லூக்கா 24

Luke 24

இயேசுவின் உயிர்த்தெழுதல்

வாரத்தின் முதலாம் நாள் அதிகாலையிலேயே, அந்தப் பெண்கள் தாங்கள் ஆயத்தம் செய்திருந்த நறுமணப் பொருட்களை எடுத்துக்கொண்டு, கல்லறையை நோக்கிச் சென்றார்கள். யோவா 20:1-2மத் 28:1-8மாற் 16:1-8லூக் 24:10லூக் 23:55-56லூக் 8:2-3மாற் 15:40மத் 27:55-56 அங்கே கல்லறை வாசலில் வைக்கப்பட்டிருந்த கல் புரட்டித் தள்ளப்பட்டிருப்பதைக் கண்டார்கள். யோவா 20:1-2மத் 27:60-66மத் 28:2மாற் 15:46-47மாற் 16:3-4 அவர்கள் உள்ளே நுழைந்தபோது, கர்த்தராகிய இயேசுவினுடைய உடலைக் காணாமல், லூக் 24:23யோவா 20:6-7மத் 16:5 அவர்கள் அதைக்குறித்து யோசிக்கையில், திடீரென்று மின்னலைப் போல மின்னுகின்ற உடைகளை அணிந்திருந்த இரண்டுபேர் அவர்களின் அருகே நின்றார்கள். யோவா 20:11-12மாற் 16:5அப் 1:10மத் 28:2-6ஆதி 18:2 அந்தப் பெண்களோ பயந்துபோய், தலைகுனிந்து தரையைப் பார்த்துக்கொண்டிருந்தார்கள். அந்த இரண்டு பேரும் அவர்களிடம், “உயிருடன் இருக்கிறவரை, நீங்கள் ஏன் இறந்தவர்களிடையே தேடுகிறீர்கள்? மாற் 16:5-6வெளி 1:18மத் 28:3-5லூக் 1:12-13வெளி 2:8தானி 10:16தானி 10:19அப் 10:3-4 அவர் இங்கே இல்லை; அவர் உயிருடன் எழுந்துவிட்டார்! அவர் உங்களுடன் கலிலேயாவில் இருக்கையிலே, உங்களுக்குச் சொன்னது ஞாபகமில்லையா: மத் 17:22-23லூக் 9:22மாற் 8:31மத் 28:6லூக் 9:44மத் 27:63மாற் 10:33-34மத் 12:40 ‘மானிடமகனாகிய நான் பாவிகளின் கையில் ஒப்புக்கொடுக்கப்பட்டு, சிலுவையில் அறையப்படவேண்டும்; மூன்றாம் நாளிலே, திரும்பவும் உயிருடன் எழுந்திருக்க வேண்டும்’ என்று அவர் உங்களுக்குச் சொல்லியிருந்தாரே” என்றார்கள். மத் 16:21 அப்பொழுது இயேசுவினுடைய வார்த்தைகள் அந்த பெண்களின் நினைவிற்கு வந்தன. யோவா 12:16யோவா 14:26யோவா 2:19-22

அவர்கள் கல்லறையில் இருந்து திரும்பிவந்தபோது, இவை எல்லாவற்றையும் பதினொரு அப்போஸ்தலரிடமும், மற்றெல்லோரிடமும் சொன்னார்கள். லூக் 24:22-24மத் 28:7-8மாற் 16:7-8மாற் 16:10 மகதலேனா மரியாள், யோவன்னாள், யாக்கோபின் தாயாகிய மரியாள் ஆகியோரும், அவர்களுடன் இருந்த மற்ற பெண்களும், அப்போஸ்தலருக்கு இதைச் சொன்னார்கள். யோவா 20:11-18லூக் 8:2-3மத் 27:56மாற் 15:40-41மாற் 16:9-11மாற் 6:30 அவர்களோ, இந்தப் பெண்கள் சொன்னதை நம்பவில்லை. இவர்கள் சொன்னது அவர்களுக்கு வீண்பேச்சாகத் தோன்றியது. யோபு 9:16மாற் 16:11ஆதி 19:14சங் 126:12இராஜா 7:2அப் 12:9லூக் 24:25 ஆனால், பேதுரு எழுந்து கல்லறையை நோக்கி ஓடினான். அவன் அங்கு எட்டிப் பார்த்தபோது, அவரைச் சுற்றியிருந்த மெல்லிய துணிகள் மட்டும் கிடப்பதைக் கண்டான். அப்பொழுது அவன், என்ன நடந்ததோ என்று தனக்குள்ளே யோசித்துக் கொண்டு திரும்பிப்போனான். யோவா 20:3-10

