ஆதியாகமம் 24

Genesis 24

ஈசாக்கு ரெபெக்காளின் திருமணம்

ஆபிரகாம் இப்பொழுது வயது முதிர்ந்தவன் ஆனான்; யெகோவா எல்லாவிதத்திலும் அவனை ஆசீர்வதித்தார். சங் 112:1-3கலா 3:9ஆதி 13:2நீதி 10:22மத் 6:33ஆதி 12:2ஆதி 18:11எபே 1:3 ஆபிரகாம் தன் வீட்டிலுள்ள யாவற்றுக்கும் பொறுப்பாயிருந்த தலைமைப் பணியாளனிடம், “நீ என் தொடையின்கீழ் உன் கையை வைத்து, ஆதி 47:29ஆதி 39:4-6ஆதி 15:2ஆதி 24:9-10ஆதி 39:8-9ஆதி 44:11 நாளாக 29:241 தீமோ 5:17 பரலோகத்துக்கு இறைவனும், பூமிக்கு இறைவனுமாகிய யெகோவாவின் பெயரால் எனக்குச் சத்தியம் செய்யவேண்டும். நான் கானானியர் மத்தியில் வாழ்வதால் அவர்களுடைய மகள்களில் ஒருத்தியையும் என் மகனுக்கு மனைவியாக நீ எடுக்கமாட்டாய் என்றும், ஆதி 26:34-352 கொரி 6:14-17உபா 7:3-4ஆதி 28:8நெகே 13:251 கொரி 7:392இராஜா 19:15யாத் 34:16 என் நாட்டிற்கும், என் உறவினரிடத்திற்கும் போய், என் மகன் ஈசாக்கிற்கு ஒரு மனைவியை எடுப்பாய் என்றும் சத்தியம் செய்யவேண்டும்” என்றான். ஆதி 28:2ஆதி 11:25ஆதி 12:7ஆதி 22:20-23

அப்பொழுது அவ்வேலைக்காரன், “நான் தெரிந்தெடுக்கும் பெண் என்னுடன் வர விரும்பவில்லையென்றால், உம்முடைய மகன் ஈசாக்கை நீர் விட்டுவந்த நாட்டுக்கு அழைத்துப் போகவேண்டுமோ?” என்று கேட்டான். எரே 4:2யாத் 20:7யாத் 9:2ஆதி 24:58நீதி 13:16

அதற்கு ஆபிரகாம், “என் மகனை திரும்பவும் அவ்விடத்திற்கு அழைத்துப் போகாதபடி கவனமாயிரு. 2 பேது 2:20-22கலா 5:1எபி 10:39எபி 11:9எபி 11:13-16 என் தகப்பன் வீட்டிலிருந்தும், நான் பிறந்த நாட்டிலிருந்தும் என்னை அழைத்த பரலோகத்தின் இறைவனாகிய யெகோவா, என்னிடம் பேசி, எனக்கு ஆணையிட்டு, ‘உனக்கும் உன் சந்ததிக்கும் இந்நாட்டைக் கொடுப்பேன்’ என்று வாக்களித்திருக்கிறார். ஆதலால் அவர், நீ அங்கிருந்து என் மகனுக்கு ஒரு பெண்ணைக் கொண்டுவர உனக்கு முன்பாக தமது தூதனை அனுப்புவார். யாத் 33:2சங் 34:7யாத் 23:20-23ஆதி 13:15எபி 1:14யாத் 32:13ஆதி 15:18சங் 103:20 அந்தப் பெண் இவ்விடம் வர விரும்பவில்லையென்றால், நீ எனக்குச் செய்து கொடுத்த ஆணையிலிருந்து விடுபடுவாய். என் மகனை மட்டும் அங்கே அழைத்துக்கொண்டு போகாதே” என்றான். யோசு 2:17-20எண் 30:5எண் 30:8அப் 7:2ஆதி 24:4-6யோவா 8:32யோசு 9:20 அப்படியே அவ்வேலைக்காரன் தன் கையை தன் எஜமான் ஆபிரகாமின் தொடையின்கீழ் வைத்து, அவன் இந்தக் காரியத்தைக்குறித்து ஆணையிட்டுச் சத்தியம் செய்தான். ஆதி 24:2

