முத்திரையிடப்படுதல்
இவைகளுக்குப் பின்பு, பூமியின் நான்கு திசைகளிலும் நான்கு தூதர்கள் நின்று, பூமியின்மேலோ, கடலின்மேலோ, ஒரு மரத்தின்மேலோ காற்று அடிக்காதபடி பூமியின் நான்கு காற்றுகளையும் பிடித்திருப்பதைப் பார்த்தேன். மத் 24:31தானி 7:2எரே 49:36மாற் 13:27தானி 8:8எசேக் 37:9எசேக் 7:2ஏசா 27:8 ஜீவனுள்ள தேவனுடைய முத்திரைக்கோலை வைத்திருந்த வேறொரு தூதன் சூரியன் உதிக்கும் திசையிலிருந்து ஏறிவருவதைப் பார்த்தேன்; அவன், பூமியையும் கடலையும் சேதப்படுத்துகிறதற்கு அதிகாரம் பெற்ற அந்த நான்கு தூதரையும் நோக்கி: 2 கொரி 1:22எபே 4:30வெளி 7:3-82 தீமோ 2:19எபே 1:13வெளி 9:4வெளி 5:2யோவா 6:27 நாம் நமது தேவனுடைய ஊழியக்காரர்களின் நெற்றிகளில் முத்திரைப் போடும்வரைக்கும் பூமியையும் கடலையும் மரங்களையும் சேதப்படுத்தாமல் இருங்கள் என்று அதிக சத்தமாகச் சொன்னான். எசேக் 9:4வெளி 22:4வெளி 9:4வெளி 13:16யாத் 12:13வெளி 14:1வெளி 20:4ஏசா 26:20-21 முத்திரைபோடப்பட்டவர்களின் எண்ணிக்கையைச் சொல்வதைக்கேட்டேன்; இஸ்ரவேல் மக்களுடைய எல்லாக் கோத்திரங்களிலும் முத்திரைபோடப்பட்டவர்கள் ஒருஇலட்சத்து நாற்பத்து நான்காயிரம்பேர். வெளி 14:1வெளி 14:3லூக் 22:30மத் 19:28அப் 26:7எசேக் 48:31யாக் 1:1வெளி 9:16 யூதாகோத்திரத்தில் முத்திரைபோடப்பட்டவர்கள் பன்னிரண்டாயிரம். ரூபன் கோத்திரத்தில் முத்திரைபோடப்பட்டவர்கள் பன்னிரண்டாயிரம். காத் கோத்திரத்தில் முத்திரைபோடப்பட்டவர்கள் பன்னிரண்டாயிரம். யாத் 1:2-4எண் 1:4-15எண் 10:14-27எண் 13:4-161 கொரி 2:1-2 ஆசேர் கோத்திரத்தில் முத்திரைபோடப்பட்டவர்கள் பன்னிரண்டாயிரம். நப்தலி கோத்திரத்தில் முத்திரைபோடப்பட்டவர்கள் பன்னிரண்டாயிரம். மனாசே கோத்திரத்தில் முத்திரைபோடப்பட்டவர்கள் பன்னிரண்டாயிரம். லூக் 2:36 சிமியோன் கோத்திரத்தில் முத்திரைபோடப்பட்டவர்கள் பன்னிரண்டாயிரம். லேவி கோத்திரத்தில் முத்திரைபோடப்பட்டவர்கள் பன்னிரண்டாயிரம். இசக்கார் கோத்திரத்தில் முத்திரைபோடப்பட்டவர்கள் பன்னிரண்டாயிரம். ஆதி 35:23எண் 26:14யாத் 6:16ஆதி 29:34ஆதி 30:18ஆதி 49:5நியாயாதி 1:3எண் 1:22 செபுலோன் கோத்திரத்தில் முத்திரைபோடப்பட்டவர்கள் பன்னிரண்டாயிரம். யோசேப்பு கோத்திரத்தில் முத்திரைபோடப்பட்டவர்கள் பன்னிரண்டாயிரம். பென்யமீன் கோத்திரத்தில் முத்திரைபோடப்பட்டவர்கள் பன்னிரண்டாயிரம்.