எம்மாவூ கிராமத்தின் வழியில் இயேசு

இதே நாளிலே, சீடர்களில் இரண்டுபேர் எம்மாவூ எனப்பட்ட கிராமத்தை நோக்கிப் போய்க்கொண்டிருந்தார்கள். இது எருசலேமில் இருந்து 11 கிலோமீட்டர் தூரம் 1 இருந்தது. லூக் 24:18மாற் 16:12-13 அவர்கள் இருவரும், நடந்த எல்லாவற்றையும் குறித்து பேசிக்கொண்டே சென்றார்கள். உபா 6:7லூக் 6:45மல்கி 3:6 அவர்கள், இப்படி இந்தக் காரியங்களைக்குறித்து கலந்துரையாடிக்கொண்டு போகையில், இயேசு தாமே அவர்களுக்கு அருகே வந்து, அவர்களோடு கூடப்போனார்; மத் 18:20யோவா 14:18-19லூக் 24:36 ஆனால், அவர் யார் என்று அறியாமலிருக்க அவர்களின் கண்கள் மூடப்பட்டிருந்தது. யோவா 20:14யோவா 21:4லூக் 24:31மாற் 16:122இராஜா 6:18-20

இயேசு அவர்களிடம், “நீங்கள் வழிநெடுகிலும் ஒருவரோடொருவர் எதைக் குறித்து பேசிக்கொண்டீர்கள்?” என்று கேட்டார். யோவா 16:20-22யோவா 16:6எசேக் 9:4-6

அவர்கள் துக்கம் தோய்ந்த முகத்துடன் அந்த இடத்திலே நின்றார்கள். அவர்களில் ஒருவனான கிலெயோப்பா என்பவன் அவரிடம், “அப்படியானால் இந்நாட்களில் எருசலேமில் நடந்த காரியங்களை அறியாதபடிக்கு நீர் அந்நியரோ?” என்று கேட்டான். யோவா 19:25

அதற்கு அவர், “என்ன காரியங்கள்?” என்று கேட்டார். அவர்கள் இயேசுவுக்குப் பதிலாக: மத் 21:11அப் 2:22அப் 7:22யோவா 3:2யோவா 4:19யோவா 6:14லூக் 7:16அப் 10:38

“நசரேயனாகிய இயேசுவைக்குறித்தவைகளே! அவர் இறைவனுக்கு முன்பாகவும், எல்லா மக்களுக்கு முன்பாகவும் வார்த்தையிலும், செயலிலும் வல்லமையுள்ள இறைவாக்கினராக இருந்தார். தலைமை ஆசாரியர்களும், எங்கள் ஆட்சியர்களும் அவரை மரண தண்டனைத் தீர்ப்புக்கு உட்படுத்தி, அவரை சிலுவையில் அறைந்தார்கள்; அப் 13:27-29அப் 3:13-15அப் 4:8-10லூக் 23:13மத் 27:20அப் 4:27-28அப் 5:30-31லூக் 22:66 நாங்களோ, இஸ்ரயேலை மீட்கப் போகிறவர் அவரே என்று நம்பிக்கைக் கொண்டிருந்தோம். இவையெல்லாம் நடந்தேறி மூன்று நாட்கள் ஆகின்றன. லூக் 1:68ஏசா 59:201 பேது 1:18-19லூக் 2:38அப் 1:6சங் 130:8வெளி 5:9 அதுவுமல்லாமல், எங்களைச் சேர்ந்த சில பெண்கள் இன்று அதிகாலையில் கல்லறைக்குச் சென்றார்கள். அவர்கள் எங்களுக்குத் திகைப்பூட்டும் செய்தியைக் கொண்டுவந்திருக்கிறார்கள். மத் 28:7-8மாற் 16:9-10யோவா 20:1-2யோவா 20:18லூக் 24:1-11 அவர்கள், அவருடைய உடலைக் காணவில்லை. அத்துடன் அந்தப் பெண்கள், இறைத்தூதர்களை கண்டதாகவும், இயேசு உயிரோடு இருப்பதாக இறைத்தூதர்கள் தங்களுக்குச் சொன்னதாகவும் எங்களிடம் வந்து சொன்னார்கள். அப்பொழுது, எங்களுடைய கூட்டாளிகளில் சிலர் கல்லறைக்குப் போய், பெண்கள் சொன்னபடியே அதைக் கண்டார்கள். இயேசுவையோ அவர்கள் காணவில்லை” என்றார்கள். லூக் 24:12யோவா 20:1-10

