சாலொமோன் ஞானத்தைக் கேட்டல்
தாவீதின் மகன் சாலொமோன் தனது அரசாட்சியின்மேல் தன்னை மிகவும் உறுதியாக நிலைப்படுத்தினான்; இறைவனாகிய யெகோவா அவனோடிருந்து அவனை மிகவும் மேன்மைப்படுத்தினார். 1 நாளாக 29:251 இராஜா 2:12ஆதி 39:2ஆதி 21:221 நாளாக 17:81 இராஜா 2:46யாத் 3:12ஆதி 39:21
பின்பு சாலொமோன் எல்லா இஸ்ரயேலருடனும் பேசினான். அவன் ஆயிரம்பேரின் தளபதிகளுடனும், நூறுபேரின் தளபதிகளுடனும், நீதிபதிகளுடனும், இஸ்ரயேலின் தலைவர்களுடனும், குடும்பங்களின் தலைவர்களுடனும் பேசினான். 1 நாளாக 28:11 நாளாக 27:11 நாளாக 13:11 நாளாக 15:121 நாளாக 15:31 நாளாக 24:311 நாளாக 24:41 நாளாக 29:1 சாலொமோனும் கூடியிருந்தவர்கள் எல்லோரும் கிபியோனில் உள்ள உயரமான இடத்திற்குப் போனார்கள். ஏனெனில் அங்கேயே யெகோவாவின் ஊழியக்காரரான மோசே பாலைவனத்தில் அமைத்த இறைவனின் ஆசரிப்புக்கூடாரம் இருந்தது. 1 நாளாக 16:391 நாளாக 21:291 இராஜா 3:4-15உபா 34:5யாத் 26:1-37யாத் 36:8யாத் 40:2யாத் 40:34 அப்பொழுது தாவீது இறைவனின் பெட்டியை கீரியாத்யாரீமிலிருந்து அதற்கென தான் ஆயத்தப்படுத்திய இடத்திற்குக் கொண்டுவந்தான். ஏனெனில் அவன் எருசலேமில் அதற்காக ஒரு கூடாரம் அமைத்திருந்தான். 1 நாளாக 15:25-282 சாமு 6:172 சாமு 6:21 நாளாக 15:11 நாளாக 16:11 நாளாக 13:5-6சங் 132:5-6 ஆனால் கூரின் மகனான ஊரியின் மகன் பெசலெயேல் செய்திருந்த ஒரு வெண்கல பலிபீடம் கிபியோனில் யெகோவாவின் இருப்பிடத்திற்கு முன்னால் இருந்தது. எனவே அந்த இடத்தில்தான் சாலொமோனும் கூடியிருந்த மக்களும் யெகோவாவிடத்தில் விசாரித்தார்கள். யாத் 31:2யாத் 38:1-71 நாளாக 13:31 நாளாக 2:19-20யாத் 27:1-8 சபைக் கூடாரத்தில் யெகோவாவுக்குமுன் அமைந்திருந்த வெண்கல பலிபீடத்திற்கு சாலொமோன் சென்றான். அங்கே ஆயிரம் தகன காணிக்கைகளைச் செலுத்தினான். 1 இராஜா 3:41 நாளாக 29:211 இராஜா 8:63ஏசா 40:16
அந்த இரவில் இறைவன் சாலொமோனுக்குக் காணப்பட்டு, “உனக்கு எது வேண்டுமோ அதைக் கேள்” என்றார். மத் 7:7-81 யோவா 5:14-15யோவா 16:23நீதி 3:5-61 இராஜா 3:5-15மாற் 10:36-37மாற் 10:51
சாலொமோன் இறைவனிடம், “நீர் எனது தகப்பன் தாவீதிற்கு உமது மிகுந்த தயவைக் காட்டி, அவருடைய இடத்தில் என்னை அரசனாக்கினீர். 1 நாளாக 28:5ஏசா 55:31 நாளாக 29:232 சாமு 12:7-82 சாமு 22:512 சாமு 7:8-9சங் 86:13சங் 89:20-28 இப்பொழுதும் இறைவனாகிய யெகோவாவே, எனது தகப்பன் தாவீதிற்கு நீர் கொடுத்த வாக்குத்தத்தம் உறுதிப்படட்டும். ஏனெனில் பூமியின் தூளைப்போல் எண்ணிக்கையுடைய மக்களுக்கு என்னை அரசனாக்கியிருக்கிறீர். 