பின்பு அவ்வேலைக்காரன் ஆபிரகாமிடமிருந்து எல்லா வகையான நல்ல பொருட்களையும், அவனுடைய பத்து ஒட்டகங்கள்மீது ஏற்றிக்கொண்டு போனான். அவன் மெசொப்பொத்தாமியா வழியாகப்போய், நாகோர் பட்டணத்தை வந்தடைந்தான். உபா 23:4ஆதி 11:311 நாளாக 19:6அப் 2:9ஆதி 24:2ஆதி 27:43ஆதி 29:1ஆதி 29:4-5 அவன் பட்டணத்திற்கு வெளியே இருந்த ஒரு கிணற்றருகே தன் ஒட்டகங்களுக்குத் தண்ணீர் கொடுப்பதற்காக மண்டியிடச் செய்தான்; அது பெண்கள் தண்ணீர் எடுக்கவரும் மாலை வேளையாக இருந்தது. 1 சாமு 9:11யாத் 2:16யோவா 4:7ஆதி 24:13-20ஆதி 33:13-14நீதி 12:10

அப்பொழுது அவன், “யெகோவாவே, என் எஜமான் ஆபிரகாமின் இறைவனே, இன்று எனக்கு வெற்றியைத் தந்து, என் எஜமான் ஆபிரகாமுக்கு இரக்கம் காட்டும். ஆதி 24:27யாத் 3:6ஆதி 26:242இராஜா 2:14யாத் 3:15ஆதி 24:42ஆதி 24:48சங் 122:6 இதோ நான் இந்த நீரூற்றண்டையில் நிற்கிறேன், இந்த நகரத்து மக்களின் இளம்பெண்கள் தண்ணீர் மொள்ள வருகிறார்கள். ஆதி 24:43சங் 37:51 சாமு 9:11யாத் 2:16ஆதி 24:11ஆதி 29:9-10நியாயாதி 5:11யோவா 4:7 நான் இங்கு வரும் ஒரு பெண்ணிடம், ‘உன் குடத்தைச் சரித்து நான் குடிக்கும்படி தண்ணீர் ஊற்று’ என்று சொல்வேன். அப்பொழுது, ‘குடியும், உமது ஒட்டகங்களுக்கும் தண்ணீர் ஊற்றுவேன்’ என்று சொல்கிறவள் எவளோ, அவளே உமது அடியானாகிய ஈசாக்குக்கு நீர் தெரிந்துகொண்ட பெண்ணாயிருக்கட்டும். இதனால் என் எஜமான் ஆபிரகாமுக்கு இரக்கம் காட்டினீர் என்பதை நான் அறிந்துகொள்வேன்” என்று மன்றாடினான். நியாயாதி 6:37நியாயாதி 6:17ஆதி 15:82இராஜா 20:8-112 சாமு 5:24ஏசா 7:111 சாமு 14:8-10யாத் 4:1-9

அவன் மன்றாடி முடிக்குமுன்பே, ரெபெக்காள் தன் குடத்தைத் தோளில் வைத்தபடி வந்தாள். அவள் ஆபிரகாமின் சகோதரன் நாகோருக்கும், அவன் மனைவி மில்க்காளுக்கும் மகனான பெத்துயேலின் மகள். ஆதி 11:29ஆதி 24:45ஏசா 65:24தானி 9:20-23சங் 65:2யாத் 2:16ஆதி 22:20-23ஏசா 58:9 அவள் மிகவும் அழகுடையவளும், ஒருவனுடனும் உறவுகொள்ளாத கன்னியாகவும் இருந்தாள். அவள் நீரூற்றண்டைக்குப் போய் தன் குடத்தை நிரப்பிக்கொண்டு மேலே ஏறிவந்தாள். ஆதி 26:7ஆதி 39:6ஆதி 4:1எண் 31:17-18உன்னத 5:2

வேலைக்காரன் அவளை சந்திக்கும்படி விரைந்து, “தயவுசெய்து உன் குடத்திலிருந்து எனக்குக் கொஞ்சம் தண்ணீர் கொடு” என்றான். யோவா 4:71 இராஜா 17:10ஆதி 26:1-35ஏசா 21:14ஏசா 30:25ஏசா 35:6-7ஏசா 41:17-18ஏசா 49:10