அப்பொழுது இயேசு அவர்களிடம், “இறைவாக்கினர் சொன்னதை எல்லாம் விசுவாசிக்கிறதற்குப் புத்தியில்லாத மந்த இருதயமுள்ளவர்களே! மாற் 7:18மாற் 9:19எபி 5:11-12மாற் 16:14மாற் 8:17-18 கிறிஸ்து இந்த வேதனைகளை எல்லாம் அனுபவித்தபின் மகிமைக்குள் பிரவேசிக்க வேண்டுமல்லவா?” 1 பேது 1:11அப் 17:3ஏசா 53:1-12சகரி 13:7எபி 12:2எபி 2:8-101 கொரி 15:3-4எபி 9:22-23 என்று சொல்லி, மோசே தொடங்கி எல்லா இறைவாக்கினரும், தம்மைக் குறித்துச் சொல்லியிருந்த வேதவசனங்களை எல்லாம் எடுத்து, இயேசு அவர்களுக்கு விவரித்துக் காண்பித்தார். ஏசா 7:14உபா 18:15லூக் 24:44ஏசா 53:1-12எரே 33:14-15சகரி 9:9அப் 10:43யோவா 1:45

அவர்கள் போய்க்கொண்டிருந்த கிராமத்துக்கு அருகில் வந்ததும், இயேசு தாம் தொடர்ந்து அதற்கு அப்பால் போகிறவர்போல காட்டிக்கொண்டார். மாற் 6:48ஆதி 19:2ஆதி 32:26ஆதி 42:7 அவர்கள் அவரிடம், “நீர் எங்களுடன் தங்கும், மாலை நேரம் ஆயிற்று; பொழுதும் போயிற்று” என்று அவரை வற்புறுத்திக் கேட்டார்கள். எனவே, இயேசு அவர்களுடன் தங்கும்படி சென்றார். 2இராஜா 4:8ஆதி 19:3லூக் 14:23அப் 16:14

இயேசு அவர்களோடு சாப்பாட்டுப் பந்தியில் இருக்கையில், அவர் அப்பத்தை எடுத்து நன்றி செலுத்தியபின், அதைப் பிட்டு அவர்களுக்குக் கொடுக்கத் தொடங்கினார். மத் 14:19லூக் 24:35லூக் 9:16மத் 15:36அப் 27:35யோவா 6:11லூக் 22:19மாற் 14:22 அப்பொழுது அவர்களுடைய கண்கள் திறக்கப்பட்டன. அவர்கள் அவரை இன்னார் என்று அடையாளம் கண்டுகொண்டார்கள். உடனே, இயேசு அவர்களுடைய பார்வையில் இருந்து மறைந்து போய்விட்டார். லூக் 24:16யோவா 8:59லூக் 4:30யோவா 20:13-16 அப்பொழுது அவர்கள், “வழியிலே அவர் நம்மோடு பேசியபோதும், வேதவசனங்களை நமக்கு விளக்கும்போதும், நம்முடைய இருதயங்கள் நமக்குள்ளே பற்றி எரிந்ததல்லவா?” என்று, ஒருவரோடொருவர் சொல்லிக்கொண்டார்கள். லூக் 24:45எரே 23:29எபி 4:12சங் 39:3எரே 15:16எரே 20:9நீதி 27:17யோவா 6:63

