமியெங்கும் இருள் சூழ்ந்து பிற்பகல் மூன்று மணிவரை நீடித்திருந்தது. ஆமோ 8:9மாற் 15:33-34ஏசா 50:3லூக் 23:44-45வெளி 9:2மாற் 15:25வெளி 8:12 பிற்பகல் மூன்றுமணியளவில், இயேசு பலத்த சத்தமிட்டு, “ஏலீ, ஏலீ 2, லாமா சபக்தானி” என்று சத்தமாய்க் கூப்பிட்டார். “என் இறைவனே, என் இறைவனே, ஏன் என்னைக் கைவிட்டீர்?” என்பதே அதன் அர்த்தமாகும். 3 சங் 22:1எபி 5:7ஏசா 53:10மாற் 15:34யோவா 19:28-30சங் 71:11லூக் 23:46புலம் 1:12

அங்கே நின்றவர்களில் சிலர் இதைக் கேட்டு தவறாக விளங்கிக்கொண்டு, “அவன் எலியாவைக் கூப்பிடுகிறான்!” என்றார்கள். மல்கி 4:5மாற் 15:35-36மத் 11:14

உடனே அவர்களில் ஒருவன் ஓடிப்போய் கடற்பஞ்சைக் கொண்டுவந்து, அதைப் புளித்த திராட்சை இரசத்தில் தோய்த்து, ஒரு கோலில் மாட்டி இயேசுவுக்குக் குடிக்கக் கொடுத்தான். சங் 69:21யோவா 19:29-30லூக் 23:36மத் 27:34 மற்றவர்களோ, “அவனைவிட்டுவிடு. எலியா அவனைக் காப்பாற்ற வருகிறானா பார்ப்போம்” என்றார்கள்.

இயேசு மீண்டும் பலத்த சத்தமிட்டுக் கூப்பிட்ட பின்பு, தமது ஆவியை விட்டார். யோவா 19:30ஏசா 53:9-12லூக் 23:46சங் 22:14-15எபி 9:14மத் 20:28மாற் 15:37யோவா 10:11

அவ்வேளையில் ஆலயத்தின் திரைச்சீலை மேலிருந்து கீழ்வரைக்கும் இரண்டாகக் கிழிந்தது; பூமியதிர்ந்தது, கற்பாறைகள் பிளந்தன; எபி 10:19-22மாற் 15:38எபி 6:19லூக் 23:45வெளி 11:19யாத் 26:31-37மத் 27:54ஏசா 25:7 கல்லறைகளும் நொறுங்குண்டு திறந்தன; இறந்து போயிருந்த பல பரிசுத்தவான்களின் உடல்கள் உயிருடன் எழுந்திருந்தன. ஏசா 26:191 தெச 4:141 கொரி 15:20யோவா 5:25-29தானி 12:2ஏசா 25:81 தெச 5:10ஓசி 13:14 அவர்கள் கல்லறைகளை விட்டு வெளியே வந்தார்கள். இயேசு உயிருடன் எழுந்தபின், அவர்கள் பரிசுத்த நகரத்திற்குள் சென்று, பலருக்குக் காணப்பட்டார்கள். வெளி 21:2தானி 9:24ஏசா 48:2வெளி 11:2மத் 4:5வெளி 22:19நெகே 11:1

இயேசுவைக் காவல் காத்துக்கொண்டிருந்த நூற்றுக்குத் தலைவனும் அவனோடிருந்தவர்களும், பூமியதிர்ச்சியையும் நடந்த எல்லாவற்றையும் கண்டு பயமடைந்தார்கள். “நிச்சயமாக இவர் இறைவனின் மகனே!” என்று வியப்புடன் சொன்னார்கள். மத் 27:36மாற் 15:39மத் 27:43லூக் 23:47-49ரோம 1:4அப் 21:32அப் 23:23அப் 27:1

பல பெண்கள் தூரத்தில் நின்று, அதைப் பார்த்துக்கொண்டிருந்தார்கள். அவர்கள் இயேசுவின் தேவைகளை கவனிப்பதற்கு கலிலேயாவிலிருந்து அவரைப் பின்பற்றி வந்திருந்தார்கள். லூக் 8:2-3யோவா 19:25-27லூக் 23:48-49லூக் 23:27-28 அவர்களில் மகதலேனா மரியாளும், யாக்கோபு, யோசே ஆகியோரின் தாயாகிய மரியாளும், செபெதேயுவின் மகன்களின் தாயும் இருந்தார்கள். யோவா 19:25மத் 28:1மாற் 15:47மாற் 16:9யோவா 20:1யோவா 20:18லூக் 24:10மத் 13:55

