ஏசாயா 36

Isaiah 36
அத்தியாயம் 36

சனகெரிப் எருசலேமை பயமுறுத்துதல்

எசேக்கியா ராஜா அரசாண்ட பதினான்காம் வருடத்திலே அசீரியா ராஜாவாகிய சனகெரிப் யூதாவிலிருக்கிற பாதுகாப்பான சகல பட்டணங்களுக்கும் விரோதமாக வந்து, அவைகளைப் பிடித்துக்கொண்டான். 2 நாளாக 32:12இராஜா 18:132இராஜா 18:17ஏசா 10:28-32ஏசா 1:7-8ஏசா 33:7-8ஏசா 7:17ஏசா 8:7-8 அப்பொழுது அசீரியா ராஜா லாகீசிலிருந்து ரப்சாக்கே சேனாதிபதியைப் பெரிய படையுடன் எருசலேமுக்கு எசேக்கியா ராஜாவினிடத்தில் அனுப்பினான்; அவன் வந்து வண்ணார்துறையின் வழியிலுள்ள மேல்குளத்துச் வாய்க்கால் அருகிலே நின்றான். 2 நாளாக 32:9-23ஏசா 7:32இராஜா 18:17-37ஏசா 22:9-11 அப்பொழுது இல்க்கியாவின் மகனாகிய எலியாக்கீம் என்னும் அரண்மனை விசாரிப்புக்காரனும், செப்னா என்னும் எழுத்தனும், ஆசாப்பின் மகனாகிய யோவாக் என்னும் கணக்கனும் அவனிடத்திற்குப் புறப்பட்டுப்போனார்கள். 2 சாமு 20:24-252 சாமு 8:16-17ஏசா 22:15-21 ரப்சாக்கே அவர்களை நோக்கி: அசீரியா ராஜாவாகிய மகாராஜாவானவர் உரைக்கிறதும், நீங்கள் எசேக்கியாவுக்குச் சொல்லவேண்டியதும் என்னவென்றால்: நீ நம்பியிருக்கிற இந்த நம்பிக்கை என்ன? 2இராஜா 18:19-372 நாளாக 32:14-162 நாளாக 32:7-102இராஜா 18:52இராஜா 19:10அப் 12:22-23எசேக் 31:3-18ஏசா 10:8-14 போருக்கு மந்திர ஆலோசனையும் வல்லமையும் உண்டென்று சொல்கிறாயே, அது வாய்ப்பேச்சேயன்றி வேறல்ல; நீ என்னை விரோதிக்கும்படி யார்மேல் நம்பிக்கை வைத்திருக்கிறாய்? 2இராஜா 18:72இராஜா 24:1எசேக் 17:15எரே 52:3நெகே 2:19-20நீதி 21:30-31நீதி 24:5-6 இதோ, நெரிந்த நாணல்கோலாகிய அந்த எகிப்தை நம்புகிறாய்; அதின்மேல் ஒருவன் சாய்ந்தால், அது அவன் உள்ளங்கையில்பட்டு உருவிப்போகும்; எகிப்தின் ராஜாவாகிய பார்வோன் தன்னை நம்புகிற அனைவருக்கும் அப்படியே இருப்பான். எசேக் 29:6-72இராஜா 18:212இராஜா 17:4ஏசா 20:5-6ஏசா 30:1-7ஏசா 31:3எரே 37:5-8 நீ என்னிடத்தில்: நாங்கள் எங்கள் தேவனாகிய யெகோவாவை நம்புகிறோம் என்று சொல்வாயாகில், அவருடைய மேடைகளையும் அவருடைய பலிபீடங்களையும் அல்லவோ எசேக்கியா அகற்றி, யூதாவையும், எருசலேமையும் நோக்கி: இந்தப் பலிபீடத்தின்முன் பணியுங்கள் என்றானே. 