உடனே அவள், “ஐயா, குடியுங்கள்” என்று சொல்லி, குடத்தை விரைவாய் இறக்கிக் கையில் பிடித்து, அவனுக்குக் குடிக்கக் கொடுத்தாள். 1 பேது 3:81 பேது 4:8-9ஆதி 24:14நீதி 31:26

அவள் அவனுக்குக் குடிக்கக் கொடுத்தபின், “உமது ஒட்டகங்கள் குடித்துத் தீருமட்டும் அவைகளுக்கும் தண்ணீர் இறைத்துக் கொடுப்பேன்” என்றாள். ஆதி 24:141 பேது 4:9ஆதி 24:45-46 அவள் தன் குடத்திலிருந்த தண்ணீரை விரைவாய்த் தொட்டிக்குள் ஊற்றிவிட்டு, மேலும் தண்ணீர் இறைப்பதற்காக ஊற்றண்டைக்கு ஓடினாள். அவனுடைய ஒட்டகங்களுக்குப் போதுமான அளவு தண்ணீரை இறைத்து ஊற்றினாள். யெகோவா தான் வந்த பயணத்தை வெற்றியடையச் செய்தாரோ இல்லையோ என்று அறிவதற்காக, அவன் ஒன்றும் பேசாமல் அவளைக் கூர்ந்து கவனித்தான். ஆதி 24:12சங் 107:432 சாமு 7:18-20லூக் 2:19லூக் 2:51சங் 116:1-7ஆதி 24:56சங் 107:1

ஒட்டகங்கள் தண்ணீர் குடித்து முடிந்தபின், அந்த மனிதன் ஒரு பெக்கா 1 நிறையுள்ள தங்க மூக்குத்தியையும், பத்து சேக்கல் 2 நிறையுள்ள இரண்டு தங்க வளையல்களையும் அவளுக்குக் கொடுத்தான். எசேக் 16:11-12யாத் 32:2-3ஆதி 23:15-16ஆதி 24:30ஆதி 24:47எரே 2:32எஸ்த 5:1ஏசா 3:19-23 பின்பு அவளிடம், “நீ யாருடைய மகள்? இரவு தங்குவதற்காக உன் தகப்பன் வீட்டில் எங்களுக்கு இடமுண்டா? தயவுசெய்து எனக்குச் சொல்” என்றான்.

அவள் அவனுக்குப் பதிலளித்து, “நான், நாகோருக்கு மில்க்காள் பெற்ற மகனான பெத்துயேலின் மகள்” என்றாள். ஆதி 24:15ஆதி 22:23ஆதி 11:29ஆதி 22:20 மேலும் அவள், “எங்களிடத்தில் வைக்கோலும், ஒட்டகத்திற்குத் தீனியும் வேண்டியளவு இருக்கின்றன. உங்களுக்கு இரவில் தங்குவதற்கு இடமும் உண்டு” என்றாள். 1 பேது 4:9ஏசா 32:8ஆதி 18:4-8நியாயாதி 19:19-21

உடனே அந்த வேலைக்காரன் தலைதாழ்த்தி யெகோவாவை வழிபட்டு, ஆதி 24:48யாத் 4:31ஆதி 24:52யாத் 12:271 நாளாக 29:202 நாளாக 20:182 நாளாக 29:30யாத் 34:8 “என் எஜமான் ஆபிரகாமின் இறைவனாகிய யெகோவாவுக்குத் துதி உண்டாகட்டும். என் எஜமானுக்கு அவர் தமது இரக்கத்தையும் உண்மையையும் காட்டாமல் இருக்கவில்லை. யெகோவா என்னையோ, என் எஜமானின் உறவினர் வீட்டுக்கே வழிநடத்தி வந்திருக்கிறார்” என்றான். ஆதி 24:48ஆதி 24:12ஆதி 32:10சங் 98:3ரூத் 4:141 சாமு 25:32யாத் 18:102 சாமு 18:28

