இரண்டு சாட்சிகள்
பின்பு கைத்தடி போன்ற ஒரு அளவுகோல் என்னிடம் கொடுக்கப்பட்டது. அப்பொழுது தேவதூதன் நின்று, என்னைப் பார்த்து: நீ எழுந்து, தேவனுடைய ஆலயத்தையும், பலிபீடத்தையும், அதில் தொழுதுகொள்ளுகிறவர்களையும் அளந்து பார். வெளி 21:15எசேக் 42:15-20சகரி 2:1-2எசேக் 40:1-481 கொரி 3:16-171 பேது 2:5எபே 2:20-22ஏசா 28:17 ஆலயத்திற்கு வெளியே இருக்கிற முற்றம் யூதரல்லாதவர்களுக்குக் கொடுக்கப்பட்டபடியால் அதை அளக்கவேண்டாம்; பரிசுத்த நகரத்தை அவர்கள் நாற்பத்திரண்டு மாதங்கள்வரைக்கும் மிதிப்பார்கள். தானி 7:25லூக் 21:24வெளி 12:6தானி 12:7வெளி 11:3தானி 12:11-12ஏசா 52:1வெளி 13:1-18 என்னுடைய இரண்டு சாட்சிகளும் துக்கத்திற்கான சாக்கு ஆடை அணிந்துகொண்டவர்களாக, ஆயிரத்து இருநூற்றுஅறுபது நாட்கள்வரை தீர்க்கதரிசனம் சொல்லுவதற்கு அவர்களுக்கு அதிகாரம் கொடுப்பேன். வெளி 12:6வெளி 11:2உபா 19:15வெளி 13:5அப் 1:8அப் 13:31ஆதி 37:34ஏசா 22:12 பூலோகத்தின் ஆண்டவருக்கு முன்பாக நிற்கிற இரண்டு ஒலிவமரங்களும் இரண்டு விளக்குத்தண்டுகளும் இவர்களே. சகரி 4:11-14சகரி 4:2-3எரே 11:16சங் 52:8ஏசா 54:5வெளி 1:20ரோம 11:17லூக் 11:33 ஒருவன் அவர்களைச் சேதப்படுத்த நினைத்தால், அவர்களுடைய வாயிலிருந்து அக்கினி புறப்பட்டு, அவர்களுடைய எதிராளிகளை அழிக்கும்; யாராவது அவர்களைச் சேதப்படுத்த நினைத்தால், அவனும் அப்படியே கொல்லப்படவேண்டும். எரே 5:142இராஜா 1:10-12ஓசி 6:5ஏசா 11:4எண் 16:28-35சங் 18:8எரே 1:10சகரி 2:8 அவர்கள் தீர்க்கதரிசனம் சொல்லுகிற நாட்களிலே மழைபெய்யாதபடி வானத்தை அடைக்க அவர்களுக்கு அதிகாரம் உண்டு; அவர்கள் தண்ணீர்களை இரத்தமாக மாற்றவும், தங்களுக்கு வேண்டியபோதெல்லாம் பூமியை எல்லாவித வாதைகளாலும் வாதிக்கவும் அவர்களுக்கு அதிகாரம் உண்டு. 1 இராஜா 17:1லூக் 4:25யாத் 7:17-25சங் 105:26-361 சாமு 4:8யாக் 5:16-18எசேக் 7:1-12 அவர்கள் தங்களுடைய சாட்சியைச் சொல்லி முடிக்கும்போது, பாதாளத்தில் இருந்து மேலே ஏறி வருகிற மிருகம் அவர்களோடு யுத்தம்பண்ணி, அவர்களை ஜெயித்து, அவர்களைக் கொன்றுபோடும். வெளி 13:7தானி 8:23-24தானி 7:25தானி 7:21-22யோவா 17:4லூக் 13:322 தெச 2:8-9அப் 20:24 அவர்களுடைய உடல்கள், நம்முடைய கர்த்தர் சிலுவையிலே அறையப்பட்ட மகா நகரத்தின் வீதியிலே கிடக்கும். அந்த நகரம் சோதோம் என்றும் எகிப்து என்றும் அடையாளமாகச் சொல்லப்படும். எரே 23:14வெளி 18:10எசேக் 16:53-55எபி 13:12வெளி 18:212 பேது 2:6ஆமோ 4:11யூதா 1:7 மக்களிலும், கோத்திரங்களிலும், பல மொழிக்காரர்களும், பல தேசங்களைச் சேர்ந்தவர்களும் அவர்களுடைய உடல்களை மூன்றரை நாட்கள்வரை பார்ப்பார்கள், ஆனால், அவர்களுடைய உடல்களைக் கல்லறைகளில் வைக்க அனுமதிக்கமாட்டார்கள். சங் 79:2-3வெளி 17:15வெளி 10:11வெளி 11:11வெளி 11:2-3பிரச 6:3மத் 7:2வெளி 13:7 அந்த இரண்டு தீர்க்கதரிசிகளும் பூமியின் மக்களை வேதனைப்படுத்தினதினால் அவர்களுக்காக பூமியில் குடியிருக்கிறவர்கள் சந்தோஷப்பட்டு மகிழ்ந்து, ஒருவருக்கொருவர் வெகுமதிகளை அனுப்புவார்கள். 