அவர்கள் எழுந்து, உடனே எருசலேமுக்குத் திரும்பிச் சென்றார்கள். அங்கே பதினொருவரும், அவர்களுடன் இருந்தவர்களும் ஒன்றுகூடியிருப்பதைக் கண்டார்கள். யோவா 20:19-26மாற் 16:13அப் 1:14 அவர்கள் எல்லோரும், “கர்த்தர் உயிரோடு எழுந்திருக்கிறார். அவர் சீமோனுக்குக் காட்சியளித்தது உண்மைதான்!” என்று சொல்லிக்கொண்டார்கள். 1 கொரி 15:5மாற் 16:7லூக் 22:54-62 அப்பொழுது, இந்த இருவரும் தங்களுக்கு வழியிலே நடந்ததையும், இயேசு அப்பத்தைப் பிட்டுக் கொடுத்தபோது, தாங்கள் அவரை எப்படி அறிந்துகொண்டார்கள் என்பதையும் அவர்களுக்குச் சொன்னார்கள். மாற் 16:12-13அப் 2:42லூக் 24:30-31

இயேசு சீடர்களுக்குக் காட்சியளித்தல்

சீடர்கள் இதைப்பற்றிப் பேசிக்கொண்டிருக்கும்போதே, இயேசு தாமே அவர்கள் நடுவே நின்று, “உங்களுக்கு சமாதானம் உண்டாவதாக” என்று சொன்னார். 2 தெச 3:16ஏசா 57:18யோவா 20:19-23லூக் 10:5மாற் 16:14வெளி 1:41 கொரி 15:5யோவா 14:27

அவர்கள் திடுக்கிட்டு பயமடைந்து, தாங்கள் இறந்துபோனவரின் ஆவியைக் காண்கிறதாக நினைத்துக் கொண்டார்கள். மத் 14:26-271 சாமு 28:13யோபு 4:14-16மாற் 6:49-50அப் 12:15லூக் 16:30 இயேசு அவர்களிடம், “நீங்கள் ஏன் குழப்பம் அடைந்திருக்கிறீர்கள்? உங்கள் உள்ளங்களில் ஏன் சந்தேகம் எழும்புகிறது? எரே 4:14எபி 4:13தானி 4:19தானி 4:5மத் 16:8 என்னுடைய கைகளையும், கால்களையும் பாருங்கள். இது நான், நானேதான்! என்னைத் தொட்டுப் பாருங்கள்; நீங்கள் என்னில் காண்கிறதுபோல, சதையும் எலும்புகளும் ஒரு ஆவிக்கு இருப்பதில்லையே?” என்றார். யோவா 20:271 யோவா 1:1பிரச 12:7யோவா 20:201 தெச 5:23எண் 16:22எபி 12:9யோவா 20:25

இயேசு இதைச் சொல்லி முடித்தபோது, தமது கைகளையும் கால்களையும் அவர்களுக்குக் காண்பித்தார். அவர்களோ சந்தோஷத்தாலும், வியப்பாலும் நிறைந்தார்கள். அதை அவர்களால் இன்னும் நம்பமுடியவில்லை. அப்பொழுது இயேசு அவர்களிடம், “சாப்பிடுகிறதற்கு ஏதாவது இங்கே உங்களிடம் இருக்கிறதா?” என்று கேட்டார். யோவா 21:5சங் 126:1-2ஆதி 45:26-28யோவா 16:22யோவா 21:10-13யோபு 9:16 அவர்கள் நெருப்பில் சுட்ட ஒரு மீன் துண்டை 2 அவருக்குக் கொடுத்தார்கள். அவர் அதை எடுத்து, அவர்கள் முன்பாகவே சாப்பிட்டார். அப் 10:41