அப்பெண் ஓடிப்போய், நடந்தவற்றைத் தன் தாயின் வீட்டாரிடம் சொன்னாள். ஆதி 24:48ஆதி 24:55ஆதி 24:67ஆதி 31:33 ரெபெக்காளுக்கு லாபான் என்னும் பெயருடைய ஒரு சகோதரன் இருந்தான். அவன் நீரூற்றருகே நின்ற அம்மனிதனிடம் விரைந்து போனான். ஆதி 29:5ஆதி 24:55ஆதி 29:13ஆதி 24:60 லாபான் தன் சகோதரியின் மூக்குத்தியையும், கைகளிலிருந்த வளையல்களையும் கண்டான். அத்துடன் அம்மனிதன் சொன்னவற்றையும் ரெபெக்காள் சொல்லக் கேட்டவுடனே, லாபான் போய் நீரூற்றின் அருகே அம்மனிதன் ஒட்டகங்கள் அண்டையில் நிற்கக் கண்டான். அவன் அந்த மனிதனிடம், “யெகோவாவினால் ஆசீர்வதிக்கப்பட்டவரே, வாரும்; நீர் ஏன் இங்கே வெளியே நிற்கிறீர்? உமக்காக வீட்டையும், ஒட்டகங்களுக்கு இடத்தையும் ஆயத்தப்படுத்தியிருக்கிறேன்” என்றான். ஆதி 26:29ரூத் 3:10சங் 115:15நியாயாதி 17:2நீதி 18:16நீதி 17:8

இதனால் அந்த மனிதன் லாபானுடன் வீட்டிற்குப் போனான், ஒட்டகங்களின் சுமைகள் இறக்கப்பட்டன. ஒட்டகங்களுக்கு வைக்கோலும் தீனியும் கொண்டுவரப்பட்டன. பின்பு அம்மனிதனுக்கும் அவனோடு வந்தவர்களுக்கும் கால்களைக் கழுவத் தண்ணீர் கொண்டுவரப்பட்டது. ஆதி 43:24நியாயாதி 19:21ஆதி 18:41 தீமோ 5:10ஆதி 19:2லூக் 7:441 சாமு 25:41யோவா 13:4-14 அதன்பின்பு அவனுக்கு முன்பாக உணவு வைக்கப்பட்டது. ஆனால் அவனோ, “நான் சொல்ல வேண்டியதைச் சொல்லி முடிக்கும்வரை சாப்பிடமாட்டேன்” என்றான். சங் 132:3-51 தீமோ 6:2எபே 6:5-8பிரச 9:10யோவா 4:14யோவா 4:31-34யோபு 23:12நீதி 22:29

அதற்கு லாபான், “அப்படியானால் அதை எங்களுக்குச் சொல்லும்” என்றான்.

அதற்கு அவன், “நான் ஆபிரகாமின் வேலைக்காரன்.” யெகோவா என் எஜமானை நிறைவாக ஆசீர்வதித்ததினால், அவர் செல்வந்தனாக இருக்கிறார். யெகோவா அவருக்கு அநேக செம்மறியாடுகளையும், மாடுகளையும், ஒட்டகங்களையும், கழுதைகளையும், வேலைக்காரர்களையும், வேலைக்காரிகளையும், வெள்ளியையும், தங்கத்தையும் கொடுத்திருக்கிறார். ஆதி 13:2ஆதி 24:1நீதி 10:22சங் 107:38ஆதி 12:16மத் 6:33ஆதி 12:2ஆதி 25:11 என் எஜமானின் மனைவி சாராள் தன் முதிர்வயதில் அவருக்கு ஒரு மகனைப் பெற்றாள், அவர் தமக்குச் சொந்தமான எல்லாவற்றையும் தன் மகனுக்கே கொடுத்திருக்கிறார். ஆதி 25:5ஆதி 21:10ஆதி 21:1-7ஆதி 17:15-19ஆதி 18:10-14ரோம 4:19ஆதி 11:29-30 என் எஜமான் என்னை ஆணையிட்டுச் சத்தியம் செய்யப்பண்ணி, “நான் வசிக்கும் நாட்டிலுள்ள கானானியரின் மகள்களில் இருந்து, நீ என் மகனுக்கு மனைவியை எடுக்கக்கூடாது. எஸ்றா 9:1-3ஆதி 24:2-9ஆதி 27:46ஆதி 6:2 ஆனால் என் தகப்பன் குடும்பத்திற்கும், என் சொந்த வம்சத்திற்கும் போய் என் மகனுக்கு ஒரு மனைவியை எடுக்கவேண்டும்” என்று என்னிடம் சொன்னார். ஆதி 24:4ஆதி 12:1ஆதி 31:19

