1 யெகோவா தமது கோபத்தின் மேகத்தால் 1 நாளாக 28:2சங் 132:7எசேக் 28:14-16புலம் 3:43-44லூக் 10:18வெளி 12:7-9எசேக் 30:18ஏசா 14:12-15
சீயோன் மகளை எப்படி மூடிப்போட்டார்;
இஸ்ரயேலின் சீர்சிறப்பை
வானத்திலிருந்து பூமிக்குத் தள்ளிவிட்டார்;
அவர் தமது கோபத்தின் நாளில்
தமது பாதபீடத்தை நினைவுகூரவில்லை.
யாக்கோபின் எல்லா குடியிருப்புகளையும் புலம் 2:17புலம் 3:43சங் 89:39-40ஏசா 25:12ஏசா 43:28சங் 21:92 கொரி 10:4எசேக் 9:10
யெகோவா இரக்கமின்றி விழுங்கிவிட்டார்;
யூதா மகளின் கோட்டைகளை
தமது கோபத்தில் தகர்த்து வீழ்த்திப்போட்டார்.
அரசுகளையும், அதன் இளவரசர்களையும்
அவமானப்படுத்தி தரையிலே தள்ளினார்.
அவருடைய கோபத்தினால் சங் 74:11ஏசா 42:25சங் 75:10சங் 75:5எரே 48:25சங் 79:5சங் 89:46உபா 32:22
இஸ்ரயேலின் முழு பலத்தையும் 2 இல்லாமல் பண்ணினார்.
அவர் தமது வலது கரத்தை, பகைவர்கள் நெருங்கி வருகையில், விலக்கிக்கொண்டார்.
அவர் யாக்கோபின் நாட்டில்,
தன்னைச் சுற்றியுள்ள எல்லாவற்றையும் எரிக்கிற,
கொழுந்துவிட்டெரிகிற நெருப்பைப்போல எரிந்தார்.
அவர் ஒரு பகைவனைப்போல வில்லை நாணேற்றினார்; எரே 7:20எசேக் 24:25ஏசா 42:25எரே 21:5யோபு 6:4புலம் 3:12-13எரே 30:14நாகூ 1:6
அவரது வலதுகரம் ஆயத்தமாயிருக்கிறது.
அவர் பகைவனைப்போல
கண்ணுக்கு இனியவர்களையெல்லாம் வெட்டிப்போட்டார்;
சீயோன் மகளின் கூடாரத்தில்
தமது கடுங்கோபத்தை நெருப்பைப்போல் ஊற்றிவிட்டார்.
ஆண்டவர் ஒரு பகைவனைப் போலிருக்கிறார்; புலம் 2:22இராஜா 25:9எரே 30:14எரே 52:13புலம் 2:42 நாளாக 36:16-17எசேக் 2:10எரே 15:1
அவர் இஸ்ரயேலை விழுங்கிவிட்டார்;
அவளுடைய எல்லா அரண்மனைகளையும் விழுங்கி,
அவளுடைய கோட்டைகளை அழித்துவிட்டார்.
யூதாவின் மகளுக்கு புலம்பலையும்,
துக்கங்கொண்டாடலையும் அதிகரிக்கச் செய்தார்.
அவர் தமது ஆலயத்தை ஒரு தோட்டத்தின் குடிசையைப்போல பாழாக்கிவிட்டார்; புலம் 1:4செப்ப 3:18புலம் 4:16எசேக் 12:12-13எசேக் 17:18ஏசா 1:13ஏசா 1:8ஏசா 43:28
அவர் தமது சபைக்கூடும் இடத்தையும் அழித்துப்போட்டார்.
யெகோவா, சீயோனுக்கு நியமித்த பண்டிகைகளையும்,
ஓய்வுநாட்களையும் அவள் நினைவிலிருந்தே எடுத்துப்போட்டார்;
தமது கடுங்கோபத்தில் அரசனையும்,
ஆசாரியனையும் புறக்கணித்துப் போட்டார்.
யெகோவா தமது சொந்த பலிபீடத்தை புறக்கணித்து, ஆமோ 2:5சங் 74:3-8எசேக் 24:21எசேக் 7:20-22எரே 52:13சங் 78:59-612 நாளாக 36:19அப் 6:13-14
தமது பரிசுத்த இடத்தையும் கைவிட்டார்.
அவளுடைய அரண்மனைகளின் சுவர்களை
பகைவரின் கையில் ஒப்புக்கொடுத்தார்;
அவர்கள் நியமித்த பண்டிகை நாளிலிருப்பதுபோல்
யெகோவாவின் ஆலயத்தில் ஆரவாரம் செய்தார்கள்.
யெகோவா சீயோன் மகளைச் சுற்றியுள்ள சுவரை 2இராஜா 21:13ஏசா 3:26ஏசா 34:11எரே 14:2ஆமோ 7:7-8எரே 5:102 சாமு 8:2எசேக் 20:22
அழிப்பதற்குத் தீர்மானித்துவிட்டார்.