“நான் உங்களோடு இருக்கையில், உங்களுக்கு இதைச் சொல்லியிருந்தேனே: மோசேயினுடைய சட்டத்திலும், இறைவாக்குகளிலும், சங்கீதங்களிலும் என்னைக்குறித்து எழுதியிருக்கிறவை யாவும் நிறைவேற வேண்டியதாயிருந்தது” என்றார். சகரி 12:10லூக் 24:26-27சகரி 9:9அப் 13:33சங் 110:1-7ஏசா 11:1-10ஏசா 7:14லூக் 9:22

பின்பு அவர்கள், வேதவசனங்களை விளங்கிக்கொள்ளத்தக்கதாக, இயேசு அவர்களுடைய மனதைத் திறந்தார். அப் 16:141 யோவா 5:20சங் 119:182 கொரி 3:14-18அப் 26:182 கொரி 4:4-6யாத் 4:11எபே 5:14 இயேசு அவர்களிடம், “எழுதப்பட்டிருப்பது இதுவே: கிறிஸ்து வேதனை அனுபவிப்பார், மூன்றாம் நாளிலோ உயிருடன் எழுந்திருப்பார். ஏசா 53:2-12ஏசா 50:6லூக் 24:44லூக் 24:26-27லூக் 24:7அப் 17:3சங் 22:1-311 பேது 1:3 மனந்திரும்புதலைக் குறித்ததும், பாவமன்னிப்பைக் குறித்ததுமான நற்செய்தியை, எருசலேம் தொடங்கி எல்லா ஜனங்களுக்கும், அவருடைய பெயரில் அறிவிக்கவேண்டும். அப் 5:31ஏசா 49:6அப் 2:38அப் 20:21மத் 28:19அப் 11:18அப் 13:46ஏசா 2:1-3 இவைகளுக்கெல்லாம் நீங்கள் சாட்சிகளாய் இருக்கிறீர்கள். அப் 1:8அப் 13:31அப் 2:32அப் 5:32அப் 10:41அப் 1:22அப் 10:39அப் 3:15 என் பிதா உங்களுக்குத் தருவதாக வாக்களித்த பரிசுத்த ஆவியானவரை, நான் உங்களுக்கு அனுப்புகிறேன்; உன்னதத்தில் இருக்கும் அந்த வல்லமையினால் நீங்கள் உடுத்துவிக்கப்படும்வரை, இந்தப் பட்டணத்திலே தங்கியிருங்கள்” என்றார். அப் 1:8அப் 1:4யோவே 2:28-32யோவா 14:26ஏசா 32:15ஏசா 44:3-4யோவா 14:16-17அப் 2:1-21

இயேசு பரலோகத்திற்குச் செல்லுதல்

இயேசு பெத்தானியாவரை அவர்களைக் கூட்டிக்கொண்டுபோய், அவர் தம்முடைய கைகளை உயர்த்தி, அவர்களை ஆசீர்வதித்தார். அப் 1:12ஆதி 49:28மத் 21:17மாற் 11:1எண் 6:23-27ஆதி 14:18-20ஆதி 27:4ஆதி 48:9 இயேசு அவர்களை ஆசீர்வதித்துக் கொண்டிருந்தபோதே, அவர்களைவிட்டுப் பரலோகத்திற்குள் எடுத்துக்கொள்ளப்பட்டார். அப் 1:92இராஜா 2:11யோவா 20:17மாற் 16:19எபே 4:8-10எபி 1:3எபி 4:14 அப்பொழுது அவர்கள் இயேசுவை வழிபட்டு, மிகுந்த மகிழ்ச்சியுடனே எருசலேமுக்குத் திரும்பிச் சென்றார்கள். மத் 28:91 பேது 1:8யோவா 16:22யோவா 20:28சங் 30:11யோவா 14:28மத் 28:17யோவா 16:7 அவர்கள் இறைவனைத் துதித்துக்கொண்டு, ஆலயத்திலேயே தொடர்ந்து தங்கியிருந்தார்கள். மாற் 16:20அப் 2:46-47அப் 5:41-42மத் 28:20வெளி 22:21