“அப்பொழுது நான் என் எஜமானிடம், ‘அந்தப் பெண் என்னுடன் வரச் சம்மதியாவிட்டால் என்ன செய்வது?’ எனக் கேட்டேன். ஆதி 24:5

“அதற்கு அவர், ‘நான் யெகோவாவுக்குமுன் உண்மையாய் நடக்கிறேன், அவர் தமது தூதனை உன்னுடன் அனுப்பி, உன்னுடைய பயணத்தை வெற்றியடையப் பண்ணுவார். என் தகப்பனின் குடும்பத்தைச் சேர்ந்த என் சொந்த வம்சத்திலிருந்தே, நீ என் மகனுக்கு ஒரு பெண்ணை எடுப்பாய். யாத் 23:20சங் 16:8யாத் 33:2ஆதி 17:1ஆதி 5:241 இராஜா 8:232இராஜா 20:3தானி 3:28 நீ என் வம்சத்தாரிடம் போகும்போது, என் ஆணையிலிருந்து விடுபடுவாய்; அவர்கள் பெண் கொடுக்க மறுத்தாலும், நீ எனக்குக் கொடுத்த ஆணையிலிருந்து விடுபடுவாய்’ என்றார். ஆதி 24:8உபா 29:12

“இன்று நான் நீரூற்றருகே வந்தபோது, ‘யெகோவாவே, என் எஜமான் ஆபிரகாமின் இறைவனே, உமக்கு விருப்பமானால் நான் வந்த பயணத்தை வெற்றியடையச் செய்யும். நெகே 1:11எஸ்றா 8:21ஆதி 24:12-14சங் 37:5சங் 90:17ரோம 1:10அப் 10:22அப் 10:7-8 இதோ, நான் இந்த நீரூற்றருகே நிற்கிறேன். தண்ணீர் எடுப்பதற்காக ஒரு இளம்பெண் வருவாளானால், நான் அவளிடம், “உன் குடத்திலிருந்து குடிக்கக் கொஞ்சம் தண்ணீர் தா” என்று கேட்பேன். ஆதி 24:13-14 அதற்கு அவள், “குடியும், உமது ஒட்டகங்களுக்கும் தண்ணீர் இறைத்துக் கொடுப்பேன்” என்று சொல்வாளானால், அவளே என் எஜமானின் மகனுக்கு யெகோவா நியமித்த பெண்ணாயிருக்கட்டும்’ என்று மன்றாடினேன். ஆதி 24:141 பேது 3:81 தீமோ 2:10ஆதி 2:22எபி 13:2ஏசா 32:8நீதி 16:33நீதி 18:22

“இவ்வாறு நான் என் இருதயத்தில் மன்றாடி முடிக்குமுன்னே, ரெபெக்காள் தன் குடத்தைத் தோளில் வைத்தபடி வந்து, நீருற்றுக்குப் போய் தண்ணீர் இறைத்தாள். அப்பொழுது நான் அவளிடம், ‘எனக்குக் குடிக்கத் தண்ணீர் தா’ என்று கேட்டேன். அப் 10:30அப் 12:12-17தானி 9:23ஆதி 24:15-20ஏசா 65:24மத் 7:71 சாமு 1:13-152 சாமு 7:27

“அவள் விரைவாக தன் தோளிலிருந்த குடத்தை இறக்கி, ‘குடியும், உமது ஒட்டகங்களுக்கும் தண்ணீர் கொடுப்பேன்’ என்று சொன்னாள். அப்படியே நான் குடித்தேன், என் ஒட்டகங்களுக்கும் அவள் தண்ணீர் கொடுத்தாள். ஆதி 24:18-19

“அப்பொழுது நான் அவளிடம், ‘நீ யாருடைய மகள்?’ என்று கேட்டேன். எசேக் 16:10-13ஆதி 24:22-24ஆதி 24:53ஏசா 62:3-5சங் 45:13-14எபே 5:26-27சங் 45:9

“அதற்கு அவள், ‘நாகோருக்கு மில்க்காள் பெற்ற மகனான, பெத்துயேலின் மகள்’ என்றாள்.