2இராஜா 18:4-51 கொரி 2:15சங் 42:10-11சங் 42:51 நாளாக 5:202 நாளாக 16:7-92 நாளாக 30:142 நாளாக 31:1 நான் உனக்கு இரண்டாயிரம் குதிரைகளைக் கொடுப்பேன்; நீ அவைகள்மேல் ஏறத்தக்கவர்களைச் சம்பாதிக்கக்கூடுமானால் அசீரியா ராஜாவாகிய என் ஆண்டவனுடன் சபதம்செய். 1 சாமு 17:40-431 இராஜா 20:101 இராஜா 20:182இராஜா 14:142இராஜா 18:23நெகே 4:2-5சங் 123:3-4சங் 20:7-8 செய்யாமல்போனால், நீ என் ஆண்டவனுடைய ஊழியக்காரரில் ஒரே ஒரு சிறிய தலைவனுடைய முகத்தை எப்படித் திருப்புவாய்? இரதங்களோடு குதிரைவீரரும் வருவார்கள் என்று எகிப்தையா நம்புகிறாய்? ஏசா 10:82இராஜா 18:24உபா 17:16ஏசா 20:5ஏசா 30:16-17ஏசா 30:2-5ஏசா 30:7ஏசா 31:3 இப்பொழுதும் யெகோவாவுடைய கட்டளையில்லாமல் இந்தத் தேசத்தை அழிக்க வந்தேனோ? இந்தத் தேசத்திற்கு விரோதமாகப் போய் அதை அழித்துப்போடு என்று யெகோவா என்னுடன் சொன்னாரே என்று சொன்னான். 2இராஜா 18:25ஏசா 10:5-71 இராஜா 13:182 நாளாக 35:21ஆமோ 3:6ஏசா 37:28 அப்பொழுது எலியாக்கீமும் செப்னாவும் யோவாக்கும், ரப்சாக்கேயைப் பார்த்து: உம்முடைய அடியாரோடே சீரியமொழியிலே பேசும், அது எங்களுக்குத் தெரியும்; மதிலிலிருக்கிற மக்களின் காதுகள் கேட்க எங்களுடன் யூதமொழியிலே 1 பேசவேண்டாம் என்றார்கள். எஸ்றா 4:7தானி 2:42இராஜா 18:26-27 அதற்கு சேனாதிபதி: உங்களோடுகூடத் தங்கள் மலத்தைத் தின்னவும், தங்கள் நீரைக் குடிக்கவும், மதிலிலே தங்கியிருக்கிற ஆண்களிடத்திற்கே அல்லாமல், உன் எஜமானிடத்திற்கும், உன்னிடத்திற்குமா, என் எஜமான் இந்த வார்த்தைகளைப் பேச என்னை அனுப்பினார் என்று சொல்லி; 2இராஜா 18:27லேவி 26:292இராஜா 6:25-29உபா 28:53-57எசேக் 4:16ஏசா 9:20எரே 19:9புலம் 4:9-10 ரப்சாக்கே நின்றுகொண்டு, யூதமொழியிலே 2 உரத்தசத்தமாக: அசீரியா ராஜாவாகிய மகாராஜாவுடைய வார்த்தைகளைக் கேளுங்கள். 2 நாளாக 32:181 சாமு 17:8-112இராஜா 18:28-32தானி 4:37எசேக் 31:3-10ஏசா 10:8-13ஏசா 36:4ஏசா 8:7 எசேக்கியா உங்களை ஏமாற்றாதபடி பாருங்கள்; அவன் உங்களைத் தப்புவிக்கமாட்டான். 2 தெச 2:4வெளி 13:5-62 நாளாக 32:112 நாளாக 32:13-192இராஜா 19:10-132இராஜா 19:22தானி 3:15-17தானி 6:20 யெகோவா நம்மை நிச்சயமாகத் தப்புவிப்பார், இந்த நகரம் அசீரியா ராஜாவின் கையில் ஒப்புக்கொடுக்கப்படுவதில்லை என்று சொல்லி, எசேக்கியா உங்களைக் யெகோவாவை நம்பச்செய்வான்; அதற்கு இடங்கொடாதிருங்கள் என்று ராஜா சொல்கிறார். ஏசா 36:7ஏசா 37:10ஏசா 37:23-24மத் 27:43சங் 22:7-8சங் 4:2சங் 71:9-11 எசேக்கியாவின் சொல்லைக் கேளாதிருங்கள். அசீரியா ராஜா சொல்கிறதாவது: நீங்கள் என்னுடன் சமாதானமாகி, காணிக்கையோடே என்னிடத்தில் வாருங்கள். 