1 இராஜா 18:171 இராஜா 22:8அப் 5:33அப் 7:54-57யோவா 7:7மத் 10:22மீகா 7:8சங் 35:24-26 மூன்றரை நாட்களுக்குப்பின்பு தேவனிடத்தில் இருந்து ஜீவ சுவாசம் அவர்களுக்குள் பிரவேசித்தது, அப்பொழுது அவர்கள் கால் ஊன்றி நின்றார்கள்; அவர்களைப் பார்த்தவர்களுக்கு அதிக பயம் உண்டானது. ஆதி 2:7ரோம 8:11ரோம 8:2எசேக் 37:5-14அப் 5:5வெளி 11:9அப் 5:11ஓசி 3:5 இங்கே ஏறிவாருங்கள் என்று வானத்திலிருந்து அவர்களுக்கு உண்டான பெரிய சத்தத்தை அவர்கள் கேட்டு, மேகத்தில் ஏறி வானத்திற்குப் போனார்கள்; அவர்களுடைய எதிராளிகள் அவர்களைப் பார்த்தார்கள். 2இராஜா 2:11அப் 1:9வெளி 4:11 தெச 4:17எபே 2:5-6வெளி 12:52இராஜா 2:12இராஜா 2:5 அந்த நேரத்திலே பூமி அதிகமாக அதிர்ந்தது, உடனே அந்த நகரத்தில் பத்தில் ஒரு பங்கு இடிந்து விழுந்தது; மனிதர்களில் ஏழாயிரம்பேர் பூமி அதிர்ச்சியினால் அழிந்தார்கள்; மீதி இருந்தவர்கள் பயமடைந்து பரலோகத்தின் தேவனை மகிமைப்படுத்தினார்கள். வெளி 14:7வெளி 6:12யோசு 7:19எரே 13:16வெளி 11:11வெளி 11:19வெளி 15:4வெளி 16:18-19 இரண்டாம் ஆபத்து கடந்துபோனது; இதோ, மூன்றாம் ஆபத்து சீக்கிரமாக வருகிறது. வெளி 8:13வெளி 9:12வெளி 15:1வெளி 16:1-21
ஏழாம் எக்காளம்
ஏழாம் தூதன் எக்காளம் ஊதினான்; அப்பொழுது உலகத்தின் ராஜ்யங்கள் நம்முடைய கர்த்தருக்கும், அவருடைய கிறிஸ்துவிற்குரிய ராஜ்யங்களானது; அவர் எல்லாக் காலங்களிலும் ராஜ்யங்களை ஆளுவார் என்ற சத்தங்கள் வானத்தில் உண்டானது. தானி 7:14தானி 7:27வெளி 12:10வெளி 10:7வெளி 19:1சகரி 14:9லூக் 1:33யாத் 15:18 அப்பொழுது தேவனுக்கு முன்பாகத் தங்களுடைய சிங்காசனங்கள்மேல் அமர்ந்திருந்த இருபத்துநான்கு மூப்பர்களும் முகங்குப்புறவிழுந்து: வெளி 4:4வெளி 4:10வெளி 7:11வெளி 19:4வெளி 5:14வெளி 5:5-8
“இருக்கிறவரும் இருந்தவரும் வருகிறவருமாகிய சர்வவல்லமையுள்ள கர்த்தராகிய தேவனே, வெளி 1:8வெளி 16:5வெளி 19:6சங் 21:13வெளி 1:4வெளி 4:8-91 தீமோ 1:12ஏசா 51:9-11
உம்மை ஸ்தோத்திரிக்கிறோம்;
தேவரீர் உமது மகா வல்லமையைக் கொண்டு ராஜ்யங்களை ஆளுகிறீர்.
தேசத்தின் மக்கள் கோபித்துக்கொண்டார்கள், வெளி 19:5வெளி 20:12வெளி 13:10வெளி 6:10-11வெளி 20:4-5வெளி 22:12எபி 11:25-26மீகா 7:15-17
அப்பொழுது உம்முடைய கோபம் வந்தது;
மரித்தவர்கள் நியாயத்தீர்ப்பு அடைகிறதற்கும்,
தீர்க்கதரிசிகளாகிய உம்முடைய ஊழியக்காரர்களுக்கும் பரிசுத்தவான்களுக்கும்
உமது நாமத்தின்மேல் பயபக்தியாக இருந்த சிறியவர்கள் மற்றும் பெரியவர்களுக்கு பலன் கொடுப்பதற்கும்,
பூமியைக் கெடுத்தவர்களைக் கெடுக்கிறதற்கும் நேரம்வந்தது” என்று சொல்லி, தேவனைத் தொழுதுகொண்டார்கள்.
அப்பொழுது பரலோகத்தில் தேவனுடைய ஆலயம் திறக்கப்பட்டது, அவருடைய ஆலயத்திலே அவருடைய உடன்படிக்கையின் பெட்டி காணப்பட்டது; அப்பொழுது மின்னல்களும், சத்தங்களும், இடிமுழக்கங்களும், பூமி அதிர்ச்சியும், பெருங்கல்மழையும் உண்டானது. வெளி 16:21எசேக் 38:22வெளி 15:5-8வெளி 4:5ஏசா 30:30வெளி 8:5வெளி 11:15வெளி 14:15-17