“அப்பொழுது நான் அவளுக்கு மூக்குத்தியையும் வளையல்களையும் கொடுத்தேன். பின்பு நான் தலைகுனிந்து, யெகோவாவை வழிபட்டேன். என் எஜமான் ஆபிரகாமின் இறைவனைத் துதித்தேன்; என் எஜமானின் சகோதரனுடைய பேத்தியை அவருடைய மகனுக்கு மனைவியாக எடுக்க, சரியான வழியில் என்னை நடத்திய யெகோவாவைத் துதித்தேன். ஆதி 24:26-27நீதி 3:5-6சங் 32:8சங் 48:14ஆதி 24:52ஏசா 48:17யாத் 18:20எஸ்றா 8:21 ஆகவே, நீங்கள் என் எஜமானுக்குத் தயவாகவும், உண்மையாகவும் நடக்க விரும்பினால் எனக்குச் சொல்லுங்கள்; இல்லையென்றால் அதையும் எனக்குச் சொல்லுங்கள், அப்பொழுது எப்பக்கம் திரும்பவேண்டும் என்பதை நான் அறிந்துகொள்வேன்” என்றான். ஆதி 47:29யோசு 2:14ஆதி 32:10நீதி 3:3உபா 2:27எண் 20:17

அதற்கு லாபானும் பெத்துயேலும், “இது யெகோவாவினால் வந்திருக்கிறது; இதில் நாங்கள் குறுக்கிட்டு ஒன்றுமே சொல்லமுடியாது. சங் 118:23ஆதி 31:24ஆதி 31:292 சாமு 13:22மாற் 12:11ஆதி 24:15ஆதி 24:28ஆதி 24:53 ரெபெக்காள் இதோ இருக்கிறாள்; அவளை நீ கூட்டிக்கொண்டுபோ, யெகோவா நடத்தியபடியே இவள் உனது எஜமானின் மகனுக்கு மனைவியாகட்டும்” என்றார்கள். ஆதி 20:152 சாமு 16:10ஆதி 24:15

ஆபிரகாமின் வேலைக்காரன் அவர்கள் சொன்னதைக் கேட்டதும், யெகோவாவுக்கு முன்பாக தரைமட்டும் குனிந்து வழிபட்டான். ஆதி 24:26ஆதி 24:48சங் 116:1-2சங் 95:61 நாளாக 29:202 நாளாக 20:18சங் 107:21-22சங் 34:1-2 அதன்பின் அந்த வேலைக்காரன் தங்கம் மற்றும் வெள்ளி நகைகளையும், உடை வகைகளையும் கொண்டுவந்து ரெபெக்காளுக்குக் கொடுத்தான். அவளது சகோதரனுக்கும், தாய்க்கும் பெரும் மதிப்புமிக்க அன்பளிப்புகளைக் கொடுத்தான். ஆதி 24:10ஆதி 24:22யாத் 11:2யாத் 12:35யாத் 3:222 நாளாக 21:3உபா 33:13-16எஸ்றா 1:6 பின்பு அவனும் அவனோடு வந்த மனிதர்களும் சாப்பிட்டுக் குடித்து, அன்றிரவு அங்கே தங்கினார்கள். ஆதி 24:56ஆதி 24:592 சாமு 18:19பிரச 7:10ஆதி 28:5-6ஆதி 45:24நீதி 22:292 சாமு 18:27-28

மறுநாள் காலையில் அவன் எழுந்ததும், “என் எஜமானிடத்திற்கு என்னை வழியனுப்பி வையுங்கள்” என்றான்.

ஆனால் ரெபெக்காளின் சகோதரனும், தாயும், “பத்து நாட்களுக்காவது பெண் எங்களுடன் தங்கியிருக்கட்டும்; அதன்பின் போகலாம்” என்றார்கள். ஆதி 4:3நியாயாதி 14:8லேவி 25:29

அதற்கு அவன், “யெகோவா என் பயணத்தின் நோக்கத்தை நிறைவேறச் செய்தபடியால், என்னைத் தடைசெய்ய வேண்டாம். என் எஜமானிடம் நான் போவதற்கு என்னை வழியனுப்பி வையுங்கள்” என்றான். ஏசா 48:15யோசு 1:8நீதி 25:25ஆதி 45:9-13

அப்பொழுது அவர்கள், “நாம் பெண்ணைக் கூப்பிட்டு இதைப்பற்றி அவளிடம் கேட்போம்” என்றார்கள். பின் ரெபெக்காளைக் கூப்பிட்டு, “நீ இந்த மனிதனுடன் போகிறாயா?” என்று கேட்டார்கள். லூக் 1:38சங் 45:10-11

அதற்கு அவள், “ஆம் போகிறேன்” என்றாள்.