2 சாமு 7:12-16ஆதி 13:16ஆதி 22:17சங் 132:11-12சங் 89:35-371 நாளாக 17:11-141 நாளாக 17:23-271 நாளாக 28:6-7 எனவே இந்த மக்களை வழிநடத்துவதற்கு வேண்டிய ஞானத்தையும், அறிவையும் எனக்குத் தாரும். ஏனெனில் இந்த பெருந்திரளான உமது மக்களை ஆட்சிசெய்ய யாரால் முடியும்?” எனப் பதிலளித்தான். 1 இராஜா 3:9யாக் 1:5நீதி 2:2-6நீதி 4:72 சாமு 5:2நீதி 3:13-18சங் 119:342 கொரி 3:5
இறைவன் சாலொமோனிடம், “நீ செல்வத்தையோ, செழிப்பையோ, கனத்தையோ, உன் பகைவர்களின் மரணத்தையோ, அல்லது உனக்கு நீண்ட ஆயுளையோ கேட்கவில்லை. மாறாக என் மக்களை ஆளும்படி நான் உன்னை அரசனாக்கினேன். நீ அவர்களை ஆளுவதற்கு ஞானத்தையும் அறிவையும் கேட்டிருக்கிறாய். இதுவே உனது இருதயத்தின் ஆசையாயிருந்தபடியால், யாக் 3:17நீதி 23:71 சாமு 16:71 நாளாக 29:17-181 இராஜா 3:11-131 இராஜா 3:28யாக் 3:131 நாளாக 28:2 உனக்கு ஞானத்தையும் அறிவையும் கொடுக்கிறேன். அத்துடன் உனக்கு முன்னிருந்த எந்த அரசனுக்கும் உனக்குப் பின்வரும் எந்த அரசனுக்கும் இல்லாத செல்வத்தையும், செழிப்பையும், கனத்தையும் உனக்குக் கொடுப்பேன்” என்றார். யாக் 1:52 நாளாக 9:22மத் 6:33எபே 3:201 நாளாக 29:25பிரச 2:9
அதன்பின்பு சாலொமோன் கிபியோனின் சபைக் கூடாரத்திற்கு முன்பாக இருந்த, உயர்ந்த இடத்திலிருந்து எருசலேமுக்குப் போனான். அங்கே இஸ்ரயேலை அரசாண்டான். 1 இராஜா 4:24-252 நாளாக 1:3
சாலொமோன் தேர்களையும், குதிரைகளையும் திரளாய் சேர்த்தான். அவனிடம் 1,400 தேர்களும், 12,000 குதிரைகளும் இருந்தன. அவன் தேர்களை அவற்றிற்குரிய பட்டணங்களிலும், அரசனாகிய தன்னிடத்தில் எருசலேமிலும் வைத்திருந்தான். 1 இராஜா 4:261 இராஜா 10:26-291 இராஜா 9:192 நாளாக 9:251 இராஜா 10:16உபா 17:16 அரசன் எருசலேமில் தங்கத்தையும், வெள்ளியையும் கற்களைப்போல் சாதரணமாகவும், கேதுரு மரங்களை மலையடிவாரங்களில் வளரும் காட்டத்தி மரங்களைப்போல ஏராளமாகவும் கிடைக்கும்படி செய்தான். 2 நாளாக 9:271 இராஜா 10:27-292 நாளாக 1:12ஆமோ 7:14ஏசா 60:17ஏசா 9:10யோபு 22:24-25 சாலொமோனுடைய குதிரைகள் எகிப்திலிருந்தும் சிலிசியாவிலிருந்தும் கொண்டுவரப்பட்டன. அரச வர்த்தகர்கள் அவற்றை அப்போதிருந்த விலைக்கு சிலிசியாவிலிருந்தே வாங்கினார்கள். 1 இராஜா 10:28-292 நாளாக 9:28 எகிப்திலிருந்து ஒரு தேரை அறுநூறு சேக்கல் வெள்ளிக்கும், ஒரு குதிரையை நூற்றைம்பது சேக்கல் வெள்ளிக்கும் இறக்குமதி செய்தனர். அத்துடன் அவற்றை அவர்கள் ஏத்திய அரசர்களுக்கும், சீரிய அரசர்களுக்கும் ஏற்றுமதி செய்தனர். 2இராஜா 10:29