இயேசுவை அடக்கம் செய்தல்

மாலை வேளையானபோது, அரிமத்தியா பட்டணத்திலிருந்து யோசேப்பு என்னும் பெயருடைய ஒரு செல்வந்தன் வந்தான். இவனும் இயேசுவுக்கு சீடனாயிருந்தான். யோவா 19:38-42மாற் 15:42-47லூக் 23:50-561 சாமு 1:11 சாமு 7:17 அவன் பிலாத்துவினிடம் போய், இயேசுவின் உடலைத் தரும்படி கேட்டான். பிலாத்துவும் அதை அவனுக்குக் கொடுக்கும்படி உத்தரவிட்டான். லூக் 23:52-53மாற் 15:44-46 யோசேப்பு அந்த உடலை எடுத்து, சுத்தமான மென்பட்டுத் துணியினால் சுற்றி, அதைத் தனக்குச் சொந்தமான கற்பாறையில் வெட்டியிருந்த புதிய கல்லறையில் வைத்தான்; பின்பு அவன் கல்லறையின் வாசலில் ஒரு பெரிய கல்லை உருட்டி வைத்துவிட்டுப் போனான். ஏசா 53:9மத் 27:66மத் 28:2யோவா 20:1லூக் 24:2மாற் 16:3-4 அப்பொழுது மகதலேனா மரியாளும், மற்ற மரியாளும் கல்லறைக்கு எதிரே உட்கார்ந்திருந்தார்கள். மத் 27:56மத் 28:1

கல்லறைக்கு காவல்

மறுநாள் பஸ்கா என்ற பண்டிகையின் முதல் நாளாகிய ஆயத்த நாளிலே, தலைமை ஆசாரியர்களும், பரிசேயர்களும் பிலாத்துவிடம் போனார்கள். மாற் 15:42யோவா 19:14யோவா 19:42அப் 4:27-28யோவா 19:31லூக் 23:54-56மத் 26:17மத் 27:1-2 அவர்கள் அவனிடம், “ஐயா அந்த ஏமாற்றுக்காரன் உயிரோடிருக்கும்போது, ‘மூன்று நாட்களுக்குபின் நான் உயிரோடு எழுந்திருப்பேன்’ என்று சொன்னது எங்களுக்கு நினைவிருக்கிறது. லூக் 9:22மத் 16:21யோவா 2:19லூக் 18:33மத் 17:23மாற் 10:34மாற் 8:31மத் 26:61 ஆகவே அந்தக் கல்லறை மூன்றாம் நாள்வரைக்கும் பத்திரமாய் பாதுகாக்கப்படும்படி உத்தரவு கொடுக்கவேண்டும். இல்லையெனில் அவனது சீடர்கள் ஒருவேளை வந்து அந்த உடலைத் திருடிச் சென்றுவிட்டு, இறந்தோரில் இருந்து உயிரோடு எழுந்துவிட்டான் என்று மக்களுக்குச் சொல்லுவார்கள். அப்படி நடந்தால் முந்தின ஏமாற்று வேலையைவிட பிந்தினது மோசமானதாயிருக்கும்” என்றார்கள். மத் 28:13மத் 12:45

அதற்குப் பிலாத்து அவர்களிடம், “காவல் வீரர்களைக் கூட்டிக்கொண்டுபோய் உங்களுக்குத் தெரிந்தபடி கல்லறையைப் பத்திரமாய்க் காவல் செய்யுங்கள்” என்றான். மத் 27:66மத் 28:11-15நீதி 21:30சங் 76:10 எனவே அவர்கள் போய், கல்லறை வாசற்கல்லின்மேல் முத்திரையிட்டு, காவலாளிகளை வைத்து பத்திரமாய் கல்லறையைக் காவல் செய்தார்கள். தானி 6:172 தீமோ 2:19மத் 27:60மத் 28:2மத் 28:11