அவர் ஒரு அளவு நூலை நீட்டி அளந்தார்.
அவர் அழிப்பதிலிருந்து தமது கையை விலக்கிக் கொள்ளவில்லை.
அதனால் அவர் அரண்களையும், மதில்களையும் புலம்பச் செய்தார்;
அவை ஒன்றாக பாழாய்ப்போயின.
எருசலேமின் வாசல்கள் நிலத்திற்குள்ளே புதைந்து கிடக்கின்றன; எசேக் 7:26ஓசி 3:42 நாளாக 15:3மீகா 3:6-7நெகே 1:3சங் 74:9ஆமோ 8:11-12உபா 28:36
அவைகளின் தாழ்ப்பாள்களை அவர் உடைத்து அழித்துவிட்டார்.
அவளுடைய அரசனும், அவளுடைய இளவரசர்களும்
நாடுகளுக்கு நடுவே நாடுகடத்தப்பட்டிருக்கிறார்கள்.
சட்டம் இல்லாமற்போயிற்று.
அவளுடைய இறைவாக்கு உரைப்போருக்கு
யெகோவாவிடமிருந்து தரிசனங்கள் கிடைப்பதில்லை.
சீயோன் மகளின் முதியோர் ஏசா 3:26ஏசா 15:3யோபு 2:12-13ஆமோ 8:3எசேக் 7:18ஏசா 47:1யோசு 7:6புலம் 1:1
மவுனமாய் தரையில் உட்கார்ந்திருக்கிறார்கள்;
அவர்கள் தங்கள் தலையில் புழுதியைப் போட்டுக்கொண்டு,
துக்கவுடையை உடுத்திக்கொண்டார்கள்.
எருசலேமின் இளம்பெண்கள்
தங்கள் தலைகளை தரைமட்டும் தாழ்த்தியிருக்கிறார்கள்.
அழுகிறதினால் என் கண்கள் மங்கிப்போயிற்று. புலம் 1:20எரே 4:19யோபு 16:13புலம் 1:16ஏசா 22:4புலம் 3:48-51லூக் 23:29சங் 22:14
நான் எனக்குள் வேதனையடைகிறேன்.
என் இருதயம் தரையிலே ஊற்றப்படுகிறது.
ஏனெனில் என் மக்கள் அழிக்கப்படுகிறார்கள்.
பிள்ளைகளும் குழந்தைகளும்
பட்டணத்துத் தெருக்களில் மயங்கி விழுந்து கிடக்கிறார்கள்.
அப்பிள்ளைகள் காயமுற்ற மனிதரைப்போல், எசேக் 30:24ஏசா 53:12
பட்டணத்து வீதிகளில் மயங்கிக் கிடக்கிறார்கள்.
அவ்வேளையில் அவர்கள் தங்கள் தாயாரிடம்,
“அப்பமும், பானமும் எங்கே?”
எனக்கேட்டு தாயாரின் கைகளில்
உயிரை விடுகிறார்கள்.
எருசலேம் மகளே! புலம் 1:122 சாமு 5:20எரே 14:17எரே 30:12-15எரே 8:22தானி 9:12எசேக் 26:3-4ஏசா 37:22
உனக்கு என்ன சொல்வேன்?
உன்னை நான் எதனோடு ஒப்பிடுவேன்?
சீயோன் கன்னி மகளே,
நான் உன்னைத் தேற்றும்படி
எதனுடன் உன்னை ஒப்பிட முடியும்?
உன் காயம் கடலைப்போல் ஆழமாயிருக்கிறதே.
யார் உன்னைக் குணமாக்க முடியும்?
உனது இறைவாக்கு உரைப்போரின் எசேக் 22:28ஏசா 58:1எரே 5:31எசேக் 22:25மீகா 3:5-7எரே 2:8எரே 8:10-112 பேது 2:1-3
தரிசனங்கள் பொய்யும் பயனற்றவையுமே;
உனது சிறையிருப்பைத் தடுக்கும்படி,
அவர்கள் உன் பாவங்களை சுட்டிக்காட்டவில்லை.
அவர்கள் உனக்குக் கொடுத்த இறைவாக்குகள் பொய்யும்,
வழிதவறச் செய்வதுமே.
உன் வழியாய்க் கடந்து போகிறவர்கள் எல்லோரும், எரே 18:16சங் 48:2எசேக் 25:6எரே 19:8சங் 50:2ஏசா 37:22ஏசா 64:11மத் 27:39
உன்னைப் பார்த்து தங்கள் கைகளைத் தட்டுகிறார்கள்;
எருசலேம் மகளைப் பார்க்கிறவர்கள்
கேலிசெய்து தங்கள் தலைகளை அசைத்துச் சொல்கிறதாவது:
“அழகின் நிறைவு என்றும்,
பூமி முழுவதற்கும் மகிழ்ச்சி என்றும்
அழைக்கப்பட்ட நகரம் இதுதானா?”