எனவே அவர்கள், தமது சகோதரி ரெபெக்காளை, அவளது தாதியோடும், ஆபிரகாமின் வேலைக்காரனோடும், அவனுடன் வந்த மனிதரோடும் வழியனுப்பி வைத்தார்கள். ஆதி 35:81 தெச 2:5ஆதி 24:50ஆதி 24:53ஆதி 24:60எண் 11:12 அவர்கள் ரெபெக்காளை ஆசீர்வதித்து சொன்னது: ஆதி 22:17ஆதி 17:16ரூத் 4:11-12ஆதி 28:3ஆதி 1:28ஆதி 48:15-16ஆதி 9:1ஆதி 48:20

“எங்கள் சகோதரியே,

நீ ஆயிரம் பதினாயிரமாய்ப் பெருகுவாயாக;

உன் சந்ததியினர் தங்கள் பகைவரின் பட்டண வாசல்களைத் தங்கள்

உரிமையாக்கிக் கொள்வார்களாக.”

பின்பு ரெபெக்காளும் அவள் தோழியரும் ஆயத்தமாகி, தங்கள் ஒட்டகங்களில் ஏறி, அந்த மனிதருடன் போனார்கள். இவ்விதம் அந்த வேலைக்காரன் ரெபெக்காளை அழைத்துக்கொண்டு புறப்பட்டான். ஆதி 2:24சங் 45:101 சாமு 30:17எஸ்த 8:10எஸ்த 8:14ஆதி 31:34

அந்நாட்களில் ஈசாக்கு பீர்லகாய்ரோயீ என்ற இடத்திலிருந்து வந்து, நெகேவ் பகுதியில் தங்கியிருந்தான். ஆதி 16:14ஆதி 25:11ஆதி 12:9ஆதி 20:1 ஒரு மாலை நேரத்தில் தியானம் செய்வதற்காக ஈசாக்கு வெளியே வயலுக்குப் போனான். அவன் நிமிர்ந்து பார்த்தபோது, ஒட்டகங்கள் வருவதைக் கண்டான். சங் 119:15யோசு 1:8சங் 1:2சங் 104:34சங் 143:5-6சங் 119:27சங் 119:48சங் 139:17-18 ரெபெக்காளும் நிமிர்ந்து பார்த்து, ஈசாக்கைக் கண்டாள். உடனே அவள் ஒட்டகத்திலிருந்து கீழே இறங்கினாள். நியாயாதி 1:14யோசு 15:18 அவள் அந்த வேலைக்காரனிடம், “நம்மைச் சந்திக்கும்படி வயல்வெளியில் வந்துகொண்டிருக்கும் அம்மனிதன் யார்?” என்று கேட்டாள். 1 தீமோ 2:91 கொரி 11:5-61 கொரி 11:10ஆதி 20:16

அதற்கு அவன், “அவர்தான் என் எஜமான்” என்றான். உடனே அவள் முகத்திரையை எடுத்துத் தன்னை மூடிக்கொண்டாள்.

வேலைக்காரன் தான் செய்த எல்லாவற்றையும் ஈசாக்கிடம் சொன்னான். மாற் 6:30 ஈசாக்கு ரெபெக்காளைத் தன் தாய் சாராளின் கூடாரத்திற்குக் கூட்டிக்கொண்டுவந்து, அவளைத் திருமணம் செய்தான். அவள் அவனுக்கு மனைவியானாள், அவன் அவளை நேசித்தான். தன் தாயின் மரணத்திற்குப்பின் அவனுக்குத் துக்கத்திலிருந்து இப்படி ஆறுதல் கிடைத்தது. எபே 5:22-33உன்னத 8:21 தெச 4:132 கொரி 11:1-2ஆதி 18:6ஆதி 18:9-10ஆதி 23:1-2ஆதி 25:20