1 இராஜா 4:25சகரி 3:10மீகா 4:41 இராஜா 4:201 சாமு 11:31 சாமு 25:272 கொரி 9:52இராஜா 18:31 நான் வந்து, உங்களைத் தானியமும் திராட்சைத்தோட்டமுமுள்ள தேசமும், அப்பமும் திராட்சைரசமுமுள்ள தேசமுமாகிய உங்கள் தேசத்திற்கு ஒப்பான தேசத்திற்கு அழைத்துக்கொண்டு போகும்வரைக்கும், அவனவன் தன்தன் திராட்சைச்செடியின் பழத்தையும், தன்தன் அத்திமரத்தின் பழத்தையும் சாப்பிட்டு, அவனவன் தன் தன் கிணற்றின் தண்ணீரைக் குடியுங்கள். 2இராஜா 18:322இராஜா 17:6-232இராஜா 18:9-122இராஜா 24:11உபா 11:12உபா 8:7-9யாத் 3:8யோபு 20:17 யெகோவா நம்மைத் தப்புவிப்பார் என்று உங்களுக்குப் போதனைசெய்ய எசேக்கியாவுக்குச் செவிகொடாதிருங்கள்; தேசங்களுடைய தெய்வங்களில் யாராவது தங்கள் தேசத்தை அசீரியா ராஜாவின் கைக்குத் தப்புவித்ததுண்டோ? ஏசா 36:15ஏசா 37:17-182 நாளாக 32:13-172இராஜா 18:33-352இராஜா 19:12-132இராஜா 19:17-18தானி 3:15ஆப 2:19-20 ஆமாத் அர்பாத் பட்டணங்களின் தெய்வங்கள் எங்கே? செப்பர்வாயிமின் தெய்வங்கள் எங்கே? அவர்கள் சமாரியாவை என் கைக்குத் தப்புவித்ததுண்டோ? ஏசா 10:9-11எரே 49:232இராஜா 17:242இராஜா 17:5-72 சாமு 8:9ஏசா 37:11-13எண் 34:82இராஜா 18:10-12 யெகோவா எருசலேமை என் கைக்குத் தப்புவிப்பார் என்பதற்கு, அந்தத் தேசங்களுடைய எல்லா தெய்வங்களுக்குள்ளும் தங்கள் தேசத்தை என் கைக்குத் தப்புவித்தவர் யார் என்று ராஜா சொல்கிறார் என்றான். 2 நாளாக 32:19சங் 50:211 இராஜா 20:232 நாளாக 32:152இராஜா 19:22-37தானி 3:15யாத் 5:2ஏசா 37:18-19 அவர்களோ அவனுக்கு ஒரு வார்த்தையையும் மறுமொழியாகச் சொல்லாமல் மவுனமாயிருந்தார்கள்; அவனுக்கு மறுமொழி சொல்லவேண்டாம் என்று ராஜா கட்டளையிட்டிருந்தான். நீதி 26:42இராஜா 18:262இராஜா 18:37ஆமோ 5:13மத் 7:6நீதி 9:7-8சங் 38:13-15சங் 39:1 அப்பொழுது இல்க்கியாவின் மகனாகிய எலியாக்கீம் என்னும் அரண்மனை விசாரிப்புக்காரனும், செப்னா என்னும் எழுத்தனும், ஆசாப்பின் மகனாகிய யோவாக் என்னும் கணக்கனும், ஆடைகளைக் கிழித்துக்கொண்டு, எசேக்கியாவினிடத்தில் வந்து, ரப்சாக்கேயின் வார்த்தைகளை அவனுக்கு அறிவித்தார்கள். ஏசா 36:3ஏசா 33:72இராஜா 5:7எஸ்றா 9:3ஏசா 36:11ஏசா 37:1-2மத் 26:65