உன் பகைவர்கள் எல்லோரும், சங் 35:21புலம் 3:46சங் 37:12யோபு 16:9-10சங் 56:2எரே 51:34சங் 124:3சங் 22:13
உனக்கெதிராகத் தங்கள் வாய்களை விரிவாகத் திறந்து வசைமொழி கூறுகிறார்கள்;
அவர்கள் கேலிசெய்து தங்களுடைய பற்களைக் கடித்துச் சொல்கிறதாவது:
“நாங்கள் அவளை விழுங்கிவிட்டோம்.
இந்த நாளுக்காகவே நாங்கள் காத்திருந்தோம்.
அதைக் காணவே நாங்கள் உயிரோடிருந்தோம்.”
யெகோவா தாம் திட்டமிட்டதைச் செய்துவிட்டார்; எசேக் 5:11சங் 89:42உபா 28:15-68உபா 31:16-17எசேக் 7:8-9எசேக் 8:18புலம் 1:5புலம் 2:1-2
அவர் நீண்ட நாட்களுக்குமுன் நியமனம் செய்த தமது வார்த்தையை,
நிறைவேற்றிவிட்டார்.
எருசலேமை அவர் இரக்கமின்றி கவிழ்த்துப் போட்டார்,
பகைவன் உன்மேல் இழிவுபடுத்தி மகிழ அவர் இடமளித்தார்.
அவர் உன் பகைவரின் பெலத்தை ஓங்கச் செய்தார்.
மக்களின் இருதயங்கள் சங் 119:145எரே 9:1புலம் 1:16புலம் 2:8புலம் 3:48-49சங் 119:136ஓசி 7:14ஆப 2:11
ஆண்டவரை நோக்கிக் கதறுகின்றன.
சீயோன் மகளின் மதிலே,
உனது கண்ணீர் இரவும் பகலும்
ஒரு நதியைப்போல் ஓடட்டும்;
உனக்கு ஓய்வு கொடாதே,
கண்ணீர்விடாமல் இருக்காதே.
எழும்பு, இரவிலே சங் 62:8ஏசா 26:9சங் 119:147-148சங் 142:2மாற் 1:351 சாமு 1:15சங் 141:2புலம் 2:11-12
முதற்சாமத்தில் கதறி அழு,
யெகோவாவினுடைய சமுகத்தில்
உன் இருயத்தைத் தண்ணீரைப்போல் ஊற்று.
ஒவ்வொரு தெருவின் முனையிலும்,
பசியினால் மயங்கி விழும்
உனது பிள்ளைகளின் உயிருக்காக
அவரை நோக்கி உன் கைகளை உயர்த்து.
“யெகோவாவே, கவனித்துப் பாரும்: எரே 19:9புலம் 4:10சங் 78:64உபா 9:26யாத் 32:11புலம் 4:132இராஜா 6:28-29உபா 28:53-57
நீர் யாரையாகிலும் இவ்விதமாய் எப்பொழுதாவது நடத்தியிருக்கிறீரோ?
பெண்கள் தாம் பெற்றெடுத்த பிள்ளைகளை உண்ண வேண்டுமோ?
தாங்கள் பராமரித்த வழித்தோன்றல்களை உண்ண வேண்டுமோ?
ஆண்டவரின் பரிசுத்த இடத்தில்
ஆசாரியரும் இறைவாக்கினரும் கொல்லப்பட வேண்டுமோ?
“வாலிபரும், முதியோரும் ஒன்றாய் வீதிகளின் 2 நாளாக 36:17சகரி 11:6எரே 13:14புலம் 3:43எரே 18:21புலம் 1:15புலம் 2:17புலம் 2:2
புழுதியில் விழுந்து கிடக்கிறார்கள்;
வாலிபரும், கன்னிப்பெண்களும்
வாளால் வெட்டி வீழ்த்தப்பட்டிருக்கிறார்கள்.
உமது கோபத்தின் நாளிலே அவர்களை வெட்டிப் போட்டீர்;
இரக்கமின்றி அவர்களை வெட்டிக் கொன்றீர்.
“ஒரு விருந்து நாளுக்கு அழைப்பதுபோல, எரே 6:25சங் 31:13ஏசா 24:17-18எரே 16:2-4எரே 20:3ஆமோ 9:1-4உபா 28:18ஓசி 9:12-16
திகிலுண்டாகும்படி எல்லாப் பக்கங்களிலும் எதிரிகளை வரவழைத்தீர்.
யெகோவாவின் கோபத்தின் நாளில் ஒருவனாகிலும் தப்பவுமில்லை,
பிழைக்கவுமில்லை;
நான் பராமரித்து வளர்த்தவர்களை,
என் பகைவன் அழித்துவிட்டான்.”