வெள்ளை அங்கி அணிந்திருந்த திரளான மக்கள்
இவைகளுக்குப் பின்பு, நான் பார்த்தபோது, இதோ, எல்லாத் தேசங்களிலும் கோத்திரங்களிலும் மக்களிலும் மொழிக்காரர்களிலுமிருந்து வந்ததும், ஒருவனும் எண்ணிப்பார்க்க முடியாத திரளான மக்கள்கூட்டம், வெள்ளை அங்கிகளை அணிந்து, தங்களுடைய கைகளில் குருத்தோலைகளைப் பிடித்து, சிங்காசனத்திற்கு முன்பாகவும் ஆட்டுக்குட்டியானவருக்கு முன்பாகவும் நிற்பதைக் கண்டேன். வெளி 5:9யோவா 12:13சங் 117:1-2வெளி 7:13-15சங் 2:8வெளி 6:11சகரி 2:11ஏசா 60:1-14 அவர்கள் அதிக சத்தமாக: இரட்சிப்பு, சிங்காசனத்தின்மேல் வீற்றிருக்கிற எங்களுடைய தேவனுக்கும் ஆட்டுக்குட்டியானவருக்கும் உரியது என்று ஆர்ப்பரித்தார்கள். வெளி 19:1சங் 3:8ஏசா 45:21வெளி 12:10எபே 2:8லூக் 3:6வெளி 22:3ஏசா 43:11 தூதர்கள் எல்லோரும் சிங்காசனத்தையும் மூப்பர்களையும் நான்கு ஜீவன்களையும் சுற்றிநின்று, சிங்காசனத்திற்கு முன்பாக முகங்குப்புற விழுந்து, தேவனைத் தொழுதுகொண்டு: வெளி 5:11-13வெளி 19:4-6வெளி 4:10வெளி 4:6எபி 1:6சங் 103:20-21சங் 148:1-2வெளி 11:16 ஆமென், எங்களுடைய தேவனுக்குத் துதியும் மகிமையும் ஞானமும் ஸ்தோத்திரமும் கனமும் வல்லமையும் பெலனும் எல்லாக் காலங்களிலும் உண்டாவதாக; ஆமென், என்றார்கள். வெளி 5:12-14யூதா 1:25கொலோ 3:17சங் 100:4வெளி 19:4யோனா 2:9சங் 107:22சங் 147:7 அப்பொழுது, மூப்பர்களில் ஒருவன் என்னைப் பார்த்து: வெள்ளை அங்கிகளை அணிந்திருக்கிற இவர்கள் யார்? எங்கே இருந்து வந்தார்கள்? என்று கேட்டான். வெளி 7:9வெளி 4:10வெளி 5:11வெளி 5:5நியாயாதி 13:6யோவா 7:28வெளி 4:4ஆதி 16:8 அதற்கு நான்: ஆண்டவனே, அது உமக்கே தெரியும் என்றேன். அப்பொழுது அவன்: 1 யோவா 1:7வெளி 22:14எபி 13:12வெளி 1:5வெளி 12:11எபி 9:14ஏசா 1:181 பேது 1:19
இவர்கள் அதிக உபத்திரவத்தில் இருந்து வந்தவர்கள்;
இவர்கள் தங்களுடைய அங்கிகளை ஆட்டுக்குட்டியானவருடைய இரத்தத்திலே நனைத்து
வெண்மையாக்கிக்கொண்டவர்கள்.
எனவே, இவர்கள் தேவனுடைய சிங்காசனத்திற்கு முன்பாக இருந்து, வெளி 21:3-4வெளி 22:32 கொரி 6:16ஏசா 4:5-61 நாளாக 23:25எபி 12:2யோவா 1:141 கொரி 3:16
இரவும் பகலும் அவருடைய ஆலயத்திலே அவரை ஆராதிக்கிறார்கள்;
சிங்காசனத்தின்மேல் வீற்றிருக்கிறவர் இவர்களோடு இருந்து பாதுகாப்பார்.
இவர்கள் இனிப் பசியடைவதும் இல்லை, ஏசா 49:10யோவா 4:14மத் 5:6சங் 121:6லூக் 6:21வெளி 21:4ஏசா 41:17ஏசா 25:4
இனித் தாகமடைவதும் இல்லை; வெயிலோ,
வெப்பமோ இவர்கள்மேல் படுவதும் இல்லை.
சிங்காசனத்தின் நடுவில் இருக்கிற ஆட்டுக்குட்டியானவரே இவர்களை மேய்த்து, யோவா 7:37-38சங் 36:8-9யோவா 4:14சங் 23:1-2யோவா 4:11சங் 23:5வெளி 22:1வெளி 21:4
இவர்களை ஜீவத்தண்ணீர் உள்ள ஊற்றுகளுக்கு நடத்திக்கொண்டு போவார்;
தேவனே இவர்களுடைய கண்ணீர் எல்லாவற்றையும் துடைப்பார்” என்றான்.